Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடம்பெயர்ந்த மக்களை இராணுவம் பலாத்தகாரமாக மீள்குடியமர்த்துகின்றது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Featured Replies

நிவாரண உதவிகளை பணயமாக வைத்து மக்களை அச்சுறுத்தும் சிறீலங்கா அரசு

இடம்பெயர்ந்த மக்களை யுத்த பிரதேசங்களுக்கு மீள குடியமர்த்துவதில் சிறீலங்கா படைகளும் அரசாங்க அதிகாரிகளும் முற்படுவதாக நியூயோர்க்கை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மட்டக்களப்பில் தங்கியிரக்கும் 721 இடம்பெயர்ந்தோரை அச்சுறுத்தல் யுக்திகளை கையாண்டு சிறீலங்கா படைகளும் அரசாங்க அதிகாரிகளும் திருமலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மோதலால் இடம்பெயர்ந்து வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப் போவதில்லை என அறிக்கையளவில் கூறிவரும் சிறீலங்கா அரசு அனைத்துலக கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் இடம்பெயர்ந்த மக்களை பலவந்தமாக அனுப்பிவைக்கும் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியப் பணிப்பாளர் பிறட் அடம்ஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர்ந்த மக்களை இராணுவம் பலாத்தகாரமாக மீள்குடியமர்த்துகின்றது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

[சனிக்கிழமை, 17 மார்ச் 2007, 03:01 ஈழம்] [க.திருக்குமார்]

கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை சிறிலங்கா இராணுவம் பலாத்காரமாக மீளக்குடியமர்த்தும் நோக்குடன் அழைத்துச் செல்வதாக அமெரிக்க நியூயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை இராணுவத்தினர் பலாத்தகாரமாக பேரூந்திற்குள் ஏற்றிக்கொண்டு சென்றதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கிரான், பாலச்சோலை, ஐயன்கேணி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பலவந்தமாக கிளிவெட்டிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சில இடம்பெயர்ந்த மக்கள் தமது உணவுகளை தயாரித்துக் கொண்டு இருந்த வேளையிலும், சிலரினது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றிருந்த வேளையிலும் வீட்டிலிருந்த வயது வந்தவர்கள் இராணுவத்தால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

மீளக்குடியமர மறுப்பவர்களை அரச அதிகாரிகளும், இராணுவத்தினரும் இடம்பெயர்ந்த மக்களிற்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்தப் போவதாகவும், பாதுகாப்புக்களை மீளப்பெற்றுக் கொள்ளப் போவதாகவும் பயமுறுத்துவதாகவும் தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம். அரசு உடனடியாக பலவந்தமாக மீளக் குடியமர்த்தும் தமது செயற்பாட்டைக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் எழுத்து மூலமான பாதுகாப்பு உத்தரவாதங்களை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்களே தவிர அங்கு பலவந்தமான மீளக்குடியமர்த்தல் நடைபெறவில்லை என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் பல சிக்கல்கள் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் சிறிலங்கா அரசின் இந்த நடைமுறை ஒன்றும் புதியன அல்ல எனவும், கடந்த காலங்களிலும் சிறிலங்கா அரசு பலவந்தமாக மக்களை மீளகுடியமர்த்தியுள்ளதாகவும

இடம்பெயர்ந்தோரை கதறக் கதற பழைய இடங்களுக்கு பஸ்களில் ஏற்றிச்செல்வதாக தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி.க்கள் கடும் விசனம்

திருகோணமலை மற்றும் வாகரைப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பலாத்காரமாக குடியேற்ற ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என அமைச்சர்களான றிஷாத் பதியுதீன் ,அமீர் அலி, பஷீர் ஷேகுதாவுத் ஆகியோர் உறுதியளித்துள்ள நிலையில் அரச படையினரால் பலவந்தமாக மீள் குடியேற்றப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இடம்பெயர்ந்து வரும் பெரும் அவலங்களுக்கு மத்தியில் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அரச படையினர் பலாத்காரமாக குடியேற்றுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஜெயானந்தமூர்த்தி, பா.அரியநேத்திரன் ஆகியோர் சர்வதேச மன்னிப்புச்சபை ,வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த வருடம் நடுப்பகுதியில் அரச படைகள் மூதூர் கிழக்குப் பகுதி மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தி மக்களை இடம்பெயர வைத்தது. இதன் காரணமாக ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாகரைப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் வருட இறுதிப் பகுதியில் வாகரை மீது எறிகணைத் தாக்குதல் மற்றும் விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தி பலரைப் பலிகொண்டதுடன் பொருளாதாரத் தடையையும் விதித்தனர்.

அரசின் இந்நடவடிக்கையினால் பெரும் அவலத்திற்கும் உயிரிழப்பிற்கும் பட்டினிச் சாவுக்கும் உள்ளான மக்கள் வாகரையிலிருந்து முற்று முழுதாக வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு சென்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ளனர்.

இம் மக்களை தற்போது அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் பலவந்தமாக ஏற்றிச் சென்று வாகரை மற்றும் ஈச்சிலம்பற்றுப் பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்து வருகின்றனர்.அங்கு மீள் குடியேற்றம் செய்யப்படுபவர்கள் கூட அடிப்படை வசதிகளற்று தற்காலிக கொட்டில்களிலும் முகாம்களிலுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் விருப்புடன் மீள்குடியேற்றம் செய்வதாக கூறிக்கொள்ளும் அரசாங்கமும் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் அநர்த்த நிவாரண அமைச்சு என்பன படையினரால் கதறக் கதற பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்று மக்களைக் குடியேற்றும் நடவடிக்கையை கண்டும் காணாமலும் உள்ளனர்.

கடந்த வாரத்தில் இவ்வாறு பல தடவைகள் மக்கள் பலவந்தமாக அவர்களின் விருப்புக்கு மாறாக ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள மக்களை படையினர் பஸ்களைக் கொண்டு சென்று ஏற்றிச் செல்ல முற்பட்டபோது மனித உரிமை அமைப்பின் தலையீட்டால் அது தடுக்கப்பட்டது.

இதையடுத்து, நண்பகல் செங்கலடி பிரதேச செயலர் பிரிவில் உள்ள சவுக்கடி மற்றும் வந்தாறுமூலை ஆகிய இடங்களில் இருந்த அகதி முகாம்களுக்குச் சென்ற படையினர் மக்களை பலவந்தமாக ஏற்றியுள்ளனர். இதற்கு மறுப்புத் தெரிவித்தவர்கள் மீது பலத்த தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இவ்வாறு 30 பஸ்களில் நூற்றுக்கணக்கானோர் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.அவர்கள் கதறக் கதற அழுத வண்ணம் சென்றுள்ளனர்.

சித்தாண்டிப் படை முகாமில் அநர்த்த நிவாரண அமைச்சர் மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனவே, பல அவலங்களுக்கு உள்ளாகி தற்போது அகதி முகாம்களில் தங்கியுள்ள இம் மக்களை அரசாங்கம் இவ்வாறு தன்னிச்சையாகவும் அடாவடித்தனமாகவும் பல வந்தமாகவும் மீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பது முற்று முழுதான மனித உரிமை மீறலாகும். அத்துடன் படையினர் பாதுகாப்புக்காகவே இவ்வாறு மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

http://www.thinakkural.com/news/2007/3/17/...s_page23459.htm

  • கருத்துக்கள உறவுகள்

பலவந்தமாக மீள்குடியேற்றம்

[17 - March - 2007]

leeadsln3.jpg

* அரசு மீது `ஹியூமன் றைற்ஸ் வோர்ச்' கடும் குற்றச்சாட்டு

மோதல்களால் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை வலுக்கட்டாயமாக மீளக்குடியேற்றும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான `ஹியூமன் றைற்ஸ் வோற்ச்' (Human rights watch) குற்றம் சாட்டியுள்ளது.

அண்மைக்கால மோதல்களினால் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை பலவந்தமாக அவர்களின் இருப்பிடங்களுக்கு திரும்பிச்செல்லுமாறு அரசாங்கம் நிர்ப்பந்திப்பதாக சாடியுள்ள இந்த அமைப்பானது, அந்த மக்களின் பாதுகாப்பை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளது.

`யுத்தத்தால் இடம்பெயர்ந்திருப்போரை தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லுமாறு தாங்கள் ஒருபோதும் பலவந்தப்படுத்தமாட்டோம் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது... ஆனால், அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதற்கா

  • தொடங்கியவர்

பழைய இடங்களில் இடம்பெயர்ந்தவர்களை குடியேற்றவில்லை

@மூதூர் கிழக்குப் பிரதேசமான சம்பூர் கட்டைபறிச்சான் சேனையூர்

கடற்கரைச்சேனை ஆகிய பிரதேச மக்கள் சுமார் 18 கிலோமீற்றர்

தூரத்திலுள்ள கிளிவெட்டி என்ற இடத்தில் குடியேற்றியுள்ளார்கள்

என பீ. பீ. சி செய்தியில் அந்த இடம்பெயர்ந்தோரின் குரல் மூலம்

அறியமுடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர்ந்த மக்களை விருப்பத்துக்கு மாறாகக் குடியேற்றியது உண்மை : ரிசாட் பதியுதீன்

கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து செட்டிக்குளம் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் பலவந்தமாக மீளக்குடியமர்த்தப்பட்டார்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.