Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசிற்கும் கருணா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளன: புலனாய்வுத்துறை அதிகாரியின் மனைவி

Featured Replies

அரசிற்கும் கருணா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளன: புலனாய்வுத்துறை அதிகாரியின் மனைவி

சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு சென்று கருணாவை சந்தித்து வருமாறு தனது கணவரை அரசாங்கம் அனுப்பியதாக சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகேயின் மனைவி ராசிக பிரியதர்சினி நேற்று தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி சிறிலங்கா கடற்படையின் புலனாய்வுத்துறையின் அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகே கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அவரது மனைவி நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

"எனது கணவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இல்லை. ஆனால் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரத்திற்கு உதவுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் கேட்கப்பட்டிருந்தார்.

அரச தலைவர் தேர்தலின் போது வவுனியாவில் மகிந்தவிற்கு ஆதரவாக செயற்படுமாறு கோத்தபாய ராஜபக்ச, றோகண கமெகேயை கேட்டபோது அவர் வவுனியாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

எனது கணவருக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் கோத்தபாய ராஜபக்சவே அவரை அரசியலில் இணையுமாறும், மகிந்த ராஜபக்சவுக்காக வவுனியாவில் பணி புரியுமாறும் கேட்டிருந்தார். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. எனவே கோத்தபாய ராஜபக்ச அவரை ஜோவுன் செனன்காய விற்கு பிரதித் தலைவராக 2005 ஆம் ஆண்டு நியமித்தார். எனக்குத் தெரிந்த வரையில் எனது கணவர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மூலமே கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தார். அவர் சம்பிக்க ரணவிற்கு நெருங்கிய நண்பர்.

றோகண கமெகே, ஜோவுன் செனன்காயவில் பணியாற்றிய போதும் கடற்படையின் புலனாய்வுத்துறையின் பிரிவிலும் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் கடமையில் ஒழுக்கமானவர், நாட்டுப்பற்றுள்ளவர். எனவே தான் கடற்படைத் தளபதி தயா சந்திரகிரியிடம் இருந்து ரணசூர்ய விருதை பெற்றுக்கொண்டார். அவர் நேர்மையற்றவராகவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை உடையவராகவும் இருந்தால் இந்த விருதை பெற்றுக் கொண்டிருக்க முடியுமா?

கிழக்கு மகாகாணம் சென்று கருணாவை சந்திக்குமாறு அரசாங்கம் எனது கணவரை அனுப்பியது. அது கடற்படையினருக்கும் தெரியும். புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கு அவர் கடமையில் இருந்த போது அதனை எடுத்திருப்பது தெரியவரும். அவர் ஒரு அப்பாவி, எப்போதும் நாட்டுப்பற்றுக் கொண்டவர். விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தவர். விடுதலைப் புலிகளுக்கு எதிராக புத்தகமும் எழுதியுள்ளார். ஆனால் அவர் விடுதலைப் புலி ஆதரவாளர் என தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

எமக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன, நாங்கள் வவுனியாவிலோ அல்லது அனுராதபுரத்திலோ உள்ள எமது இல்லங்களுக்கு செல்ல முடியாது. ஏனெனில் அவர் ஒரு புலனாய்வுத்துறை அதிகாரி என்பது எல்லோருக்கும் தெரியும். முன்னர் இது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால் தற்போது அவர் ஒரு துரோகி எனவும் முத்திரை குத்தப்பட்டுள்ளார். அதுவும் எமக்கு பிரச்சனையாகிவிட்டது.

அவரது உயிருக்கு விடுதலைப் புலிகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. எமது குடும்பம் அச்சத்தின் காரணமாக தொடர்ச்சியாக இடம்மாறி வாழ்ந்து வந்தது. நான் வவுனியாவில் பிறந்த போதும் நானும் எனது பெற்றோரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். நாம் தமிழ் மக்களுடன் பழகுவதால் நாம் விடுதலைப் புலிகள் என்று அர்த்தமாகாது.

எனது கணவரை கைது செய்ததில் இருந்து எனது இரு பிள்ளைகளும் தமது வாழ்கையை தொடரமுடியாது உள்ளனர். பாடசாலைக்கும் செல்வதில்லை. அரசாங்கம், எனது கணவரை விடுதலை செய்வதுடன் அவரை துன்புறுத்துவதையும் நிறுத்த வேண்டும். பிள்ளைகள் தமது தந்தையாரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நான் அவர்களுக்கு எதனைக் கூறுவேன்" என்றார் அவர்.

http://www.eelampage.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவா சொல்லித்தான் தெரியவேண்டுமே'??? அது குழந்தைப்பிள்ளைக்கு கூட தெரிந்த மலிந்த விடயம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கணவன் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவுடனேயே கருணாவை பாதுகாப்பாக வைத்திருந்தார். - உளவுத்துறை அதிகாரியின் மனைவி.

ஜ வியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

கருணாவை இதுவரைகாலமும் பாதுகாத்து வந்த கடற்படை புலனாய்வுத்துறை அதிகாரி லெப்ரினன் கொமான்டர் கமகே அண்மையில் கைது செய்யபட்டிருந்தார். இவர் அமைச்சர் (சிறீபதி சூரியாராச்சியின்) செயலாளராகவும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து துரத்தப்பட்ட கேணல் கருணாவின் மெய்ப்பாதுகாவலருமாவார். புலனாய்வுத்துறை அதிகாரி கமகேயின் மனைவியார் தனது கணவனின் கைது தொடர்பாக பல விடயங்களை அம்பலப்படுத்தி உள்ளார். கருணா கிழக்கு மாகாணத்தில் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது எனது கணவன் கமகே சிறீபதி சூரியாராச்சியுடன் தொடர்பில் இருந்தார். சிறிபதி சூரியாராச்சியினது நண்பராக இருந்த அதே நேரம் யாதிகெல உறுமய முக்கியஸ்தரும் தற்போதய அமைச்சருமான சம்பிக றணவக்க எனது கணவரின் நண்பராவார். இவர்கள் ஊடாக எனது கணவருக்கு மகிந்தவின் சகோதரன் கோதபாய றாஜபக்சவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தது அவர்களின் ஆலோசனைபடி எனது கணவரின் ஒழுங்கமைப்பில் கருணாவை இலங்கை அரசு இயக்கி வந்தது. இதனால்தான் எனது கணவன் கருணாவுடன் இனைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். எனது கணவர் கருணாவுடன் எடுத்த புகைப்படத்தைவைத்து எனது கணவருக்குள் புலி ஊடுருவியுள்ளதாக இலங்கை அரசு சந்தேகிக்கின்றது. ஆனால் நான் வவுனியாவை சோர்ந்த பெண்மனி எனக்கு தமிழ் தெரியும். எனது கணவரை விடுதலை செய்யவேண்டும். எனது கணவர் புலிகளுக்கு எதிரான பாரிய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வந்தவர் எனவும் சிங்கள பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் கமகேயின் மனைவியார் தெரிவித்துள்ளார்.

http://www.nitharsanam.com/?art=22415

  • தொடங்கியவர்

மிஸிஸ் கமகே

ஒங்கட சோகம் எங்கலுக்கு வலங்குது. கொஞசங் இருங.க

இப்பதானே விசாரண தொடங்குது. அதுக்குள்ளால விட

ஏலுமா? தமிள மினிசுங்களுக்கு கருணாவோட சேந்து

என்ன வெல்லாஞ் செஞ்சாரு கமகே. அத அநுபவிக்க

வேணாமா?

  • கருத்துக்கள உறவுகள்

அதிங் உங்க கணவர் வெளியே வாறதுங் கொஞ்சங் கஸ்டம் mrs கமகே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.