Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மன்னாரில் உல்லாச பயணத்துறை அபிவிருத்தி, மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை!வவுனியாவில் பிரதமர்

Featured Replies

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மன்னாரில் உல்லாச பயணத்துறை அபிவிருத்தி, மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை!வவுனியாவில் பிரதமர்

 

 
 

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மன்னாரில் உல்லாச பயணத்துறை அபிவிருத்தி, மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை!வவுனியாவில் பிரதமர்

2020, 2025 ஆம் ஆண்டு வருகின்ற போது இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக்கி மாற்றிக் காட்டுவோம் எனவும், திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மன்னாரில் உல்லாச பயணத்துறை அபிவிருத்தி, மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கட்சிகளும், பொது அமைப்புக்களும் எம்மோடு ஒன்றித்து பயணித்தார்கள். அன்று சொன்னதன் படியாக நான் பிரதமாராக பதவியேற்று என்னுடைய தலைமையில் எமது கட்சியைச் சேர்நத அதிகளவிலான அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கத்தை உருவாக்கினோம். சிறுபான்மை ஆட்சியாளாக இருந்த நாங்கள் பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தோம். நகரசபை மற்றும் பிரதேச சபை என்பவற்றில் பெண்களின் பிரதிநிதிதுவம் 35 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற ஒரு யோசனையை முன்வைத்தோம். இன்று நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது அதிகளவிலான பெண்கள் அரசியலுக்குள் வந்துள்ளார்கள். பெண்களின் பிரதிநித்துவம் ஆகக்குறைந்தது 25 வீதமாக இருக்க வேண்டும். ஆண்களின் பிரதிநித்துவம் 75 சதவீதத்திற்கு அதிகமாக ஒரு போதும் இருக்காது. அந்த நிலையை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.

தேசிய அரசாங்கத்தை உருவாக்கிய நாங்கள் தற்போது உங்களது பிரதேச அதிகாரத்தை கேட்கின்றோம். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தார்கள். இன்று இன, மத ஐக்கியமும், நல்லுறவும் ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். பௌத்தம், இந்து, இஸ்லாம் மக்கள் ஒற்றுமையதாக வாழ்கிறார்கள். உங்களுடைய கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்கு நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தாருங்கள்.

இந்த மாவட்டம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பிரதேசமாக இருக்கிறது. யுத்தத்தின் போதும் நீங்கள் வாழ்ந்தீர்கள். யுத்தம் முடிவடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வி கண்டுள்ளது. இப்பொழுது யுத்தம் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். யுத்தம் காரணமாக இந்தப் பிரதேசத்தின் பொருளாதாரம் முற்று முழுதாக சீரளிந்து போயிருந்தது. சமூக இணக்கப்பாடு வீழ்ச்சி கண்டிருந்தது. பொருளாதார ரீதியாக வீழ்ச்சி கண்டிருந்த நாங்கள் தற்போது முன்னோக்கி செல்கிறோம். தென்மாகாண பொருளாதார துறை வீழ்ச்சி கண்டிருந்தது.

வடக்கிலும், தெற்கிலும் பொருளாதார துறை வீழ்ச்சி கண்டிருந்தது. அதை நாங்கள் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றோம். தெற்கிலும், வடக்கிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வேலைத்திட்டங்களை ஆரம்பித்து இருக்கின்றோம். இந்த நாட்டில் பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இந்த நாட்டில் வருமானம் இருந்ததில்லை. கடனைப் பெற்றுத் தான் அவர்கள் அபிவிருத்திப் பணிகளைச் செய்தார்கள். அந்தக் கடனை செலுத்துவதற்கு அவர்கள் மீண்டும் கடனைப் பெற்றார்கள். அதனால் இந்த நாடு பொருளாதார ரீதியாக மிகவும் கடன் பிரச்சனைக்கு உள்ளாகியது. அந்தக் கடனை செலுத்துவதற்கு முன்னதாகவே நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டியிருந்தது. பொருளாதாரம் தோல்வி அடைந்த நிலையிலேயே இந்த ஆட்சியைப் பெற்றுக் கொண்டோம். தற்போது இந்த அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்துள்ளது. புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். தற்போது இந்தக் கடனைக் பொடுப்பதற்கு கடன்பெற வேண்டிய தேவை எங்களிடம் இல்லை. நாங்கள் தற்போது வேண்டுமான அளவுக்கு கடனை செலுத்துவதற்கு தகுதி பெற்றுள்ளோம். நாங்கள் அபிவிருத்திகளை ஆரம்பித்துள்ளோம். முதலாவது வருடத்தில் இந்த அபிவிருத்தி ஒரு நிலையான அபிவிருத்தியாக இருக்கிறது. தற்போது நாடு பூராகவும் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த மக்கள் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். எதிர்பார்ப்புக்களுடன் இருப்பார்கள். இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். அதிகமான ஏற்றுமதி வருமானமாக 15 மில்லியன் ரூபாயை பெற்றுக் கொண்ட வருடமாக 2017 ஆம் ஆண்டு இருக்கின்றது. அதேபோல் தான் அதிகளவிலான அன்னியச் செலாவனியையும் இந்த நாடு பெற்றிருக்கின்றது. 1.5 மில்லியன் டொலர் அன்னிய செலாவணியை பெற்றுக் கொண்டிருக்கிறோம். இருந்த பொழுதும் நாம் இன்னும் தன்னிறைவு அடைய முடியாத நிலையில் இருக்கின்றோம். தொழில் வாய்ப்பு பிரச்சனையை தீர்க்க அன்னிய செலாவணியை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

கைத்தொழில் பேட்டைகள், சாந்தை வாய்ப்புக்கள், உல்வலாசப் பயணத்துறை, விவசாயத்துறை, சுயதொழில் துறை என்பவற்றை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கிறது. நாட்டில் தொழில் பிரச்சனையை மட்டும் தீர்த்து வைத்தால் போதாது. பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கான திட்டங்களை வகுகின்றோம். எல்லோருக்கும் வருமானம் பெறும் திட்டத்தை அரசாங்கத்தால் வழங்க முடியாது. அபிவிருத்தியை கொண்டு வர வேண்டும். கண்டியில் இருந்து மாத்தறை வரையிலான அதிவேக பாதைகளை அபிவிருத்தி செய்து வருகின்றோம். அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த காலங்களில் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டதோ அதில் இருந்து விடுவித்து தற்போது அபிவிருத்தியைக் காண தொடங்கியிருக்கிறது. மத்தள விமான நிலையம் இந்திய நிறுவனத்தால் புனரமைக்கப்பட்டு செயற்படுகிறது. இலங்கையில் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை என இரண்டு துறைமுகங்கள் தற்போது இருக்கின்றன. கட்டுநாயக்க, மத்தள என்னும் இரண்டு விமான நிலையங்கள் இருக்கிறது. நெடுஞ்சாலைகளை இணைப்பதன் மூலம் முக்கியமான பொருளாதார வலயங்களை ஆரம்பிக்க முடியும். அதனை நாங்கள் ஆரம்பித்து இருக்கின்றோம்.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுடன் ஊடாக நகரங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். மூன்றாவது துறைமுகமாக திருகோணமலையை அபிவிருத்தி செய்ய இருகிறோம். இதன் மூலம் தொழில் வாய்ப்புக்களைப் பெற முடியும். வங்காளா விரிகுடவை மையர்படுத்தி அமைந்துள்ள திருகோணமலையின் அபிவிருத்தி பங்களாதேஸ், இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளின் அபிவிருத்தியோடு இணைந்ததாக வரவிருக்கிறது. தமிழ்நாடு, ஓரிசா, பெங்களூர் போன்றனவும் இதன் மூலம் அபிவிருத்தி காணும். தற்போது சிங்கபூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று திருகோணமலையின் அபிவிருத்தி குறித்து திட்டங்களை வகுத்து வருகிறது. பீல்ட் மார்சல் பொன்சேனா அமைச்சர் அந்தப் பணிகளுக்கு பொறுப்பாக இருக்கின்றார். இதன் மூலம் இந்தியா, சிங்கப்பூர், யப்பான் போன்ற நாடுகளின் துறைமுகம் போன்று திருகோணமலை அபிவிருத்தி காணும். புதிய பாதைகளை அமைப்பதன் மூலம் வவுனியா மக்களும் திருகோணமலையால் நன்மை பெறலாம்.

வடகிழக்கை ஒருபோதும் நாங்கள் மறந்ததில்லை. கண்டி அம்பாந்தோட்டை போன்று கரையோர பிரதேசங்களை நோக்கி அபிவிருத்தி செய்து வருகின்றோம். நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள். நாங்கள் எல்லோரும் இந்த நாட்டில் வாழ உரிமையுடையவர்கள். 1977 ஆம் ஆண்டு நாங்கள் ஆரம்பித்த அபிவிருத்தி யுத்தம் காரணமாக வடக்கை வந்து சேரவில்லை. தென்பகுதியிலேயே நின்றது. தற்போது அதனை நாங்கள் இங்கும் கொண்டு வந்திருக்கின்றோம். புல்மோட்டையில் இருந்து வவுனியா வருவதற்கான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். வெலிஓயாவை அபிவிருத்தி செய்யவுள்ளோம். யுத்தத்தால் அழிந்து போன பிரதேசங்களை மீள கட்டியெழுப்புவோம். அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் மன்னார் பிரதேசத்தை உல்லாச பயணத்துறைக்குரிய பிரதேசமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதுடன் வன்னியின் அபிவிருத்தியைப் பலப்படுத்துவோம்.

இந்த அபிவிருத்திகளை காண்பதற்கு உங்களுடைய பிரதேசசபைகள், நகரசபைகளை எங்களிடம் தாருங்கள். நாங்கள் அபிவிருத்தி செய்கின்றோம். இந்த நிலையை மாற்றிக் காட்டுகின்றோம். 2020, 2025 ஆம் ஆண்டு வருகின்ற போது இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக்கி காட்டுகின்றோம். வவுனியாவில் 5000 வீடுகள் வழங்குவது தொடபில் பேச்சுவார்த்தை நடத்தியிருகிறோம். பெண்களுக்கான தேவைபாடுகள் தொடர்பாகவும் பேசி வருகின்றோம். எனவே தான் பொருளாதார அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி, உங்கள் வீடுகளை நிர்மாணிப்பதற்கு உங்கள் பிரதேச ஆட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியிடம் தாருங்கள். இதற்கு தேவையான பணத்தை எங்களால் மட்டுமே தேட முடியும் எனத் தெரிவித்தார்.

IMG_9914

IMG_9919

IMG_9939

http://www.samakalam.com/செய்திகள்/திருகோணமலை-துறைமுக-அபிவி/

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கேட்டால் அனைத்து வித அரசியலையும் பார்த்து முடிந்தாயிற்று, ஒரு பரீட்சார்த்தமாய் ஆளும் கட்சிகளை வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் பெரும்பான்மையாக தேர்தலில் வெற்றிபெற செய்து பார்க்கலாம், என்னதான் தமிழர்களுக்கு செய்யபோகிறார்கள் என்று. 

இது அடிமைதன சிந்தனை என்று எம்மில் பலர் பொங்கலாம், ஆனால் தமிழ் உணர்வுகளுடன் நாம் தேர்வு செய்த தலைவர்கள்,அவர்கள் வழங்கிய சொகுசு வாகனத்தில் அதே சிங்கள அரசின் அதிரடிப்படை சூழ வலம்வந்து, தமிழர்களுக்கு அரசியல் தொண்டு ஆற்றுவதைவிட , சிங்களவனே நேரடியாக எமக்காய் அரசியல் செய்யலாமே?

எமது தனித்துவம் அடையாளம் சுயாட்சிதான் முக்கியம் என்று தேர்தல் நேரம் மட்டும் உணர்ச்சி பேருரை ஆற்றிவிட்டு, தேர்தலில் வென்றதும் பொதுமேடைகளில் சிங்ககொடியை வாங்கி சிங்கள அரசுடன் சேர்ந்து ஆட்டுவதைவிட, சிங்கள அரசே எமதுபிரதேசத்தில் அவனது கொடியை அசைத்துவிட்டுபோகட்டுமே, இதிலென்ன தாழ்வு வந்துவிடும்?

என்னதான் வாக்களித்து எம் பிரதிநிதிகள் என்று நாம் அனுப்பி வைப்பதென்னவோ சிங்களவனின் பாராளுமன்றம் என்ற தொழுவத்திற்குத்தானே? அங்குபோயும் எமது தலைவர்கள் ஏதோ உரிமைபோரா செய்கிறார்கள்?

எமது மக்களுக்கு அதுவேண்டும், இதுவேண்டும் அவர்களுக்கு பவ்வியமாக சொல்வதும், அப்புறம் அவர்கள் சொல்கிறார்கள் இது தரமாட்டார்களாம் அது தரமாட்டார்களாம் என்று அவர்கள் சொன்னதை எமக்கு சொல்வதுமாய் சிங்கள அரசுக்கும் அவர்களுக்கு வாக்களித்த எமக்கும் இடைத்தரகர்கள்போலதானே செயற்படுகிறார்கள், இடைத்தரகர்கள்கூட நின்று வீண்காலம் கழிப்பதைவிட எதிரணிக்காரர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி பார்க்கலாம், அது ஒன்றும் மிக பெரும் தவறாகிவிடாது.

இது ஒரு புரட்சிகரமான, அல்லது புனிதமான கருத்து என்று சொல்லவரவில்லை, ஆனால் நாம் எமது பிரதிநிதிகள் என்று கருதும் யாருமே புரட்சிகரமாகவோ , புனிதமாகவோ எமது மண்ணுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்யபோவதில்லையென்ற சலிப்பின் முடிவு மட்டுமே.

ஒருவேளை  நாம் வாக்களித்து தேர்வு செய்த ஆளும் கட்சிகள் வரும் ஐந்து வருஷங்களில் எமது பிரதேசத்தின் வளர்ச்சியை, மக்கள் வாழ்க்கைதரத்தை உயர்த்தவில்லையென்றால், அதற்கடுத்த தேர்தலில் அவர்களை படுதோல்வியடைய செய்து மீண்டும் எமது தமிழ் அரசியல்வாதிகளை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து மீண்டும் தமிழர்கட்சிகளின் தலைமையை ஏற்று நடைபோடலாம்.

இந்த அளவிற்கு கேவலமான சிந்தனையா என்று யாருக்கும் தோன்றலாம், ஆனால் இதவிட கேவலமாய் எமது அரசியல் முன்னேற்ற நிலமைகளை எமது தமிழ் தலைவர்கள் விரைவில் ஆக்குவார்கள் அல்லது ஆக்கிவிட்டார்கள் என்றும் சொல்லலாம்!

  • தொடங்கியவர்

திருமலை பொன்சேகாவுக்கு, வன்னி றிசாத்துக்கு, வடக்கு சுவாமிநாதனுக்கு- ரணில் அறிவிப்பு

 

Ranil-SF-UNP (1)திருகோணமலை அபிவிருத்திப் பணிகளுக்கான பொறுப்பு சரத் பொன்சேகாவிடமும், வடக்கை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு சுவாமிநாதனிடமும், வன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு றிசாத் பதியுதீனிடமும், ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“வடக்கில் நெடுஞ்சாலை வலைப்பின்னல் ஒன்று உருவாக்கப்படும். கண்டியில் இருந்து திருகோணமலைக்கு  நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று இணங்கியுள்ளது.

திருகோணமலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியினால், திருகோணமலையைச் சுற்றியுள்ள, வவுனியா உள்ளிட்ட பகுதிகளும் அபிவிருத்தியடையும்.

திருகோணமலையில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் வேலைகளுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொறுப்பாக இருப்பார்.

வன்னி அபிவிருத்தி வேலைகளுக்கு றிசாத் பதியுதீனும், வடக்கு அபிவிருத்தி வேலைகளுக்கு சுவாமிநாதனும் பொறுப்பாக இருப்பார்கள்.

மாங்குளத்தில் கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/01/news/28775

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.