Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெல்லப்போவது யார் – சிவசக்தி ஆனந்தனுக்கு சிறிதரன் சவால்…

Featured Replies

வெல்லப்போவது யார் – சிவசக்தி ஆனந்தனுக்கு சிறிதரன் சவால்…

இரண்டு கோடி ரூபா வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடதன் உறுதிப்படுத்த முடியுமா?

sritharan-with-sivasathi.jpg?resize=564%

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபாக்களை வாங்கியதாக நேற்று(20) வவுனியாவில் தெரிவித்திருக்கிறார். எனவே நான் அவர்களிடம் சவால் விடுகின்றேன் முடிந்தால் அதனை ஆதாரத்துதடன் நிரூபிக்க முடியுமா என தெரிவித்துள்ளார் இன்று(21) கிளிநொச்சி வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வவுனியாவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈபிஆர்எல்எப் எந்த வட்டாரத்திலும் வெல்லமாட்டார்கள் இந்த இடத்தில் நீங்கள் அதனை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எனத் தெரிவித்த அவர் எமது தமிழ் மக்களை ஈபிஆர்எல்எப் கொலை செய்தமையினையும், கொன்று குவித்தமையினையும் மக்கள் மறந்து விடமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்

அத்தோடு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போராட்டத்தை கொண்டது சிவசக்தி ஆனந்ததான்.எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் நாங்கள் இந்த தேர்தலில் இடைக்கால அறிக்கைக்கு ஆணை வழங்குகள் என்று மக்களிடம கோரவில்லை இது அதற்கான தேர்தலும் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்காவது இடைக்கால அறிக்கைக்கு ஆணை கோரி இந்த தேர்தலில் வாக்களியுங்கள் என்று கோரியுள்ளனரா அதனை உறுதிப்படுத்த முடியுமா எனுவம் கேள்வி எழுப்பிய அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே ஒரு இலக்கு நோக்கி பயணித்துகொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

sivasakthi.jpg?resize=800%2C497

 

http://globaltamilnews.net/2018/62623/

  • தொடங்கியவர்

பணம் பெற்றிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும் ; சிறிதரன் சூளுரை

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததற்காக அரசிடம் தலா இரண்டு கோடி ருபா பெற்றதாக சக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியிருத்தார்.

sritharan.jpg

அவ்வாறு அரசிடம் இரண்டு கோடி ரூபா தான் பெற்றதாக முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுமாறு சிவசக்தி ஆனந்தனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

 

அவரது இல்லத்தில் இன்று காலை ஊடகங்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

மேலும் தான் ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சியின் ஊடக அரசியலுக்கு வந்த்தாக சிவசக்தி ஆனந்தன் கூறியிருப்பதை மறுதலித்துள்ளதுடன்  அக் கட்சியினர்  தற்போது தனக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சி கடந்த காலங்களில் கொலைகள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்ததாகவும் அதனாலேயே தற்போது வரை அதன் தலைவரும் செயலாளரும் கனடா நாட்டிற்கு செல்ல முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

ஈ.பீ.ஆர்.எல்.எப். இதுவரை காலமும் எம்மோடு இணைந்து பணியாற்றிதால் அவர்களைப் பற்றி பேசாதிருந்த்தாகவும் தற்போது அவர்களின் கடந்தகால செயற்பாடுகள் குறித்து பேச வேண்டி ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

 

ஆகவே அவர்களின் கடந்த கால வரலாறுகளை மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது. இதனால் இனி அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும். இருந்தும் அவர்கள் எமக்கெதிரான செயற்பாடுகளை தொடர்ந்தால் நாங்களும் பதிலடி கொடுக்க தயாராகவே உள்ளோம்.

எனவே கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறியா வேண்டாமென்று அவர்களை கேட்டு கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/29935

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.