Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா வளர்கிறதா? - இலங்கைக்கும் கீழே போன ரேங்க்!

Featured Replies

இந்தியா வளர்கிறதா? - இலங்கைக்கும் கீழே போன ரேங்க்!

 
 

 

‘வளர்ச்சி’... மூன்றரை ஆண்டு கால நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவில் முன்னிலைப் படுத்தப்பட்ட சொல் இதுதான். நடைமுறையில் இருந்த 15-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் பிரதான நோக்கமும் ‘வளர்ச்சி’தான். ‘இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் ஜனநாயக நாடு. இந்த உலகில் எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு இருக்க முடியாது’ என மார்தட்டிக் கொண்டிருந்த மனிதர்களின் மனதில் பலத்த அடி விழுந்திருக்கிறது. ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற குறியீட்டில், அண்டைநாடுகளான வங்க தேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தானைவிட இந்தியா பின்தங்கியுள்ளது’ என்று கூறியுள்ளது உலகப் பொருளாதார அமைப்பு.

மோடி, ட்ரம்ப் உள்பட உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட உலகப் பொருளாதார அமைப்பின் மாநாடு டாவோஸில் நடைபெற்றது. அதற்கு முன்பாக பொருளாதார வளர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் உலக நாடுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் வகை என்பது, மேம்பட்ட பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள்; இரண்டாவது வகை, ஓரளவு பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள். முதல் பிரிவில் நார்வே, ஐஸ்லாந்து, அமெரிக்க உள்பட 27 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பிரிவில், இந்தியா உள்ளிட்ட 74 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

p34_1516986255.jpg

மக்களின் வாழ்க்கைத்தரம், நீடித்த சுற்றுச்சூழல், இயற்கை வளங்களைச் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு, எதிர்கால சந்ததியைக் கடனில் தள்ளாத பொருளாதாரச் சூழ்நிலை எனப் பல அம்சங்களை வைத்து இந்தத் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் தரவரிசையில், மொத்தமுள்ள 74 நாடுகளில் இந்தியா 66-வது இடத்தையே பிடித்துள்ளது. ஆனால், அண்டை நாடுகளான நேபாளம் 22-வது இடத்திலும், வங்க தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்திலும் உள்ளன.

‘கடந்த ஐந்து ஆண்டுகளில் வறுமை பெருமளவு குறைந்தாலும், இன்னமும் 10-ல் ஆறு இந்தியர்கள் மிகக்குறைவாகவே சம்பாதிக்கின்றனர்’ எனக் கவலையோடு சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை. இந்தத் தர வரிசைக்கான 12 பிரிவுகளில், இந்தியா இரண்டு பிரிவுகளில் மட்டுமே வளர்ச்சிக்கான அடையாளங்களுடன் காணப்படுகிறது. மீதமுள்ள 10 பிரிவுகளில் சராசரிக்கும் குறைவான வளர்ச்சியையே காட்டுகிறது.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனிடம் பேசியபோது, ‘‘வளர்ச்சி என்பது எண்களால் குறிப்பிடப்படும் வெறும் எண்ணிக்கை மட்டுமே. ஆனால், நாம் கவனிக்க வேண்டியது, ‘உள்ளடக்கிய வளர்ச்சி’ என அவர்கள் குறிப்பிடுவதைத்தான். அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைந்தால் இந்த உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தானாக உயரும். ஆனால், சிலர் மட்டும் சம்பாதித்துக்கொண்டே போவதும், பலர் வறுமையில் வாடுவதுமாக சமநிலையற்ற தன்மை இருக்கிறது. சென்ற ஆண்டு இந்தியாவுக்கு 100 ரூபாய் வருமானம் வந்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒருவர் 84 ரூபாயையும், மீதமுள்ள 16 ரூபாயை 99 பேரும் பெறுகிறார்கள் என்ற சூழல் இருந்தால், அது உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும். அதைத்தான் இந்தப் பட்டியலிலும் பிரதிபலிக்கிறது. சரியான திட்டங்கள் இல்லாததும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களைச் சென்றடையாததும்தான் பின்னடைவுக்குக் காரணம்’’ என்றார்.

‘பொருளாதார நிபுணர்களும், திட்டங்களை வகுக்கும் அதிகார வர்க்கமும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எவ்வளவு என்பதை வைத்தே ஒரு நாட்டின் பொருளாதாரச் செயல்பாட்டை மதிப்பிடுகிறார்கள். இது வெறுமனே பொருள்கள் மற்றும் சேவையை மட்டுமே அளவிடும் குறியீடு. ஒரு சராசரி குடும்பத்தின் மாத வருமானத்தில் இது என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது, வேலை தேடும் இளைஞர்களுக்கு இது எவ்வளவு புதிய வாய்ப்புகளைத் தருகிறது, வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்துகிறது, எதிர்காலம் குறித்த அவர்களின் அச்சத்தை எந்த அளவுக்கு நீக்குகிறது என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்’ எனத் தேசங்களுக்கு அறிவுரை சொல்கிறது இந்த அறிக்கை.

p34b_1516986273.jpg

டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘1997-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 400 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2025-ல் 5 ட்ரில்லியன் டாலர்களாக ஆகும். இந்த வளர்ச்சி அபரிமிதமானது’’ என்றார். மோடி கூறுவது போல நடந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், ஒரு சாரார் மட்டுமே வளரும்விதமாக இருக்கும் தற்போதைய சூழல்தான், இந்தியா வளர்ச்சிக் குறியீட்டில் பின்தங்கக் காரணம்.

அரசியல் தலைவர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களையும் உலகப் பொருளாதார அமைப்பின் அறிக்கை நேரடியாக ஓரிடத்தில் எச்சரிக்கிறது. ‘சமூகத்தில் அமைதியின்மை ஏற்படும் அளவுக்கான சமநிலையற்ற வளர்ச்சி ஆபத்தானது. இந்தக் காரணத்தால்தான் சமீப ஆண்டுகளில் பல நாடுகளில் அரசுகளையே வீழ்த்தும் அளவுக்கான போராட்டங்களில் இளைஞர்கள் இறங்கினார்கள்’ என்பது அந்த எச்சரிக்கை. இதன் அர்த்தம் சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிய வேண்டும்.   

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.