Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது வியூகத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் – ஹத்துருசிங்க

Featured Replies

பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது வியூகத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் – ஹத்துருசிங்க

Chandika-Hathurusingha-3
 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இறுதியாக நடைபெற்ற டி20 போட்டி என்பவற்றில் மேற்கொண்ட வித்தியாசங்கள், வியூகங்கள் மற்றும் பங்களாதேஷ் அணி தொடர்பில் தன்னிடம் காணப்பட்ட அறிவு உள்ளிட்டவை காரணமாகவே சொந்த மண்ணில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த பலமிக்க பங்களாதேஷ் அணியை வீழ்த்த முடிந்ததாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார்.

அத்துடன், ”பங்களாதேஷ் வீரர்களை பல்வேறு அணுகுமுறைகளுடனும், திட்டங்களுடனும் கையாள முடிந்தமையினால் தான் இந்த வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்ததாக தெரிவித்த ஹத்துருசிங்க, இலங்கை அணியுடனான 2ஆவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் பங்களாதேஷ் அணியை தொடர்ந்து அவதானிக்கவுள்ளதாகவும்” ஹத்துருசிங்க தெரிவித்தார்.

சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் கத்துக்குட்டி அணியாக இருந்த பங்களாதேஷ் அணி கடந்த 3 வருடங்களுக்குள் கிரிக்கெட் உலகில் கொடி கட்டிப் பறக்கும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளைக் குவித்து கிரிக்கெட் உலகில் தனி இடத்தை பிடித்துவிட்டது. இதற்கான அனைத்து கௌரவமும் இலங்கையின் முன்னாள் டெஸ்ட் வீரர் சந்திக்க ஹத்துருசிங்கவை சாரும்.

 

 

அதுமாத்திரமின்றி அந்நாட்டுக்காக விளையாடுகின்ற பெரும்பாலான தேசிய வீரர்களின் விபரங்களையெல்லாம் நன்கு அறிந்துவைத்துள்ள ஹத்துருசிங்க,  துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் தொடர்பிலும் பரந்த அறிவையும் கொண்டுள்ளார். எனினும், ஹத்துருசிங்கவின் திடீர் ராஜினாமா அவ்வணிக்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்ததுடன், தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, கடந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற ஜிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது. இத்தொடரில் பங்களாதேஷ் அணி ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், தொடரை பறிகொடுத்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் அவ்வணி இழந்தது. இந்நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியது

இது இவ்வாறிருக்க, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் இறுதிப் போட்டியாக இன்று (18) இரண்டாவதும், இறுதியுமான டி20 போட்டி சில்லெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இலங்கை அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரைக் கைப்பற்றினால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்துவகையான போட்டிகளையும் கைப்பற்றிய திருப்தியுடன் இலங்கை அணி நாடு திரும்பும்.

எனவே, இறுதி டி20 போட்டி நடைபெறுவதற்கு முன், நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் பங்களாதேஷ் அணியைப் பற்றிய எனது அறிவு வித்தியாசத்தை உருவாக்கியது. அவ்வணியின் சில வீரர்களுக்கு சில மூலோபாய திட்டங்களை நாங்கள் வகுத்திருந்தோம். அவர்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் என்பதையும் நன்கு அறிந்து வைத்திருந்தோம்.

அவர்கள் (பங்களாதேஷ்) நான் எதிர்பார்த்ததைப் போல முதல் இரண்டு போட்டிகளில் மிகவும் கடினமாக விளையாடியிருந்தனர். என்னுடைய திட்டங்கள் கைகூடவில்லை என்றால், நான் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பேன். எனினும், எனது முயற்சி வீண் போகவில்லை.

பங்களாதேஷ் அணி விளையாடிய விதம் குறித்து மகிழ்ச்சியடைவதைப் போல  முதலிரண்டு தோல்விகளுக்கு பின்னர் நாங்கள் மீண்டும் வந்ததைப் பற்றியும் நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இது எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்திகரமான சுற்றுப்பயணமாகும். ஆனால் இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிறகு, பங்களாதேஷ் அணி மீண்டும் சிறப்பாக விளையாடி, தொடர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை அவதானித்துக் கொண்டிருப்பேன்” என்று அவர் கூறினார்.

இதேநேரம், தன்னுடைய பயிற்றுவிப்பின் கீழ் விளையாடிய பங்களாதேஷ் வீரர்களின் திறமைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகத் தெரிவித்த ஹத்துருசிங்க, ”அவர்கள் பயப்படுவதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் முத்தரப்பு ஒரு நாள் தொடரின் ஆரம்பத்தில் நன்றாக விளையாடியிருந்தார்கள். அவர்கள் இரு அணிகளுக்கும் அழுத்தம் கொடுத்து சிறப்பாக விளையாடியிருந்தனர். ஆனால் ஒரு சில தோல்விகளுக்குப் பிறகு அவர்கள் தங்களை சந்தேகப்படுவதற்கு ஆரம்பித்துவிட்டனர். உண்மையில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிக விரைவில் பின்னடைவை சந்தித்துவிட்டதை என்னால் உணரமுடிந்தது” என தெரிவித்தார்.

 

இருப்பினும், பங்களாதேஷ் டி20 அணியின் தலைவர் மஹ்மதுல்லா இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், ”நாம் சிறப்பாக விளையாடி இருந்தால் இந்த நிலை தலைகீழாக மாறியிருக்கும். ஹத்துருசிங்க கடந்த சில வருடங்களாக எங்களுடன் இருந்தார். அவர் எம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் நிச்சயமாக அந்த ரசிகயங்களை பயன்படுத்தி எம்மை வீழ்த்தியுள்ளார். அவர் உலக தரமிக்க ஒரு பயிற்றுவிப்பாளர் மாத்திரமல்லாது அவரிடம் திறமையும் உள்ளது. ஆனால் நாம் சிறப்பாக விளையாடியிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம், தற்போது இதைப் பற்றி பேசி எந்தப் பயனும் கிடையாது. கடைசி டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி  வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக” அவர் தெரிவித்தார்.

இதேநேரம், 2015 உலகக் கிண்ண போட்டிகளுக்கு பிறகு கிரிக்கெட் உலகில் மிக மோசமாக விளையாடிய அணிகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் டில்ஷான் ஆகியோரின் ஓய்வு, வீரர்கள் அடிக்கடி தொடர் உபாதைகளுக்கு முகங்கொடுப்பது, இளம் வீரர்களை சரியான முறையில் இனம் காணாதது உள்ளிட்ட பலவித நெருக்கடிகளுக்கு இலங்கை அணி முகங்கொடுத்திருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில், இலங்கைக் கிரிக்கெட் அணியின் கடைசி நம்பிக்கையாக சந்திக்க ஹத்துருசிங்க புதிய பயிற்றுவிப்பாளராக இவ்வருடம் முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எனவே, நீண்டகாலமாக வெற்றிப் பாதையில் பயணிப்பதற்கு தடுமாறி வந்த இலங்கை அணி, இந்த ஆண்டில் சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் அதற்கான நல்ல அத்திரவாரத்தை பதித்துவிட்டது.

இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை வீரர்களின் திறமைகள் குறித்து ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில், ”இலங்கை வீரர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற பதிலிலிருந்து நான் முழு திருப்தி அடைந்துள்ளேன். உண்மையில் எனது நாட்டுக்காக விளையாடி பெற்றுக்கொடுத்த வெற்றியைப் போன்ற உணர்வை இது ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இதற்காக ஒருசில காலம் தேவைப்பட்டாலும் வீரர்களுடன் மேற்கொண்ட தொடர்பாடல் வெற்றியளித்துவிட்டதாக” அவர் இதன்போது தெரிவித்தார்.

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்

நன்றி மறந்தவரானாரா பயிற்சியாளர் ஹதுரசிங்கா?-இலங்கை வெற்றியின் பின்னணியில் எழுந்துள்ள சர்ச்சை

 

 
hathuru

பயிற்சியாளர் ஹதுரசிங்கா.   -  படம். | ஏ.பி.

வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளாராக ஹதுரசிங்கா 2014 முதல் இருந்து வந்தார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் பயிற்சிப்பொறுப்பிலிருந்து விலகினார்.

இந்நிலையில் வங்கதேசத்தில் ஒருநாள் முத்தரப்பு தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இலங்கை வென்றதன் பின்னணியில் வங்கதேசப் பயிற்சியாளராக இருந்த ஹதுரசிங்கவின் கைவண்ணம் உள்ளது, வங்கதேசப் பயிற்சியாளராக இருந்து திடீரென காரணம் கூறாமல் விலகியதன் பின்னணியிலும் இலங்கையின் வெற்றியின் பின்னணியிலும் ஹதுரசிங்க வங்கதேச வீர்ர்கள் பற்றிய ‘உள்தகவல்களை’ இலங்கை அணிக்கு தகவல் அளித்திருப்பார் என்றும் நன்றி மறந்த இந்தச் செயலில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

இலங்கை பயிற்சியாளர் ஹதுரசிங்காவே இதனை ஒப்புக் கொள்ளும் விதமாகக் கூறிய போது, “ஆம். உண்மையைக் கூற வேண்டுமென்றால் வங்கதேச வீரர்கள் பற்றிய தகவல்கள் உதவியது. சிலவீர்ர்களுக்கு எதிராக திட்டங்களை வகுக்க முடிந்தது. நெருக்கடியில் அவர்கள் எப்படி வினையாற்றுவார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. நான் எதையும் விட்டுவைக்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது. இந்தத் தொடர் எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிக்கும் தொடராக அமைந்தது. ஆனாலும் நான் வங்கதேசத்தை விட்டு வந்தாலும் அவர்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்றே விரும்பினேன். அவர்கள் முன்னேற்றத்தில் எனக்கு ஒரு கண் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஹதுரசிங்கா கொடுத்த தகவல்களில் குறிப்பாக ஒருநாள் தொடரில் வங்கதேச வீரர்களுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்து வீச்சு கைகொடுக்கும் என்பது பெரிய அளவில் இலங்கைக்கு உதவி புரிந்துள்ளது. இது நிச்சயம் ஹதுரசிங்கவின் தகவல் இல்லாமல் வாய்ப்பில்லை. அதேபோல் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஹதுரசிங்காவின் தகவல்களின் அடிப்படையில்தான் இலங்கை கூடுதல் பவுலரை இலங்கை சேர்த்ததும், மிர்பூரில் ஸ்பின் சாதக ஆட்டக்களம் என்று தனஞ்ஜயாவையும் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் வங்கதேச இடது கை பேட்ஸ்மென்களுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசினால் திணறுவார்கள் போன்ற தகவல்களும் ஹதுரசிங்கா மூலமே இலங்கைக்குக் கிடைத்திருக்க வாய்ப்பு என்று கருதப்படுகிறது.

வங்கதேச வீரர் மஹ்முதுல்லாவும் இதனை ஆமோதித்து, “ஹது எங்களுடன் சமீபமாக இருந்தார். அவருக்கு எங்களைப் பற்றி அனைத்து விவரங்களும் தெரியும். நிச்சயம் இந்தத் தகவல்களை அவர் பயன்படுத்தியிருப்பார். ஆனால் அவர் தரமான கோச், நாங்கள் எங்கள் பணியைத் திறம்பட செய்திருந்தால் நாம் இது பற்றி பேச வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article22789578.ece

  • கருத்துக்கள உறவுகள்

உண்மயில் ஒரு நேர்மையான கோச்சாக இருந்தால் இத்தொடருக்கு போயிருக்கக் கூடாது....அதனைவிட இலங்கை இதனை வெற்றி  என கொண்டாடவும் முடியாது.....

Edited by alvayan

  • தொடங்கியவர்

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திக்க ஹத்துருசிங்க

 

 

 

பங்­க­ளாதேஷ் அணியைப் பற்றி எனக்கு எல்லாம் தெரி­யும்தான். ஆனால் போட்­டியில் நான் கள­மி­றங்கி விளை­யா­ட­வில்­லையே. நான் துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்தால் அவர்கள் சொல்­வது போல் என்னால் தோற்­றி­ருக்­கலாம்.

ஆனால் அவர்கள் தோற்­றது இலங்கை அணி வீரர்­களின் திற­மையால் என்று தெரி­வித்தார் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யாளர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க.

கட­ந்த மாதம் பங்­க­ளா­தே­ஷுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு மூன்­று­வகைக் கிரி­க்கெட் தொடர்­க­ளிலும் விளை­யாடி அம் மூன்று தொடர்­க­ளையும் வெற்­றி­கொண்டு மூன்று கிண்­ணங்­க­ளுடன் நேற்­று­ முன்­தினம் இரவு நாடு­தி­ரும்­பிய இலங்கை அணி ஊடக­வி­ய­லா­ளர்­களை சந்­தித்­தது.

இதன்­போது கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போதே சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் பேசிய இலங்கை அணித் தலைவர் சந்­திமால், நாம் ஒரு அணி­யாக அல்­லாமல் ஒரு குடும்­ப­மா­கவே செயற்­பட்டோம். அது எமக்கு பெரிதும் உத­வி­யது.

தற்­போது இலங்கை அணி பாரிய மாற்­றத்தைக் கண்­டுள்­ளது. அதற்கு பயிற்­சி­யாளர் ஹத்­து­ரு­சிங்க மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்பை ஆற்­றி­யுள்ளார்.

இத் தொடர் போல எதிர்­வரும் தொடர்­க­ளிலும் இலங்கை அணி வெற்­றி­வாகை சூடும் என்ற நம்­பிக்கை நிறை­யவே இருக்­கி­றது என்று அவர் குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­விடம், நீங்கள் இறு­தி­யாக பங்­க­ளா­தேஷின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக இருந்­தவர். அந்தக் காரணம் இலங்­கையின் வெற்­றிக்கு உதவி யதா என்று கேட்­கப்­பட்­டது.

அதற்கு பதி­ல­ளித்த ஹத்­து­ரு­சிங்க, பங்­க­ளாதேஷ் ஊட­கங்கள் இவ்­வா­றான செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தன.

அதை நானும் பார்த்தேன். அவர்கள் சொல்­வது போல் நடப்­ப­தற்கு நான் போட்டியில் ஆடவில்லையே. அவர்கள் எப்படி வீசுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் பந்துக்கு முகம்கொடுக்க நான் துடுப்பெடுத்தாடியிருந்தால் அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் இது எமது திறமைக்கு கிடைத்த வெற்றி என்றார்.

http://www.virakesari.lk/article/30854

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.