Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது: கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி புகார்!

Featured Replies

எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது: கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி புகார்! 

 

 
kaml+gautami

 

சென்னை: திரைப்படங்களில் பணியாற்றிய வகையில் கமலஹாசனிடம் இருந்து எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது என்று நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ளார்.

தனது கணவரைப் பிரிந்தவுடன் நடிகை கவுதமி நடிகர் கமலுடன் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார்.

இப்போது கமலும் கவுதமியும் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் சில ஊடங்கங்களில் வெளியாகின. இதனை நடிகை கவுதமி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது வலைப்பூவில் எழுதிய செய்தி குறித்து, டிவிட்டரில் தகவல் பகிந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: .

நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. 2016-ம் ஆண்டில் பிரிந்து வந்த பிறகு நான் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை.

அதேபோல நானும், கமலும் பிரிந்ததற்கு அவருடைய மகள்கள் சுருதி, அக்ஷரா ஆகியோர் காரணம் என்று கூறப்படுவது தவறானது. இதில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. .

கமலை விட்டு வெளி வந்ததை தொடர்ந்து நானும் எனது மகளும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறேன். இப்போது எங்களுக்கு ஒரு நிலையான வருமானம் வேண்டும். எனது குழந்தைக்கு பொருளாதார ரீதியாக ஒரு வலுவான தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று நான் தேவையான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த விஸ்வரூபம், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றினேன். ஆனால், அதற்கு தர வேண்டிய சம்பளம் இன்னும் முழுமையாக தரப்படவில்லை.

இது சம்பந்தமாக நான் பல தடவை நினைவுபடுத்தி தகவல் அனுப்பி இருக்கிறேன். ஆனாலும், எனக்கு தர வேண்டிய பணத்தை எனக்கு செட்டில் செய்யவில்லை. இதனால் சம்பள பாக்கி தராததால் பொருளாதார ரீதியாக எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு நடிகை கவுதமி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/25/எனக்கு-இன்னும்-சம்பள-பாக்கி-உள்ளது-கமல்ஹாசன்-மீது-நடிகை-கவுதமி-புகார்-2870061.html

  • தொடங்கியவர்

''கமல் மீதான கவுதமியின் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு உரியது'' - ராஜ்கமல் ஃபிலிம்ஸ் விளக்கம்

 

'கமல், எனக்கு சம்பளப் பாக்கித் தரவில்லை' என்ற நடிகை கவுதமியின் ட்விட்டர் பதிவுக்கு அரசியல் அரங்கில் பலத்த அதிர்வலைகள். 'நல்லா சொன்னீங்க சகோதரி' என்று பதில் கமென்ட் செய்துள்ளார் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா!

 

'பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக இருப்பதால், விமர்சனங்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம்' என்று தனது 'மக்கள் நீதி மய்யம்' நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்திருக்கும் இந்தச் சூழலில், கமல்ஹாசன் மீதே 'சம்பளப் பாக்கி' புகாரை எழுப்பியிருக்கும் கவுதமியின் ட்விட்டர் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது. 

''2016 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நானும் கமல்ஹாசனும் மனமொத்து பிரிந்துவிட்டோம். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தது 13 ஆண்டுகள். அந்தக் காலகட்டத்தில் நான் ஒரு ஆடை வடிவமைப்பாளராக கமல்ஹாசனின் 'ராஜ்கமல் நிறுவனத்தின் படங்களுக்கும், கமல்ஹாசன் நடித்த பிற தயாரிப்பாளர்களின் படங்களிலும் பணியாற்றினேன். 2016 ம் ஆண்டு நாங்கள் பிரிந்த சமயம்வரை எனக்கு தசாவதாரம், விஸ்வரூபம் படங்களுக்கான சம்பளப் பாக்கி நிலுவையில் இருந்தது. இதுபற்றி கமல்ஹாசனிடமும், ராஜ்கமல் நிறுவனத்திடமும் பலமுறை கேட்டும் இன்னும் எனக்கு முழுமையான பணம் வந்து சேரவில்லை'' என தனது பிளாக்கில் பதிவிட்டிருக்கிறார் கவுதமி.

ஏற்கெனவே, ம.நீ.ம கட்சியின் உயர் மட்டக் குழுவில், கமல்ஹாசன் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய இடம் தரப்படவில்லை என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது தனிப்பட்ட ரீதியாக கமல்ஹாசன் மீது கவுதமி தெரிவித்திருக்கும் இந்தச் சம்பளப் பாக்கிப் பிரச்னை குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள்....

கௌதமி

''கமல்ஹாசனும் கவுதமியும் உறவிலிருந்து பிரிந்து முழுதாக ஓர் ஆண்டு கடந்துவிட்டது. பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக அவர்களுக்குள் ஏற்கெனவே எந்தவிதமான ஒப்பந்தங்கள் - புரிதல்கள் இருந்துவந்தன என்ற விவரங்களெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால், அப்படியே பிரச்னை இருந்துவந்தாலும்கூட, இத்தனை நாள்களாக அமைதியாக இருந்துவந்த கவுதமி திடீரென இப்போது இப்படியொரு கோரிக்கையை எழுப்பியிருப்பதற்கான காரணம் என்னவென்று அறிய வேண்டும்.

'தனக்கும் தன் மகளுக்குமான வாழ்வை மறு சீரமைப்பதற்கான பணம் என்பது இதன் மூலம் வருபவை மட்டுமே' என்று கவுதமி கூறியுள்ளார். முறைப்படி ஒப்பந்தம் போடப்பட்டிருந்தால், கவுதமி சட்ட ரீதியாகவே இந்தப் பிரச்னையைக் கையாண்டிருக்க முடியும்.   ஆனால், அப்படியெல்லாம் செய்யாமல், தடாலடியாக சமூக ஊடகத்தில் இப்படியொரு புகாரைத் தட்டிவிட்டிருக்கிறார் என்றால், அவரது நோக்கம் என்னவென்று புரியவில்லை'' என்கிறார்கள்.

'சம்பளப் பாக்கி' விவகாரம் குறித்து விளக்கம் கேட்பதற்காக ராஜ்கமல் நிறுவன நிர்வாகிகளிடம் பேசினோம்... '' 'தசாவதாரம்' படத் தயாரிப்பாளர், ஆஸ்கர் ரவிச்சந்திரன்; 'விஸ்வரூபம்' படத் தயாரிப்பு பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்தார். இந்தப் படங்களில் கவுதமிக்குச் சம்பளப் பிரச்னை இருந்தால், அதற்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் எந்தவிதத்தில் பொறுப்பேற்க முடியும்?

திரைத்துறையைப் பொறுத்தவரை, ஒரு படத்தில் வேலை செய்யக்கூடிய நடிகர்களில் ஆரம்பித்து டெக்னீஷியன்கள் வரை அனைவரிடமும், சம்பளம், முன்பணம் போன்ற விவரங்களைத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பார்கள். அந்தவகையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்களில், காஸ்ட்யூம் டிசைனராகக் கவுதமி பணியாற்றியதற்கான சம்பளத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது. 

கமல்ஹாசன்

மாறாக, ராஜ்கமல் நிறுவனம் பணம் தரவேண்டியிருப்பதற்கான ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயாராகவே இருக்கிறோம். கமல்ஹாசன் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வழி நடத்திவரும் இவ்வேளையில், இப்படியொரு பிரச்னையை கவுதமி எழுப்பியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது'' என்றனர்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட  மறுப்பு மற்றும் அரசியல் ரீதியாகக் கவுதமி மீது வைக்கப்படும் சந்தேகங்கள் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்கும் நோக்கில் கவுதமியைத் தொடர்புகொண்டு பேசினோம்....

''சம்பளப் பாக்கி விஷயமாக நான் கேட்டிருப்பதென்பது, கமல்ஹாசன் மீது நான் வைக்கும் குற்றச்சாட்டு என்றோ அல்லது அவருக்கு என்னுடைய கோரிக்கை என்றோ சொல்வது சரியல்ல... அவை அத்தனையும் நடந்த  உண்மை! நான் சொல்ல நினைத்ததை ஏற்கெனவே சமூக ஊடகத்தில் விளக்கமாகத் தெரிவித்துவிட்டேன். புதிதாகச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. மேற்கொண்டு என்னுடைய பேட்டிதான் வேண்டும் என்றால், இன்றும் நாளையும் நான் பிஸியாக இருக்கிறேன். அதன்பிறகு பார்க்கலாம்... '' என்றார் கவுதமி.

https://www.vikatan.com/news/tamilnadu/117564-actress-gautamis-allegations-against-kamalhaasan-are-doubtful-comments-rajkamal-films.html

  • கருத்துக்கள உறவுகள்

இடம் பொருள் காலம் அறிந்து ........
என்று பாட்டன் வள்ளுவன் சொல்லி இருக்கிறான் 

கவுதமி நன்றாக கற்று கொண்டு இருக்கிறார் போல் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.