Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரூந்தில் தீ ; காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் !

Featured Replies

பேரூந்தில் தீ ; காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் !

 

 

தனியார் பயணிகள் பேரூந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் என பொலிஸார் தெரிவித்தனர்.

bus.jpg

இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தியத்தல்லாவை, கஹகொல்ல பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேரூந்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பையடுத்து பரவிய தீயில் சிக்கியே 19 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, இவ் அனர்த்தத்தில் 7 பேர் இராணுவத்தினர் எனவும் 5 பேர் விமானப்படையைச் சேர்ந்தவர்களெனவும் 7 பேர் பொதுமக்களனெவும் இரணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30857

  • தொடங்கியவர்

பேரூந்தில்  தீ பரவியமைக்கான காரணம் வெளியாகியது ! 11 பேரின் நிலைமை கவலைக்கிடம்

 

 

தனியார் பேரூந்தில் ஏற்பட்ட வெடிப்பையடுத்தே குறித்த பேரூந்தில் தீ பரவியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பேரூந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவத்தில் 19 பேர் படுகாயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருக்கும் 19 பேரில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

buss.jpg

இச் சம்பவம், பண்டாரவளை – தியத்தலாவை பிரதான வீதி கஹாகொல்லை என்ற இடத்தில் இன்று காலை 5.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளையிலிருந்து அதிகாலை தியத்தலாவைக்கு சென்ற குறித்த பேரூந்து தியத்தலாவையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹெபராவை – கிராந்துருகோட்டை என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

IMG-20180221-WA0001.jpg

குறிப்பிட்ட பேரூந்தின் சாரதிக்கு பின்னாலுள்ள 3 ஆவது ஆசனத்தில் ஏற்பட்ட புகையுடன் வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

photo__11_.jpg

வட பகுதியிலிருந்து இராணுவத்தினர் விடுமுறையில் தென்பகுதிக்கு வரும்போது யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவைக்கு செல்லும் பேரூந்தில் வந்து தியத்தலாவையிலிருந்து மற்றைய பேரூந்தில் பயணிப்பது வழமையாகும்.

photo__12_.jpg

இந்நிலையில், இராணுவத்தினரும்  வழமைபோன்று குறித்த பேரூந்தில் பயணித்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

photo__1___2_.jpg

இச்சம்பவம் குறித்து, பண்டாரவளை மற்றும் தியத்தலாவைப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/30858

  • தொடங்கியவர்

பயங்கரவாதத் தாக்குதல் அல்ல : பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து

 

 
 

தியத்தலாவை - கஹகொல்ல பகுதியில் தனியார் பேரூந்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கும் பயங்கரவாதத்தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

sumith-athapathu.jpg

ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை தியத்தலாவை –கஹகொல்ல பகுதியில் தனியார் பேரூந்தொன்றில் ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏற்பட்ட தீயில் சிக்கி 7 இராணுவத்தினரும் 5 விமானப்படை வீரரரும் 7 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.

இருப்பினும் இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்லவெனவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/30867

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.