Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் நாதியற்றவர்கள்!...இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல்

Featured Replies

நாங்கள் நாதியற்றவர்கள்! பாகம்-01 : இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல்

 

 

 

மலையகப் பகுதிகளில் இரண்டு நூற்றாண்டு கடந்தும் “லயன்” அறைகளில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் எதிர்காலம் தொடர்பாக தற்போதும் ஆணித்தனமான அழுத்தங்கள்  வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.

dsfsf.jpg

அவர்களின் அடிமை வாழ்க்கைக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இயற்கை அனர்த்தங்களையும் தாண்டி இலக்குகளை அடைவதற்கான அதிவிரைவு பயணத்தின் அவசியம் குறித்தும் ஆழமாக வலியுத்தல்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

நாளைய பொழுது நல்லபொழுதாக விடிந்துவிடும். சுதந்திர சமுகமாக சஞ்சாரிக்க முடியும் என்ற பேரவா?

அந்த மக்கள் மனதில் வேரூன்றியிருக்கின்றது. அது அரசியல் சாயங்களைக் கடந்து விடுதலைக்கான வேட்கையை விரைவில் பெற்றுக்கொடுத்து விடும் என்பதில் அண்மைக்கால மாற்றங்களில் ஓரேளவு நம்பிக்கை கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு மலைக்குன்றுகளுக்குள் மல்லுக்கட்டி போராடிக்கொண்டிருக்கும் ஒரு சமுகத்தின் அவலத்தினையும் ஆதங்கத்தினையும் நாம் நேரயாகவே கண்டும் கேட்டும் இருக்கின்றோம். அவ்வப்போது இந்த மக்கள் மனங்களில் “ நாம் அன்று போயிருந்தால் எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது” “நமது பூமியில் நன்றாய் வாழ்ந்திருப்போம்” இப்படியெல்லாம் “லயன்கள்” என்ற சகதிக்குள் வாழும் எத்தனையோ பாட்டிகளும், தாத்தாக்களும் முனுமுனுப்பதை பலர் அறிந்திருப்பீர்கள்.

சில சமயங்களில், “பிழைப்புத் தேடி வந்தவர்கள் இப்படி துண்டு நிலம் கூட சொந்தமில்லாத துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டார்களே. சொந்த நாட்டில் இருந்திருந்தால் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது ராஜவாழ்க்கை வாழ்ந்திருபார்கள்” என்று கூட நாம் மனதுக்குள் கருதுவதுண்டு. ஆனால், இரண்டு தலைமுறை கடந்த நிலையில் அதனை விட பரிதாபமான நிலையில் இருக்கின்றது ஒரு சமூகம்! நான்கு தசாப்த காலமாக மலையகத்தில் காணப்படும்.

IMG_0003__1_.JPG

அதே “லயன் அறைகளில்” சொல்லெண்ணாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றது அந்த சமூகம். மலையகத்தில் ஆகக்குறைந்தது சுயநலத்தின் அடிப்படையிலாவது ஏதோவொரு குரல் அந்த மக்களுக்காக ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஆனால், கேட்பார் யாருமில்லை. பார்ப்பார் யாருமில்லை. தமக்காக தாமே போராடவும் திராணியில்லை. ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக அடிமைசாசனம் எழுதப்பட்ட அடிமைகள் போன்று அச்சத்தின் பேரால் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது அந்த சமூகம்.

ஆம், கேரளாவில் 14மாவட்டங்களில் ஒன்றுதான் கொல்லம். மலையகப் பகுதிகள் போன்ற அதே சாயலில் தான் இந்த மாவட்டத்தின் அதிகமான பகுதிகள் உள்ளன. இறப்பர் தோட்டங்களும், விவசாய நிலங்களும் பரந்து விரிந்து இருகின்றன. இந்த மாவட்டத்தின் பிரதான நகரிலிருந்து சுமார் 58கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கிராமம் தான் குழத்துப்புலா.

IMG_0055.JPG

இங்கு இறப்பர் தோட்டங்களுக்கு பஞ்சமில்லை. பார்க்கும் இடங்கள் எல்லாம் இறப்பர் தோட்டங்கள் தான் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் தோட்டங்களில் சிலவற்றுள் தான் அவலங்களுக்கு நிறைந்து எமது உறவுகளும் இருக்கின்றார்கள். குளத்துப் புலா கிராமத்தில் “சிலோன் கொலனி” என்று அனைவராலும் அறியப்பட்ட பகுதியாக இவர்கள் வாழும் பகுதிகள் உள்ளன.

யார் இவர்கள்?

யார் இவர்கள்? கேரளாவில் எமது இரத்த உறவுகளா? என்று நம்மில் பலர் புருவத்தினை தூக்குவார்கள்?

இவர்கள் பற்றிய தகவல்கள் அதிகளவில் வெளியில் வருவதில்லை. இலங்கையிலிருந்து வந்தவர்களில் பலர் தமிழகத்தில் இருப்பதால் பலர் இந்த மக்கள் பற்றி அறிந்திருக்கவில்லை. இந்த மக்களும் தமிழினம்

அல்லாத இன்னொரு சமுகத்துடன் வாழ்வதால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ? என்ற அச்சத்தால் பெரிதாக வாய்திறப்பதும் இல்லை.

srima_shasthiri_pat.jpg

இலங்கை வரலாற்றில் என்றும் கறைபடிந்த விடயமாகவுள்ள 1948இல், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினை நிறைவேற்றியது, இதன் விளைவாக, இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்படுதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு இலங்கைச் சனத்தொகையின் 11.7சதவீதமாக இருந்த இந்திய வம்சாவழி மக்களில் 975,000பேர் நாடற்றவர்களாகினார்கள்.

இந்த விவகாரம் பூதகாரமாகியது. நாட்டாற்றில் விடப்பட்ட மக்களுக்கு ஆகக்குறைந்தது அவர்களின் தாய் மண்ணான பாரதம் கைகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலவாறான நிலையில் எழுந்தன. இதன் பலனாக 1954இல், சேர் ஜோன் கொத்தலாவல பிரதமராக இருந்த போது, அவருக்கும் அன்றைய இந்தியப் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்குமிடையில் 1954 ஜனவரி 18ஆம் திகதி ‘நேரு-கொத்தலாவல’ ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வயதுவந்தவர்கள், இலங்கை வாக்காளர் இடாப்பில் இதுவரை பதிவு செய்திராதவர்களை உள்நாட்டில் பதிவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் அதேநேரம் பின்னர் அப்பதிவில் இல்லாவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக கருதப்பட்டு அவர்கள் இந்திய மொழிகளில் ஒன்றைப் பேசுபவர்களாக இருந்தால் அத்கையவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

துரதிஸ்ட வசமாக அந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. 11.7 சதவீத இந்திய வம்வழி சனத்தொகையில் 0.7சதவீதமானவர்களுக்கு பிராஜாவுரிமையை வழங்கி விட்டு ஏனையவர்களை அரசாங்கம் கையாண்ட விதமானது மிகவும் மோசமாகவிருந்தது. இதன் விளைவால் அவர்களை தமது சொந்த மண்ணுக்கே திருப்பி அனுப்பி விடுவது தான் சிறந்தது என்ற பரஸ்பர வாதங்களும் எழுந்தன.

ஏவ்வாறாயினும் சௌமிய மூர்த்தி தொண்டமான் பிரதமர் ஜவர்கால் நேரு ஆகியோருக்கு இடையிலான டெல்லிச் சந்திப்புக்கள் பிரஜாவுரிமைக்காக ஏங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு சாதகமாக அமைந்த போதும் 1964ஆம் ஆண்டு பிரதமர் நேருவின் திடீர் இறப்பு அத்தனைனையும் புரட்டிப்போட்டது. இலங்கையின் ஆட்சிக்கு வந்த பிரதமர் ஸ்ரீமவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தினை கையிலெடுத்தது.

நேருவின் பின்னர் பிரதமராக வந்த லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைளில் கொண்டிருந்த திடீர் மாற்றத்தினை சரியாக புரிந்து கொண்டு நாடற்றவர்கள் விவகாரத்தினை முன்னெடுத்து ஸ்ரீமா அரசாங்கம். அதன் விளைவால் 1964ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி சர்வதேசமே புகழும் அளிவிற்கு பெருமையான ஒப்பந்தமாக வர்ணக்கப்பட்டு “ஸ்ரீமா- சாஸ்திரி” ஒப்பந்தம் கைச்சாத்தனர்.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 300,000 மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பிரஜா உரிமை வழங்கவும் 525,000 மக்களை சாஸ்திரி அரசாங்கம் மீளவும் இந்தியாவுக்கே அழைத்துக் கொள்வதும் என்றும் இருந்தது. இவ்வாறு அழைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஒப்பந்தம் கைச்சாத்த காலத்திலிருந்து அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு நடைபெறும் என்றும் இணக்கம் ஏற்பட்டிருந்தது. 1983 கறுப்பு ஜுலை கலவரங்கள் இலங்கையிலிருந்து இந்திய வம்சாவழி மக்கள் விரைவாக வெளியேறுவதற்கு வழிவகுத்தது.

அவர்கள் தான் இவர்கள்

அவ்வாறு இலங்கையிலிருந்து வெளியேறிய மக்களில் அதிகமானவர்கள் தமிழகத்திற்கு செல்வதற்கு ஆசைப்பட்டனர். தோட்ட வேலையில் ஏற்பட்ட பெறுப்பினால் சிலர் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்குச் சென்றால் வேறு ஏதாவது தொழில்களில் ஈடுபட முடியும் என்ற அலாதிப் பிரியத்துடன் மைசூர் போன்ற பகுதிகளுக்கு சென்றார்கள்.

எஞ்சியவர்கள் தோட்டத்தில் பணியாற்றிய அனுபவத்தால் இறப்பர், தேயிலை தோட்டங்கள் அதிகமாக காணப்படும் கேரள மாநிலத்தில் குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்தார்கள். இதன் காரணமாக 1970ஆம் ஆண்டு முதன் முதலாக கொல்லம் மாவட்டத்தின் குழத்துப்புலா பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான இறப்பர் தோட்டத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.

அடுத்தடுத்த வருடங்களில் விரும்பியவர்கள் இதேதோட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். இறப்பர் தோட்டத்தின் நடுவே “பத்துக்கு பத்து” சதுர அடியாக நான்கு தொடர் “காம்பறாக்கள்” கொண்ட முதலாவது “லயன்” உருவாக்கப்பட்டு “1ஏ” என்று பெயரிடப்பட்டது.

“சிலோனில் பிரச்சினை அதிகரித்து விட்டது. தனித்தனி வீடுகளை கட்டி உங்களை குடியேற்றவே நாங்கள் விரும்புகின்றோம். தற்போது அதற்கு நேரமில்லை. உங்களின் உயிர்கள் எமக்கு முக்கியம். ஆகவே தான் தற்காலிகமாக இந்த குவாட்டஸ்ஸை உங்களுக்காக அமைத்துள்ளோம். நாங்கள் அதனை இலவசமாகவே தருகின்றோம். இந்த குவாட்டஸ் தற்காலிகமானது தான். நீங்கள் அதில் இருங்கள். சற்றுக்காலத்தில்

புதுவாழ்வை வாழ்வீர்கள்” என்ற சாஸ்திரி தலைமையிலான மத்திய அரசாங்கம் கவர்ச்சி அறிவிப்பினை விடுத்தது அந்த வார்த்தகைளை வாக்குறுதியாக நம்பி குறுகிய காலம் தானே நெருக்கடிகளை பொறுத்துக்கொள்வோம் என்று மனக்குள் நினைத்துக்கொண்டு ஒவ்வொரு குடும்பங்களும் லயனுக்குள் குடிபுகுந்தன. “1ஏ” லயன் 1சி, 2ஜே, 9பி, 2எச்,2எப், ரமணிக்குடியிருப்பு, சந்தனக்காவு இப்படி காலவோட்டத்தில் 62லயன்கள் இத்தோட்டத்தில் உள்ளன.

இதனைவிடவும் இத்தோட்டத்தில் ஏற்பட்ட இட நெருக்கடியால் குழத்துப்புலா பிரதேசத்தில் புணலூர், கூவக்காடு போன்ற பகுதிகளில் உள்ள அரசாங்க இறப்பர் தோட்டங்களிலும் லயன்கள் அமைக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டார்கள். அன்று அமைக்கப்பட்ட “சாஸ்திரி அரசின் தற்காலிக குவார்ட்டர்ஸ்” தற்போது வரையில் தற்காலிகமானவையாகவே உள்ளது. நாடற்றவர்களுக்கு பெயரளவில் நாடு கிடைத்து விட்டது என்றாலும் அடிப்படைத் தேவையான வீடு மற்றும் இதர வசதிகள்...? 

http://www.virakesari.lk/article/30957

  • தொடங்கியவர்

நாங்கள் நாதியற்றவர்கள்! பாகம்-02 : இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல்

 

 

ஒப்பந்தத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டார்கள். அதன் பின்னர் தற்போது வரையில் அவர்கள் அடைந்து கொண்டது ஏதுமில்லை. மாநில ஆட்சி மாற்றத்தின் போதும் மத்திய ஆட்சி மாற்றத்தின் போது இவர்களின் பகுதிகளுக்கு வருகை தரும் அரசியல்வாதிகளின் தேர்தல்கால வாக்குறுதிகளை நம்பிநம்பியே நாற்பத்தைந்தாண்டுகள் உருண்டோடி விட்டன. 

Ram.jpg

தற்போது இவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்வது முதல் பலநூறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.

குளத்துப்புலா இறப்பர்தோட்டத்தின் பிரதான வாயிலில் பிரிவு ஒன்றுக்கான உதவி முகாமையாளர் அலுவலகம். அருகே செல்லும் மண் பாதையின் ஊடாக பிரவேசிக்கின்றபோது காணப்படுகின்ற சிறு மலைக்குன்றில் மலைச்சாமியொன்று காவல் தெய்வமாக வைக்கப்பட்டுள்ளது. 

தோட்டத்தொழிலாளர்கள் மரபியல் சமய  பழக்கமாக கருதப்படுகின்ற மலைச்சாமி வழிபாடு இங்கும் காணப்படுகின்றது. 

அதனைக் கடந்து செல்கின்ற ஒற்றையடிப் பாதையின் ஊடாக கீழிறங்குகின்றபோது தான் முதலாவதாக காணப்படுவது 1 ஏ லயன் அமைப்பாகும். இந்த லயனில் நான்கு காம்பறாக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் தலா பத்து சதுர அடிகள் கொண்டவை. இவை தான் முதன் முதலாக இந்த மக்களுக்காக இந்திய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பாகும். அதனையடுத்தே ஏனைய லயன்கள் அருகருகே அமைக்கப்பட்டன.  அன்று அமைக்கப்பட்ட இந்த லயன்களில் தற்போது வரையில் சிறு புனரமைப்பைக் கூட மாநில அரசாங்கமோ மத்திய அரசாங்கமோ மேற்கொள்ளாத நிலையே உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தில் வாழும் குடும்பங்களும் தமது குடும்பங்களில் ஏற்பட்ட விஸ்தரிப்பின் காரணமாக ஏற்பட்ட தேவைகளை  பூர்த்தி செய்து கொள்வதற்காக சிறு தகரங்கள், பலகைகள் மூலம் அந்தந்த காம்பறாக்களில் சிற்சில விஸ்தரிப்புக்களை மட்டும் மேற்கொண்டிருக்கின்றார்கள். 

rammmm.jpg

லயன்களின் கூரைகளில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக நிவர்த்தி செய்து கொண்டுள்ள இந்த மக்கள் ஒவ்வொரு காம்பறாக்களிலும் ஆகக்குறைந்தது இரண்டுக்கும் குறையாத முதியயோர் நான்கு பேருக்கு மேற்பட்ட வயது வந்தவர்கள் இரண்டுக்கு மேற்பட்ட சிறுபிள்ளைகளும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். பொருள் பண்டங்களோ, தளபாடங்கள் என்றே சொல்லக் கூடியளவு எவையும் இல்லை. சமையல் பாத்திரங்களும், மற்றும் சில தளபாடங்களுமே அவர்களின் சொத்துக்கள். மிகவும் பரிதாபகரமான வகையில் நகர்கிறது அவர்களின் அன்றாட வாழ்க்கை, நிலைமையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. 

அவ்வாறிருக்கையில் தமது நிலைமைகளின் யதார்த்தம் குறித்து கூட பேசுவதற்கு ஆரம்பத்தில் பெரும் தயக்கம் காட்டினார்கள். தங்களின் உண்மை நிலை வெளியே வந்தால் தற்போது நகரும் வாழ்வைக் கூட நகர்த்த முடியாத அளவிற்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடலாம் என்ற பெரு அச்சமே அந்த தயக்கத்திற்கு அடிப்படையாக இருந்தது. 

இருப்பினும் அங்குள்ள முதியோர் தொடர்ந்தும் அமைதி காத்துக்கொண்டிருக்க முடியாது. என்ன நடந்தாலும் பரவாயில்லை.  நாம் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் எப்படி இருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்துவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்றே கருதினார்கள்.  அதன் வெளிப்பாட்டால் தமது ஆதங்கத்தினை ஒவ்வொருவராக வெளிப்படுத்தலாயினர். 

முதியோரின் முன்வருகையைத் தொடர்ந்து இரண்டாம் சந்ததியாக விருக்கும் அவர்களின் பிள்ளைகளும் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, தாமாகவே முன்வந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன். அவை வருமாறு, 

வேந்தையா சிவனடி(வயது58) என்பவர் ஆரம்பம் முதல் தாம் அடைந்த இன்னல்களை கூறுகையில், 

நாங்கள் 1971ஆம் ஆண்டு இலங்கையின் வெலிமடை என்கிற இடத்திலிருந்து வந்தோம். அப்போது எங்களுக்கு இது தற்காலிகமான குவாட்டஸ் என்று சொல்லித்தான் கொடுத்தார்கள். 

எனது தாய், தந்தை உட்பட சகோதரங்கள் அவர்களின் பிள்ளைகள் என 18பேருக்கு ஒரு காம்பறா தான் ஆரம்பத்தில் வழங்கினார்கள். நாங்கள் ஒருவாறு சமாளித்துக்கொண்டு இருந்தோம். இந்திராகாந்தி வழியில் வந்த ராஜீவ் காந்தி எங்களின் பிரச்சினைகளை நல்லாத் தெரிஞ்சவையள் என்கிறதால விடிவு கிடைக்கும் என்று நம்பினோம்.  கடைசியில என்னோட சகோதரங்கள் ஒன்பது பேரை நான் பிரிஞ்சு விட்டேன். நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரிக்க அவர்கள் எங்கோ போய்விட்டார்கள். கடந்த வாரம் தான் அருகில் இருந்த எனது அண்ணாவும் இறந்து விட்டார். நாங்கள் இலங்கையில இருந்து வந்ததால எங்களுக்கு வேலையைக் கொடுத்து விட்டார்கள். ஆனால் நிரந்தர சம்பளம் கிடையாது. நாள் சம்பள வேலை தான்.  

இருந்தாலும் நாங்கள் 56 வயது வரையில் வேலை செய்யலாம். இப்போது பெஞ்சன் எடுத்து விட்டேன். எனக்கு பெஞ்சன் காசு மாதம் ஆயிரம் ரூபா கிடைக்கிறது. நான் பெஞ்சன் எடுத்த பிறகு அதோட என்ர ஒரு மகனுக்கும் வேலை கொடுத்திருக்கினம்.

எனக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண்கள்,  இரண்டு பெண்கள். ஒரு பெண்பிள்ளை இறந்து விட்டார். மற்றொரு பெண்பிள்ளைக்கு திருமணமாகிவிட்டது. ஆண்பிள்ளைகளில் ஒருவருக்கே வேலை கிடைத்திருக்கின்றது. மற்றவர் மரத்தால் விழுந்து நடக்க முடியாது இருக்கின்றார். இப்போது அவருக்கு ஒரு வீல் கதிரை கூட வாங்க முடியாது உள்ளேன்.

எனக்கு வரும் 1000 ரூபா பணத்தில் தான் நான் மனைவி, நடக்க முடியாதிருக்கும் எனது மகன் ஆகியோர் வாழ்க்கை நடத்துகின்றோம். என்னுடன் மற்றைய மகன் இருந்தாலும் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவருடைய பெறுப்புக்களும் அதிகமல்லவா? எனக்கு 26நாட்களாக வழங்கப்பட்டிருந்த வேலை அவருக்கு வெறும் இருபது நாட்கள் தான் கசுவலாக(நிரந்தரமற்றது) வழங்கியுள்ளார்கள். 

இப்போது தோட்டத்திற்கு வெளியில் சென்று வேலை தேடினாலும் கிடைப்பது கடினமாக உள்ளது. நாற்பது வருசத்துக்கும் அதிகமாய் இங்கு இருக்கின்றோம். எங்களுக்கு என்று ஒரு துண்டு நிலம் இல்லை. இந்த பத்து சதுர அடிக்குள் தான் எங்கள் வாழ்க்கை செல்கின்றது. 

இங்கு வருகின்ற அனைத்து கட்சி தொழிற்சங்க பிரதிநிதிகளிடத்திலும் நாங்கள் கூறிவிட்டோம். ஆனால் எதுவுமே நடப்பதாக இல்லை. தற்போது கூட ஆட்சியில் உள்ள தொழிற்சங்கத்தினரிடம் எங்களின் விடயத் தினை கூறினோம். கேரளா சர்க்காரிடம் (கேரள அரசு) எங்கள் விடயம் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க இயலாது. கேந்திர சர்க்கார்(மத்திய அரசு) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே கூறு கின்றார் கள். 

நான் இன்னும் எவ்வளவு காலம் இருப்பன் என்று தெரியவில்லை. ஒநேரமோ இரண்டு நேரமே உணவை சாப்பிட்டு எமது வயிற்றை பார்த்துக்கொள்வோம். ஆனால் எங்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் நிலைமை என்ன? அவர்களுக்கு எங்களுக்கு கிடைத்த அற்ப சலுகைகள் கூட கிடைப்பதில்லை. வேலை நாட்களும் குறைக்கப்பட்டு விட்டன. அது தொடர்பில் கேட்டால் அவர்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்று பதிலளிக்கின்றார்கள். 

இந்த விடயங்களை கையாள்வதற்குரிய தலைமை அலுவலகம் தமிழகத்தில் உள்ளது. அந்த அதிகாரிகள் இங்கு வருவது கூட கிடையாது. அவர்கள் திருவனந்தபுரம் வருகின்றார்கள். அங்கு சொல்வதைக் கேட்டுவிட்டுச் சென்று விடுகின்றார்கள். 

இப்படித்தான் எங்களின் வாழ்க்கை செல்கின்றது. இந்த விடயம் சம்பந்தமாக யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. நாம் கூட்டாக இந்த விடயத்தினை பேச முனைகின்றபோதும் எங்கட மக்கள் வேறுவேறு தொழிற்சங்கங்களில் அங்கம் வகிப்பதால் அதனைச் சாதகமாக பயன்படுத்தி எமக்குள்ளே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நிலைமையே ஏற்படுகின்றது. இதனால் எமக்காக குரல்கொடுக்க யாரும் இல்லாது அநாதைகளாக இருக்கின்றோம் என்று முழு மூச்சாக கூறி நிறைவு செய்தார். 

இவரைத்தொடர்ந்து மீனாட்சி அம்மா(வயது60), என்பவர் கூறுகையில்,

நாங்கள் 1972இல் இலங்கையின் நீலகிரியிலிருந்து இந்தியாவுக்கு வந்தோம். தோட்டங்களில்  நாங்கள் வேலை செய்தமையால் இங்கு வேலை செய்வது இலகுவானது என்று கருதியே இங்கு வருவதற்கு அந்த நேரத்தில் எனது கணவரும் சம்மதித்திருந்தார். 

எனக்கு ஏழு பிள்ளைகள். நானும் கணவரும் இந்த இறப்பர் தோட்டத்தில் தான் நாள் முழுக்க வேலை பார்த்து எங்களின் பிள்ளைகளை வளர்த்தோம். எங்களால் முடிந்த வரையில் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதற்கு முயற்சிகளை எடுத்தோம். இருந்தாலும் முடியவில்லை. 

அவர்களும் இந்த தோட்டத்தில் தான் இப்போது நாள் சம்பளத்துக்கு வேலை செய்கின்றார்கள். எனது கணவன் இறந்து விட்டார். நாங்கள் இலங்கையில் இருந்து வந்ததால் இப்போது எனக்கு ஓய்வூதியமாக 902ரூபா மாதாந்தம் வழங்குகின்றார்கள். எனது மகளொருவருடன் நான் இருக்கின்றேன். 

என்னுடைய பேத்திக்கு ஒன்றரை வயதாகின்றது. குழந்தைக்கு இயற்கையான குறைபாட்டால் இப்போது அந்தக் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. அன்றாடம் உழைத்து குடும்பச் செலவுக்கே வருமானம் போதுமானதாக இருக்கின்றமையால் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கு கூடமுடியாது வீட்டுக்குள்ளே முடங்கிப் போயிருக்கின்றேன். 

எங்களின் நிலைமையில் என்னசெய்வது என்று அறியாது இருக்கின்றோம். குழந்தை தொடர்பாக வைத்தியரை பார்க்க சென்றால் வேலைக்கு லீவு போட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி லீவு போட்டால் வருமானம் இல்லாது போய்வி டும். எனது மகளும், மருமகனும் ஆழ்ந்த கவலையுடன் இருக்கின்றார்கள். எனக்கு கிடைக்கின்ற ஓய்வூதியம் எதற்குபோதும். கஷ்டத்தின் மேல் கஷ்டம் என்று பெருமூச் செறிந்தவாறு நிறுத்தினார்.

 

 தொடரும்...

http://www.virakesari.lk/article/31210

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நாங்கள் நாதியற்றவர்கள்! பாகம்-03 : இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல்

 

அந்த இரண்டு முதி­ய­வர்­களைத் தொடர்ந்து ஆர். அழகன் மற்றும் செல்­லையா போன்ற மேலும் இரண்டு முதி­ய­வர்­களும் அதே­போன்ற ஆதங்­கங்­க­ளையே வலுப்­ப­டுத்­த­லா­யினர். அவர்­களும் தமது காலம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தற்­போது தமது பிள்­ளைகள் முகங்கொ­டுக்கும் நெருக்­க­டி­க­ளையும், எதிர்­கா­லத்தில் தமது பேரப்­பிள்­ளைகள் பரம்­ப­ரை­யி­ன­ருக்கு என்ன நடக்கும் என்­பதை நினைத்தும் ஆழ்ந்த கவ­லையில் இருப்­ப­தாக தமது ஆழ்ந்த கவ­லை­களை வெளிப்­ப­டுத்தி நின்­றார்கள்.

New_Layout.jpg

இந்த மூத்­த­வர்­களைத் தொடர்ந்து அவர்கள் வழி­வந்த இரண்­டா­வது பரம்­ப­ரை­யினைச் சேர்ந்­த­வர்­களில் சிலரும் தமது நெருக்­க­டி­யான அன்­றா­ட­வாழ்வு தொடர்­பிலும் எதிர்­கால அச்சம் குறித்தும் மனம்­விட்டுப் பேச ஆரம்­பித்­தார்கள். இருப்­பினும் தமது புகைப்­ப­டங்­களை பிர­சு­ரிக்க வேண்டாம் என்ற நிபந்­த­னை­யுடன் சில அதிர்ச்சி தரும் விட­யங்­களை எடுத்­து­ரைத்­தனர். 

முத­லா­வ­தாக எஸ்.மோகன் (வயது30) என்ற குடும்­பஸ்தர் கூறு­கையில், 

எனது தாய் தந்­தையர் சிலோ­னி­லி­ருந்து வந்த பிறகு இதே மண்ணில் தான் பிறந்தேன். தற்­போது திரு­ம­ண­மாகி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்­கின்­றனர். மிக அண்­மை­யி­லேயே லயன் காம்­ப­றா­வொன்று கிடைத்­ததால் எனது குடும்­பத்­தி­ன­ருடன் அங்கு வசிக்­கின்றேன். 

நானும் மனை­வியும் தோட்­டத்தில் தான் தொழில் புரி­கின்றோம். நாங்கள் இந்த மண்ணில் பிறந்­ததால் எங்­க­ளுக்கு 20 முதல் 26 நாட்கள் வரையில் தான் தோட்­டத்­தில் தொழில் செய்­வ­தற்கு அனு­மதி அளிக்­கின்­றார்கள். ஒரு ­நா­ளைக்கு 30 கிலோ இறப்பர் பால் எடுக்க வேண்டும். எட்டு மணித்­தி­யா­லங்கள் வேலை செய்ய வேண்டும். நாளொன்­றுக்கு 403 ரூபா சம்­பளம் கொடுக்­கின்­றார்கள். அதனை விடவும் மேல­தி­க­மாக வேலை செய்யும் ஒவ்­வொரு மணித்­தி­யா­லத்­திற்கும் 6 ரூபா சம்­ப­ள­மாக கொடுக்­கின்­றார்கள். 

எங்­க­ளு­டைய வேலை நிரந்­த­ர­மா­னது அல்ல. நாள் வேலை போன்­றது தான். கஸுவல் (நிரந்­த­ர­மற்ற) அடிப்­ப­டையில் தான் வைத்­தி­ருக்­கின்­றார்கள். எங்­களை நிரந்­த­ர­மாக்­கு­மாறு கோரிய போதும் நீங்கள் சிலோன்­காரர் இல்­லையே. இங்கு தான் பிறந்­துள்­ளீர்கள். நீங்கள் மலை­யா­ளிகள் என்று கூறி வாய­டைக்­கின்­றார்கள். 

சரி எங்­க­ளுக்கு சம்­ப­ளத்­தினை கூட்­டுங்கள் இந்த சம்­ப­ளத்தில் எது­வுமே செய்ய முடி­யா­துள்­ளது என்று கோரினால் இறப்­ப­ருக்­கான விலை சந்­தையில் குறைந்­துள்­ளது என்று பதி­ல­ளிக்­கின்­றார்கள். 

எங்­க­ளு­டைய தாய் தந்­தை­யர்கள் அந்­தக்­கா­லத்தில் மிகவும் கஷ்­டத்­துக்குள் இருந்­ததால் நாங்கள் முறை­யாக கல்­வியை நிறை­வாக பெற­வில்லை. ஆகவே தற்­போது எங்­களைப் போன்று எமது பிள்­ளைகளும் ஆகி­வி­டக்­கூ­டாது என்று கருதி அவர்­களை எவ்­வித கஷ்­டப்­பட்­டா­வது கல்வி கற்­பித்து நல்ல எதிர்­கா­லத்­தினை ஏற்­ப­டுத்திக் கொடுப்போம் என்று நினைத்­தாலும் அதிலும் பிரச்­சி­னைகள் உள்­ளன.

இங்­குள்ள தோட்­டப்­பா­ட­சா­லையில் தான் எமது பிள்­ளை­க­ளுக்கு அனு­மதி கிடைக்­கின்­றது. தமிழ் மொழியில் அல்­லது மலை­யாள மொழியில் தான் கல்­வியைத் தொட­ர­வேண்­டி­யுள்­ளது. அவர்­க­ளுக்கு ஆங்­கில மொழிக் கல்­வியை கற்க முடி­யாத நிலை­மையே இருக்­கின்­றது. மலை­யாள சமூ­கத்­திற்கு அவ்­வா­றான வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. 

அவ்­வாறு கற்­பிக்க வேண்­டு­மா­க­வி­ருந்தால் ஆயிரம் ரூபா­வுக்கு அதி­க­மான தொகை செலுத்தி தனியார் பாட­சா­லை­க­ளுக்கு தான் அனுப்ப வேண்­டி­யுள்­ளது. எனது குடும்­பத்தின் வரு­மா­னத்தில் அது இய­லாத காரி­ய­மா­கவே இருக்­கின்­றது. இந்த விட­யங்­களை தொழில் சங்­கத்­தி­ன­ரிடம் கூறினோம்.

கம்­யூனிஸ்ட், பா.ஜ.க., காங்­கிரஸ் இப்­படி பல தொழிற்­சங்­கங்கள் தோட்­டங்­களில் உள்ள மக்­க­ளுடன் தொடர்­பு­களை பேணு­கின்­றன. அவர்கள் இந்த விட­யத்­தினை பேசு­கின்­றதாக கூறு­வார்கள். இருப்­பினும் அது தொடர்பில் என்ன நடந்­தது என்­பதை நாங்கள் அறி­வ­தில்லை. அவர்­களும் எந்த முடி­வு­க­ளையும் இது­வ­ரையில் கூறி­ய­தில்லை.

எமது கஷ்­டங்­களை தமி­ழ­கத்தில் எம்­மைப்­போன்­ற­வர்­க­ளுக்­காக குரல்­கொ­டுக்கும் சீமான், வைகோ, திரு­மா­வ­ளவன் போன்­ற­வர்­களின் கவ­னத்­திற்கு கொண்டு சென்றால் ஏதா­வது தீர்வு கிடைக்கும் என எண்­ணினோம். அதற்­கு­ரிய சில முன்­னெ­டுப்­புக்­களைச் செய்தோம். 

இருப்­பினும் அவர்கள் இந்த விட­யத்­தினை கையாண்டால் நிரந்­த­ர­மற்ற வேலையில் இருக்கும் எமக்கு அதுவும் இல்­லாது போய் நடுத்­தெ­ரு­வுக்கு கொண்டு வரப்­பட்டு விடு­வோமோ என்ற அச்­சத்தின் கார­ணத்தால் அமை­தி­யா­கவே தற்­போது வரையில் இருந்து வரு­கின்றோம் என்றார். 

இவ­ரைத்­தொ­டர்ந்து மற்­று­மொரு இளம் குடும்­பஸ்­த­ரான எஸ்.சிவ­னடி(வயது32) என்­பவர் கூறு­கையில், 

எனது தந்­தையார் ஓய்வுபெற்ற பின்னர் எனக்கு தோட்­டத்தில் வேலை செய்­வ­தற் கான வாய்ப்பு கிடைத்­தது. எனக்கு திரு­ம­ண­மாகி இரண்டு குழந்­தைகள் இருக்­கின்­றார்கள். எனது பெற்­றோ­ரு­ட­னேயே நானும் எனது மனைவி பிள்­ளைகள் எல்லோரும் வசித்து வரு­கின்றோம். மிகவும் இட­நெ­ருக்­க­டி­யான நிலையில் தான் அன்­றாட வாழ்வைக் கழிக்­கின்றோம். தந்­தை­க்கு பின்னர் எனக்கு தோட்­டத்தில் வேலை செய்­வ­தற்­கான வாய்ப்­பினை வழங்­கி­னாலும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட சலு­கைகள் எமக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. ஓய்­வூ­தியம், மருத்­துவ கொடுப்­ப­னவு, ஊழியர் சேம­லா­ப­நிதி போன்­றவை எமக்கு இல்லை. காரணம் நாங்கள் தற்­கா­லிக வாய்ப்­பி­னையே பெற்­றி­ருக்­கின்றோம். 

அதனை விடவும் ஆகக்­கூ­டு­த­லாக எமக்கு 20நாட்­களே வேலை செய்­வ­தற்­கு­ரிய வாய்ப்­புக்கள் அண்­மைக்­கா­ல­மாக கிடைக்­கின்­றன. எஞ்­சிய பத்து நாட்கள் பணி­யாற்­று­வ­தற்­காக எமக்கு தோட்­டத்­துக்கு வெளியில் யாரும் வாய்ப்­பினை வழங்க மாட்­டார்கள். 

இவ்­வாறு இரு­பது நாட்கள் பணி­யாற்­றினால் நாம் எட்­டா­யிரம் ரூபா பணத்­தினை பெற்­றுக்­கொள்வோம். அதில் ஆறுபேர் வாழ்க்கை நடத்த வேண்டும். அதனை விடவும் எல்.ஐ.சி (காப்­பு­றுதி), பஞ்­சா­யத்து வரி, கேரள மாநில காப்­பு­றுதி, அட்வான்ஸ் (முற்­பணம் பெற்­றி­ருந்தால் அத்­தொகை) 50 அல­கு­க­ளுக்கு மேலே மின்­சாரம் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் அதற்­கான கட்­டணம் இப்­படி எல்­லா­வற்­றையும் செலுத்­தினால் மேல­திக வேலைக்­கொ­டுப்­ப­ன­வுடன் சேர்த்து ஆகக்­கூ­டி­யது 7ஆயிரம் ரூபா மட்­டுமே பெற்­றுக்­கொள்ள முடி­கின்­றது. 

இத­னை­வைத்து நான்கு பேரின் மூன்று வேளை உணவு, பிள்­ளை­களின் படிப்புச் செல­வு­களை எப்­படி நிறைவு செய்­து­கொள்ள முடியும்? அண்­மைய காலங்­களில் மேல­திக வேலை நேரத்­தி­னையும் குறைத்து விட்­டார்கள். இறப்­ப­ருக்­கான விலை வீழ்ச்­சியால் இல­ாப­மில்லை என்­பதால் அவ்­வாறு செய்­துள்­ள­தாக கூறு­கின்­றார்கள். 

நாங்கள் இப்­ப­டித்தான் எமது வாழ்க்­கையை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். எமது பிள்­ளை­க­ளுக்கு இதனை விடவும் நிலைமை மோச­மாக இருக்கும் என்று அச்­சப்­ப­டு­கின்றோம்.அவர்கள் இவ்­வாறு தோட்­டங்­களில் கஷ்­டப்­ப­டக்­கூ­டாது என்று சிந்­திக்­கின்றோம்.

நாங்கள் பணி செய்­வது அர­சாங்க தோட்­டங்களில். குறிப்­பாக நாமி­ருக்கும் தோட்­டத்தில் மேற்­பார்­வை­யாளர் உள்­ளிட்ட ஏனைய ஊழி­யர்கள் என 200 பேர் வரையில் வேலை செய்­கின்­றார்கள்.அவர்கள் அனை­வ­ருக்கும் அர­சாங்க சம்­ப­ளமே கொடுக்­கப்­ப­டு­கின்­றது. எம்மில் அதற்கு பொருத்­த­மா­ன­வர்கள் இருந்­தாலும் மலை­யா­ளத்­தி­ன­ருக்கே அவ்­வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று குறிப்­பிட்டார். 

அவ­ரை­ய­டுத்து மற்­றொரு குடும்­பஸ்­த­ரான எஸ்.ஸ்ரீதரன் என்­பவர் கூறு­கையில், நானும் இந்த தோட்­டத்தில் தான் வேலை செய்­கின்றேன். எங்­க­ளது பெற்­றோரின் வேலை­களைத் தான் எமக்கு கொடுத்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் அவர்­க­ளுக்கு வழங்­கிய நலன்­களை எங்­க­ளுக்கு வழங்க மறுக்­கின்­றார்கள்.  அதற்­கான விளக்­கத்­தினை கேட்டால் நாங்கள் கேர­ளாவில் பிறந்­த­வர்கள் என்று கூறு­கின்­றார்கள். ஆனால் எங்­களை இன்­னமும் சிலோன்­க­ாரர்கள் என்றே அழைக்­கின்­றார்கள். எங்­க­ளு­டைய சொந்­தங்கள் இன்­னமும் அங்­குள்­ளன. நாங்கள் இந்­திய பிர­ஜா­வு­ரி­மையைப் பெற்­றி­ருக்­கின்­றோமே தவிர எங்­க­ளுக்கு இந்த மாநி­லத்­த­வ­ருக்கு வழங்கும் எந்­த­வி­த­மான சலு­கை­களும் கிடைப்­ப­தில்லை. இரண்டாம் தர பிர­ஜைகள் போன்று தான் இங்கு இருக்­கின்றோம். 

சம்­ப­ளப்­பி­ரச்­சினை, வீட்­டுப்­பி­ரச்­சினை என்று பல பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு இத்­தனை காலங்­க­ளையும் கடந்து வந்­தி­ருக்­கின்றோம். இவற்றை எல்லாம் விடவும் நாங்கள் அன்­றாட தேவை­யான தண்­ணீரை பெறு­வ­தற்கு கூட பெரும் சிக்­கலை எதிர்­நோக்­குகின்றோம். தோட்­டத்தின் கீழ் பகு­தியில் உள்ள கிணற்­றி­லி­ருந்து தான் தண்ணீர் மேலே உள்ள லயன்­க­ளுக்கு அனுப்பப்படு­கின்­றது. அதனால் சுழற்சி முறையில் தான் தண்ணீர் வழங்­கப்­ப­டு­கின்­றது. ஒன்­று­விட்ட நாளுக்கு ஒரு தடவை தான் ஒவ்­வொரு லயன் தொகு­தி­க­ளுக்கும் தண்ணீர் கிடைக்­கின்­றது. தண்ணீர் திறந்து விடப்­படும் குறிப்­பிட்ட நேரத்தில் நாம்குளிப்­ப­தி­லி­ருந்து குடிப்­ப­தற்கு வரையில் அவற்றை குடங்களில் பாத்திரங்களில் பிடித்து சேகரிப்போம். 

பின்னர் ஒருநாள் விட்டு அதற்கு அடுத்த நாள் தண்ணீர் திறந்து விடப்

படும் போதே எம்மால் தண்ணீரைப் பெற்றுக்

கொள்ளமுடியும். திடீரென தண்ணீர் தீர்ந்து விட்டால் கூட எமக்கு மாற்று வழி எதுவும் கிடையாது. எமது தோட்டத்தில் மழைநீர் சேகரிப்புக்காக ஒரு தாங்கி கட்டப்பட்டுள்ளபோதும் அதனை பராமரிப்பது இல்லை. 

இதனால் தான் தண்ணீருக்கு கூட நாங்கள் தவமிருக்க வேண்டிய நிலைமையில் இருக்

கின்றோம். இவ்வாறு தான் நாம் ஒவ்வொரு பொழுதையும் கழிக்கின்றோம். இது தொடர்

பில் யாரிடம் பேசுவது? எமது விடயங்களை கையாளும் அலுவலகங்கள், அதிகாரிகள் இருந்தும் கூட அவர்கள் அக்கறை கொண்டிருக்கின்றார்களா? இல்லை. திருவனந்தபுரத்துடன் (கேரளாவின் தலைநகர்) திருப்பி அனுப்பப் படுகின்றார்களா? என்பது கூட எமக்கு தெரியாது என்றார். 

தொடரும்  

http://www.virakesari.lk/article/31681

  • தொடங்கியவர்

நாங்கள் நாதியற்றவர்கள்! பாகம்-04

 

 
 

அங்­குள்ள மக்­களின் மனக்­கி­டைக்கைகள் அவ்­வாறு அமைந்­தி­ருக்­கையில் குழத்­துப்­புலா இறப்பர் தோட்­டத்தின் முதலாம் பிரி­வுக்­காக உதவி முகா­மை­யாளர் அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அலு­வ­ல­கத்தில் மேற்­பார்­வை­யாளர் பி.கே.குரியன் சில கருத்­துக்­களை முன்­வைக்­க­லானார். அவர் குறிப்­பி­டு­கையில், கேரள மாநில அர­சாங்கம் மற்றும் கேரள வனத்­துறை திணைக்­களம் ஆகி­யன இணைந்து மறு­வாழ்வு தோட்­டங்­களை பரா­ம­ரித்து வரு­கின்­றன. இந்­திய –  இலங்கை பிர­த­மர்­க­ளுக்கு இடையில் 1964 ஆம் ஆண்டு கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தத்­தினை அடுத்து 1972 ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக அய்­ர­நல்­லூரில் மறு­வாழ்வு தோட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. அத­னை­ய­டுத்து 1973ஆம் ஆண்டு குழத்­துப்­புலா மறு­வாழ்வு தோட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. 

New_Layout.jpg

தற்­போது கேரள மாநி­லத்தின் தொழில்­லாளர் மற்றும் திறன்­துறை திணைக்­க­ளத்தின் கீழ் மறு­வாழ்வு தோட்­டங்கள் நிரு­வ­கிக்­கப்­பட்டு  வரு­கின்­றன. குழத்­துப்­புலா, அய்­ர­ நல்லூர், புணலூர், கூவக்­காடு உள்­ளிட்ட மறு­வாழ்வு தோட்­டங்­களின் நிரு­வாக இயக்­கு­ந­ராக கே.கார்த்­தி­கேயன் (ஐ.எப்.எஸ்) இருக்­கின்றார். குழத்­துப்­புலா மற்றும் புணலூர் ஆகிய மறு­வாழ்வு தோட்­டங்­களின் முகா­மை­யா­ள­ராக ஜெயப்­பி­ரகாஷ் காணப்­ப­டு­கின்றார். மேலும் நிரு­வாக செயற்­பாட்­டுக்­காக முதலாம் பிரிவு உதவி முகா­மை­யாளர் அலு­வ­ல­கமா­னது காணப்­ப­டு­கின்­றது. 

நான் இந்த அலு­வ­ல­கத்தில் மேற்­ப­ார்­வை­யா­ள­ராக கடந்த 35ஆண்­டு­க­ளாக பணி­யாற்­றி ­கொண்­டி­ருக்­கின்றேன். இந்த அலு­வ­ல­கமே குழத்­துப்­புலா மற்றும் புணலூர் ஆகிய தோட்­டங்­களின் நிரு­வா­கங்­களை முன்­னெ­டுக்­கின்­றது. எனது சேவைக் ­கா­லத்தின் இடையில் மூன்று முதல் நான்கு ஆண்­டுகள் மட்­டுமே பணி­யாற்ற முடி­யாது போயுள்­ளது. குழத்­துப்­புலா மறு­வாழ்வு தோட்­டத்தில் ஆரம்­பத்தில் 675குடும்­பங்­களும் பின்னர் 25 குடும்­பங்­களும் குடி­ய­மர்த்­தப்­பட்­டன.

குழத்­துப்­புலா தோட்­ட­மா­னது 2070ஹெக்­டெயர் பரப்­ப­ளவு கொண்­ட­தாக உள்­ளது. இந்த தோட்­டத்தில் 1400தொழி­லா­ளர்கள் பணி­யாற்­று­கின்­றார்கள். இதில் 700பேருக்கும் மேற்­பட்­ட­வர்கள் இலங்­கை­யி­லி­ருந்து வந்­த­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். இயன்­ற­ வ­ரையில் இந்த தோட்­டத்தில் அந்த மக்­க­ளுக்­காக வேலை­வாய்ப்­புகளை வழங்கி வரு­கின்றோம். 

இந்த மக்­க­ளுக்­கான குவாட்டர்ஸ் வச­தி­களை நாங்கள் இல­வ­ச­மாக வழங்­கி­யுள்ளோம். கல்வி கற்­ப­தற்­கான ஏற்­பா­டு­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. மின்­சாரம், குடிநீர் போன்­ற­வையும் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இதனை விடவும் அவர்­க­ளுக்கு முற்­பணம் வழங்­கு­வ­தற்­கான வச­திகள், மேல­திக வேலை நேர கொடுப்­ப­ன­வுகள் ஆகி­ய­வையும் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று குறிப்­பிட்டார். 

இச்­ச­ம­யத்தில் நீண்­ட­கா­ல­மாக இந்த மக்கள் நீங்கள் கூறும் குவாட்­டர்­ஸினுள் நெருக்­க­டி­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்­றார்கள் அல்­லவா? அதற்கு மாற்று நட­வ­டிக்­கை­களை ஏன் எடுக்க முடி­யா­துள்­ளது என்று கேட்­ட­போது, அவர்­களின் வாழ்க்கை நிலை தரம் குறை­வா­கவே உள்­ளது. அதனை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த ஐந்­தாறு வரு­டங்­க­ளாக படிப்­ப­டி­யாக தனி­வீ­டு­களை அமைக்கும் திட்டம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது என குறிப்­பிட்­ட­தோடு குறித்த 1ஏ லய­னுக்கு செல்லும் வழியில் அமைக்­கப்­பட்­டுள்ள இரண்டு புதிய வீடு­க­ளையும் சுட்­டிக்­காட்­டினார். 

அதே­நேரம் இந்த இறப்பர் தோட்டம் ஒரு­கா­லத்தில் 24கோடி­ரூபா வரு­மானம் ஈட்­டி­யி­ருக்­கின்­ற­ போது அண்­மைக்­கா­ல­மாக உல­க­ சந்­தையில் ஏற்­பட்­டுள்ள இறப்­ப­ருக்­கான வீழ்ச்­சி­யா­னது அங்கும் எதி­ரொ­லிப்­ப­தா­கவும் அந்த மேற்­பார்­வை­யாளர் மேலும் குறிப்­பிட்டார்.

சம்­பள நிர்­ணய சிக்கல்

ஆண்­டாண்டு தோறும் இலங்கைத் தோட்­டத் ­தொ­ழி­லா­ளர்­களின் வயிற்றில் புளி­யை க­ரைக்கும் சம்­ப­வ­மாக தொடர்ந்து கொண்­டி­ருக்கும் சம்­ப­ள ­நிர்­ணயம் போன்ற அவர்­களின் உற­வு­க­ளாக இருக்கும் இந்த மக்­களும் ஆண்­டாண்டு தோறும் சம்­பள நிர்­ண­யத்­தினை இல­வு­காத்த கிளிகள் போன்று எதிர்­பார்த்­து கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

இவர்கள் அர­சாங்­கத்தின் நிரு­வா­கத்­திற்­குட்­பட்ட தோட்­டங்­களில் பணி­யாற்­றி­னாலும் மாநில அல்­லது மத்­திய அர­சாங்­கங்கள் இவர்­களின் சம்­ப­ளத்­தினை நிர்­ண­யிக்க முடி­யா­துள்­ளது. இந்த மாநி­லங்­களில் உள்ள அரச மற்றும் தனியார் தோட்­டங்­களின் சங்­கங்களை சேர்ந்த பிர­தி­நி­திகள் கூடியே நாளொன்­றுக்­கான சம்­ப­ளத்­தினை தீர்­மா­னிப்­ப­வர்­க­ளாக இருக்­கின்றார். ஆகவே நியா­ய­மான சம்­ப­ளத்­தினை எதிர்­பார்த்­தி­ருக்கும் இந்த மக்­க­ளுக்கு எதிர்­பார்ப்பு பெரி­ய­ளவில் நிறை­வே­றி­யது கிடை­யாது. ஆண்டு தோறும் சம்­பள நிர்­ணயம் அதி­க­ரிக்­கப்­ப­டா­மைக்கு இங்­குள்ள சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்கள் பந்து பரி­மாற்றம் போன்று பரஸ்­பர கருத்­துக்­களை கூறி தப்பி பிழைத்­து ­கொள்­கின்­றன. 

நாடற்­ற­வர்­க­ளுக்கு உரித்­துடன் வாழ்­வ­ளித்த மறு­வாழ்­வ­ளிக்கும் தோட்­டங்கள் என்று கூறப்­பட்­டாலும் நாற்­பது ஆண்­டு­க­ளுக்கு மேலாக இவர்­களின் அன்­றாட வாழ்வு தத்­த­ளித்­து ­கொண்டு தான் செல்­கின்­றது. 

கேள்­விக்­கு­றி­யான சம­உ­ரிமை?

தோட்­டங்­களில் கட­மை­யாற்­று­வ­தற்­காக பார­தத்தின் பல­பா­கங்­க­ளி­லி­ருந்து இலங்­கையின் பிரித்­தா­னி­யர்­களால் மலை­ய­கத்­திற்கு அழைத்து வரப்­பட்­டார்கள். தோட்­ட­ வே­லை­யா­ளர்கள் என்ற பெயரில் அவர்­களின் முதுகில் அடிமை சாசனம் எழு­தப்­பட்­டது. அவர்­களின் வரு­கை­யினை அடுத்து மக்கள் தொகை கணிப்­பிடப்பட்டது. சிங்­கள தேசிய இன­வாத சக்­திகள். 11.7 சத­வீ­த­மாக இருக்கும் இத்­தொ­கை­யினர் தொடர்ந்தும் இலங்கை ­தீவில் இருந்தால் நாள­டைவில் நாம் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் என்று மார்பு தட்டும் கோட்­பாட்­டுக்கு ஆப்பு வைத்து விடும் என்ற அச்­சத்தின் கார­ண­மாக சிங்­கள தேசிய இன­வாத சக்­திகள் ஓர­ணியில் திரண்டு பிர­ஜா­வு­ரிமை சட்­டத்­தினை திட்­ட­மிட்டு நிறை­வேற்­றி­யது. இத­னை­ய­டுத்து இந்­தி­யப்­ பி­ர­தமர் நேருவும், இலங்கைப் பிர­தமர் கொத்­த­லா­வ­லவும் இப்­பி­ரச்­சி­னையை யதார்த்த பூர்­வ­மாக கையா­ள­மு­யன்­றாலும் நேருவின் மறை­வுக்கு பின்னர் பிர­த­ம­ராக பத­வி­யேற்றார் லால்­ப­கதூர் சாஸ்­திரி. இலங்­கை­யிலும் அதி­கா­ரத்­தை தக்­க­ வைத்­து ­கொள்ள வேண்டும் என்ற முனைப்­பு­டனும் ஏற்­க­னவே திட்­ட­மிட்ட சிங்­கள தேசிய இன­வாத நிகழ்ச்சி நிரலை சாமர்த்­தி­ய­மாக நிறைவு செய்ய வேண்டும் என்ற அடிப்­ப­டை­யிலும் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க காய்­களை நகர்த்­தினார். 

முன்னாள் பிர­தமர் ஜவ­ஹர்லால் வகுத்த பஞ்­ச­சீ­ல ­கொள்­கையை தான் இரா­ஜ­தந்­தி­ர­மாக கடைப்­பி­டித்து இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை எட்­டு­வ­தாக பகதூர் பெரு­மிதம் கொண்ட அதே­ச­மயம் நாடற்­ற­வர்கள் பிரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைத்த தலைவர் என்ற பெயர் தனக்கு கிடைக்­கின்­றது என்று ஸ்ரீமாவோ பெருமை கொண்டார். இதனை தவிர உணர்­வு­ பூர்­வ­மான விட­ய­மொன்றை அவ்­வி­த­மா­கவே அல்­லது சட்­ட­ரீ­தி­யா­கவோ கையா­ளத் ­தெ­ரி­யாது இரண்டு அர­சாங்­கங்கள் தன்­னிச்­சை­யாக மேற்­கொண்ட ஒப்­பந்­தத்­திற்கு உலக அரங்கில் மகத்­தான ஒப்­பந்தம் என்று விளம்­ப­ரப்­ப­டுத்­தலும் வேறு இடம்­பெற்­றது. 

ஆனால் தந்தை, தாயார் இங்கும் பிள்­ளைகள் அங்­கு­மா­கவும் சகோ­தரங்­களில் ஒரு சில அங்கும் எஞ்­சி­யவை இங்­கு­மா­கவும் உற­வுகள் பிரி­கின்­ற­னவே. ஒரு சமூகம் கூறு­போ­டப்­ப­டு­கின்­றதே என்ற அடிப்­படை மனி­தா­பி­மான சிந்­த­னை­யற்ற நிலையில் தான் அந்த ஒப்­பந்­தத்­தினை முழு­மை­யற்ற வகையில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார்கள்.  அன்று அந்த ஒப்­பந்­தத்­திற்கு ஆராத்தி எடுத்து புகழ் ­மாலை சூடி­யி­ருக்­கலாம். ஆனால் தற்­போது என்ன நடந்­தி­ருக்­கின்­றது. பாரத மண்­ணிலே பிறந்த சமூகம் கொத்­த­டி­மை­க­ளாக மலை­ய­கத்­திற்கு கொண்­டு ­வ­ரப்­பட்டு பின்னர் கூறு­போ­டப்­பட்டு அதே அடி­மை­சா­சன வரைய­றையை தாண்­டாது அல்­லவா அமர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் இந்­தி­யாவில் இருந்து வந்த இந்­திய தமி­ழர்கள் அல்­லது தோட்டத் தொழி­லா­ளர்கள் என்ற முத்­தி­ரை­யு­டனும் இந்­தி­யாவில் இலங்­கையில் இருந்து வந்த தோட்டத் தொழி­லா­ளர்கள் அல்­லது சிலோன் காரர்கள் என்ற முத்­தி­ரை­யு­ட­னுமே இரண்டு மூன்று பரம்­பரை கடந்தும் அழைக்­கப்­ப­டு­கின்­றார்கள். பார்க்­கப்­ப­டு­கின்­றார்கள்.  ஆனால் இவர்­க­ளுக்கு இரு நாடு­க­ளிலும் கிடைத்­தது பிர­ஜா­வு­ரிமை மட்­டுமே தவிர.  அந்­தந்த நாடு­களின் தேசிய இனங்­க­ளுக்­கான சம­உ­ரிமை அல்ல. இந்த சமூகத்­திற்கு அந்தந்த நாடு­களின் பிர­ஜை­க­ளுக்­கான சம உரிமை கிட்டும் என்­பது கூட குதி­ரைக்­கொம்­பான விடயம் தான்.  இந்­தி­யாவில் இருக்கும் சிலோன்­காரர்கள் என்ற முத்­திரை உடை­ய­வர்­களுக்­காக பல குரல்கள் தமி­ழ­கத்தில் எழுந்­தி­ருக்­கின்­றன. ஆனால் கேர­ளாவில் உள்ள இந்த மக்கள் தொடர்பில் பெரி­தாக பேசப்­ப­டு­வ­தில்லை. இவ்­வாறு குர­லற்­ற­வர்­க­ளாக இருப்­ப­வர்­க­ளுக்கு குர­லெ­ழுப்­ப­போ­வது யார் என்­பது பிர­தான கேள்­வி­யா­க­வுள்­ளது.  

கவ­னத்தில் கொள்­வார்­களா?

அதே­நேரம் கடந்த ஆண்டு 14ஆவது சர்­வ­தேச வெசாக்  தினத்­தினை முன்­னிட்டு இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, தனது நாட்டு சொந்­தங்கள் வாழும் மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்து அட்டன்  டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சா­லையை திறந்து வைத்­த­தோடு நோர்வூட் டன்பார் விளை­யாட்டு மைத­னத்தில் உரை­யாற்­றினார். 

இதன்­போது, மலையக மக்­க­ளுக்­காக ஏற்­க­னவே 4ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்டம் அமுலில் இருக்­கின்­றது. இதற்கு மேல­தி­க­மாக 10ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்கு இந்­தியா உத­வி­ய­ளிக்­க­வுள்­ள­தா­கவும் அம்­புலன்ஸ் சேவை உள்­ளிட்ட இதர அடிப்­படை சேவை­க­ளுக்கு உத­வ­வுள்­ள­தா­கவும் அறி­வித்­தி­ருந்தார். 

இது மலை­யக சொந்­தங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யான செய்­தி தான். வர­வேற்­கத்­தக்­க­து­மான விட­யமும் தான். ஆனால் அவ­ரு­டைய அதி­கார எல்­லைக்குள் தற்­போது வரையில் நாதி­யற்று ஒரு சமூகம் வாழ்ந்து வரு­கின்­றது என்­பது இந்த நொடி வரையில் அவ­ரு­டைய புல­னுக்கு ஏன் எட்­ட­வில்லை. கேரள மறு­சீ­ர­மைப்பு தோட்ட மக்­களின் பிரச்­சினை மத்­திய மாநில அர­சு­க­ளுக்­கி­டை­யி­லான பந்­து­வி­ளை­யாட்­டாக இருக்­கின்­றது என்­ப­தை­யா­வது பிர­தமர் நரேந்­திர மோடி உணர்ந்து கொள்­வாரா? அவ்­வாறு உணர்ந்தால் அவர் எவ்­வா­றான நட­வ­டிக்கை எடுப்பார்?

2025இற்குள் பாரத மண்ணில் காணி உரிமை அற்­ற­வர்கள் என்ற எவரும் இருக்­க ­மாட் ­டார்கள் என்று பிர­தமர் மோடி பல­மாக அறி­வித்­தாலும் அது சாத்­தி­ய­மா­குமா? பிர­தமர் மோடியின் கவர்ச்­சி­யான காணி உரிமை அறி­விப்பு அடுத்த பொதுத்தேர்தலை மையமாக வைத்தது என்பது மக்கள் மனதில் மையம் கொள்ளும் காரணமாகாதா?

இதனை விடவும் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் கொடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தன்போது மாநில ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அக்கட்சியின் பினராயி விஜயன் கேரள மாநில முதலமைச்சராக உள்ளார். சமத்துவ கொள்கையை சுமந்து நிற்கும் இவர்களின் ஆட்சியில் கூட இந்த மக்களுக்கான உண்மையான மறுவாழ்வு கிடைக்காதா? இவ்வாறு கேள்விகள் நீண்டு கொண்டுள்ளன. இதற்கும் அப்பால் இந்திய இலங்கையில் மலையகத்தில் வாழும் மக்களுக்காக குரல்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான தரப்பினரும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தரப்பினரும் இந்திய அரசியல் தரப்புக்களுடன் பல்வேறு பட்ட நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கின்றார்கள். இவர்களை விட ஏனைய மலையக அரசியல் தரப்பினரும், சிவில் சமூகத்தினரும், புத்திஜீவிகளும் கூட இந்திய தரப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றார்கள். 

அங்குள்ள மக்களின் சொந்தங்களே கேரள தோட்டங்களிலும் அடிமைச் சாசனம் எழுதப்பட்ட சமூகமாக இந்த நொடிவரையில் பரிதவித்து வருகின்றன என்பதை உணர்ந்து கொண்டு நட்புறவைப் பயன்படுத்தி காய்களை நகர்த்தி கருமங்களை முன்னெடுப்பார்களா?                                             முற்றும்

http://www.virakesari.lk/article/31886

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.