Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள்

Featured Replies

  •  
  • ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள்
IMG_0024-750x430.jpg

ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள்

 

இலங்கை அர­சி­யல்­வ­ர­லாற்­றில் ஈழத் ­தமி­ழி­னத்­துக்கு எதி­ராக அவ்­வப்­போது சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளால் இன­வா­தத் தீ மூட்டி விடப்­பட்­ட­தற்­கும், ஜன­வரி மாதத்­துக்­கும் ஏதோ ஒரு­வித நெருங்­கிய தொடர்பு உள்­ளது.

தமி­ழி­னத்­தின் உரி­மை­க­ளுக்கு வேட்­டு­வைக்­க­வும் , உரிமைகளைப் பறித்­தெ­டுக்­க­ வும், பல படு­கொ­லை­களை தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­ற­வும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, மற்­றும் சிங்­கள இடது சாரிக்­கட்­சி­கள் தேர்ந்­தெ­டுத்­தது, பெரும்­பா­லும் ஜன­வரி மாதத்­தையே என்­றால்­கூட அதில் தவ­றே­தும் கிடை­யாது.

அர­சி­யல் இலா­பம் ஈட்­டும் நோக்­கில், இன­வா­த­தத்தை முன்­வைத்து ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய தலைமை அமைச்சரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா தலை­மை­யி­லான அரசு, தனிச்­சிங்­க­ளச் சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வந்து நிறை­வேற்­றி­யது.

‘ஒரு ெமாழி என்­றால் இரு நாடு­கள், இரு­மொ­ழி­கள் என்­றால் ஒரு நாடு’ என்று நியா­யத்­துக்­கா­கக் குர­லெ­ழுப்பிய கலா­நிதி கொல்­வின் ஆர்.டி. சில்வா மற்­றும் இடது சாரித் தலை­வர்­கள், நாடு முழு­வதும் என்றல்­லாது வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் மட்­டும் செயற்­ப­டுத்­தக்­கூ­டிய தமிழ்­மொ­ழி­வி­சேட ஏற்­பா­டு­கள் சட்­ட­மூ­லத்தை 1966 இல் எதிர்த்­தி­ருந்­த­னர்.

 

இனவாதத்தை முன்னிறுத்தி ஆட்சியைக் கைப்பற்றும் உத்தி இன்று நேற்று ஆரம்பமான ஒன்றல்ல

தமிழ் மொழிக்கு நிர்­வாக மொழி உரி­மையை நாட்­டின் குறித்­த­ வொரு பகு­திக்குத்தானும் வழங்­கி­னா­லும், அது சிங்­க­ள­மக்­க­ளுக் கெ­தி­ரா­னது என­வும், அத­னால் தமிழ்­மொ­ழிக்கு சட்­ட­ரீ­தி­யான எந்­த­ வொரு உரி­மை­யை­யும் வழங்­கக்­கூ­டாது என­வும் 1966 ஆம் ஆண்டு ஜன­வரி எட்­டாம்­தி­கதி நாட்­டில் கம்­யூ­னிஸ்­கட்சி, சம­ச­மா­ஜக்­கட்­சித்­த­லை­வர்­கள் உட் பட மற்­றும் இன­வாத அமைப்­பு­க்களது தலை வர்களும் ஒன்­று­சேர்ந்து எதிர்ப்பு ஊர்­வ­லத்­தை­யும் கண்­ட­னக்­கூட்­டத்­தை­யும் நடத்­தி­யி­ருந்­த­னர்.

ஊர்­வ­லத்­தைக் கலைப்­ப­தற்கு பொலி­சார் துப்­பாக்­கிச் சூடு மேற்­கொண்­ட­தில் பௌத்த பிக்கு ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம், ஐக்­கிய தேசி­யக்­கட்சி, தமி­ழ் அரசுக்­கட்சி உட்­பட சில இன­வா­தக்­கட்­சி­க­ளும் கூட்­டுச்­சேர்ந்து நடத்­திய ஆட்­சி­யின்­போது நடை­பெற்­றி­ருந்­தது.

பண்டா, செல்வா ஒப்­பந்­தத்­தில் இடம் பெற்­றி­ருந்த மொழி தொடர்­பான குறிப்­பிட்ட விதி­களை அதா­வது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமி­ழை­யும் நிர்­வாக மொழி­யா­கப் பயன்­ப­டுத்­த­லாம் என்ற விதியை எதிர்த்து கொழும்­பி­லி­ருந்து கண்­டிக்­குப் பாத­யாத்­தி­ரையை மேற்­கொண்ட ஜே.ஆர் ஜெய­வர்த்­தன, 1966 ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி – தமி­ழ் அரசுக்­கட்சி கூட்­ட­ர­சில் குறித்த அந்தப் பிரே­ர­ணையை முன்­வைத்­த­வர் என்­ப­தும் இலங்கை அர­சி­ய­லில் வர­லாற்­றின் முக்­கிய பதி­வா­கும்.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள மக்­க­ளைத்­தூண்­டி­விட்டு அதன் மூலம் அர­சி­யல் ஆதா­யம் பெற்று ஆட்­சியை காலம் கால­மா­கத் தக்­க­வைப்­பதே அன்­றைய சிங்­க­ளக்­கட்­சி­க­ளின் நோக்­க­மாக இருந்­தது.

தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­யா­யி­ருந்த பூர்­வீக நிலங்­கள், ஏனைய சொத்­துக்­கள் தென்­னி­லங்­கை­யி­லும், வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் எவ­ரி­டம் கைமா­றி­யுள்­ள­ன? பலாத்­கா­ர­மாக எப்­ப­டித்­திட்­ட­மிட்­டுப் பறிக்­கப்­பட்­டுள்­ளன? என்­பதை வர­லாறு தெளிவு­ப­டுத்­தும்.

நாட்­டின் இன­வாத அடிப்­ப­டை­யில் தோற்­று­விக்­கப்­பட்ட வன்­மு­றைக் கலா­சா­ரம், அர­சி­யல் இலா­பம் கருதி இரு பெரும் சிங்­கள தேசி­யக்­கட்­சி களால் கடந்த 70 ஆண்­டு­க­ளாக காய் நகர்த்தப் பட்டு வரு­கின்­றது.

இதற்கு அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருந்­த­தும் ஒரு ஜன­வரி மாத­மே­யா­கும். அது 1966 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட் டாம்­தி­கதி இடம் பெற்ற முக்­கிய சம்­ப­வ­மா­கும்.

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்

நாடு முழு­வ­தும் ஒற்­று­மை­யாக வாழ்ந்த தமிழ்­மக்­களை 1958ஆம் ஆண்டில் இடம்­பெற்ற இனக்­க­ல­வ­ரம் மூல­மாக சிங்கள அரசியல் வாதிகள் சிங்­கள மக்­க­ளுக்கு இனத்துவே­சத்­தை­ யூட்டி இனப்­ப­கையை உண்­டாக்­கி­ய­வ­ர­லா­றும் இச்­சம்­ப­வங்­க­ளுக்­குள் அடக்­கம்.

1974 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதன்­மு­றை­யாக நான்கா­வது உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஏற்­பா­டு­கள் மேற்கொள்ளப்பட்டபோது அதனைக் கொழும்­பில் நடத்­து­மாறு அப்­போ­தைய தலைமை அமைச்சரான சிறி­மாவோ பண்­டார நாயக்கா தலை­மை­யி­லான அரசு, உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மன்­றத்­தி­ன­ரி­டம் கேட்­டுக்­கொண்­டது.

யாழ்ப்­பா­ணத்­தில் முற்றுமுழுதாகத் தமிழ்­மக்­களே வாழு­கின்­ற­ப­டி­யி­னால் அங்­கேயே மாநாட்டை நடத்­து­வ­து­தான் பொருத்­த­மா­கு­மெ­னக்­கூறி அந்த அமைப்பினர் அதனை மறுத்­து­விட்­ட­னர்.

1974 ஆம் ஆண்டு ஜன­வரி 4 ஆம் தொடங்கி 10 ஆம்­தி­கதி வரை யாழ்ப்பாணத்தில் கோல­ாக­ல­மாக நடை­பெற்ற தமி­ழா­ராய்ச்சி மாநாட்­டின் இறுதி நாளன்று நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த தமிழ் மக்­கள் மீது, குரோத உணர்­வு­டன் சிறி­மாவோ அரசு திட்­ட­மிட்டு பொலி­சா­ரைக்­கொண்டு தாக்­கு­தல்­களை நடத்தி முடித்­தி­ருந் தது.

தமிழ்­மக்­கள் சிதறி ஓடு­கை­யில் பொலி­சார் உயர் அழுத்­த­மின்­சா­ரக்­கம்­பி­கள் மீது துப்­பாக்­கிப்­பி­ர­யோ­கம் மேற்­கொண்­ட­போது கம்­பி­கள் அறுந்து வீழ்ந்­த­தில் ஒன்­பது தமி­ழர்­கள் படு கொலை செய்­யப்­பட்­ட­னர்.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி அரசு கிழக்கு மாகா­ணத்­தில் பல படு­கொ­லைச்­சம்­ப­வங்­களை தனது 11 வரு­ட­கால ஆட்­சி­யில் நடத்­தி­யி­ருந்­தது. அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க­ளில் தமி­ழர்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்து வந்த பல கிரா­மங்­க­ளில், மக்­கள் படை­யி­ன­ரால் கொன்­ற­ழிக்­கப்­பட்ட சம்­ப­வங்­களை எளி­தில் எவ­ரா­லும் மறந்திட ­மு­டி­யாது.

அதில் ஒன்று 1987 ஆம் ஆண்டு ஜன­வரி 28, 29 ஆம் திக­தி­க­ளில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள கொக்­கட்­டிச்­சோலை தமிழ்க்­கி­ரா­மத்­தில் நூற்­றுக்கும் மேற்­பட்ட அப்­பா­வித்­த­மிழ் மக்­கள் படை­யி­ன­ரின் தாக்­கு­தல்­க­ளில் கொன்­றொ­ழிக்­கப்­பட்ட கொடும் துய­ரம் மிக்க, தமி­ழர்­க­ளின் நெஞ்­சங்­களை உறை­ய­வைத்த சம்­ப­வ­மா­கும்.

இந்தக் கொ­லைச்­சம்­ப­வம் தொடர்­பாக மறைந்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான யோசப் பர­ரா­ஜ­சிங்­கம் ஐ.நா.வின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­தி­ருந்­தார். அதன்­பின்­னரே ஐக்­கிய தேசி­யக்­கட்சி அரசு செய்­தி­ருந்த அந்­தப் படு­கொ­லைச் சம்­ப­வம் குறித்த விவ­ரங்­கள் பன்­னாட்­டு­கள் மட்­டத்­தில் தெரிய வந்­தன.

இதுவரை நீதி வழங்கப்படாத திருகோணமலை மாணவர்கள் படுகொலை விவகாரம்

2006 ஆம் ஆண்டு ஜன­வரி இரண்­டாம் திகதி திரு­கோ­ண­ம­லை­யில் பிர­பல கல்­லூ­ரி­க­ளில் உயர்­தர வகுப்­பில் கல்வி கற்று வந்த ஐந்த மாண­வர்­க­ள் வழ­மை­போன்று காந்தி சிலைக்­க­ரு­கி­லி­ருந்து உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­னர்.

2005,2006 ஆம் கல்­வி­யாண்டில் பல்­க­லைக்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வா­கி­யி­ருந்த இந்­துக்­கல்­லூரி மாண­வர்­க­ளான நாலு­பே­ரும் அவர்­க­ளின் மாணவ நண்­ப­ரான மற்றொருவருமான ஐந்­து­பேரே அவர்­க­ளா­வர். தங்­கத்துரை சிவா­னந்தா, மனோ­கரன் ரஜீகர், சண்­மு­க­ராஜா கஜேந்­தி­ரன், லோ.ரோகன், யோ.ஹேமச்­சந்­தி­ரா ஆகிய மாண­வர்கள் துப்­பாக்­கிச் சூட்­டில் படு­ கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது அந்த வேளை­யில் தமி­ழர்­கள் மத்­தி­யில் பெரும் அச்­சத்­தை­யும் ஆத்­தி­ரத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

அதி­ர­டிப்­ப­டை­யி­னர் எனக்­க­ரு­தப்­பட்ட சீரு­டை­யி­னர், அந்த மாண­வர்­களை நிலத்­தில் படுக்­க­வைத்து காதுக்­குள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­ட­தால் மாண­வர்­கள் அனை­வ­ரும் மூளை சிதறி இறந்­தி­ருந்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­தப் படு­கொ­லை­கள் சம்­பந்­த­மாக சந்­தே­கத்­தின் பேரில் 12 ஆயு­தப்­ப­டை­யி­னர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். குறித்த மாண­வர்­க­ளின் படு­கொ­லைச்­சம்­ப­வங்­கள் சர்­வ­தேச அள­வில் கவ­னத்தை ஈர்த்த சம்­ப­வ­மாகப் பதி­வா­கி­யி­ருந்­தது 2014 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமை மாநாட்­டின்­போது மனித உரி­மை­கள் ஆணை­யத்­தின் ஆணை­யா­ளர் நாய­க­மான நவ­நீ­தம்­பிள்ளை 20 பக்­கங்­களை கொண்­ட­தும் 74 விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­துமான இலங்­கை­யில் இடம்­பெற்ற பார­தூ­ர­மான மனித உரிமை மீறல் சம்­ப­வங்­களை உள்­ள­டக்கி வெளியிட்ட அறிக்­கையில் குறிப்­பிட்ட திரு­கோ­ண­ மலை மாண­வர்­க­வ­ளது படு­கொ­லைச் சம்­ப­வ­மும் உள்­ளக்­கப்­பட்­டி­ருந்­தது.

திரு­கோ­ண­ம­லை­யில் படு கொலை செய்­யப்­பட்­ட­ஐந்து மாண­வர்­கள் தொடர்­பான வழக்கு பிர­சித்தி பெற்ற சட்டத்துறை நிபு ணர்கள் உள்­ள­டங்­கிய உத­ல­கம ஆணைக் கு­ழு­வி­னால் கடந்த 2006, 2007 காலப்­ப­கு­தி­க­ளில் விசா­ரிக்­கப்­பட்டு வந்த போதி­லும் மகிந்த அரசோ,குறித்த ஆணைக்­கு­ழு­வின் அறிக்­கையை ஒரு­போ­தும் வெளியிட்­டி­ருக்­க­வில்லை.

அதே காலப்­ப­கு­தி­க­ளில் ஐந்து மாண­வர்­க­ளின் படு­கொ­லைச்­சம்­ப­வங்­கள் இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வி­னா­லும் விசா­ரிக்­கப்­பட்­டி ­ருந்­தது.

நல்­லி­ணக்க ஆணைக்­குழு குறித்த படு­கொ­லை­கள் பற்­றிய மேல­திக விசா­ர­ணை­களை அரசு மேற்­கொள்ள வேண்­டு­மென நவ­நீ­தம் பிள்­ளை­யின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வர் ரஜீ­க­ரின் தந்­தை­யான மருத்­து­வ­ரான காசிப்­பிள்ளை மனோ­க­ரன் 2014 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேர­வை­யில் இப்­ப­டு­கொலை தொடர்­பாக பன்னாட்டு விசா­ரணை வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ ருந்­தார்.

2013 ஆம் ஆ்ண்டு பெப்­ர­வரி மாத­மும் இதே­பே­ர­வை­யில் இப்­ப­டு­கொலை சம்­பந்­த­மாக இலங்கை அரசு எவ்­வித விசா­ர­ணை­களையும் மேற்­கொள்­ள­வில்லை என்ற குற்­றச்­சாட்­டை­யும் அப்­போது முன்­வைத்­தி­ருந்­தார்.

தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான இரா. சம்­பந்­தன் பிரித்­தா­னிய நாடா­ளு­மன்­றக் குழு அறை 14 இல் நடை பெற்ற தமி­ழர் பேர­வை­யின் மூன்­றா­வது ஆண்டு கருத்­த­ரங்­கில் உரை­யாற்­று­கை­யில் திரு­கோ­ண­ம­லை­யில் 5 மாண­வர்­க­ளின் படு­கொலை, மூதூ­ர।ில் தொண்­டர் அமைப்­பைச்­சேர்ந்த 17 உத­விப்­ப­ணி­யா­ளர்­க­ளின்­ப­டு­கொ­லை­கள் என்பவை தொடர்­பில் இலங்கை அரசு உறுதி மொழி வழங்­கி­யி­ருந்­தும் அந்த விசா­ர­ணை­க­ளைப் பூர்த்தி செய்து குற்­ற­வா­ளி­களை சட்­டத்­தின் முன் நிறுத்த மகிந்­த­ ரா­ஜ­பக்ச அரசு எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்­லை­யென குற்­றம் சுமத்­தி­யி ­ருந்­தார்.

திருகோணமலை மாணவர்கள் படுகொலை விவகாரத்தில் தற்போதும் தொடரும் அழுத்தங்கள்

ஜன­வரி 25 ஆம் திகதி 2006 ஆம் ஆண்டு சுட­ரொ­ளிப் பத்­தி­ரி­கை­யின் ஊட­க­வி­ய­லா­ள­ரான சுகிர்­த­ரா­ஜன் திரு­கோ­ண­மலை உவர்­ம­லை­யில் காலை வேளை சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். இவர் தி­ரு­கோ­ண­ம­லை ­யில் இடம் பெற்ற மாண­வர்­க­ளின் படு­கொலை சம்­பந்­த­மாக உண்­மைச்­செய்­தி­களை துணிச்­சலு­டன் வெளியிட்­டி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

திரு­கோ­ண­மலை மாண­வர்­கள் படு­கொலை தொடர்­பில் தாம­த­மா­கும் நீதி மறுக்­கப்­பட்ட நீதிக்­குச்­ச­மம் என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத்­தூ­து­வர் அதுல்­கே­சாப் அண்­மை­யில் தனது ருவிட்­ட­ரில் பதிவு செய்­தி­ருந்­தார்.

பிர­தான சாட்சி வெளிநாட்­டில் இருப்­ப­த­னால் இந்த வழக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­மு­டி­ய­வில்லை என­வும், இந்த நிலை­யில் ஸ்கைப் தொழில் நுட்­பத்­தி­னூ­டாக வழக்கை முன்­னெ­டுப்­ப­ தாகவும் அமைச்­ச­ரான சாக­ல­ரட்­னா­யக்கா அமெ­ரிக்­கத்­தூ­து­வ­ரான அதுல் கேசாப்­பிற்கு பதி­ல­ளித்­துள்­ளார்.

இன்­றைய கூட்டு அர­சு­கூட இந்த வ­ழக்கு ச் சம்­பந்­த­மாக வாய்­மூடி இருக்­கின்ற நிலை­யில், அமெ­ரிக்­கத்­தூ­து­வ­ரின் கருத்து ஐந்து மாண­வர்­க­ளின் படு­கொலை சம்­பந்­த­மான 12 ஆவது நினைவு மாத­மான தற்­போ­தைய ஜன­வரி மாத ஆரம்­பத்­தில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இதற்­கான நீதி எப்­போது கிடைக்­கும் என்று 12 ஆண்­டு­க­ளாக அவர்­க­ளது உற­வு­கள் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

தமிழ்த்­தே­சி­யத்­திற்­காக தன்­னந்­த­னி­யாக நின்று குரல் கொடுத்த சட்­டத்­த­ர­ணி­யான குமார் பொன்­னம்­ப­லம் 2000 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 5 ஆம் திக­தி­யன்று, முன்­னை­நாள் ஜனா­தி­ப­தி­யான சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆட்­சிக் காலத்­தில் கொழும்­பில் வைத்து பகல் வேளை­யில் சுட்­டுக்­கொல் பப்­பட்­டி­ருந்­தார்.

அது தமி­ழி­னத்­தின் பெரிய இழப்­பாக அமைந்­தி­ருந்­தது.
போர் இறு­திக்­கா­லப்­ப­கு­தி­யில், 2008, 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாத­கா­லப் பகு­தி­க­ளில் வன்னி பெரு­நி­லப் பரப்பில் மகிந்த அர­சின் ஆத­ர­வு­டன் படை­யி­னர் பெருந்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு பல அப்­பா­வித் தமிழ் மக்­க­ளைப் படு­கொலை செய்­தி­ருந்­த­னர்..

2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2 ஆம் திக­தி­ய­ள­வில் படை­யி­னர் கிளி­நொச்­சி­ யைக் கைப்­பற்­றிய பின்­னர் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­ருந்த மக்­கள் சகலரும் முல்­லைத்­தீவு மாவட்­டத்துக்கு இடம்­பெ­யர்ந்து சென்­ற­தும், ஜன­வ­ரி­மா­தத்­தி­லேயே ஆகும். தமி­ழி­னத்துக்கு எ­தி­ரான சிங்­கள அர­சு­க­ளின் நட­வ­டிக்­கை­கள் யாவும் காலத்­தின் முக்­கிய பதி­வு­க­ளா­கும்.

மகிந்த ஆட்­சி­யின்­போது சில ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கொல்­லப்­பட்­டும், கடத்­தப்­பட்டு மிருந்­த­னர். 2008 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முத­லாம் திகதி, ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தியா­க­ராசா மகேஸ்­வ­ரன் கொழும்­பி­லுள்ள இந்து ஆல­யத்­தின் முன் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார்.

ஜன­வரி 6 ஆம் திகதி சிரச ஊடக வலை­ய­மைப்பு மீது குண்­டுத்­தாக்­கு ­தல் நடத்­தப்­பட்­டது. ஜன­வரி 8 ஆம் திகதி சண்டே லீடர் பத்­தி­ரி­கை­யின் ஆசி­ரி­ய­ரான லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

ஜன­வரி 24 ஆம் திகதி ஊட­க­வி­ய­லா­ளர் பிர­கீத் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்­டார்.இப்­ப­டிப்­பட்­ட­பல சம்­ப­வங்­க­ளு­டன் பல ஆண்­டு­க­ளின் ஜன­வ­ரி­மா­தம் பின்­னிப் பிணைந்­த­தான வர­லாற்­றுப் பதி­வு­கள் இலங்­கை­யின் கறை­ப­டிந்த வர­லா­று­க­ளாக அமைந்­து­விட்­டுள்­ளன.

http://newuthayan.com/story/62935.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.