Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வைத்தருமா காணாமல் போனோர் பணியகம்?

Featured Replies

தீர்வைத்தருமா காணாமல் போனோர் பணியகம்?

aaaa-ab7e7a70cc89bb0d37db4d531d053ab4faa54c60.jpg

 

ஜெனீ­வாவில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் ஆரம்­பித்து இரண்டு நாட்கள் கழித்து, காணாமல் போனோர் பணி­ய­கத்தின் தலைவர் மற்றும் உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிய­ம­னங்­களை வழங்­கி­யி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

காணாமல் போனோர் பணி­ய­கத்தின் தலை­வ­ராக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இந்த பணி­ய­கத்தின் உறுப்­பி­னர்­க­ளாக, ஜெய­தீபா புண்­ணி­ய­மூர்த்தி, கண­ப­திப்­பிள்ளை வேந்தன், மிராக் ரகீம்,மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்­ரோனெட் பீரிஸ், கலா­நிதி சிறி­யானி நிமல்கா பெர்­னாண்டோ, சும­ண­சிறி லிய­னகே, ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

காணாமல் ஆக்­கப்­பட்டோர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான பொறி­மு­றை­யாக இந்தப் பணி­யகம் முன்­மொ­ழி­யப்­பட்­டது. 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், காணாமல் போனோர் பணி­யக சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட போது, அதனை உரு­வாக்கும் செயற்­பா­டு­களில் நீண்ட இழு­ப­றிகள் காணப்­பட்டு வந்­தன.

2017 செப்­டெம்பர் மாதமே, இந்த காணாமல் போனோர் பணி­ய­கத்தை உரு­வாக்கும் வர்த்­த­மானி அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது. அதற்குப் பின்னர், மீண்டும் இழு­ப­றிகள் நீடித்து, இதன் உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டன.

அந்த விண்­ணப்­பங்­களைப் பரி­சீ­லனை செய்த அர­சி­ய­ல­மைப்பு சபை, ஏழு பேரின் பெயர்­களை ஜனா­தி­ப­திக்குப் பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. கடந்த ஜன­வரி 15ஆம் திகதி அர­சி­ய­ல­மைப்பு சபை­யினால், உறுப்­பி­னர்­களின் பெயர்கள் முன்­மொ­ழி­யப்­பட்ட போதிலும், கிட்­டத்­தட்ட ஒன்­றரை மாதங்கள் கழித்தே, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பணி­ய­கத்தின் உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிய­ம­னங்­களை வழங்­கி­யி­ருக்­கிறார்.

போர்க்­கா­லத்தில் இடம்­பெற்ற மீறல்­க­ளுக்குப் பொறுப்புக் கூறு­கின்ற வகை­யி­லான முத­லா­வது நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றை­யாக, காணாமல் போனோ­ருக்­கான பணி­யகம் அமைந்­துள்­ளது.

இதனை உரு­வாக்­கு­வ­தற்குள், இதற்­கான உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்து நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்குள் நீண்ட இழு­ப­றி­களைச் சந்­திக்க வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது.

காணாமல் போனோர் பணி­யகம் உரு­வாக்­கப்­ப­டு­வதை மஹிந்த ராஜபக் ஷ தரப்பு விரும்­ப­வில்லை. பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் உள்­ள­வர்­க­ளுக்கு இது அச்­சத்­துக்­கு­ரிய ஒன்­றா­கவே இருக்­கி­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட, இதனை முழு­ம­ன­துடன் ஆத­ரிக்­கி­றாரா என்ற சந்­தே­கங்கள் உள்­ளன.

ஏனென்றால், இந்தப் பணி­ய­கத்தின் உறுப்­பி­னர்­க­ளுக்­கான பெயர்­களைப் பரிந்­து­ரைத்து, ஒன்­றரை மாதம் கழித்தே, அவர்­க­ளுக்கு ஜனா­தி­பதி நிய­ம­னங்­களை வழங்­கி­யி­ருக்­கிறார்.

நிய­மனம் வழங்கும் நிகழ்வு தொடர்­பான எந்த ஒளிப்­ப­டமும், ஊட­கங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. ஜனா­தி­ப­தியின் எல்லா நிகழ்­வுகள் குறித்த ஒளிப்­ப­டங்­களும், அவ­ரது சமூக வலைத்­தளப் பக்­கங்­களில் பதி­வேற்­றப்­ப­டு­வதும், ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவின் இணை­யத்தில் வெளி­யி­டப்­ப­டு­வதும் வழக்கம். ஆனால், காணாமல் போனோர் பணி­ய­கத்தின் உறுப்­பி­னர்­க­ளுக்கு நிய­மனம் வழங்­கிய நிகழ்வு தொடர்­பான ஒளிப்­ப­டங்கள் ஒன்று கூட வெளி­யி­டப்­ப­ட­வில்லை. ஜனா­தி­ப­தியின் ஊட­கப்­பி­ரிவு டுவிட்­டரில் மாத்­திரம், அந்தச் செய்தி, ஒரு நாள் கழித்தே வெளி­யி­டப்­பட்­டது. எனினும் படங்கள் ஏதும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­ப­தியின் சமூக வலைத்­த­ளங்­க­ளிலோ, ஊடகப் பிரிவின் அதி­கா­ர­பூர்வ இணை­யத்­த­ளத்­திலோ இந்தச் செய்தி வெள்­ளிக்­கி­ழமை காலை வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. பணி­ய­கத்தின் உறுப்­பி­னர்கள் நிய­ம­னத்தில் ஜனா­தி­ப­திக்கு ஏற்­க­னவே அதி­ருப்­திகள் இருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. குறிப்­பாக, மனித உரிமை செயற்­பாட்­டாளர் நிமல்கா பெர்­னாண்டோ விட­யத்தில் அவர் கடும் நிலைப்­பாட்டில் இருந்தார் என்றும் கூறப்­பட்­டது.

நிமல்கா பெர்­னாண்டோ ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் அமர்­வு­களில், இலங்கை அர­சுக்கு எதி­ரான, மனித உரிமை மீறல் சாட்­சி­யங்­க­ளையும், குற்­றச்­சாட்­டு­க­ளையும் முன்­னி­றுத்தி வந்­தவர். அவரை இந்தப் பணி­ய­கத்­துக்கு நிய­மிப்­பதை ஜனா­தி­பதி விரும்­ப­வில்லை.

இதனால் தான் நீண்ட இழு­ப­றிகள் ஏற்­பட்­ட­தா­கவும் சொல்­லப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும், அர­சி­ய­ல­மைப்பு சபை முன்­மொ­ழிந்­த­வர்­களின் பெயர்­களை ஜனா­தி­பதி வேறு­வ­ழி­யின்றி ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இவர்­க­ளுக்கு மூன்று ஆண்­டுகள் பணி­யாற்றும் வகையில் நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இது, பொறுப்­புக்­கூறல் கடப்­பாட்டை நிறை­வேற்­று­கின்ற அர­சாங்­கத்தின் ஒரு நட­வ­டிக்கை என்று கருத முடி­யாது. ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் வரும் நாட்­களில் சில கணக்­கு­களைக் காட்ட வேண்­டிய தேவை அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றது.

பொறுப்­புக்­கூறல் கடப்­பா­டு­களை நிறை­வேற்ற இலங்கை அர­சாங்­கத்­துக்கு, கடந்த ஆண்டு ஜெனீ­வாவில், இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் கொடுக்­கப்­பட்­டது. அதில் ஓர் ஆண்டு முடி­வ­டைந்து விட்­டது. 

வடக்கில் போராட்­டங்­களில் ஈடு­படும் காணாமல் போனோரின் உற­வுகள் இந்தப் பணி­ய­கத்தை நிரா­க­ரித்­தி­ருந்­தார்கள்.

எனினும், இதன் செயற்­திறன் தொடர்­பான முழு­மை­யான விளக்கம் அவர்­க­ளுக்குத் தெரிந்­தி­ருக்­குமா என்­பது சந்­தேகம் தான். அதற்­காக, இந்த காணாமல் போனோ­ருக்­கான பணி­யகம், இந்தப் பிரச்­சி­னைக்கு முழு அளவில் தீர்வைத் தரும் ஒன்­றாக இருக்கும் என்று யாரும் நம்பி விட முடி­யாது.

பணி­ய­கத்தின் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் மேஜர் ஜெனரல் மொஹன்டி பீரிஸும் ஒருவர். இவர் இரா­ணு­வத்தின் சட்டப் பிரிவின் பணிப்­பா­ள­ராக பதவி வகித்­தவர். இவ­ரது கணவர் பசில் பீரிஸும் இரா­ணு­வத்தில் மேஜர் ஜென­ர­லாகப் பதவி வகித்­தவர் தான்.

இரா­ணு­வத்தின் சட்டப் பிரி­வுக்குப் பணிப்­பா­ள­ராக இருந்த மேஜர் ஜெனரல் மொஹன்டி பீரிஸ், காணாமல் போனோ­ருக்­கான பணி­ய­கத்தின் உறுப்­பி­ன­ரா­கவும் பணி­யாற்றப் போகிறார். இது ஒரு சிக்­க­லான விடயம்.

இரா­ணு­வத்தில் இருந்­த­போது, அவர் இரா­ணு­வத்­தினர் போர் விதி மீறல்கள் எதிலும் ஈடு­ப­ட­வில்லை என்று வாதிட்டு வந்­தவர். இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை சட்ட ரீதி­யாக முறி­ய­டிப்­ப­தற்கு தலைமை தாங்­கி­யவர்.

2008ஆம் ஆண்டு இரா­ணு­வத்தின் மீது மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுகள் அமெ­ரிக்­கா­வினால் சுமத்­தப்­பட்ட போது, மனித உரிமை மீறல்­க­ளுக்கு நீதி வழங்கும் தமது அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்து அமெ­ரிக்க அர­சுக்கு விளக்­க­ம­ளிக்க இவ­ரையே மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் முன்­னி­றுத்­தி­யி­ருந்­தது. அதற்கு ஒரு காரணம் இவர் ஒரு தமிழர் என்­பதும் தான்.

2008ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி, அமெ­ரிக்கத் தூது­வ­ராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக், வொஷிங்­ட­னுக்கு அனுப்­பிய தகவல் குறிப்பில், கோத்­தா­பய ராஜபக் ஷவு­ட­னான சந்­திப்பு குறித்து கூறப்­பட்­டுள்­ளது.

விக்­கிலீக்ஸ் வெளி­யிட்ட இந்த இரா­ஜ­தந்­திரக் குறிப்பில், “தமி­ழரும், இரா­ணு­வத்தில் உள்ள பெண் உயர் அதி­கா­ரி­யு­மான இரா­ணுவ சட்­டப்­பி­ரிவு பணிப்­பாளர் மேஜர் ஜெனரல் மொஹன்டி பீரிஸ் வொஷிங்­ட­னுக்குப் பயணம் மேற்­கொண்டு, மனித உரி­மை­களை மீறு­வோரை நீதியின் முன் நிறுத்த இலங்கை அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்­டுள்ள முயற்­சிகள் குறித்து அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளுக்கு விளக்க நட­வ­டிக்கை எடுக்க முடி­யுமா என்று தம்­மிடம் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ கேட்­ட­தாக, ரொபேர்ட் ஓ பிளேக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அந்­த­ள­வுக்கு அவர் அர­ச­ப­டை­களின் மனித உரிமை மீறல்­களை நியா­யப்­ப­டுத்­து­ப­வ­ராக இருந்­தவர். அப்­ப­டிப்­பட்ட ஒருவர், பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னையை எப்­படி உணர்ந்து கொள்வார், கையா­ளுவார் என்ற கேள்­விகள் உள்­ளன.

பணி­ய­கத்தின் ஏழு உறுப்­பி­னர்­களில் ஒருவர் தான் இவர் என்­றாலும், ஒரு உறுப்­பினர் என்ற வகையில் பணி­ய­கத்தின் செயற்­பா­டு­களை அவரால் பாதிக்கச் செய்ய முடியும்.

அதே­வேளை, காணாமல் ஆக்­கப்­பட்ட பெரும்­பா­லான சம்­ப­வங்­க­ளுக்கு இரா­ணு­வத்­தி­னரோ அல்­லது சீரு­டை­யி­னரோ தான் பொறுப்பு என்று குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்ற நிலையில், அதே துறையில் பணி­யாற்­றிய ஒரு­வரைக் கொண்ட பணி­ய­கத்தின் மீது, பாதிக்­கப்­பட்­ட­வர்­களால் எவ்­வாறு நம்­பிக்கை வைக்க முடியும் என்ற கேள்­வியும் உள்­ளது.

மேஜர் ஜெனரல் மொஹன்டி பீரிஸ் இன்­னமும் இரா­ணுவ மனோ­நி­லையில் இருந்து கொண்டு இந்த விவ­கா­ரத்தை அணு­கு­ப­வ­ராக இருந்தால், காணாமல் போனோர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் பொறி­மு­றை­யாக இந்தப் பணி­யகம் அமைய முடி­யாது.

அதே­வேளை, காணாமல் போனோர் பணி­ய­கத்­துக்கு 1.3 பில்­லியன் ரூபாவை அர­சாங்கம் வர­வு­செ­லவுத் திட்­டத்தில் ஒதுக்­கி­யி­ருப்­பதை சாத­க­மான விட­ய­மா­கவே பார்க்க வேண்டும். இந்த நிதியை திரும்பிச் செல்ல விடாமல், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் அள­வுக்கு பணி­யகம் செயற்­ப­டவும் வேண்டும். ஒரு கையால் கொடுத்து மறுகையால் பிடுங்கிக் கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது.

காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வு காண்பது சுலபமான விடயமல்ல. இந்தச் சிக்கலான விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு இந்தப் பணியகம் தவறினால் இன்னொரு பொறிமுறை உருவாக்கப்படும் உடனடியான நடைமுறைச் சாத்தியங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, முடிந்தளவுக்கு இதன் ஊடாக தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது, இதன் உறுப்பினர்களின் பணியாக இருக்க வேண்டும். அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களும் முற்தீர்மானங்கள், தவறான வழிநடத்தல்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இந்தப் பணியகத்தின் ஊடாக முடிந்தளவுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இந்தப் பணியகம் முற்றிலும் சுதந்திரமான- நம்பகமான ஒன்றாக இருக்குமா என்பதற்கு யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. அது காலப்போக்கில் தான் தெரியவரும்.

அதற்காக, இந்தப் பணியகத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணிக்க முயன்றால், பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முனைபவர்களுக்கு அது வாய்ப்பாக அமைந்து விடும் என்பதையும் மறந்து விட முடியாது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.