Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

ஊடகவியலாளர் பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மவ்பிம பத்திரிகையின் ஊடகவியலாளர் முனிசாமி பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரமேஸ்வரி தாக்கதல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த சட்டமா அதிபர் குழு, பரமேஸ்வரி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சியங்கள் இல்லாததைக் கருத்திற்கொண்டே, பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி கூறி தீர்ப்பளித்தது.

பரமேஸ்வரி நேற்றைய தினம் விடுதலை செய்யப்படவிருந்தபோதிலும், ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தைச் சூழ நிரம்பியிருந்தமையினால், பொலிஸார் அவரை நீதிமன்றுக்கு அழைத்து வரவில்லை.எனவே, ஊடகவியலாளர் பரமேஸ்வரி இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டு விடுதலை செய்யப்படுவார் என தெரியவருகிறது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் பரமேஸ்வரி விடுதலையானார்.

- பண்டார வன்னியன் Thursday, 22 March 2007 12:51

கடந்த மூன்று மாதங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரி இன்று வியாழன் காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் தீர்மானத்தையடுத்து நேற்று பிற்பகல் பரமேஸ்வரி கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார் என எதிர்ப்பாக்கப்பட்டபோதும் நேற்று மாலை வரை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை இந்நிலையில் ஊடகவியலாளர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பரமேஸ்வரியை சக ஊடகவியலாளர்கள் பேனாவினால் மாலை அணிவித்து பலர் செண்டு கொடுத்தும் வரவேற்றனர்..

இதன்போது சுதந்திர ஊடக தலைவர் ஆனந்த தேசப்பிரிய மற்றும் ஊடகவியாலாளர்களும் பிரசன்னமாயிருந்தனர்.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகையாளர் பரமேஸ்வரி பாராட்டப்;படவேண்டியவர்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 23 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

சிங்களப் பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளர் பரமேஸ்வரி பாராட்டப்படவேண்டியவர். இலங்கையில் பல பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்கள். சில தமிழ் ஊடகத்துறையினர் கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனா.; ஆனால் விடுதலை செய்யப்பட்ட எந்த ஒரு தமிழப்; பத்திரிகையாளரும் தம்மை இவர்கள்தான் கடத்தினார்கள் என்று பகிரங்கமாக சொல்வதற்கு திறணியற்ற நிலையிலையே உள்ளனர். ஆனால் பத்திரிகையாளர் பரமேஸ்வரி தன்னைக் கடத்தியது இலங்கை அரச விசேட அதிரடிப்படையினர் என்றும் தன்னைப் பழைய கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு அருகில் உள்ள 4 மாடிக் கட்டிடமான நாலாம்மாடியில் வைத்து இலங்கை அரசே விசாரித்ததாகவம் பகிரங்கமாக இன்;று தெரிவித்திருந்தார். இந்த விடயத்தில் பரமேஸ்வரி கடத்தபட்டு விடுதலையான ஊடகத்துறையினரிடையே மனோபலம்பொருந்திய ஒரு உண்மையை வெல்லும் பெண்ணாக முன்னிற்கின்றார்.

http://www.nitharsanam.com/?art=22426

220307parameswary03bg7.jpg

பரமேஸ்வரியை சக ஊடகவியலாளர்கள் பேனாவினால் மாலி அணிவிஹ்து பலர் செண்டு கொDஉத்தும் வரவேற்றனர்..

220307parameswary01vl0.jpg

இதன்போது சுதந்திர ஊடக தலைவர் ஆனந்த தேசப்பிரிய மற்றும் ஊடகவியாலாளர்களும் பிரசன்னமாயிருந்தனர்.

  • தொடங்கியவர்

பேனைக்கு ஓய்வு கொடுக்கமாட்டேன்'

[23 - March - 2007] [Font Size - A - A - A]

-த.தர்மேந்திரா-

தமிழ்ப் பெண் ஊடகவியலாளரும் மௌபிம பத்திரிகையாளருமான எம்.பரமேஸ்வரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசல வீரவர்தன பரமேஸ்வரியை நிரபராதியென விடுதலை செய்தார்.

பரமேஸ்வரி மீது புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணொருவருக்கு தங்குமிட வசதி கொடுத்து உதவி ஒத்தாசை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அவசர கால ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பரமேஸ்வரிக்கு எதிரான வழங்கு நடவடிக்கைகளை கைவிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கியதை அடுத்தே பரமேஸ்வரி சகல குற்றச் சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

மன்றில் ஆஜர்

ஊடகவியலாளர் பரமேஸ்வரி நேற்றுக் காலை 9 மணியளவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் பொலிஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மன்றில் ஆஜராக்கப்பட்டார். நீதிமன்ற அமர்வு 9.45 இற்கு ஆரம்பமானது. இவ்வழக்கை அவதானிப்பதற்கு சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், பரமேஷ்வரியின் பெற்றோர் மற்றும் நெருங்கிய சகாக்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் மன்றில் திரண்டிருந்தனர்.

புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ரணகல நீதிமன்ற பகுதியில் நேரில் பிரசன்னமாகி பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸாருக்கு நேரத்துக்கு நேரம் அறிவுறுத்தல்களை வழங்கிக் கொண்டிருந்தார்.

குண்டுப் புரளி

இதனிடையில் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்குள் குண்டொன்று வைக்கப்பட்டிருப்பதாக புரளியொன்று கிளப்பப்பட்டது. அதையடுத்து குண்டுகளை செயலிழக்க வைக்கும் பொலிஸார் உடனடியாக வந்து சோதனை நடத்திய போதும் குண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இக்குண்டுப் புரளியால் சில மணி நேரம் நீதிமன்ற கட்டிட தொகுதி மற்றும் வளாகங்களில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. சட்டத்தரணிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், ஊடகப் படப்பிடிப்பாளர்கள், நீதிமன்ற அலுவலர்கள், பொலிஸார் என்று பல தரப்பினரும் பரபரப்புடன் காணப்பட்டதுடன், வீதிப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அனுமதிக்கப்பட்டது.

பயங்கரவாத தடுப்புப் பிரிவை சேர்ந்த பொலிஸ் அத்தியட்சர் விஜேரட்ண தலைமையில் பொலிஸ் குழுவொன்று மன்றில் ஆஜரானது. பொலிஸ் அத்தியட்சர் விஜேரட்ண, குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் இல்லாத காரணத்தால் வழக்கு நடவடிக்கையை கைவிடுமாறும், பரமேஸ்வரியை விடுதலை செய்யுமாறும் சட்டமா அதிபர் எழுத்து மூலம் வழங்கிய அறிவித்தலை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

பரமேஸ்வரியை ஆதரித்து மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா அவருடைய கட்சிக்காரரை சட்ட மா அதிபரின் அறிவித்தலுக்கு இணங்கி விடுதலை செய்யுமாறு கோரினார்.

விடுதலை

நீதிபதி 9.50 மணியளவில் பரமேஸ்வரியை விடுதலை செய்தார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பரமேஸ்வரி தொடர்ந்தும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கப் போவதாகவும் எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் ஊடகத் துறையிலிருந்து ஒதுங்கிவிடப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துக் கூறுகையில், நான் கைது செய்யப்பட்டமை ஊடகவியலாளர்கள் மீதான நேரடி தாக்குதல் ஆகும். குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்களை ஊடகத்துறையிலிருந்து விரட்டுவதற்கான அதிரடி நடவடிக்கை ஆகும். நான் குற்றமற்றவள் என்பது தற்போது நிரூபணமாகி விட்டது. நான் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக குரல் கொடுத்த அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக நான் கைது செய்யப்பட்டமையை உலகமயமாக்கிய ஊடகங்களுக்கும் எனக்காக வாதாடி நீதியைப் பெற்றுத் தந்த சட்டத்தரணிகளுக்கும் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். எனது பேனா ஒரு போதும் ஓயப் போவதில்லை என்றார்.

நீதியின் வெற்றி

பரமேஸ்வரியின் சட்டத்தரணிகளான தவராசா தம்பதிகள் பரமேஸ்வரியின் விடுதலை நீதிக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

f_FrontL1m_15877ca.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.