Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரண்பாடுகளும் குழப்பங்களும் கூட்டமைப்பினுள் புதியவையல்ல!

Featured Replies

முரண்பாடுகளும் குழப்பங்களும் கூட்டமைப்பினுள் புதியவையல்ல!

 

 

Untitled-1.jpg12as.jpg

 

"தொடர்ந்தும் அரசிய லில் ஈடுபடுவதற்கான முகாந்திரங்களை விக்னேஸ்வரன் கொண்டிருக்கிறாரா” என்ற கேள்வி இன்று எழுப்பப்பட்டே ஆக வேண்டும்.

விக்னேஸ்வரனின் அபிமானிகளும் அவரை ஆதரிப்போரும் எத்தகைய கேள்விகளுக்கும் அப்பால் வைத்தே விக்னேஸ்வரனை நோக்குகின்றனர்.இதனால்தான் “சரியோ பிழையோ அவர்தான் எங்களுக்கு வேண்டும். அவரால்தான் தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்பது இவர்களுடைய வாதமாகிறது. அதாவது விக்னேஸ்வரனைத் தவிர, மாற்றுத் தெரிவில்லை என்பது இவர்களுடைய நம்பிக்கை.

அரசியல்ரீதியிலான விடுதலைக்காக உயிரை அர்ப்பணித்துப் போராடிய இனமொன்றுக்காக முதல் நிலைப்பாத்திரமேற்று இயங்கக் கூடிய தகுதியை விக்னேஸ்வரன் கொண்டிருக்கிறாரா என இவர்கள் சிந்திக்கவில்லை.

இது விக்னேஸ்வரன் விடயத்தில் மட்டும் நடக்கின்ற ஒன்றல்ல. தமிழ்ப் பொதுமரபிலும் மனதிலும் உள்ள பாரம்பரியக் குணாம்சத்தின் வெளிப்பாடு அது. தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், விடுலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றோரின் மீதும் தமிழ்ப் பொதுமனதுக்கு இத்தகைய கேள்விக்கிடமற்ற விசுவாசமே இருந்தது. இன்னும் இருக்கிறது.இத்தகைய விசுவாசம் இப்பொழுது அடுத்த மட்டத்தில் குறுமன்னர்களாகத் தங்களைக் கட்டமைக்க முயலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினரிகளினாலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

விக்னேஸ்வரன் அரசியலுக்கு நேரடியாக வந்த பின்னர் (2010இற்குப் பிறகு)அவரைச் சுற்றிப் பிம்பமொன்று கட்டமைக்கப்பட்டுள்ளது .மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைக்கெதிரான தீர்மானம் தொடக்கம் இதுவரையான அவருடைய உரைகள், அறிக்கைகள், தீர்மானங்கள், அரசியல் பிரகடனங்கள், சந்திப்புகள் அனைத்துமே இந்தப் பிம்பத்தை உருவாக்குவதற்கான காரியங்களாகும். இதை அவர் திட்டமிட்டுச் செய்தார் என்று அர்த்தமில்லை. ஆனால், அப்படி ஆகி விட்டன.

பிரகடனங்களைப் பெரும் புரட்சியென நம்புவோரைத் தவிர, நடைமுறைப் பெறுமானங்களை எதிர்பார்ப்போரிடத்தில் விக்னேஸ்வரன் மீதான செல்வாக்கு அவ்வாறில்லை.

தன்னுடைய பிரகடனங்களைச் செயலுருப்பெற வைப்பதன் மூலமே அவற்றை அரசியல் வெற்றியாக்க முடியும் என்பது பெரும்பாலான தலைவர்களின் சிந்தனையாக இருக்கும். இதுதான் தலைமைத்துவச் சிறப்பும் ஆளுமை வெளிப்பாடுமாகும். அவர்கள் அதிலேயே குறியாக இருப்பார்கள்.விக்னேஸ்வரனின் பிரகடனங்களும் தீர்மானங்களும் அறிக்கைகளும் சந்திப்புகளும் சாதித்த - வெற்றிகள் என்ன?

இதை அவரை ஆதரிப்போர் துணிந்து கூறுவதற்கு முன்வர வேண்டும்.

1. இனப்படுகொலைத் தீர்மானத்தை விக்னேஸ்வரன் தலைமை ஏற்று மாகாணசபையில் நிறைவேற்றினார். இதனால் தமிழ் மக்களில் பெரும் பகுதியினரிடத்திலே விக்னேஸ்வரனுக்குப் பெரும் புகழும் மதிப்பும் ஏற்பட்டது. அத்துடன் அவர் மீதான அரசியற் கவர்ச்சியையும் அதிகமாக்கியது. ஆனால், இந்தத் தீர்மானத்தை விக்னேஸ்வரன் அங்கத்துவம் வகிக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு முக்கியஸ்தரான எம். ஏ. சுமந்திரன் அப்பொழுதே விமர்சித்தார். இருவருமே சட்ட அறிஞர்கள். அதிலும் விக்கினேஸ்வரன் நீதியரசராக இருந்தவர்.

முதலில் இந்த முக்கியமான விடயத்தில் ஒரே தரப்பிற்குள் முரண்கள் – வேறுபாடுகள் – அபிப்பிராய பேதங்கள் வந்திருக்கக் கூடாது. அவ்வாறு வரக்கூடிய பாதகச் சூழல் இருந்திருக்குமாக இருந்தால், அதனைக் கருத்திற் கொண்டு, இந்த விடயத்தைக் கவனமாகக் கையாண்டிருக்க வேண்டியது அவசியம். அதாவது, இத்தகைய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுக்கும்போது உள்வீட்டுக்குள்ளேயே இரண்டக நிலை இருந்திருக்கக் கூடாது.

அவ்வாறு செய்யாததன் காரணமாக மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பத்தோடு பதினொன்றாக வெறும் காகித அறிக்கையாகச் சுருங்கிப் போனது. வெளியே அது எத்தகைய கொதிப்பையும் கவனிப்பையும் உண்டாக்கவில்லை. அரசியல் நெருக்கடிகளை உருவாக்கவில்லை. மட்டுமல்ல, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து அதைச் சட்ட வலுவான ஒரு விவகாரமாக – விடயமாக - மாற்றி நீதியைக் கோரும் செயல்முறைக்கும் நெருக்கடி நிலைக்கும் கொண்டு செல்லவும் இல்லை. அப்படி வளர்த்தெடுக்கவும் இல்லை.

2. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2014 இற்கு முன் பின்னாக முன்னெடுத்து வரும் கலங்கலும் குழப்பங்களும் நிறைந்த அரசியல் வழிமுறையில் விக்னேஸ்வரன் வேறுபட்டுத் தெரிகிறார். தனித்துவமாக நிற்கிறார். விட்டுக்கொடுப்புகளுக்கும் சமரசங்களுக்கும் அப்பால் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையில் தெளிவாக இருக்கிறார். அதிலும் கூட்டமைப்பின் தலைவரும் விக்னேஸ்வரனை அரசியலுக்கு அழைத்து வந்தவருமான இராஜவரோதயம் சம்பந்தனையும் அவருக்கு அனுசரணையாக இருந்த சுமந்திரனையும் எதிர்த்து நின்று இவற்றையெல்லாம் செய்கிறார் என்றவாறான அவதானம்.

மேம்போக்கான பார்வையில் இந்தத் தோற்றம் சரிபோலவே தெரியும். ஆனால், உள்ளோட்டங்கள் வேறானவை. கூட்டமைப்பில் இத்தகைய வேறு நிலைப்பட்டு முரண்நிலைப்பட்டுத் தோற்றமளிக்கும் பண்பு பொதுவான ஒன்று. எளிய உதாரணம், யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மனோ கணேசன் போன்றோருடன் இணைந்து இலங்கையின் தேசியக் கொடியை சம்பந்தன் ஏந்தியதை மாவை சேனாதிராஜாவும் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கமாகவே கண்டித்திருந்தனர், எதிர்த்திருந்தனர். ஆனால், கூட்டமைப்பின் எந்தக் கூட்டத்திலும் இது குறித்து நடைமுறையில் எத்தகைய ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எதிர்நிலைப்பட்டும் முரண்பட்டும் பேசி, தந்திரோபாயமாகத் தமக்கான வெற்றியை நோக்கிய அரசியலை முன்னெடுத்துச் செல்வது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தோரின் இயல்பும் நடைமுறையுமாகும்.

அவரவர் தத்தமக்குச் சாத்தியமான முறையில் எதையும் எப்படியும் பேசலாம், எப்படியும் செயற்படலாம் என்ற ஒரு உள்நெகிழ்ச்சி கூட்டமைப்பில் உண்டு. இதற்கு ஒருபோதும் எதிர்ப்போ ஒழுக்காற்று நடவடிக்கையோ மேற்கொள்ளப்படுவதில்லை. ஆகவே விக்னேஸ்வரனும் இதில் ஒரு அங்கம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அவர் கூட்டமைப்பின் பிரதான அணுகுமுறைக்கும் வழிமுறைக்கும் எதிரானவரும் இல்லை. அவ்வளவுதான்!

http://www.thinakaran.lk/2018/03/16/கட்டுரைகள்/23197/முரண்பாடுகளும்-குழப்பங்களும்-கூட்டமைப்பினுள்-புதியவையல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.