Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கை அரசியலை உலுக்கிய சுனாமி

Featured Replies

தென்னிலங்கை அரசியலை உலுக்கிய சுனாமி

 

ரொபட் அன்­டனி

கடந்த இரு வாரங்­க­ளாக நாட்டில் தேசிய மட்­டத்தில் அடித்­துக்­கொண்­டி­ருந்த அர­சியல் சுனாமி தற்­போது ஓர­ளவு ஓய்ந்­துள்­ளது . எனினும் அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதே இன்னும் பேசப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம் என்­பது பொது­வாக அனை­வரும் கூறும் விட­ய­மாகும். ஆனால் அதுவே சில சம­யங்­களில் பொது­மக்­க­ளுக்கு விசித்­தி­ர­மா­ன­தாக அமைந்­து­வி­டு­வ­துண்டு.

நடந்­து­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­யீட்­டி­ய­தை­ தொடர்ந்து தென்­னி­லங்­கையில் அர­சியல் சுனா­மியே ஏற்­பட்­டது. தென்­னி­லங்கை அர­சி­ய­லையே 10 நாட்­க­ளாக இந்த சுனாமி உலுக்கியெடுத்­தது. தற்­போது இந்த அர­சியல் நெருக்­க­டிக்கு ஓர­ளவு தற்­கா­லிகத் தீர்வு கிடைத்­துள்ள நிலையில் நாட்டின் நிலை­மைகள் வழ­மைக்கு திரும்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றன.

சுமார் இரண்­டரை வருட தாமதத்­திற்குப் பின்னர் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறை­மையில் நடை­பெற்­றது. தேர்­தலில் ஆரம்பம் முதலே மும்­மு­னைப்­போட்டி நில­வி­யது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் சுதந்­தி­ரக்­கட்­சியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவும் தேர்­தலில் பிர­தான கட்­சி­க­ளாக போட்­டி­யிட்­டன.

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­ய ­கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தமிழ்க் கட்­சிகள் மற்றும் முஸ்லிம் கட்­சிகள் கள­மி­றங்­கி­யி­ருந்­தன. அந்­த­வ­கையில் தேர்தல் முடி­வுகள் எவரும் எதிர்­பா­ராத வித­மாக அமைந்­தி­ருந்­தன. தேர்தல் பிர­சாரக் காலத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கை ஓங்­கி­யி­ருந்­த­தாக எதிர்­வு­கூ­றப்­பட்­டது. ஆனால் தேர்தல் முடி­வுகள் யாரும் எதிர்­பாரா­த­வ­கை­யி­லேயே அமைந்­தன.

மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன நேர­டி­யா­கவே 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 239 மன்­றங்­களை கைப்­பற்­றி­யது. அதே­போன்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி 41 சபை­க­ளையும், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பல்­வேறு சின்­னங்­களில் போட்­டி­யிட்டு 10 சபை­க­ளையும் தமிழ் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு 38 சபை­க­ளையும் கைப்­பற்­றி­யி­ருந்­தன.

வாக்­கு­களைப் பொறுத்­த­வ­ரையில் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 44 வீத­மான வாக்­கு­க­ளையும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 32 வீத­மான வாக்­கு­க­ளையும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி 15 வீத­மான வாக்­கு­க­ளையும் பெற்­றி­ருந்­தன. தேர்தல் முடி­வுகள் வெளி­யா­னதும் தென்­னி­லங்கை அர­சி­யலில் பாரிய நெருக்­கடி நில­வி­யது. தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கி­ய­துமே ஜனா­தி­ப­தியை சந்­தித்த ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி வில­க­வேண்­டு­மென்றும் அவர் பிர­த­ம­ராக இருக்கும் ஆட்­சியில் தாம் அங்கம் வகிக்­கப்­போ­வ­தில்லையென்றும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து நெருக்­க­டிக்­குள்­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அழைத்து பிர­தமர் பத­வியிலிருந்து வில­கி­விட்டு கரு ஜய­சூ­ரி­யவை அப் பத­வியில் அமர்த்­து­மாறு கோரி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது. எனினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி வில­க மறுத்­து­விட்டார்.

இவ் விடயம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு தெரி­ய­வந்­த­தை­யிட்டு அக்­கட்­சி­யா­னது தனித்து ஆட்சியமைப்­ப­தாக தெரி­வித்­தது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் தேசிய அர­சாங்கம் தொட­ர­வேண்டுெமன வலி­யு­றுத்­தி­ய­போதும் பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தனித்து ஆட்சியமைக்­க­வேண்­டு­மென தொடர்ச்­சி­யாக கூறி­வந்­தனர்.

  ஐக்­கிய தேசி­யக்­கட்சி தனித்து ஆட்சி அமைக்­கப்­போ­வ­தாக கூறி­ய­தை­ய­டுத்து 96 உறுப்­பி­னர்­களை தம் வசம் வைத்­தி­ருக்­கின்ற (மஹிந்­த­வுடன் இருக்­கின்ற 53 உறுப்­பி­னர்­க­ளுடன்) ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் தனித்து ஆட்சியமைப்­ப­தற்­கான காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்­தது. அதா­வது 96 உறுப்­பி­னர்­களை வைத்­துக்­கொண்டு ஆட்சியமைக்க முடி­யாதென்று தெரிந்தும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு சவால் விட­வேண்டும் என்ற நோக்­கத்­திற்­காக தனித்து ஆட்சியமைப்­ப­தற்­கான காய்நகர்த்­தல்­களை முன்­னெ­டுத்­தது.

அதனையடுத்து சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அவரின் பக்கம் இருக்­கின்ற 53 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொண்­டனர். இதற்­காக சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் சுசில் பிரேம் ­ஜ­யந்த மஹிந்­தவின் இல்­லத்­துக்கு சென்று பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்தார். எனினும் மேலும் 17 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு சுதந்­தி­ரக்­கட்­சிக்கு தேவைப்­பட்­டது.

இந்த பின்­ன­ணியில் சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் சிறு­பான்மை கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திய போதிலும் அவர்கள் சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணை­வ­தற்கு மறுத்­து­விட்­டனர். இதனால் 113 எம்.பி.க்கள் என்ற இலக்கை அடைய திண்­டா­டிக்­கொ­ண்­டி­ருந்த ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஒரு கட்­டத்தில் தனித்து ஆட்சியமைக்கும் முயற்­சியை கைவிட்­டது.

மறு­புறம் ஐக்­கி­ய­ தே­சி­யக்­கட்சி முடி­யு­மானால் சுதந்­தி­ரக்­கட்சி பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கட்டும் என்று கூறி­விட்டு மௌனம் காத்­து­வந்­தது. எனினும் இறு­தியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களை சமா­தா­னப்­ப­டுத்­தி­ய­துடன் தேசிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்தார். கடும் அதி­ருப்­தி­யுடன் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் இறு­தியில் தேசிய அர­சாங்­கத்­துடன் நீடிப்­ப­தற்கு இணக்கம் தெரி­வித்­தனர்.

எனினும் தனித்து சுதந்திரக்கட்சி அர­சாங்­கத்தை அமைக்கும் தீவிர முயற்­சியில் ஈடு­பட்ட சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளான தயா­சிறி ஜய­சே­கர மற்றும் சுசில் பிரே­ம­் ஜ­யந்த ஆகியோர் அதி­ருப்­தி­யி­லேயே இருந்­தனர். கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலும் இவர்கள் இரு­வரும் பங்­கேற்­க­வில்லை.

சுதந்­தி­ரக்­கட்சி தனித்து ஆட்சியமைக்க முடி­யா­வி­டினும் பிர­தமர் பத­வியில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்­தது. சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இதற்­காக பாரிய முயற்­சியை முன்­னெ­டுத்­தனர். ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ரான நிமல் சிறி­பால டி சில்­வாவை பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்டும் என்ற தீவிர முயற்­சி­யிலும் சுதந்­தி­ரக்­கட்சி ஈடு­பட்­டது. எனினும் இந்த அனைத்து முயற்­சி­களும் இறு­தியில் புஸ்­வா­ண­மா­கி­விட்­டன.

இறு­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஐக்­கிய தேசி­யக்­கட்சி இந்த அதி­கார சமரில் வெற்­றி­பெற்­றது என்று கூறலாம். குறிப்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி வில­கு­மாறு பாரிய அழுத்­தங்கள் சுதந்­தி­ரக்­கட்­சியின் பக்­கத்திலிருந்து பிர­யோ­கிக்­கப்­பட்ட போதிலும் அவர் அதனை ஒரு பொருட்­டா­கவே கரு­த­வில்லை.

''நான் பதவி விலக வேண்­டிய அவ­சியமில்லை. என்னை பதவி விலக்­க­வேண்­டு­மானால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வந்து நிறை­வேற்­ற­வேண்டும். அல்­லது வரவு – செல­வுத்­திட்­டத்தை தோற்­க­டிக்­க­வேண்டும். இவை இல்­லா­விடின் அர­சி­ய­ல­மைப்­பின்­படி நானே பிர­த­ம­ராக நீடிப்பேன்'' என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மிகவும் திட்­ட­வட்­ட­மான முறையில் தெரி­வித்­தி­ருந்தார்.

அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் செல்­வாக்கு வெற்­றி­பெற்­றுள்­ளது என்றே கூற­வேண்டும். அதன்­படி தென்­னி­லங்கை அர­சி­யலில் ஏற்­பட்ட பூகம்பம் தற்­போது ஓர­ளவு ஓய்ந்­தி­ருக்­கின்­றது. கடந்த இரு­ வா­ரங்­க­ளாக நீடித்து வந்த நெருக்­க­டிக்கு தற்­கா­லிக தீர்வு கிடைத்­தி­ருக்­கின்­றது. ஆனால் இந்த அர­சியல் சூழலில் பாதிக்­கப்­பட்ட ஒரு தரப்­பினர் இருக்­கின்­றனர்.

அதா­வது புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முன்­வைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதா­வது இரு கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்­ளதால் இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான சாத்­தியம் அதி­க­ரிக்கும் என்றே கூறப்­பட்­டது. ஆனால் தற்­போ­தைய நிலை­மை­களைப் பார்க்கும் போது அதற்­கான சாத்­தியம் குறை­வா­கவே இருக்­கின்­றது. தென்­னி­லங்­கையில் தமது அர­சாங்­கத்­திற்கு ஆபத்து ஏற்­படும் என்­பதை கவ­னத்தில் கொண்டு அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காணும் முயற்­சி­களை கைவி­டுமா என்ற சந்­தேகம் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

அதா­வது ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சி­களும் கைவி­டப்­ப­டுமா என்ற சந்­தே­கமும் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் இது தொடர்பில் கருத்து வெளியிட்­டி­ருந்த பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க அர­சி­ய­ல­மைப்பை முன்­ன­டுக்கும் செயற்­பா­டுகள் தொடரும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார். அவரின் கூற்றில் தமிழ் பேசும் மக்கள் நம்­பிக்கை வைக்க முடியும் என்­றாலும் தற்­போ­தைய தென்­னி­லங்கை அர­சி­யலின் போக்கு அதற்­கான களத்தை கொடுக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கின்­றது.

ஏற்­க­னவே ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்வை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் அடங்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பு முயற்­சிகள் தொடர்பில் பாரிய இன­வாத பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­துடன் அவற்றின் விளை­வாக வந்த தேர்தல் முடி­வுகள் என்­ன­வென்­பது எமக்குத் தெரியும்.

அந்­த­வ­கையில் தற்­போது மீண்டும் அந்த செயற்­பா­டு­களை ஆரம்­பித்தால் அது எதிர்­வரும் பிர­தான தேர்­தல்­க­ளுக்கு பாத­க­மாக அமையும் என கரு­தப்­ப­டலாம். எனவே இந்த செயற்­பா­டு­களை கைவி­டு­வ­தற்­கான சாத்­தியம் இல்­லாமல் இல்லை. எப்­போ­து­மில்­லா­த­வாறு இரு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்­ளதால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு சாத்­தியம் எனக் கூறப்­பட்­டு­வ­ரு­கின்ற கூற்றும் தற்­போது பொய்­யா­கிக்­கொண்டு போகின்­றது.

ஆனால் அர­சாங்கம் இந்தப் பிரச்­சி­னையைத் தீர்க்­காமல் முன்­செல்ல முடி­யாது என்­பதை உணர்ந்­து­கொள்ள வேண்டும் என்­ப­துடன் அது­தொ­டர்பில் பெரும்­பான்மை மக்­களை தெளி­வு­ப­டுத்த முன்­வ­ர­வேண்டும். உலகில் அதி­கா­ரத்தைப் பகிர்ந்து அர­சியல் தீர்­வு­களை வழங்­கிய நாடுகள் எந்­த­ளவு தூரம் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளன என்­பதை கவ­னத்தில் கொள்­ள­வேண்டும்.

இலங்கை சிறிய நாடு என்றும் எனவே அங்கு அதி­கா­ரங்­களைப் பகி­ர­மு­டி­யாது என்றும் கூறு­கின்­ற­வர்கள் ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்ள வேண்டும். அதா­வது தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்­டுக்கு சுதந்­திரம் கிடைக்கப் பெற்­ற­தி­லி­ருந்தே தமக்­கான அர­சியல் தீர்­வுத்­திட்டம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

தமது அர­சியல் அபி­லா­ஷைகள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வேண்டும் என்ற தமிழ் பேசும் மக்­களின் கோரிக்­கையின் தாற்­ப­ரி­யத்தை தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­திகள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதி­கா­ரத்தைப் பகிர்ந்து மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண்­பதன் மூலமே இந்த நாட்டை முன்­கொண்டு செல்ல முடியும் என்ற விட­யத்தை தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­திகள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

நல்­லாட்சி அர­சாங்கம் முதற்­கட்­ட­மாக ஒரு தீர்­வுத்­திட்­டத்தை உள்­ள­டக்­கிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வர முயற்­சித்­தது. தற்­போது அந்த முயற்­சி­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போடும் அள­விற்கு உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் அமைந்­தி­ருக்­கின்­றன என்று விப­ரிக்­கப்­ப­டு­கின்­றது. அது­மட்­டு­மன்றி இந்தத் தேர்தல் முடி­வுகள் தென்­னி­லங்­கையின் அர­சியல் களத்­தையே உலுக்­கிப்­போட்­டி­ருக்­கின்­றது.

எனவே எதிர்­வரும் காலங்­களில் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் முடங்­கிப்­போய்­வி­டுமா என்ற தமிழ் பேசும் மக்­களின் சந்­தேகம் நியா­ய­மா­ன­தா­கவே இருக்­கின்­றது. ஆனால் இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் பாரிய பொறுப்புள்­ளது என்­பதை அவர்கள் உண­ர­வேண்டும்.

தற்­போது மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் மக்­களின் ஆணை கிடைத்­தி­ருக்­கின்­றது என்­பதை மறுக்க முடி­யாது. எனவே அவரும் தீர்­வுத்­திட்ட விட­யத்தில் ஒரு மித­வாத அணு­கு­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்டும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இணைந்து புரிந்துணர்வுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படவேண்டியது அவசியமாகும்.

இதில் அனைத்துத் தரப்பினருக்கும் மிக முக்கிய பொறுப்பு இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. 70 வருடங்களாக அரசியல் தீர்வுக்காக தமிழ் பேசும் மக்கள் ஏன் போராடிக்கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து சிந்தித்து செயற்பட தென்னிலங்கை அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையாகும். இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பையும் கவனத்தில் கொண்டு தென்னிலங்கை அரசியல் தலைமைகள் ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-24#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.