Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? நீதிபதிகள் கேள்வி

Featured Replies

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? நீதிபதிகள் கேள்வி

 

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #Perarivalan #Rajivmurdercase

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? நீதிபதிகள் கேள்வி
 
புதுடெல்லி:

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தண்டனை தொடர்பான தீர்ப்பை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சி.பி.ஐ. அதிகாரி தவறான தகவல் அளித்ததால் தனக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

201803141314290340_1_supreme._L_styvpf.jpg

பேரறிவாளனின் மனுவை நிராகரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் வலியுறுத்தப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில் மனுதாரரின் பங்கு குறித்து தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாக சிபிஐ கூறியிருந்தது. 

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

“9 வாட் பேட்டரியைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்பது பேரறிவாளனுக்கு தெரியாதா? பேட்டரியைத் தாண்டி பேரறிவாளனுக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் உள்ளன. பல்வேறு தருணங்களில் விடுதலைப் புலிகள் சார்ந்த நபர்களுடன் பேரறிவாளனுக்கு தொடர்பு இருந்துள்ளது. வாக்குமூலத்தை கொண்டு பார்த்தால் விடுதலைப் புலிகளின் அனுதாபியாக பேரறிவாளள் இருந்தது தெரிகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்காக இப்போது தீர்ப்பை மாற்ற முடியுமா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நான் வாங்கி கொடுத்த பேட்டரியால்தான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பது நிரூபணமாகவில்லை என பேரறிவாளன் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #Perarivalan #Rajivmurdercase #tamilnews

https://www.maalaimalar.com/News/TopNews/2018/03/14131429/1150868/SC-says-how-can-accept-Perarivalan-was-not-involved.vpf

  • தொடங்கியவர்

தண்டனையை திரும்பப்பெற வேண்டும் எனும் பேரறிவாளனின் மனு தள்ளுபடி

perarivalan.jpg?resize=615%2C350
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சி.பி.ஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும பேரறிவாளன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சி.பி.ஐ க்கு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் பேரறிவாளன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெறக் கோரி பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ததுடன் வழக்கு விசாரணையை மீண்டும் நடத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது

 

கொலை வழக்கில் தொடர்பில்லை என மனுதாரர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் விசாரணை அதிகாரி வி. தியாகராஜன் மனுதாரரின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்து, எவ்வித அடிப்படையும் இன்றி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர் குற்றவாளி இல்லை என கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்து பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக 4 வாரத்தில் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்

http://globaltamilnews.net/2018/70799/

  • தொடங்கியவர்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பது ஏன்?

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பபெறக்கோரி நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.

பேரறிவாளன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபேரறிவாளன்

அந்த வழக்கை மறுவிசாரணை செய்து, தம்மை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை அந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, பேரறிவாளன் வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்று அவர் மீது அவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிராமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

  •  

பேரறிவாளனிடம் தான் விசாரிக்கும்போது, தாணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டுக்கு தான் இரண்டு பேட்டரி வழங்கியதாக பேரறிவாளன் கூறினார் என்று அதில் தியாகராஜன் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதை சி.பி.ஐ வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்தார்.

உச்ச நீதிமன்றம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், அந்த பேட்டரியை வழங்கியபோது, அவற்றை என்ன காரணத்திற்காக பயன்படுத்தப்படும் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் தம்மிடம் தெரிவித்திருந்தாக தியாகராஜன் அதில் கூறியிருந்தார்.

பேரறிவாளன் வழங்கிய பேட்டரிகள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்பது பற்றிய காரணம் தெரியாமல் வழங்கப்பட்டுள்ளதால், இந்த சதித்திட்டத்தில் அவருக்கு பங்கிருக்க வாய்ப்பில்லை என்றும் விசாரணை அதிகாரியாக இருந்தபோது, இதுகுறித்து விளக்கமாக நீதிமன்றத்திடம் தாம் தெரிவிக்கவில்லை என்றும் தியாகராஜன் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த வழங்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததன் அடிப்படையில் மட்டும் அவருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்பதால் தியாகராஜன் தாக்கல் செய்த பிரமாணப் பாத்திரத்தின் அடிப்படையில் மட்டும் அந்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறினர்.

ராஜிவ் காந்திபடத்தின் காப்புரிமைSTR Image captionராஜிவ் காந்தி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான தமது தொடர்பு, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதற்கு முந்தைய தினமான மே 20, 1991 அன்று சிவராசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டது உள்ளிட்டவற்றை தனது வாக்குமூலத்தில் பேரறிவாளன் கூறியுள்ளது உள்ளிட்டவற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தியாகராஜன் தாக்கல் செய்த பிராமாணப் பத்திரம் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் எனும் உள்நோக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்றும், ராஜன் எனும் பெயரில் ரசீது பெற்று பேரறிவாளன் இரண்டு ஒன்பது வால்ட் திறனுடைய பேட்டரி வாங்கிக்கொடுத்து மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அம்சங்களும் இந்த வழக்கில் கருத்தில் கருத்தில் கொள்ளப்பட்டது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/india-43400232

  • கருத்துக்கள உறவுகள்

கடையில் எல்லா பிராண்டு அரிசி மாவையும் ஒரு பெட்டிக்குள் போட்டு விருப்பமானதை எடுங்கோ என்று கஸ்டமரை கேட்டால் இந்த நேரம் குறைவான நாடுகளில்  வியாபாரம் நடக்காது கடைக்காரன் வியாபராத்தை ஏறக்கட்ட வேண்டியதுதான்.

அதை விடுங்க ஆங்கிலமோ தமிழோ ஒரு செய்தித்தளத்தில்  ஒரே செய்தியை இப்படி ஒருபக்கத்தில் அடக்குவது கிடையாது ஒரு சில சிறிய வித்தியாசமான செய்தி என்றாலும் வேறு தலைப்பை போட்டு வாசகர்களை கவர்வது இல்லாவிட்டால் வாசகர் எண்ணிக்கை விழ்ச்சி அடைந்து விடும் .

இல்லை வேறு நபர்கள் ஒரே வகையான செய்தியை இணைத்து இங்கு ஒழுங்குக்குக் வந்தாலும் பரவாயில்லை இங்கு இணைக்கபட்ட செய்திகள்  எட்டு மணி நேர இடைவெளியில் ஓட்டபட்டு இருக்கிறது. இதனால் என்ன நன்மை ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.