Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவிகளும் கௌரவங்களும் பொன்னாடைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவிகளும் கௌரவங்களும் பொன்னாடைகளும்

--------------------------------------------------------------------

பங்குனி மாதம் 16ந் திகதி 2007 ம் ஆண்டு வெளிவந்த கனடா உதயன் பத்திரிகையில் திரு. பொன்னம்பலம் குகதாஸன் என்பவரால் ''விருதுகளும் விமர்சனமும்" என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு விமர்சனத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அதில் விபரிக்கப் பட்ட கருத்துக்களும், இன்று புலம் பெயர்ந்த தமிழ் மக்களினால் முக்கியமாக கனடா மக்களினால் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் கருத்துக்களும் தான் என்னை இந்த விமர்சனத்தை எழுதத் தூண்டியது என்பதையும், எனது நோக்கம் யாரினதும் மனதை புண்படுத்துவது அல்ல என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு எனது விடயத்திற்கு நகர விரும்புகிறேன்.

திரு. குகதாஸன் அவர்களின் கருத்துப்படி ''விருது, விமர்சனம் ஆகிய இரண்டுமே அவை நியாயமானவையாகவும், சரியானவையாகவும் உள்ளவரை சமூக ஆரோக்கியம் நிறைந்தவை". இதில் எந்த விதமான விவாதத்திற்கும், சந்தேகத்திற்கும் இடமில்லை. இதை ஒத்துக் கொள்வதிற்கும் யாரும் தயங்க மாட்டார்கள் என்பது புலனாகின்றது.

ஆனால் உங்களால் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆக்கத்தில் நீங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறமாதிரித் தான் தோன்றுகிறது. அதாவது ஆரம்பத்திலேயே நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கின்றீர்கள் என்பதிலேயே தெளிவில்லாமல் இருக்கிறீர்கள் என்பது எனது கருத்து.

விருது, பொன்னாடை என்பனவற்றிற்கு பஞ்சமேயில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள், ஜயா பஞ்சமேயில்லை என்று நீங்கள் குறிப்பிட்டதை விட இரண்டிற்கும் மதிப்பேயில்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். முக்கியமாக புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த பொன்னாடை அணிவித்தல், கௌரவிப்பு என்பன எல்லாம் வகை தொகையின்றி பெரும்பாலும் தகுதியற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன என்ற உண்மையை மறைப்பதிற்கு நீங்கள் முயற்சிக்கின்றீர்கள்.

அடுத்ததாக ஊடக விமசர்சனங்களிற்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், அதற்கு உதாரணமாக சேர். பொன். இராமநாதன் போன்றோரையும் இழுக்கின்றீர்கள். அத்துடன் இன்னுமொரு கருத்தையும் சொல்லுகிறீர்கள் அதாவது இலக்கிய மற்றும் துறை சார் விமர்சகர்கள் உள்ளளவு சமூக விமர்சர்கள் நம்மவர்கள் மத்தியில் குறைவு என்றும் ஆதங்கப்படுகிறீர்கள். ஜயா நீங்கள் நினைக்கிற மாதிரி உண்மை அப்படியில்லை, அதாவது சமூக விமர்சகர்கள் எமது மத்தியில் நிறைய இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களினால் முன் வைக்கப்படும் கருத்துக்கள் அதாவது சுட்டிக் காட்டப்படும் சமூக சீர்திருத்தங்கள், விமர்சனங்கள் எல்லாம் திட்டமிட்டு மழுங்கடிக்கப்படுகின்றன என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் ஊடகத்துறையால் அதாவது பத்திரிகையினர், அல்லது வானொலி நடத்துபவர்களை போற்றி, புகழ்ந்து எழுதும் விமர்சனங்களுக்குத் தான் (நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை) முக்கியத்துவம் கொடுப்பார்களே தவிர, இந்த சமூக விமர்சகர்களால் சுட்டிக்காட்டும் விடயங்களை இயன்றளவு புறக்கணித்து விடுவார்கள் என்ற உண்மை உங்களுக்கும் தெரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்.

அடுத்ததாக நீங்கள் சொல்லும் கருத்து அதாவது எனது நிலைப்பாட்டிற்கு திரும்பி வருகிறீர்கள் எப்படியென்றால் ''விமர்சனம் என்ற சுத்திகரிக்கும் சமூகக் கருவியை நாம் முகமுறிவு கருதி பாவிப்பதே இல்லை, ஆனாலும் இறந்த பின்பு பயமின்றி விமர்சிக்கிறோம்". அதாவது பாராட்டுதல்களையும் சேர்த்து சொல்லுகிறீர்கள், அதற்கு உதாரணமாக காவலூர் நவரட்ணம் ஜயா அவர்களையும் சேர்த்துக்கொள்கிறீர்கள்.

இதிலிருந்து ஒரு உண்மையை மறந்து போயோ என்னவோ ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்.

அதாவது இந்த சமூதாயத்தில் முக்கியமாக புலம் பெயர்ந்த நாடுகளில் கௌரப் படுத்த வேண்டியவர்களை அதாவது தகுதியுடையவர்களை நாம் தவற விடுகிறோம் என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்.

ஆனால் இந்த கௌரவத்திற்கு தகுதி ஒன்றும் தேவையில்லை மற்றவர்களை முக்கியமாக ஊடகவியலாளர்களை தூக்கிப் பிடித்தாலே போதும் கௌரவம் இலகுவாகவே வந்தடைந்து விடும் என்ற உண்மையை நீங்களும் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் கருத்து மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

இதற்கு உதாரணமாக நீங்கள் சொல்லும் அடுத்த கருத்து இதை உறுதிப்படுத்துகிறது. அதாவது ''தகுதியான ஒருவருக்கு பொன்னாடை போர்த்தினால் கூட மாறி மாறி போர்த்துகிறார்கள் என்று பேசுகிறார்கள்" ஜயா இந்த கருத்தில் என்ன தப்பிருக்கிறது? உண்மை அது தானே, ஆனால் ஒரு சொல்லை இதில் புகுத்துகிறீர்கள் அது மட்டுந் தான் தப்பு அதாவது தகுதியானவர்களுக்கு என்ற சொல்லை மட்டும் நீக்கிவிட்டு விவாதிற்கு வாருங்கள் தப்பில்லை. இதில் நான் மட்டுமல்ல அனைவரின் கருத்தும் கூட இது தான் அதாவது தகுதியானவர்களை தெரிவு செய்யுங்கள் கௌரவியுங்கள், பொன்னாடை போர்த்துங்கள் தப்பில்லை யாரும் விமர்சிக்கவே மாட்டார்கள்.

அடுத்ததாக உங்களினால் இறுதியாக முன்வைக்கப்படும் கருத்துக்கள், இதைக் கூறுவதிற்காகத் தான் ஆரம்பத்திலிருந்தே நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிவிட்டீர்கள்.

ஜயா இந்த பத்திரிகையுடன் நேரடியாக தொடர்பில்லாதவர்கள் வேறு யாராவது இந்த விமர்சனத்தை முன் வைத்திருந்தால் அல்லது இந்த பத்திரிகையுடன் சம்பந்தப்படாதவரைப் பற்றி நீங்கள் விமர்சித்திருந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் நீங்கள் பாராட்ட விரும்புவதே இந்த பத்திரிகையின் ஆசிரியரை. இதிலிருந்து தெளிவாகிறது என்னவென்றால் நீங்களும் ஏதோ எதிர் பார்கிறீர்கள் என்பது தான்.

இறுதியாக இன்னுமொரு கருத்தையும் சொல்ல விரும்புகிறேன் அதாவது தகுதியான ஒருவருக்கு கௌரவம் வழங்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு செல்வந்தராகவும் இருக்கத் தேவையுமில்லை, பொற்கிழி தான் வழங்கவேனும் என்ற அவசியமும் இல்லை. பாராட்டுக்கள் என்ற ஒரு வாழ்த்துக்களே போதும். ஆனால் அதற்கு அவர் தகுதியானவரா என்பதை மட்டும் உறிதிப்படுத்திக் கொள்ளுங்கள். பதவி, கௌரவம், பொன்னாடை என்பனவற்றை நாம் தேடிப்போகக் கூடாது என்று பணிவன்புடன் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

நண்றி

வல்வை மைந்தன்

22.03.2007

Edited by Valvai Mainthan

லண்டனிலும் இப்படியான கேவலம் நிறைய நடக்குது அண்மையில் சிவாயியின் பெயரால் பட்டம் வழங்கினார்கள். வாங்கியவர்கள் எல்லாம் ஒரு படம் கூட முழுமையாக நடிக்கவில்லை. அதில் இன்னும் கேவலம் அந்த நிகழ்சியை பார்க்க போன வியாபாரி ஒருவர் நிகழச்சி ஒழுங்கமைப்பாளருக்கு தெரிந்தவர். தட்டில் 50 பவுன் காசை வைத்ததற்காக அவரையும் அழைத்து பொன்னாடை போர்த்து விட்டார்கள். இவ்வளவுக்கும் அவர் கடை தொடங்கி மூன்று மாதம் தான் ஆகிறது. இப்படி பொன்னாடை போர்ப்பது பன்னாடை போர்ப்பது போல் ஆகி கேவலமாகி விட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.