Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ச ஆட்சிக்கால ஊழல் வழக்குக்கு சிறப்பு நீதிமன்றம்

Featured Replies

ராஜபக்ச ஆட்சிக்கால ஊழல் வழக்குக்கு சிறப்பு நீதிமன்றம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சபடத்தின் காப்புரிமைMAHINDA RAJAPAKSHA

இந்த வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றங்கள் மூன்று நீதிபதிகளை கொண்டிருக்கும் என்று அரசு கூறியுள்ளது.

அரசு கருவூலத்தில் இருந்து பெரும் தொகையை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை விசாரிப்பதற்கான நடவடிக்கை மெதுவாக நடைபெறுவதாக விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த புதிய நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/sri-lanka-42890342

  • தொடங்கியவர்

இலஞ்ச, ஊழல், பாரிய நிதி குற்ற வழக்குகளை ஆராய விசேட நீதிமன்றம்

 

 

3-Judical-Special-Court-1.jpg

 

இலஞ்ச, ஊழல் சட்டத்தை திருத்தவும் அமைச்சரவை அனுமதி

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபித்க்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக நீதிபதிகள் மூவரடங்கிய, விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு 1978ம் ஆண்டு 02 ஆம் இலக்க நீதிமன்ற அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக, அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய, அதில் குறிப்பிடப்படும் குற்றங்கள் தொடர்பில் சட்டமாதிபர் அல்லது இலஞ்ச, ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரால் (தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள) மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

இதன்போது நிலைமைக்கு ஏற்ப, உரிய குற்றத்தின் தன்மை, பாரிய, சிக்கலான, அரசாங்கத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, தேசிய நல்லுறவு போன்ற விடயங்கள் உரிய முறைமையின் கீழ் கருத்திற் கொள்ளப்படும்.

இம்மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தை அமைக்கும் பொருட்டான விதிமுறைகளை உள்ளடக்கியதாக, 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதிமன்ற அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை, அரசாங்கத்தினால் வர்த்தமானி படுத்துவதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்துக்காக  பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமான யோசனையை, நீதியமைச்சர் தலதா அதுகோரளவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில், ஏற்கனவே காணப்படுகின்ற சட்டங்களை தற்போதுள்ள தேவைகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றியமைப்பதற்கான அவசியத்தை அடையாளம் கண்டு, இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு சட்டம் மற்றும் அதன் இணை சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைவாக, இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு மேலதிமாக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை, நீதவான் நீதிமன்றங்களில் மாத்திரமல்லாது மேல் நீதிமன்றத்திலும் விசாரிப்பதற்கு ஏற்ற வகையிலான விதிமுறைகளை உள்ளடக்கிய, 1954 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 70 ஆவது பிரிவை திருத்தம் செய்ய வேண்டியுள்ளதாக ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

http://www.thinakaran.lk/2018/01/31/உள்நாடு/22320/இலஞ்ச-ஊழல்-பாரிய-நிதி-குற்ற-வழக்குகளை-ஆராய-விசேட-நீதிமன்றம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.