Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆறு வருடங்கள் பதவி வகிக்கலாம் : சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் வாதம்

Featured Replies

ஆறு வருடங்கள் பதவி வகிக்கலாம் : சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் வாதம்

1-993bd37c72a5ee524c275dd1fb3e0306fc709fb7.jpg

 

5 வருடங்களே பதவி  வகிக்க முடியுமென  7  சட்டத்தரணிகள் வாதம்
 (எம்.எப்.எம்.பஸீர்)

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தை ஆறு வருடங்கள் வகிக்க முடியும் எனவும் அவரது பதவிக்காலம் 6 வருடங்கள் என்பதே தனது அபிப்பிராயம் எனவும் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

மக்கள் வழங்கிய 6 வருடங்களுக்கான ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைப்பது அவர்களின் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் அதனால்

 பதவிக் காலத்தை குறைப்பாதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக பொதுமக்களின் விருப்பமும் பெறப்படவேண்டும் எனவும் சட்டமா அதிபர் வாதிட்டார்.

தன்னால் ஆறு வருடங்கள் ( 2021 வரை ) ஜனாதிபதி பதவியில் இருக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் அபிப்பிராயம் கோரிய நிலையில் அதனை ஆராய்வதற்காக உயர் நீதிமன்றம் அந்த விவகாரத்தை நேற்று திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

பிரதம நீதியர்சர் பிரியசாத் டெப், நீதியர்சர் ஈவா வணசுந்தர, நீதியரசர் புவனேக அளுவிஹார, நீதியரசர் கே.ரி.சித்ரசிறி, நீதியரசர் சிசிர டி ஆப்றூ ஆகியோர் முன்னிலையில் குறித்த விவகாரம் திறந்த மன்றில் நேற்று இவ்வாறு விவாதிக்கப்பட்டது.

 இதன்போது அரசின் சாட்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தமது குழுவினருடன் ஆஜரானார். இந்த அபிப்பிராயம் கோரிய விசாரணை நடவடிக்கையில், தலையீடு செய்ய முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரன, குணதாஸ அமரசேகர, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் உள்ளிட்டோர் தலையீடு செய்ய அனுமதி கோரி மனுவளித்திருந்தனர்.

 அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 6 வருடங்கள் என சட்ட மா அதிபரும் மேலும் இரு சிரேஷ்ட சட்டத்தரணிகளும் வாதிட, அவரின் பதவிக் காலம் ஐந்து வருடங்களே என ஏழு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

 நேற்று இது தொடர்பிலான நடவடிக்கைகள் முற்பகல் 11.00 மணிக்கு உயர் நீதிமன்றின் 502 ஆம் இலக்க அறையில் ஆரம்பமானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் ஐந்தா அல்லது ஆறு வருடங்களா என வாதங்களை ஆரம்பித்து வைத்து சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய வாதிட்டார்.

அவர் நீதிமன்றில் வாதிடுகையில்

'கடந்த 2015 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பின் 32 (1) ஆம் சரத்தின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய திகதியில் குறித்த சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலம் 6 வருடங்கள். 2015 மே 15 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியல் திருத்தத்தின் பிரகாரம், அரசியலமைப்பின் 30 ஆம் சரத்து திருத்தப்பட்டது. இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 19 ஆம் திருத்தத்தின் 3 (2) ஆம் பிரிவூடாக திருத்தி 5 வருடங்கள் என மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் இந்த 5 வருடங்கள் என்ற 19 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தற்போதைய ஜனாதிபதிக்கு செல்லாது. ஏனெனில் அவர் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பதாகவே பதவியேற்றுவிட்டார்.

1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கு அமைவாக 6 வருடங்களளுக்காக மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரின் பதவிக் காலத்தை குறைப்பது அவர்களின் இறைமையுடன் தொடர்புபட்ட விடயமாகும். அதனால், பதவிக் காலத்தை குறைப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக பொதுமக்களின் விருப்பமும் பெறப்படவேண்டும்.

அவ்வாறு பொது மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை எனில், ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்த பின்னர், ஆட்சியில் இருக்கும் போதே அவரது ஆட்சிக் காலத்தை 2, 3 வருடங்கள் என மட்டுப்படுத்தி சட்டம் இயற்ற பாராளுமன்றத்துக்கு இயலுமாகிவிடும்.

அதனால்தான் அந்த விடயத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்தற்போதைய ஜனாதிபதியின் காலம் நிறைவடைந்த பின்னர், அடுத்த ஜனாதிபதிக்கு இந்த 19 ஆவது திருத்தம் செல்லுபடியாகும். எனவே தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்களேயாகும்.

இந்த கால எல்லையை மாற்ற ஜனாதிபதிக்கு கூட அதிகாரம் கிடையாது. இந்த ஆறு வருடங்களுக்குள் ஜனாதிபதி பதவியில் மாற்றம் ஏற்பட்டால், இந்த ஆறு வருடங்களும் பூர்த்தியாகும் வரை மற்றொரு ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவாராயின் அவருக்கும் இதே சட்ட ஏற்பாடு பொருந்தும். எனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்கள் பூர்த்தியான பின்னரேயே அடுத்த ஜனாதிபதி பதவிக் காலம் 5 வருடங்களாக 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமுலுக்கு வரும் என்றார்.

எனினும் சட்ட மா அதிபரின் மேற்படி வாதத்துக்கு பலத்த எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. சட்ட மா அதிபரின் குறித்த வாதத்தையடுத்து எழுந்த குணதாச அமரசேகர சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கல்யான நந்த டிரானகம, சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை கடுமையாக ஆட்சேபித்தார்.

2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலின் போது, 60 இலட்சம் மக்கள் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை குறைக்கவே வாக்களித்தனர். அதுவே மக்கள் ஆணையாகும். அதன்படியே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந் நிலையில் 19 ஆவது திருத்த ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்ப்ட்டது. இதனை மதிக்காமல் 6 வருடங்கள் எனக் கூறுவதே மக்களின் இறைமையையை மீறும் செயலாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி கல்யான நந்த டிரானகம வாதிட்டார்.

இதனையடுத்து எழுந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியின் உலப்பனே சுமங்கல தேரர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்ட மா அதிபரின் கருத்தை ஆதரித்து இந்த ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்களே என வாதிட்டார். கடந்த 2015 மே 15 ஆம் திகதிக்கு பின்னரேயே 19 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுலுக்கு வந்ததாக சுட்டிக்கடடிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் 49 (1) பீ உறுப்புறையில் அனைத்து உறுப்புறைகளுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் உட்படுவர் என கூறப்பட்டிருப்பதானது, பதவிக் காலத்தை குறிக்காது எனவும் அது 49 ஆவது உறுப்புரையில் உள்ள ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயும் போது தெளிவாக வெளிப்படுவதாகவும் கூறினார்.

 எனினும் இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சார்பில் மன்றில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்கள் எனும் வாதங்களை முற்றாக நிராகரித்ததுடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்களே என வாதிட்டார்.

அவர் தொடர்ந்து தொடர்ந்து வாதிடுகையில்

' 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியும் அதற்கு உட்பட்டவரேயாவார். அது தொடர்பில் ஜனாதிபதிக்கு சிக்கல் இருந்திருப்பின் அப்போதே நீதிமன்றின் வியாக்கியானத்தை அவர் நாடியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செயற்படவில்லை.

மாற்றமாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை எடுத்துப் பாருங்கள். அதில் உள்ள அவரது உரைகள் அவர் தனது பதவிக் காலத்தை குறைத்துக்கொள்ள மிக்க விருப்பத்துடன் உள்ளதை காட்டுகின்றது. அது தொடர்பில் அந்த இணையத்தளத்தில் உரைகள் உள்ளன. இது முகப்புத்தகத்தில்ங போன்று யார் எவர் என தெரியாது எழுதிய விடயங்கள் அல்ல. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள விடயங்கள்.

தனது பதவிக் காலம் 4 வருடங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என தான் யோசனை செய்ததாக அந்த உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு முன்பதாக கடந்த 2015 ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்குரிய எல்லையற்ற அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்ப்ட்டு வருகின்றன.

ஜனாதிபதியின் கூற்றை இங்கு குறிப்பிடுகின்றேன். ""நான் நேற்று முன்தினம் அந்த கலந்துரையாடல்களுக்கு சென்று கூறினேன். அப்போது நான் எனது பதவிக் காலம் 6 வருடங்களாக உள்ளதாகவும் எனது ஜனாதிபதி பதவிக் காலத்தை 4 வருடங்களாக மாற்றுவோம் எனவும் கோரினேன். அங்கிருந்த விஷேட நிபுணர் குழு உறுப்பினர்களும், அரசியல் பிரமுகர்களும் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. 4 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல அவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. எனது நீண்ட கோரிக்கைகளின் பின்னர் அவர்கள் பதவிக் காலத்தை 5 வருடங்களாக மாற்ற ஒப்புக்கொன்டனர். இப்போது 6 வருடங்களை 5 ஆக அவர்கள் குறைத்துள்ளனர். 5 வருடங்களில் வீட்டுக்கு செல்வது எனது கொள்கை"" . என ஜனாதிபதியின் அந்த உரையில் தெளிவாக உள்ளது.

ஜனாதிபதியின் இந்த உரை அவர் தனது பதவிக் காலத்தை 5 வருடங்களாக குறைக்க அவரே கொடுத்த வாககு மூலாகும். அப்படி இருக்கையில் அவரை கட்டாயப்படுத்தி 6 வருடங்கள் ஆட்சியில் அமர்த்த சட்ட மா அதிபரும் சிலரும் முயற்சிக்கின்றமை அடிப்படையற்றது.

தேர்தல் நடத்தப்படாமல் இருந்தாலே மக்களின் இறையான்மை மீறப்படுவதாக அமையும். ஒரு வருடம் முன்னோக்கி தேர்தலை நகர்த்துவது மக்களின் இறைமையைன் மீறுவதாக அமையாது. என்றார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரன சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தனது வாதத்தை முன்வைத்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-12#page-1

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நவீனன் said:

மக்கள் வழங்கிய 6 வருடங்களுக்கான ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைப்பது அவர்களின் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் அதனால்

ஆஹா இதுமட்டுந்தான் மக்களின் இறைமையுடன் தொடர்புபட்ட விடயமா?தேர்தலில் அரசியல்வாதிகள்  கொடுத்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்க விடுவது எந்த இறைமையோடு  தொடர்புபட்டது என்றதையும் நீதிமன்றத்துக்கு கொண்டுபோய் விவாதியுங்கோ. எல்லாம் உங்கட வசதிக்கு உருவாக்குவீங்கள், மாற்றுவீர்கள், நீக்குவீர்கள். நீங்களெல்லாம் ........ புத்தருகே அவமானச் சின்னங்கள். சிங்கள பவுத்த நாடு என்கின்ற பரப்புரை வேற.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.