Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
 
 

அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

 

அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்ரிக் கல்லூரியின் தொழில்நுட்ப கூட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசதலைவர் இன்று யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

இறுதி யுத்தத்தின் போது அருட்தந்தை பிரான்சிஸினால் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என கோஷமெழுப்பியவாறு உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

media-share-0-02-06-7a8cf476c030141babcamedia-share-0-02-06-15f9d04fd11a522c1a9fmedia-share-0-02-06-c8697d5a39f9f0c3f67f

http://newuthayan.com/story/77258.html

  • தொடங்கியவர்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, கண்டுகொள்ளாது சென்ற ஜனாதிபதி
 
 

- எஸ்.நிதர்ஷன்

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், அவருடன் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு கோரி, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரிக்கு அண்மையாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை ஜனாதிபதி சந்திக்காது சென்றார்.

புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அவ்வழியால் சென்ற ஜனாதிபதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சந்திக்காது சென்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/போராட்டத்தில்-ஈடுபட்ட-மக்களை-கண்டுகொள்ளாது-சென்ற-ஜனாதிபதி/71-212900

  • தொடங்கியவர்

ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மயங்கிய வயோதிபப் பெண்!

 
 

ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மயங்கிய வயோதிபப் பெண்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வயது முதிர்ந்த பெண் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்ததால் அப்பகுத்தியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆய்வுகூடத் திறப்பு விழாவிற்கு வருகைதரும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏ ஒன்பது வீதியின் பத்திரிசியார் கல்லூரி சந்திப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மயங்கிய வயோதிபப் பெண்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

புனித பத்திரிசியார் கல்லூரி நோக்கிச் செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன் கல்லூரிக்குள் உட்பிரவேசிக்க முயற்சித்த போதிலும் அதற்கு பொலிஸார் இடமளிக்கவில்லை என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையிலே நீண்ட நேரமாக போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வயோதிபத் பெண் மயங்கி விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை வந்த ஜனாதிபதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காரில் இருந்தவாறே பார்வையிட்டு, கல்லூரிக்குள் பிரவேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-president-s-visit-was-an-old-woman-

  • தொடங்கியவர்
ஜனாதிபதி, போராட்டக்காரர்களைச் சந்தித்தார்

 

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், அவருடன் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு கோரி, ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில் மூவரை ஜனாதிபதி அழைத்து சந்தித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜனாதிபதி-போராட்டக்காரர்களைச்-சந்தித்தார்/71-212902

  • தொடங்கியவர்

ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி போராட்டக்கார்களை ஏமாற்றிய காவல்துறையினர்

Missing-2.jpg?resize=800%2C533
குளோபல் தமிழ்pச் செய்தியாளர்
இன்றையதினம் யாழ்ப்பணத்திற்கு சென்ற ஜனாதிபதியின் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் யாழ்.பிரதான சாலையில் இன்று காலை 8 மணிமுதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆய்வு கூட திறப்பு விழாவுக்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அதேவேளை புனித பத்திரிசிரியார் கல்லூரி முன்னாள் அதிபர் அருட்தந்தை பிரான்சீஸ் தலைமையில் இராணுவத்தினர் இடம் சரணடைந்தோர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில் , அருட்தந்தை அதிபராக இருந்த கால பகுதியில் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் கல்விகற்ற மாணவர்களும் அருட்தந்தை தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அதேவேளை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்த காவல்துறையினர் மூவரை அழைத்து சென்றதுடன் போராட்டக்கார்களை அமைதியை கடைப்பிடிக்குமாறு கோரினார்கள்.

ஜனாதிபதியுடன் தமது பிரதிநிதிகளை சந்திக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தமையால் போராட்டகார்கள் அமைதியை கடைப்பிடித்தனர். எனினும் ஜனாதிபதியை சந்திக்க என அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு காவல்துறையினர் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Missing-3.jpg?resize=800%2C600Missing-5.jpg?resize=600%2C800Missing-6.jpg?resize=600%2C800Missing-7.jpg?resize=717%2C538Missing-8.jpg?resize=615%2C461Missing-_1360.jpg?resize=615%2C461

http://globaltamilnews.net/2018/71477/

  • தொடங்கியவர்
‘ஜனாதிபதி ஏமாற்றி விட்டார்’
 

image_1cbe4295d0.jpg

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதாக அழைத்து ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாக” அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

இன்று (19) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதுக்காக பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், பொலிஸார், போராட்டக்கார்கள் மூவரை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மூவரை அழைத்து சென்றனர்.

அது தொடர்பில் அருட்தந்தை தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து பொலிஸார் எங்களில் மூவரை அழைத்து சென்றனர். நாங்கள் சந்திக்க வந்துள்ளதாக ஜனாதிபதிக்கு பொலிஸார் எழுத்து மூலமாக அறிவித்து இருந்தனர். ஆனால் நிகழ்வின் இறுதிவரையில் எங்களை சந்திக்கவில்லை. 

இங்கே நாங்கள் காணாமல் போனோர் விடயமாக போராடிக்கொண்டு இருக்கின்றோம். அருட்தந்தை ஜிம்ரான், அருட்தந்தை பிரான்சிஸ் இந்த கல்லூரியின் அதிபராக இருந்துள்ளார்.

ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சரோ, எதிர்க்கட்சி தலைவரோ, கல்லூரி நிர்வாகமோ ஜனாதிபதி முன்னிலையில் அது தொடர்பில் பேசவில்லை.

ஜனாதிபதியிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என அரசியல் தலைவர்கள் கல்லூரி நிர்வாகம் கேட்டு இருக்க வேண்டும் ஆனால் யாரும் அது தொடர்பில் பேசவில்லை.

இந்த கூட்டத்தின் இறுதிவரையில் ஜனாதிபதி எங்களை சந்திப்பார் என நாங்கள் காத்திருந்தோம். ஆனால் இறுதிவரை எங்களை அவர் அழைத்து சந்திக்கவில்லை.

நிகழ்வு முடிந்து வரும் வழியில் நடந்து செல்லும் போது வெளியில் ஒரு போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்றது என கூறப்பட்டது.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடு எங்களை அவமானப்படுத்தியதாகவே கருதுகின்றோம். எங்கள் மூவரை அழைத்து அவமானப்படுத்தியதாக நினைக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமானப்படுத்தியதாகவே கருதுகின்றோம்” என தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜனாதிபதி-ஏமாற்றி-விட்டார்/71-212926

 

 

  • தொடங்கியவர்
தமிழரசுக்கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டம்
 

- எஸ்.நிதர்ஷன்

image_82956861d4.jpg

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்.மார்ட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (19) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதுக்காக பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், பொலிஸார், போராட்டக்கார்கள் மூவரை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மூவரை அழைத்து சென்றனர்.

இந்நிலையில் அவர்களைச் சந்திக்காது ஜனாதிபதி திரும்பிச் சென்றிருந்தார்.

இந்நிகழ்வில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தபோதும், போராட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்து, அதனை கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமிழரசுக்கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தமிழரசுக்கட்சி-அலுவலகத்தின்-முன்பாக-போராட்டம்/71-212928

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெண் உறவினர்களை தள்ளிய ஆண் காவல்துறையினர் :

jaff-police-_1486.jpg?resize=800%2C600
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெண் உறவினர்களை ஆண் காவல்துறையினர் தள்ளியதால் போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஜனாதிபதியின் பயணத்தினை முன்னிட்டு யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த காவல்துறையினர் ;ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொள்ள ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அமைதியாக இருக்குமாறு கோரினார்கள். அதனை அடுத்து உறவினர்கள் அமைதியாக வீதியோரமாக நின்றிருந்தனர்.

இந்தநிலையில் காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டு ஜனாதிபதியை சந்திக்காமல் திரும்பியதனால் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. நிகழ்வு முடிந்து வெளியேறிய ஜனாதிபதியை வீதியில் மறிக்கும் நோக்குடன் வீதிக்கு வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களை அங்கு கடமையில் நின்ற ஆண் காவல்துறையினர் தள்ளினார்கள்.

 

இதனைத் தொடந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் . பெண்களை பிடித்து ஆண் காவல்துறையினர் தள்ளியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதப்பட்டனர். ஜனாதிபதி சென்றதும் காவல்துறையினர் போராட்டகார்கள் நின்ற இடத்தை விட்டு உடனே அகன்று சென்றனர்.

இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் நடைபெற்ற இடத்தில் பெண் ஆண் காவல்துறையினர் எவரும் கடமையில் ஈடுபட்டு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

jaff-police-_1477.jpg?resize=800%2C600  Jaff-police-_1469.jpg?resize=800%2C600jaff-police-_1475.jpg?resize=800%2C600jaff-police-_1480.jpg?resize=800%2C600jaff-police-_1483.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/71545/

  • தொடங்கியவர்

காணாமல்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி சந்தித்தாரா..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.