Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் நம்பிக்கையிழப்பு

Featured Replies

தமிழ் மக்களின் நம்பிக்கையிழப்பு

sammm-806d219196f46b65886d81992278e2f9bb3634d5.jpg

 

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் ஜெனீவா வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் விட­யங்­களில், அர­சாங்­கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நம்­பிக்­கை­யி­ழக்கத் தொடங்கி விட்­டது.

அண்­மைக்­கா­ல­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் தெரி­வித்து வரு­கின்ற, வலி­யு­றுத்தி வரு­கின்ற கருத்­துக்­களே இதனை உணர்த்­தி­யி­ருக்­கின்­றன.

கொழும்­புக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்க காங்­கிரஸ் உறுப்­பி­ன­ரான, ஜேம்ஸ் சென்­சென்ப்­ரெக்னெர் கடந்த வியா­ழக்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். அப்­போது சம்­பந்தன் இரண்டு விட­யங்­களை வலி­யு­றுத்­தினார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கப் பணி­களை முன்­னெ­டுத்து, அதனை நிறை­வேற்ற வேண்டும்.

ஜெனீ­வாவில் அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும்.

இந்த விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை-– கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டு­வதை சர்­வ­தேச சமூகம் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று அவர் கோரி­யி­ருந்தார்.

ஒரே வரியில் சொல்­வ­தானால், இந்த விட­யத்தில் அமெ­ரிக்­கா­வி­னது அழுத்­தங்­களை அவர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

அதே­போல, அர­சியல் குழப்­பங்கள் உச்­ச­ம­டைந்­தி­ருந்த கட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­தித்த இரா.சம்­பந்தன், 2015 ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மக்கள் அளித்த ஆணையை நிறை­வேற்­றுங்கள் என்றும், அவர்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நடை­மு­றை­ப­டுத்­து­மாறும் வலி­யு­றுத்திக் கூறி­யி­ருந்தார்.

அதே­வேளை, ஜெனீ­வாவில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்பு நாடுகள் மற்றும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பு­களின் கூட்டம் ஒன்று கடந்த 16ஆம் திகதி இடம்­பெற்­றி­ருந்­தது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை விவ­கா­ரத்தை எவ்­வாறு கையாள்­வது என்­பது தொடர்­பாக விவா­திப்­ப­தற்­காக நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யாடல் அது.

சுமார் 2 மணி­நேரம் நடந்த இந்தக் கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்­றி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வு­களால் ஏற்­பட்­டுள்ள அர­சியல் குழப்­பங்­களைக் காரணம் காட்டி, இலங்கை அர­சாங்கம் ஜெனீவா தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தி­லி­ருந்து பின்­வாங்­கு­வ­தற்கு, சர்­வ­தேச சமூகம் இட­ம­ளிக்கக் கூடாது என்றும், ஜெனீவா வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­மாறும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்­கு­மாறும் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

கூட்­ட­மைப்பின் கொள்கை மற்றும் நிலைப்­பா­டு­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்ற இரா.சம்­பந்­தனும், எம்.ஏ.சுமந்­தி­ரனும், உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­துள்ள கருத்­துக்­களில் இருந்து, அவர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யீனம் ஏற்­படத் தொடங்கி விட்­டது என்­பதை உணர முடி­கி­றது.

இப்­போ­தைய கூட்டு அர­சாங்கம் எதை­யுமே செய்­யாமல் போய் விடுமோ, வாக்­கு­று­தி­களை காற்றில் பறக்க விட்டு விடுமோ என்ற கவலை அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

தமிழ் மக்கள் மத்­தியில் கடும் எதிர்ப்­புகள் எழுந்த போதிலும், விடாப்­பி­டி­யாக அர­சாங்கம் நிறை­வேற்றும் என்ற நம்­பிக்­கையைக் கொடுத்துக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்கே இப்­போது அவ­நம்­பிக்கை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அதனால் தான், அர­சாங்­கத்தை நோக்கி, மக்­களின் ஆணையை நிறை­வேற்­றுங்கள், வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றுங்கள் என்றும், சர்­வ­தே­சத்தை நோக்கி ஜெனீ­வாவில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் நிறை­வேற்­று­வ­தற்கும், அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­று­வ­தற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இவர்கள் வலி­யு­றுத்த ஆரம்­பித்­துள்­ளார்கள்.

மைத்­திரி - ரணில் கூட்டு அர­சாங்கம் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல் காலை வாரி விட்டால், அதற்குப் பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் கூட்­ட­மைப்பும் இருக்­கி­றது என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. ஏனென்றால், கூட்டு அர­சாங்­கத்தை கூட்­ட­மைப்பு வலு­வாக நம்­பி­யது. கூட்டு அர­சாங்­கத்­துக்­காக வாதா­டி­யது. அதற்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­பையும் கொடுத்­தது.

இதனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒன்­றையும் சாதிக்க முடி­ய­வில்லை. அர­சாங்­கத்­தினால் சர்­வ­தேச தலை­யீ­டு­க­ளுடன் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் கூட நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்­த­நி­லையில், அர­சாங்கம் செய்யத் தவ­றிய விட­யங்­க­ளுக்­காக, அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்த கூட்­ட­மைப்பே அதற்குப் பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலைக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

கூட்­ட­மைப்பு தனது வாக்கு வங்கி, செல்­வாக்கு எல்­லா­வற்­றையும் இழந்து தான், இந்த ஒத்­து­ழைப்பை வழங்கி வந்­தி­ருக்­கி­றது. இன்­னமும் வழங்­கு­கி­றது.

எனவே, மக்­களின் ஆணை­யையும், கொடுத்த வாக்­கு­று­தி­க­ளையும் நிறை­வேற்­று­மாறு இந்தக் கட்­டத்­தி­லேனும் அழுத்­தங்­களைக் கொடுக்கும் நிலைக்கு வந்­தாக வேண்­டிய சூழலில் கூட்­ட­மைப்பு தலைமை இருக்­கி­றது.

அவ்­வாறு அழுத்தம் கொடுப்­ப­தற்­கான முழு­மை­யான உரி­மையும் கூட்­ட­மைப்­புக்கு இருக்­கி­றது. ஏனென்றால், இந்த அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்­காக, கூட்­ட­மைப்பு தனது சக்­திக்கும் மேலாக ஒத்­து­ழைத்­தி­ருக்­கி­றது. இதனால் ஏற்­படக் கூடிய பாத­கங்­க­ளை­யெல்லாம் தூக்­கி­யெ­றிந்து விட்டு ஓர் அமிலப் பரீட்­சைக்குத் தயா­ராகி இருந்­தது.

தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நி­திகள் என்று கொண்­டா­டப்­பட்ட கூட்­ட­மைப்பின் நிலை இன்று கேள்­விக்­குள்­ளாகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது என்றால், அதற்குக் காரணம், தற்­போ­தைய அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளுக்கு கொடுத்த ஆத­ரவு தான்.

இந்த முயற்­சிக்­காக கூட்­ட­மைப்பு தன்னை இழந்­தி­ருக்­கின்ற நிலையில், அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கின்ற முழு உரி­மையும் அதற்கு இருக்­கி­றது.

அதே­வேளை, அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைக்கும் படி கூட்­ட­மைப்­புக்கு சர்­வ­தேச சமூ­கமும் ஆலோ­ச­னை­களை வழங்­கி­யி­ருந்­தது. இன்று அர­சாங்கம் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத நிலையில், கூட்­ட­மைப்பே கையறு நிலைக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

இந்தக் கட்­டத்தில், வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற இலங்கை அர­சுக்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கு­மாறு வலி­யு­றுத்த ஆரம்­பித்­துள்­ளது கூட்­ட­மைப்பு. இது தவிர்க்க முடி­யாத நிலையும் கூட.

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னால், அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்குப் பின்னால், என்று எல்­லா­வற்­றுக்கும் பின்னால் சர்­வ­தேச சமூ­கத்தின் மறை­முக தலை­யீ­டுகள் இருந்து வந்­தன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அதற்கு ஒத்­து­ழைக்க வைத்­த­திலும், சர்­வ­தேச பங்­குகள் கணி­ச­மாக இருக்­கின்­றன.

அண்­மையில் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் கூட, சில வெளி­நா­டு­களின் தேவைக்­கேற்ப கூட்­ட­மைப்புத் தலைமை நடந்து கொள்­வ­தாக, மறை­மு­க­மான ஒரு குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்தார்.

காலம் கால­மாக தமிழ் மக்­களால் ஒரு கருத்து நம்­பப்­பட்டு வந்­தது. ஐ.தே.க.வும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றை­யொன்று காரணம் காட்டி தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பதை தட்டிக் கழித்து வரு­கின்­றன என்­பதே அது.

ஐ.தே.க. தீர்வை முன்­னெ­டுக்கும் போது, சுதந்­திரக் கட்சி அதனைக் குழப்­பு­வதும், சுதந்­திரக் கட்சி தீர்வு முயற்­சி­களில் ஈடு­பட்டால் ஐ.தே.க. குழப்­பு­வதும் வர­லாறு. இரண்டு கட்­சி­களும் ஒரு மறை­முக உடன்­பாட்டின் கீழ் இவ்­வாறு நடந்து கொள்­கின்­றன என்ற கருத்தே தமிழ் மக்­க­ளிடம் காணப்­பட்­டது.

எனவே, இரண்டு கட்­சி­களும் இணைந்து தீர்வு முயற்­சி­களில் இறங்­கினால் தான் அது நிறைவே பெறும் என்றும் தமி­ழர்கள் நம்­பி­னார்கள். அத்­த­கை­ய­தொரு நம்­பிக்­கைக்­கான வாய்ப்­பாக இரண்டு கட்­சி­களும் இணைந்த கூட்டு அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது.

இருந்­தாலும், இந்தக் கூட்டு அர­சாங்­கமும் கூட, அர­சியல் தீர்வு ஒன்றைக் காண்­ப­தற்கு முன்­னு­ரிமை கொடுக்­க­வில்லை. முயற்­சி­களை எடுக்­க­வில்லை.  கூட்டு ஆட்­சியில் அமர்ந்த பின்­னரும், ஒன்­றை­யொன்று பிடித்து வீழ்த்­து­வ­திலும், கடித்துத் தின்­ப­திலும் தான் இரண்டு பிர­தான கட்­சி­களும் கவனம் செலுத்­தின. இதனால் கூட்டு அர­சாங்­கத்­தினால் கூட தீர்வு முயற்­சிகள் சாத்­தி­யப்­ப­டாது என்று நம்­பு­கின்ற நிலைக்கு தமிழ் மக்கள் வந்­தி­ருக்­கி­றார்கள். 

கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரான சுமந்­திரன் கூட, நம்­பிக்­கை­யி­ழக்கத் தொடங்­கி­யி­ருக்­கிறார். உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் அவர் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்கள், அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க முயற்­சிகள் இனித் தொடர வாய்ப்­புகள் குறைவு என்­பதை உணர்த்­து­வ­தாக உள்­ளன.

அது மாத்­தி­ர­மன்றி, அவர் இன்­னொன்­றையும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

இந்த அர­சி­ய­ல­மைப்பு மாற்ற – தீர்வு முயற்­சிகள் குழப்­பப்­பட்டால், அதற்கு தென்­னி­லங்­கையே பொறுப்பு என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார். இடைக்­கால அறிக்கை தெற்கில் உள்ள மக்­களால் தான் அதி­க­ளவில் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

அதா­வது தீர்வு முயற்­சி­களைத் தமி­ழர்கள் குழப்­ப­வில்லை என்­பதால் தான், அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் தொடர்­கிறோம் என்று கூறி வந்த கூட்­ட­மைப்பு இப்­போது, தமது பக்­கத்தில் அத்­த­கைய குழப்­பங்கள் நிக­ழ­வில்லை, தெற்­கி­லேயே அது குழப்­பப்­ப­டு­கி­றது என்று வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. உண்­மையும் அது தான்,

தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி, சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் கூட, இப்­போது ஒன்றை விளங்கிக் கொள்ள முடி­கி­றது. இரண்டு பிர­தான கட்­சிகள் மாத்­திரம் இணைந்தால் போதாது என்­பதே அது.

சிங்­கள பௌத்த கடும்­போக்­கா­ளர்கள், என்ற தரப்பே இதில் பிர­தா­ன­மா­னது. அது இப்­போது மஹிந்த ராஜபக் ஷவின் பின்னால் திரண்­டி­ருக்­கி­றது.

சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம், எங்கு தமக்­கான இடைவெளி தோன்றுகிறதோ அந்த இடத்தை நிரப்பி, தீர்வு முயற்சிகளைக் குழப்புகிறது.

ஆக, கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு அப்பால், சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்த வரை, அரசியல் தீர்வு குறித்து பேச முன்வருவதில்லை, அதனை அவர்களே குழப்புகிறார்கள் என்ற கருத்து சர்வதேச மட்டத்தில் காணப்பட்டது.

ஏதோ இலங்கை அரசாங்கம் தீர்வை வழங்கத் தயாராக இருப்பது போன்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், அரசியல் தீர்வு, நிரந்தர அமைதி எல்லாவற்றுக்கும் குறுக்கே தமிழர்கள் அல்ல, சிங்களப் பேரினவாதமே குறுக்கே நிற்கிறது என்ற உண்மை, சர்வதேச சமூகத்தினால் புரிந்து கொள்ளப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

சர்வதேசத்துக்கு இதனைப் புரிய வைப்பதற்காக தமிழர் தரப்பு நிறையவே இழப்புகளை சந்தித்திருக்கிறது.. இதனைப் புரிய வைத்துள்ளதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் கிட்டியது?

வெறும் நல்ல பிள்ளைகள் என்ற பாராட்டு மட்டும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாகி விடுமா?

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-02-25#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.