Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரை இடம்பெயர வைத்து சிங்களவரை குடியேற்ற சூழ்ச்சி

Featured Replies

தமிழரை இடம்பெயர வைத்து சிங்களவரை குடியேற்ற சூழ்ச்சி

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களை இடம்பெயரச் செய்து அகதிகளாக்கி அங்கு சிங்கள மக்களை குடியமர்த்தும் சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே அரசாங்கம் அங்கு படையினரை பயன்படுத்தி தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கும் இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்கி அவர்களை அடிமைப்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு அழைப்பு விடுத்தால் எந்தத் தமிழன் அதற்கு முன்வருவானென்றும் கேள்வி எழுப்பினார்.

கொழும்பு கொம்பனி வீதி நிப்பொன் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற போருக்கெதிரான முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே விக்கிரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்தார்.

முன்பிருந்த ஆட்சியாளர்களும் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களை குடியேற்றுவதற்கு கனவு கண்டார்கள். ஆனால், பலிக்கவில்லை. இந்த அரசாங்கம் அதே கனவைக் காண்கிறது. அது ஒருபோதும் பலிக்காது. அக்கனவை நனவாக்கிக் கொள்ளத் தான் கிழக்கில் அரசாங்கம் தாக்குதல்களை நடத்தி மக்களை இடம்பெயரச் செய்கிறது.

எனவே, புலிகளை கட்டுப்படுத்தவே தாக்குதல்களை நடத்துவதாகக் கூறும் அரசாங்கத்தின் கூற்றில் எதுவித உண்மையும் இல்லை. இதனால், 5 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்.

இராணுவத்தினர் பலர் உயிரிழந்தும் காயப்பட்டுமுள்ளனர். இவற்றையெல்லாம் அரசாங்கம் வெளியிடுவதில்லை.

நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை நசுக்கி சிங்கள பௌத்த இராச்சியத்தை உருவாக்குவேன் என ஜனாதிபதியே கூறுகிறார். எனவே, பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது.

இன்று மனித உரிமைகள், கடத்தல்கள், கொலைகள் அதிகரித்துள்ளதென குரல்கொடுப்பவர்கள் 89 களில் எங்கிருந்தார்கள் என ஜே.வி.பி. கேள்வி எழுப்புகிறது. அன்று நான் தனித்து நின்று மனித உரிமைகளுக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுத்தேன். எனவே தான் இன்று விமல் வீரவன்ச, ரில்வின் சில்வா உயிரோடு இருக்கின்றார்கள். எனது இந்தச் செயலுக்காக 1995 இல் தங்காலையில் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆனால், இன்று மாற்றமடைந்துள்ளார்.

ஊடகவியலாளர் பரமேஸ்வரியை வெள்ளை வானிலேயே கடத்தினார்கள். பின்னர் அது அம்பலமானதும் விசாரணை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது. கொழும்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கடத்தப்பட்டார். இவரை பிரபாகரனா கடத்தினார்? எனவே இது போன்ற செயற்பாடுகளின் பின்னணியில் அரசாங்கமே செயற்படுகிறது. கடத்தல்கள் தொடர்பாக எமக்குக் கிடைத்த தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளோம். ஆனால், இதுவரையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லையென்றும

  • கருத்துக்கள உறவுகள்

டம்பெயர வைத்து சிங்களவரை குடியேற்ற சூழ்ச்சி.

ஜ செவ்வாய்கிழமைஇ 20 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களை இடம்பெயரச் செய்து அகதிகளாக்கி அங்கு சிங்கள மக்களை குடியமர்த்தும் சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே அரசாங்கம் அங்கு படையினரை பயன்படுத்தி தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கும் இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்கி அவர்களை அடிமைப்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு அழைப்பு விடுத்தால் எந்தத் தமிழன் அதற்கு முன்வருவானென்றும் கேள்வி எழுப்பினார். கொழும்பு கொம்பனி வீதி நிப்பொன் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற போருக்கெதிரான முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே விக்கிரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்தார். முன்பிருந்த ஆட்சியாளர்களும் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களை குடியேற்றுவதற்கு கனவு கண்டார்கள். ஆனால், பலிக்கவில்லை. இந்த அரசாங்கம் அதே கனவைக் காண்கிறது. அது ஒருபோதும் பலிக்காது. அக்கனவை நனவாக்கிக் கொள்ளத் தான் கிழக்கில் அரசாங்கம் தாக்குதல்களை நடத்தி மக்களை இடம்பெயரச் செய்கிறது. எனவே, புலிகளை கட்டுப்படுத்தவே தாக்குதல்களை நடத்துவதாகக் கூறும் அரசாங்கத்தின் கூற்றில் எதுவித உண்மையும் இல்லை. இதனால், 5 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர். இராணுவத்தினர் பலர் உயிரிழந்தும் காயப்பட்டுமுள்ளனர். இவற்றையெல்லாம் அரசாங்கம் வெளியிடுவதில்லை. நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை நசுக்கி சிங்கள பௌத்த இராச்சியத்தை உருவாக்குவேன் என ஜனாதிபதியே கூறுகிறார். எனவே, பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது. இன்று மனித உரிமைகள், கடத்தல்கள், கொலைகள் அதிகரித்துள்ளதென குரல்கொடுப்பவர்கள் 89 களில் எங்கிருந்தார்கள் என ஜே.வி.பி. கேள்வி எழுப்புகிறது. அன்று நான் தனித்து நின்று மனித உரிமைகளுக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுத்தேன். எனவே தான் இன்று விமல் வீரவன்ச, ரில்வின் சில்வா உயிரோடு இருக்கின்றார்கள். எனது இந்தச் செயலுக்காக 1995 இல் தங்காலையில் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

ஆனால், இன்று மாற்றமடைந்துள்ளார். ஊடகவியலாளர் பரமேஸ்வரியை வெள்ளை வானிலேயே கடத்தினார்கள். பின்னர் அது அம்பலமானதும் விசாரணை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது. கொழும்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கடத்தப்பட்டார். இவரை பிரபாகரனா கடத்தினார்? எனவே இது போன்ற செயற்பாடுகளின் பின்னணியில் அரசாங்கமே செயற்படுகிறது. கடத்தல்கள் தொடர்பாக எமக்குக் கிடைத்த தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளோம். ஆனால், இதுவரையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லையென்றும

காலங்காலமாக கிழக்கிலங்கையிலே நடைபெறுகின்ற நிகழ்வு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.