Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா: ரகசிய ஆவணம் குறித்து வெள்ளை மாளிகையுடன் மோதும் எஃப்.பி.ஐ

Featured Replies

அமெரிக்கா: ரகசிய ஆவணம் குறித்து வெள்ளை மாளிகையுடன் மோதும் எஃப்.பி.ஐ

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ அவரது தேர்தல் பிரசார சமயத்தின்போது கண்காணிக்க தமது அதிகாரிங்களை தவறாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ரகசிய குறிப்புகளை வெளியிட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

US President Donald Trumpபடத்தின் காப்புரிமைREUTERS

அந்தக் குறிப்புகளின் உண்மைத் தன்மை தொடர்பான சில தரவுகளை வெளியிடாமல் தவிர்ப்பது தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது.

வரும் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அந்த நான்கு பக்க ஆவணம், டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த டெவின் நியூன்ஸ் தலைமை வகிக்கும் நாடாளுமன்ற புலனாய்வு குழுவினரால் தொகுக்கப்பட்டது.

அதை வெளியிட வெள்ளை மாளிகையின் ஒப்புதல் தேவை. "ஒட்டுமொத்த உலகமும் பார்ப்பதற்காக அது விரைவில் வெளியிடப்படும்," என்று வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ஜான் கெல்லி கூறியுள்ளார்.

என்ன உள்ளது அந்தக் குறிப்பில்?

அமெரிக்க நீதித் துறை மற்றும் எஃப்.பி.ஐ ஆகியன Foreign Intelligence Surveillance Act எனப்படும் வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, டிரம்பின் பிரசாரக் குழு உறுப்பினர் ஒருவர் வேவு பார்க்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Republican Devin Nunes pictured in July 2017படத்தின் காப்புரிமைAFP Image captionடெவின் நியூன்ஸ்

டிரம்ப் மீதான நிரூபிக்கப்படாத குற்றசாட்டுகளைக் கூறி அவரை வேவு பார்க்க எஃப்.பி.ஐ நீதித்துறையின் அனுமதியைப் பெற்றதாக, 'ரஷ்யக் கோப்பு' எனப்படும் அந்த குறிப்பைப் பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

பிரிட்டனின் முன்னாள் உளவு அதிகாரியான கிறிஸ்டோபர் ஸ்டீல்-ஆல், ஹிலாரி கிளிண்டனின் பிரசார குழுவின் நிதி உதவியுடன் அந்த ஆவணம் தயார் செய்யப்பட்டது.

எதிர்வினையாற்றும் எஃப்.பி.ஐ

அந்த ஆவணம் வெளியிடப்படும் முன்பு அதை மாரு ஆய்வு செய்யத் தங்களுக்குக் குறைவான வாய்ப்புகளே இருந்ததாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது.

Christopher Wrayபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டோபர் ரே இது குறித்து கவலை அடைந்துள்ளார்.

அதை வெளியிடுவது மிகவும் பொறுப்பற்ற செயல் என்று அமெரிக்க நீதித் துறை தெரிவித்துள்ளது.

டிரம்ப் தரப்பு என்ன சொல்கிறது?

டிரம்ப் எஃப்.பி.ஐ அமைப்பால் முறையாக நடத்தப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவிநீக்கம் செய்த பிறகு அவருக்குப் பதிலாக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆண்ட்ரு மெக்கஃபீ அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களித்தார் என்று கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மெக்கஃபீ ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கடந்த மாதம் அவர் பதவி விலகினார்.

இந்நிலையில், எஃப்.பி.ஐ. தொடர்பான அந்த குறிப்பை வெள்ளை மாளிகையிடம் ஒப்படைக்கும் முன்பு அதை குடியரசுக் கட்சியினர் ரகசியமாக திருத்தம் செய்ததாக டிரம்ப் எதிர்ப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-42904495

  • தொடங்கியவர்

அதிபர் ட்ரம்ப்- எப்பிஐ மோதல் முற்றுகிறது

 

 
04CHSKOTRUMP

டொனால்டு ட்ரம்ப்   -  Bloomberg

அமெரிக்க புலனாய்வு போலீஸ் பிரிவான எப்பிஐ அமைப்புக்கு எதிராக அந்த நாட்டு அரசு தரப்பில் குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அதிபர் டொனால்டு ட்ரம்ப், எப்பிஐ அமைப்பு இடையிலான மோதல் முற்றியுள்ளது.

கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்பை வெற்றி பெறச் செய்ய ரஷ்ய உளவு நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து எப்பிஐ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற பிறகும் இவ் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இந்த விசாரணையை நீர்த்துப்போகச் செய்ய அரசு தரப்பு தீவிர முயற்சி செய்வதாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

குறிப்பாணை வெளியீடு

அமெரிக்க உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டி கண்காணித்து வருகிறது. இதன் தலைவராக ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டெவின் நூன்ஸ் உள்ளார். எப்பிஐ போலீஸாருக்கு எதிராக நேற்றுமுன்தினம் அவர் குறிப்பாணையை (மெமோ) வெளியிட்டார்.

அதில், “டொனால்டு ட்ரம்பின் பிரச்சார குழுத் தலைவர் கார்ட்டர் பேஜை எப்பிஐ உளவு பார்த்தது. அவரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. இதற்காக ‘எப்ஐஎஸ்ஏ’ நடைமுறை தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க மக்களின் தனிநபர் சுதந்திரத்தை ‘எப்ஐஎஸ்ஏ’ நடைமுறை பறிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பாணை மூலம் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசன்டைன், ரஷ்ய தலையீடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் எப்பிஐ முன்னாள் இயக்குநரும் சிறப்பு அதிகாரியுமான ராபர்ட் முல்லர் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறிப்பாணை வெளியிட்டதற்கு எப்பிஐ மற்றும் நீதித்துறை வட்டாரங்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. எப்பிஐ போலீஸாரின் நம்பகத்தன்மையை அரசு கேலிக்கூத்தாக்கி இருப்பது வேதனையளிக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டியில் உறுப்பினராக உள்ள ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் ஆடம் கூறியிருப்பதாவது: எப்பிஐ விசாரணை விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படுவதில்லை.

அந்த மரபை மீறி அரசு செயல்படுகிறது. குறிப்பாணையை வெளியிட்டு எப்பிஐ அமைப்புக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. மக்களை குழப்ப அரசு முயற்சி செய்கிறது. அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது தொடர்பான விசாரணையை முடக்க சதி செய்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

http://tamil.thehindu.com/world/article22646072.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.