Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கான் காபூல் இண்டர்கொன்டினன்ரல் விடுதிக்குள் தாக்குதல் ஐவர் பலி – 150 விருந்தினர்கள் மீட்பு

Featured Replies

ஆப்கான் காபூல் இண்டர்கொன்டினன்ரல் விடுதிக்குள் தாக்குதல் ஐவர் பலி – 150 விருந்தினர்கள் மீட்பு

Afghanistan%E2%80%99s-Intercontinental-H

ஆப்கானிஸ்தானில் ஆயுததாரிகள் பிடியிலிருந்த 150 ஹோட்டல் விருந்தனர்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஆயுதாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஹோட்டலில் தங்கியிருந்த 150 விருந்தினரை சில மணித்தியாலங்கள் ஆயுததாரிகள் பணயமாக வைத்திருந்தனர். நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினரை ஆயுதாரிகளின் பிடியிலிருந்து படையினர் மீட்டுள்ளனர். இவ்வாறு விருந்தினரை மீட்கும் முயற்சியின் போது ஐந்து சிவிலியன்களும், மூன்று ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளனர்.

Afghanistan%E2%80%99s-Intercontinental-H
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ‘இண்டர்கொன்டினன்ரல் விடுதிக்குள் புகுந்து நான்கு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும ராணுவத்தினருக்கும் துப்பாக்கிதாரிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நான்கு துப்பாக்கிதாரிகளில், மூன்று பேரை ராணுவத்தினர் கொன்றுவிட்டதாகவும் மற்றைய நபரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

நேற்று சனிக்கிழமை மாலை விடுதியின் உள்ளே புகுந்த துப்பாக்கிதாரிகள், அங்கு தங்கியிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டத்துடன் எறி குண்டுகளையும் வெடிக்கச் செய்ததாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.

குறித்த விடுதியில் மாகாண அதிகாரிகள் கலந்துகொண்ட மகாநாடு இடம்பெற்றதாகவும் . துப்பாக்கிதாரிகள், சிலரைப் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் உள்ள விடுதிகள்; குறித்து அமெரிக்க தூதரகம் ஒரு எச்சரிக்கையை விடுத்த சில நாட்களில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Afghanistan%E2%80%99s-Intercontinental-HAfghanistan%E2%80%99s-Intercontinental-H

http://globaltamilnews.net/2018/62539/

  • தொடங்கியவர்

காபூல்: ''துப்பாக்கிதாரிகள் வெளி நாட்டவர்களை தேடித் தேடி சுட்டனர்''

காபூல்: ''வெளிநாட்டவர்களை தேடித் தேடி சுட்டனர்''படத்தின் காப்புரிமைAFP

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 'இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில்' உள்ள உணவகத்தில் துப்பாக்கிதாரிகள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் விவரித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தான் ஒரு ஆஃப்கன் என கூறியதால் தன்னை அவர்கள் விடுவித்ததாகக் கூறும் அவர், ''வெளிநாட்டவர்கள் எங்கே?'' என அவர்கள் கத்தியதாகவும் கூறுகிறார்.

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த நான்கு பேருடன், 14 வெளிநாட்டவர்கள் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என சில ஊடகத்தின் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

பாதுகாப்பை ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவது என்ற சமீபத்திய முடிவு தவறானது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

துப்பாக்கிதாரிகளுடன் இரவு முழுவதும் சண்டையிட்ட ஆஃப்கன் படையினர், கட்டடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். ஹோட்டலில் இருந்த 160 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த சண்டையில் மூன்று துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

காபூல்: ''வெளிநாட்டவர்களை தேடித் தேடி சுட்டனர்''படத்தின் காப்புரிமைREUTERS

உக்ரைனை சேர்ந்த 9 பேர், கிரீஸ் நாட்டை சேர்ந்த ஒருவர், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர், கஜகஸ்தானை சேர்ந்த ஒருவர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என காபூலில் போலீஸார் பிபிசியிடம் கூறியுள்ளனர். இன்னும் இருவர் அடையாளம் காணப்படவில்லை.

தங்களது பல ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், சில இன்னும் காணவில்லை என்றும் ஆஃப்கானிஸ்தான் விமான நிறுவனமான கம் ஏர் கூறியுள்ளது.

சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 21:00 மணிக்கு ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் ஆறாவது தளத்தில் உள்ள உணவகத்தில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கிதாரிகள் அங்கு நுழைந்துள்ளனர்.

துப்பாக்கிதாரி தனது சிறிய துப்பாக்கியால் மேலே சுட்டபோது, தனது மகனுடன் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

வெளிநாட்டவர் என நம்பப்படும் ஒரு பெண்ணை சுட்டுவிட்டு, தன்னை நோக்கி துப்பாக்கியை திருப்பியதாக அவர் கூறுகிறார்

''நான் ஒரு ஆஃப்கன்'' என அவர் கூறியுள்ளார். நாங்கள் ஆஃப்கன்களை கொல்ல மட்டோம் என கூறிய ஒரு துப்பாக்கிதாரி, ''வெளிநாட்டவர்கள் எங்கே'' என கேட்டுள்ளார். பிறகு வெளிநாட்டவர்களைத் தேடி அங்கிருந்து சென்றுள்ளனர்.

முதலில் தங்களுக்கு உணவு பரிமாறுமாறு இரண்டு துப்பாக்கிதாரிகள் தன்னிடம் கேட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஹசீப் என்பவர் டோலோ நியூசிடம் கூறியுள்ளார்.

''அவர்கள் மிகவும் நவநாகரிக ஆடைகளை அணிந்திருந்தனர். என்னிடம் வந்து உணவு கேட்டனர். நான் உணவுகளைப் பரிமாறினேன். என்னிடம் நன்றி கூறிவிட்டு, தங்களது ஆயுதங்களை எடுத்து மக்களைச் சுட ஆரம்பித்தனர்'' என்கிறார் அவர்.

''டஜன் கணக்கான உடல்கள் என் அருகில் கிடந்தன'' என்கிறார்.

http://www.bbc.com/tamil/global-42770806

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.