Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cambridge Analyticaவும் இலங்கைத் தேர்தலும் Mark Zuckerbergக்கும் சிக்கித் தவிக்கும் Facebookம்…

Featured Replies

Cambridge Analyticaவும் இலங்கைத் தேர்தலும் Mark Zuckerbergக்கும் சிக்கித் தவிக்கும் Facebookம்…

Cambridge-Analytica1.jpg?resize=600%2C45

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica)  என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.  இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் பெரிய திட்டமிடலும், தொழில்நுட்ப பலமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Cambridge-Analytica9.jpg?resize=600%2C45

பிரபல சனல் 4 தொலைக்காட்சியே  இந்த முறைகேட்டை கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஒபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica)  நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica) நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸாண்டர் நிக்ஸ் வீடியோவில் இதனை ஒப்புக்கொள்வது வெளியாகி உள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica)  லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். தேர்தல் ஆலோசனை மையம் என்ற பெயரின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. உலகம் முழுக்க தேர்தல் தொடர்பான குழப்பங்களை தீர்க்க ஆலோசனைகளை வழங்கி, வெற்றி பெற வழிகாட்டி வருகிறது.

Cambridge-Analytica8.jpg?resize=600%2C45

 பேஸ்புக் மூலம் பல கோடி மக்களின் தகவல்களை திருடி இருக்கிறார்கள். தேர்தல் சமயங்களில் அந்த தகவலை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்கள். அதே போல் ஒவ்வொரு பேஸ்புக் பயனாளிகளையும் மயக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்களை, அவர்கள் திருடிய தகவலை வைத்து உருவாக்குகிறார்கள்.  இதுவரை மொத்தம் 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகளில் விவரங்களை இவர்கள் திருடி இருக்கிறார்கள். 50 மில்லியன் மக்களின் தகவலை வைத்து அவர்களை எப்படி எல்லாம் தேர்தலில் மாற்றி வாக்குப்   போடா வைக்க முடியுமோ அப்படி எல்லாம் செயல்பட வைப்பார்கள். இதற்கு உலகின் தொழில் நுட்ப ஜாம்பவான்கள் பணியாற்றியுள்ளார்கள்.

Cambridge-Analytica7.jpg?resize=600%2C45

உங்கள் ஊர் உதாரணமாக உங்கள் தெருவில் இரண்டு பேர் தேர்தலில் நிற்கிறார்கள். ஒருவர் குப்புசாமி, ஒருவர் கருப்பு சாமி. குப்புசாமி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திடம் பணம் கொடுத்தார் என்றால் , குப்புசாமியை பற்றிய நல்ல தகவல்களை மட்டுமே  உங்களுக்கு பிடித்தது போல பேஸ்புக்கில் கட்டுரைகளாக வர வைப்பார்கள்,  மேலும் கருப்புசாமி குறித்து மோசமான கட்டுரைகளை வர வைப்பார்கள்.  இதன் மூலம் ஒரு தலைவர் பற்றிய உங்கள் பார்வையை மாற்றி உங்களை வேறு ஒரு நபருக்கு வாக்குப்  போட வைப்பார்கள்.

Cambridge-Analytica5.jpg?resize=600%2C45

அமெரிக்க தேர்தலில் டிரம்ப் இப்படித்தான் வெற்றி பெற்றார் என்ற சர்ச்சை நிலவி வருகிறது. அதேபோல் ஐரோப்ப யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற நடந்த வாக்கெடுப்பில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம்  பங்கெடுத்திருப்பதாக  வேலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது. இந்த வகையில்  பேஸ்புக் மூலம் மக்கள் மனதை மாற்றுவதோடு, பணம் கொடுத்து அதிகாரிகளையும் விலைக்கு வாங்குகிறார்கள். தேர்தலில் நேரடியாக மோசடி செய்ய அதிகாரிகளுக்கு நிறைய  தரகு பணம்கொடுத்து இருக்கிறார்கள். விலைமாதுக்களை ஏற்பாடு செய்வது, லஞ்சம் கொடுப்பது, வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது, பதவி உயர்வு கொடுப்பது என பல வேலைகளை செய்து இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

Cambridge-Analytica6.jpg?resize=600%2C45

தகவல் திரட்டுவது எப்படி இவர்கள் பேஸ்புக் கணக்கில் தகவல்களை திருடுவது மிகவும் சுவாரசியமான ஒன்று. பேஸ்புக்கில் சமயங்களில் சில விளையாட்டுகள் வைரல் ஆகும். அதை கிளிக் செய்தால் நமக்கு எப்போது திருமணம் நடக்கும், நமக்கு எப்போது மரணம் வரும், முன்ஜென்மத்தில் எப்படி இருந்தோம் என்று சொல்லும். இந்த லிங்குகளை கிளிக் செய்யும் போது, நம்முடைய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் எடுத்துவிடும். இப்படித்தான் உலகம் முழுக்க 50 மில்லியன் கணக்குகளை அபேஸ் செய்து இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Cambridge-Analytica2.jpg?resize=600%2C45

இந்த நிலையில்  இலங்கையில் அடுத்து நடக்கும் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனக் கூறி இரண்டு பேர் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா  நிறுவன அதிகாரிகளை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் சனல் 4ல் வேலை பார்க்கும் பத்திரிக்கையாளர்கள். இவர்கள் எடுத்த வீடியோதான் இப்போது வெளியாகி உள்ளது. வீடியோ வெளியான ஒரு வாரத்திற்கு முன்பே இதைப்பற்றிய கட்டுரை வெளியாகிவிட்டது.

Cambridge-Analytica3.jpg?resize=600%2C45

இதேவேளை முகப்புத்தகம் மேற்கொண்ட தவறினால் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மில்லியன் கணக்கான முகப்புத்தக பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதனை மார்க்மார்க் ஜுக்கர்பெர்க்  ஒப்புக் கொண்டுள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக முகப்புத்தக பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளநிலையில் தவறினை ஏற்றுக் கொண்டுள்ள மார்க் நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் நேர்மையற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்றத்தின் முன் சோதனை நடத்தவும் தான் மகிழ்ச்சியுடன் தயாராக இருப்பதாதவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செயலிகள், பயனாளிகளின் தகவல்களை பெறுவது மிக கடுமையாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். முகப்புத்தகத்தினை தான்தான ஆரம்பித்தது என்பதனால்; என்ன நடந்தாலும் தான்தான் பொறுப்பு எனவும் மார்க் தெரிவித்துள்ளார்.

Cambridge-Analytica4.jpg?resize=600%2C45

http://globaltamilnews.net/2018/71998/

  • தொடங்கியவர்

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் சோதனை!!!

 

 
 

லண்டன் நீதிமன்றம் உத்தரவையடுத்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்காவில் வசிக்கும் 50 மில்லியின் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடி ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தியதாக லண்டனில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருந்ததையடுத்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டார் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க், 

பேஸ்புக் பயணாளிகளின் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான் என தெரிவித்தார். இதனால் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடிய புகாரில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தை லண்டன் தகவல் ஆணையர் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் லண்டன் நீதிமன்றம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தை சோதனையிட உத்தரவிட்டது. இதனையடுத்து லண்டன் தகவல் ஆணையர் தலைமையில் அமலாக்கபிரிவினர் அங்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/31914

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கோதாரிவிழுந்த பேஸ்புக் வந்ததாலை உலகத்திலை,நாட்டிலை,ஊரிலை,வீட்டிலை  எல்லாம் ஒரே பிரச்சனையாய்க்கிடக்கு...இல்லாத பிரச்சனையெல்லாம் வர வெளிக்கிட்டுது.....

அவனவன் தலைவன் ரேஞ்சிலை எழுதுறாங்கள். எல்லாம் தெரிஞ்சவங்கள் மாதிரி நடிக்கிறாங்கள்.. 
முஸ்லீம் நாடுகள் செய்தமாதிரி கட் பண்ண வேணும் கண்டியளோ...

பேஸ்புக்கை கட் பண்ண வேணுமெண்டு சொன்னனான்....பிறகு வேறைமாதிரி யோசிக்கப்படாது.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.