Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கோடி உறுப்பினர்கள்... ரஜினியின் பிளான் ரெடி!

Featured Replies

ஒரு கோடி உறுப்பினர்கள்... ரஜினியின் பிளான் ரெடி!

 
 

 

ஜினி மக்கள் மன்றத்தினர் பரபரவென உலா வருவதைப் பார்த்ததும் ‘என்னவோ திட்டம் இருக்கு’ என்று புரிந்தது. ‘ரஜினி எப்போது மக்களைச் சந்திப்பார்... எப்போது டூர் வருவார்?’ என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. அதற்கான பணிகள் அசுர கதியில் நடந்துவருகின்றன. அதற்கு முன்னோட்டமாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பின்பக்கம் இருந்த கெஸ்ட் ஹவுஸ் மாற்றப்பட்டுவருகிறது. சுமார் 200 பேர் அமரும் அளவுக்கு மினி ஹால் ஆக மாற்றும் கட்டட வேலை நடக்கிறது. மண்டபத்துக்குள் வராமலே, ரசிகர்கள் இனி இந்த ஹாலுக்குள் வந்துபோக முடியும். இதுதான், ரஜினியின் புதுக்கட்சி அலுவலகமாகச் செயல்படப் போகிறது.

பொங்கல் அன்று போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்த ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லிவிட்டு, தலைமை நிர்வாகிகளுக்கு ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றையும் ‘பாஸ்’ செய்திருக்கிறார். ‘‘ஆன்லைன் மூலம் மன்றத்தில் உறுப்பினராகச் சேர்பவர்கள் சேரட்டும். இன்னொரு பக்கம் நீங்களும் ஆங்காங்கே முகாம்கள் நடத்தி, புதிய உறுப்பினர்களை முதலில் சேர்த்துக் காட்டுங்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள தமிழக மக்களில் சுமார் ஒரு கோடி பேராவது குறைந்த பட்சம் நம் மன்றத்தில்  உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த எண்ணிக்கையை வைத்துக்கொண்டு அரசியல் பயணம் தொடங்குவதுதான் சரியாக இருக்கும்.

p2a_1516356997.jpg

ஒவ்வொரு நாளும் நீங்கள் சேர்க்கும் உறுப்பினர்கள் படிவங்களை இங்கு ஐ.டி டீம் பதிவேற்றம் செய்துவருகிறது. மின்னல் வேகத்தில் அவர்களுக்கு அடையாள அட்டை தயாரித்து அனுப்புவார்கள். அடுத்தகட்டமாக, நிர்வாகிகளை நானே நியமிப்பேன். பழையவர்கள், புதியவர்கள் என்றெல்லாம் பாகுபாடு பார்க்க வேண்டாம். எல்லாம் ரெடியானதும், கட்சியின் பெயர், கொடி, தமிழகம் முழுக்க டூர்... இதையெல்லாம் மதுரையில் பிரமாண்ட மேடையில் அறிவிப்பேன்’’ என்பதுதான் அந்த மெசேஜ்.

சென்னையிலிருந்து ஒரு டீம் கிளம்பி மாவட்ட வாரியாகப் போகிறது. ரஜினி மக்கள் மன்றங்களைப் பலப்படுத்தி, அரசியல் கட்சியைத் துவக்குவதற்கான அடிப்படைப் பணிகளை இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தி லும் செய்ய உள்ளனர். முதல்கட்டமாக, வேலூரில் ஜனவரி 19-ம் தேதி இதற்கான கூட்டம் நடைபெற்றது. 

உறுப்பினர் சேர்க்கைக்காக சில இடங்களில் திருமண மண்டபங்களைப் பிடித்து ஏகப்பட்ட செலவு செய்வதைக் கேள்விப்பட்ட ரஜினி, ‘‘நோ... இது எனக்குப் பிடிக்காத விஷயம். இது, வீண் செலவு. ஒரு வார்டுக்கு நான்கைந்து பேர் செல்லுங்கள். இரண்டு நாளைக்கு 20 தெருக்களில் வீடு வீடாகப் போய் விஷயத்தைச் சொல்லுங்கள். ஏதாவது ஒரு வீட்டில் அமர்ந்து, உறுப்பினர்களைச் சேருங்கள். பெண்கள் போட்டோ கொடுக்கத் தயங்கினால், விட்டுவிடுங்கள். உறுப்பினர் கார்டில் புகைப்படம் இருக்கவேண்டிய இடத்தில் காலியாக வரும் என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். பெண்கள் போன் நம்பரைத் தரத் தயங்கினால், அவர்களின் குடும்ப உறுப்பினரின் நம்பரைக் கேட்டு வாங்குங்கள்’’ என்றிருக்கிறார். இதுபோன்ற நிபந்தனைகள் இல்லாவிட்டால், போலியான நபர்களைச் சேர்த்துவிடுவார்கள் என ரஜினி நினைக்கிறார்.

இந்தத் திட்டமெல்லாம் நினைத்தபடி முடிந்தால், தமிழ்நாட்டின் ஒரு கோடி வாக்காளர்களின் விவரங்கள், தொலைபேசி எண்களுடன் ரஜினி மக்கள் மன்றத்தில் இருக்கும். தமிழ்நாட்டில் எந்தக் கட்சியிடமும் இல்லாத ‘டேட்டா பேஸ்’ இது!

அதேநேரம், தமிழகம் முழுக்க உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தமிழக உளவுத்துறை போலீஸ் சல்லடை போட்டு அலசி வருகிறது. ‘முன்னணி நிர்வாகிகளின் குடும்பத்தினர் யாராவது அரசுத் துறைகளில் தொடர்பில் இருக்கிறார்களா?’ என்று தேடுதல் வேட்டை நடக்கிறது. உதாரணத்துக்கு, மயிலாடுதுறையில் ரஜினி மக்கள் மன்ற நகரப் பொறுப்பில் இருக்கிறவர் டி.எல்.ராஜேஸ்வரன். அரசுத் துறைகளில் கான்ட்ராக்ட் தொழில் செய்கிறவர். சமீப காலமாக, அவர் போகும் இடங்களிலெல்லாம் கதவுகள் சாத்தப்படுகின்றனவாம். கூட்டம் நடத்த அனுமதிக் கேட்டு போலீஸிடம் சென்றால், அனுமதி மறுக்கப்படுகிறதாம். இந்தத் தகவல்களை ரகசியமாக ஆளும் கட்சிக்குச் சொல்லி, அவர்களிடமும் கூட்டம் நடத்த அனுமதிக் கடிதம் வாங்கி வைத்துக்கொண்டு, ‘‘இரண்டு பேரும் ஒரே நாளில், ஒரே இடத்தில் கேட்டால் எப்படித் தருவது?’’ என்று இழுக்கிறார்களாம். இப்படி மறைமுகமாக ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ‘டார்ச்சர்’ ஆரம்பித்திருக்கிறது. இதையெல்லாம் ரஜினியின் கவனத்துக்கு நிர்வாகிகள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

p2_1516357036.jpg

முன்பு மதுரையில் ரஜினி ரசிகர் மன்றத்துடன் தொடர்பில் இருந்தவர் பாஸ்டின். திருச்சி முன்னாள் காங்கிரஸ் எம்.பி-யான அடைக்கலராஜின் மருமகன். இப்போது சென்னையில் வசிக்கும் இவர், ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்ப்பில் ஆர்வம் காட்டிவருகிறார். அவரிடம் பேசினோம். ‘‘கல்வி, மருத்துவம், நிர்வாகம் ஆகியவற்றின் சிஸ்டத்தை மாற்றவேண்டும். ‘ரமணா’ பட ஸ்டைலில் ஒரு ஸ்லீப்பர் செல் போல செயல்பட்டு ஊழல்களின் ஆணிவேர் பற்றிய தகவல்களைச் சேகரித்து, வருகிறோம். யார், எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்பது பரம ரகசியம். உரிய நேரத்தில் இந்தத் தகவல்கள் ரஜினிக்குப் போகும். இதற்கு மேல் இப்போது எதையும் கேட்காதீர்கள்’’ என்றார்.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபி குடுத்த காசுக்கு மேல கூவுது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.