Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த மனது வைத்தால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தூர­மா­காது

Featured Replies

மஹிந்த மனது வைத்தால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தூர­மா­காது

 

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு எட்­டப்­பட வேண்டும் என்­கிற எதிர்­பார்ப்பு நாளுக்கு நாள் வலு­வ­டைந்து வரு­கின்­றது. எனினும் இதற்­கான முன்­னெ­டுப்­புகள் உரி­ய­வாறு இடம்­பெ­று­கின்­றதா? என்­பது கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. இந்­நி­லையில், இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­பதில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் வகி­பா­கத்­தி­னையும் அவ­ரது ஆளு­மை­க­ளையும் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர். மஹிந்த மனது வைத்தால் தீர்வு சாத்­தி­ய­மா­கு­மென்றும் பெரும்­பான்மை மக்கள் அதனை நிச்­சயம் ஏற்­றுக்­கொள்வர் என்றும் இவர்கள் மேலும் வலி­யு­றுத்­தி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை இந்­நாட்டில் பல்­வேறு தழும்­பு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. மக்­க­ளி­டை­யே­யான ஒற்­றுமை சீர்­கு­லைந்­தி­ருக்­கின்­றது. யுத்­தத்தின் கார­ண­மாக நாடு துன்­ப­து­ய­ரங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­ததும் நாட்டின் அபி­வி­ருத்தி கேள்­விக்­கு­றி­யா­னதும் நீங்கள் அறிந்த விடய­மே­யாகும். யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டமை ஒரு ஆறு­த­லான விடயம் என்­ற ­போதும், யுத்த முடிவின் பின்­ன­ரான நிலை­மைகள் தமிழ் மக்­க­ளி­டையே அதி­ருப்­தியை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன. யுத்த வெற்­றியை கொண்­டா­டு­வதில் இருந்த ஆர்வம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­பதில் காணப்­ப­டா­தது வருந்­தத்­தக்க விட­ய­மே­யாகும் என்று சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள் பலரும் வலி­யு­றுத்­திக்­கூறி இருந்­தமை இங்கு நோக்­கத்­தக்­க­தாக உள்­ளது. இலங்­கையில் தமிழ் மக்­களின் நிலை­மைகள் குறித்து சர்­வ­தேசம் உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கின்­றது. இம் மக்­களின் வாழ்வில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்தும் நோக்கில் தொடர்ச்­சி­யான பல அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கித்து வரு­கின்­றது. எனினும் இலங்­கையின் உள்­நாட்டு அர­சியல் குழப்ப சூழ்­நி­லைகள் சர்­வ­தே­சத்­திடம் இலங்கை வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வதில் பின்­ன­டைவு நிலை­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வினை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு கடந்­த­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லா முயற்­சி­களும் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றன. இந்­நி­லைக்கு இலங்கை அர­சாங்கம் விடு­தலைப் புலிகள் என்ற இரு­சா­ரா­ருமே பொறுப்­பு­கூற வேண்­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர். இலங்கை அர­சாங்­கத்­திடம் சில விட்டுக்கொடுப்­புகள் காணப்­ப­டாத நிலையில் விடு­தலை புலி­க­ளிடமும் விட்­டுக்­கொ­டுப்­புகள் உரி­ய­வாறு காணப்­பட­வில்லை என்றும் பல குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. வட பகுதி போராட்­டத்தில் விடு­தலைப் புலி­க­ளிடம் வேகம் காணப்­பட்ட அள­விற்கு விவேகம் காணப்­ப­ட­வில்லை. இரா­ஜ­தந்­தி­ரத்­துடன் அவர்கள் செயற்­ப­ட­வில்லை என்­றெல்லாம் இப்­போது விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ் விமர்­ச­னங்­களை ஒரே­ய­டி­யாக இல்லை என்று மறுத்­து­விடவும் முடி­யா­துள்­ளது.

தோசையை சரி­யான நேரத்தில் புரட்­டிப்­போட வேண்டும். இல்­லா­விட்டால் ஒன்று கரு­கி­விடும் அல்­லது வேகாமல் போய்­விடும். எனவே தரு­ணம் ­பார்த்து எத­னையும் மேற்­கொள்­ள­வேண்டும் என்றும் அமரர் தொண்­டமான் ஒரு சமயம் தெரி­வித்­தி­ருந்தார். இது குறித்து பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­க­ரனும் அண்­மை­யில் ஒரு சமயம் நினை­வு­ப­டுத்­தி­யி­ருந்தார். தொண்­ட­மானின் அந்த சாணக்­கி­யம்தான் மலை­யக மக்­க­ளுக்கு பிர­ஜா­வு­ரிமை மற்றும் வாக்­கு­ரிமை என்­ப­வற்றை மீளவும் மலை­யக மக்­க­ளுக்கு பெற்றுக் கொடுத்­தது. இன்னும் பல உரி­மை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் இது உந்து சக்­தி­யாக அமைந்­தது. அஹிம்­சையின் ஊடாக பல சாதக விளை­வுகள் பெற்றுக் கொள்­ளப்­பட்­டன.

அடக்கி ஒடுக்­கப்­பட்ட ஒரு சமூ­கத்­தினை மேலெ­ழும்பச் செய்தல் வேண்டும் என்ற விடு­தலை வேட்கை உணர்வு விடு­தலை புலி­க­ளிடம் காணப்­பட்­டது. உரி­மை­க­ளுக்­காக அவர்கள் குரல் கொடுத்­தார்கள். ஒரு இனம் இன்­னொரு இனத்தை அடி­மைப்­ப­டுத்­து­வ­தனை அவர்­களால் பொறுத்துக் கொள்­ள­மு­டி­ய­வில்லை. எனினும் இந்த இலக்­கினை அடைந்­து­கொள்ள அவர்கள் எந்­த­ள­விற்கு விவே­கத்­துடன் செயற்­பட்­டார்கள் என்று இப்­போது பலரும் கேள்வி எழுப்­பு­வ­த­னையும் அவ­தா­னிக்க முடி­கின்றது.

இந்­நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு பல வாய்ப்­புகள் காணப்­பட்­டன. இந்த வாய்ப்­புகள் யாவும் மழுங்­க­டிக்­கப்­பட்டு விட்­டன. இன­வாத கண்­ணோட்டம், தமி­ழர்­க­ளுக்கு ‘கிள்­ளி­யேனும்’ எத­னையும் கொடுத்­து­வி­டக்­கூ­டாது என்ற சிந்­த­னைகள் இதில் ஆதிக்கம் செலுத்தி இருந்­தன. ஏற்­க­னவே பல பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வி­ய­டைந்த நிலையில், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் இனப்­பி­ரச்­சினை தீர்வு முயற்­சிகள் தொடர்பில் பலரும் சிறப்­பித்துப் பேசி இருக்­கின்­றனர்.

வடக்­கிற்கு அதி­கா­ரங்­களைக் கோரு­வது நியா­ய­மா­னது என்ற நிலைப்­பாட்­டினை சந்­தி­ரிகா கொண்­டி­ருந்தார். ஏதோ ஒரு­விதத்தில் அதி­காரப் பகிர்வு மூலம் அல்­லது சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் ஊடாக அல்­லது குறை­வான அதி­கா­ரங்­க­ளு­டனோ அதி­காரப் பகிர்வு மேற்­கொள்­ளப்­பட்ட இடங்­களில் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது. ஆபி­ரிக்­கா­விலும் இந்­தி­யா­விலும் மேலும் ஏரா­ள­மான உதா­ர­ணங்­க­ளையும் கூற­மு­டியும். இந்­தி­யாவில் 28 மாநி­லங்கள் உள்­ளன. இந்­தியா சுதந்­திரம் பெற்­ற­வு­ட­னேயே சமஷ்டி ஆட்சி முறை­யொன்று ஏற்­ப­டுத்­தப்­ப­டா­தி­ருப்பின் அந்­தந்த மாகா­ணங்­களில் வாழு­கின்ற பல­த­ரப்­பட்ட இனத்­த­வர்­க­ளுக்கு தத்­த­மது நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிப்­ப­தற்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­படாது இருப்பின் தற்­போது இந்­தியா துண்­டா­டப்­பட்ட ஒரு நாடாக இருந்­தி­ருக்கும்.

பிரச்­சி­னைக்கு அடிப்­ப­டை­யான விட­யங்­களை புரிந்து கொண்டு அதனை கற்­ற­றிந்து அதன்பின் மத்­திய அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் இந்­நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தாம் தெளி­வா­கவே ஏதோ ஒரு மட்­டத்­திற்கு தமது நட­வ­டிக்­கை­களை நிரு­வாகம் செய்­வ­தற்­கான உரிமை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­படல் வேண்டும். இலங்கை அர­சாங்கம் அதி­கா­ரங்­களை வழங்­கினால் இந்­திய தமிழ் மக்­க­ளி­டையே நில­வு­கின்ற கோப­தாபம் முடி­வ­டையும். இந்த வகையில் நாட்டின் ஐக்­கி­யத்­திற்கும் ஒரு­மைப்­பாட்­டுக்கும் பிளவு ஏற்­ப­டாது நாடு இரண்­டாக பிரி­வதை தடுப்­ப­தற்கு 13 ஆவது திருத்தம் நல்­ல­தொரு தீர்­வாகும் என்­றுதான் கரு­து­வ­தா­கவும் சந்­தி­ரிகா வலி­யு­றுத்தி இருந்தார். இதே­வேளை தனது ஆட்­சிக்­கா­லத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட அதி­கா­ரத்தைப் பகிர்ந்து நாட்டை பிள­வு­ப­டுத்­தாமல் இருப்போம் என்­கிற முறை­யினை எதிர்த்­த­வர்­க­ளையும் சந்­தி­ரிகா சாடி இருக்­கின்றார். இவ்­வா­றாக எதிர்ப்­பினை வெளி­யிட்­ட­வர்­களில் எத்­தனை பேர் இவ்­வி­டயம் குறித்து பூரண அறி­வுடன் இருக்­கின்­றார்கள் என்றும் சந்­தி­ரிகா முக்­கி­ய­மான ஒரு கேள்­வி­யி­னையும் எழுப்பி இருக்­கின்றார். இதில் உண்மை இருக்­கத்தான் செய்­கின்­றது.

இன்­னும்­கூட நாட்டில் சில விட­யங்­களை எதிர்ப்­ப­வர்கள் குறித்த விடயம் தொடர்பில் பூரண அறி­வில்­லாது எதிர்க்­கின்ற ஒரு நிலை­யையே காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது மற்­றை­ய­வர்கள் எதிர்க்­கின்­றார்கள் என்­ப­தற்­காக தானும் கையை உயர்த்தும் இத்­த­கைய சிறு­பிள்­ளை­வா­திகள் அறி­வில்­லா­த­வர்கள், உண்மை நிலையை கற்­ற­றிந்து செயற்­பா­டு­களில் ஈடு­பட முனைதல் வேண்டும்.

இதே­வேளை, பேரா­சி­ரியர் ஜயம்­பதி விக்­ர­ம­ரட்ண போன்­ற­வர்­களும் அதி­கார பர­வ­லாக்­கத்தின் முக்­கி­யத்­து­வத்­தினை தொடர்ச்­சி­யா­கவே வலி­யு­றுத்தி வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. பல­தரப்­பட்ட இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அனைத்து இன மக்­க­ளுக்கும் அதி­கா­ரத்தை பகிர்ந்­து­கொள்ளும் பிறப்­பு­ரிமை உள்­ளது. அநே­க­மான நாடு­களில் பல்­வகை கலா­சா­ரங்­களை கொண்ட நிலை­மையே நிலவி வரு­கின்­றது. இந்த நாடுகள் பல­வற்றில் பெரும்­பான்மை இன­மா­னது முதலில் சிறு­பான்மை இனத்­துடன் தனது அதி­கா­ரத்தை பகிர்ந்­து­கொள்ள மறுத்து வந்­துள்­ளது. பெரும்­பான்மை என்­பது சர்­வ­தேசங்­க­ளிலும் நிலவும் ஒரு நிலைப்­பா­டாகும். ஆனாலும் குறிப்­பிட்ட பெரும்­பான்மை இனத்­த­வர்கள் பல்­வ­கைமை கலா­சா­ரத்தை உணர்ந்து துணிந்து ஏனைய இனத்­த­வர்­க­ளுடன் தமது அதி­கா­ரத்­தினை பகிர்ந்து கொண்­டுள்­ளனர். பெரும்­பான்மை இனத்­த­வர்கள் புரிந்து கொண்டோ அல்­லது கட்­டா­யத்தின் பேரிலோ தமது நாடு முன்­னேற அதி­கார பர­வ­லாக்கம் எவ்­வ­ளவு முக்­கியம் என்­பதை விளங்­கிக்­கொண்­டனர். இந்­நிலையில் தேசிய பிரச்­சினை என்­பது அதி­காரப் பர­வ­லாக்கம் பற்­றி­யதே என்­ப­தையும் ஜயம்­பதி விக்­கி­ர­மரட்ன (2009) வலி­யு­றுத்தி இருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை 1994 முதல் 2004 வரை­யான காலப்­ப­கு­தியில் ஐம்­பது வீத­மான இலங்கை பிர­ஜைகள் அதி­கார பர­வ­லாக்கம் ஒன்றே இனப்­பி­ரச்­சினை தீர்­விற்­கான ஒரே வழி என்­ப­தனை ஏற்­றுக்­கொள்ளும் நிலையில் இருந்­துள்­ள­மையும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை ஒன்று உள்­ளது என்ற உண்மை நிலை­யினை ஏற்­றுக்­கொள்­ளும்­போதே அது குறித்த தீர்வு தொடர்பில் நாம் சிந்­திக்க முடியும். எனினும் சில இலங்­கை­யர்கள் இன­வாத நெருப்பின் மீது இருந்து கொண்டு இலங்­கையில் பயங்­க­ர­வாத பிரச்­சி­னையே இருந்­தது, அதுவும் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் கொல்­லப்­பட்­ட­தோடு முடிந்­து­விட்­டது. இங்கு இனப்­பி­ரச்­சினை என்ற ஒன்று இல்லை என்று விதண்­டா­வாதம் பேசி வரு­கின்­றமை ஒன்­று­பட்ட நாட்­டினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு பெரும் தடை­யாக உள்­ளது என்­பது சொல்லித் தெரி­ய­வேண்­டிய ஒரு விட­ய­மல்ல. அர­சாங்­கத்தின் இனப்­பிரச்­சினை தீர்வு குறித்த முன்­னெ­டுப்­புகள் இப்­போது கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றன. உள்­நாட்டின் அர­சியல் குழப்ப நிலைகள் தீர்வு குறித்த காய் நகர்த்­தல்­களை பிற்­போட வைத்­துள்­ளன. இந்­நி­லையில் அர­சி­யல்­வாதிகள் இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் பொறுப்­பு­ணர்ந்து செயற்­ப­ட­வில்லை என்றும் இதனால் சிவில் சமூ­கத்­தினர் தீர்­வுக்­கான அடித்­த­ளங்­களை கொடுக்க வேண்­டு­மென்றும் கோரிக்கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதற்­கி­டையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆளுமை மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­பதில் அவரின் முக்­கி­யத்­துவம் என்­பது தொடர்­பிலும் இப்­போது கருத்­துக்கள் பலவும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­ற­மை­யையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டின் முக்­கியத் தலை­வர்­களுள் ஒரு­வ­ராக விளங்­கு­கின்றார். இவர் தனது பதவிக் காலத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு குறித்த முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொண்­டி­ருக்­கின்றார். இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்து தென்­ப­குதி இணக்­கப்­பாட்டை காணும் நோக்­குடன் சர்வ­கட்சி பிர­தி­நி­திகள் குழு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. 63 தட­வைகள் கூடிய இந்தக் குழு 2008 ஜன­வ­ரி­யில 13 ஆவது திருத்தச் சட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட இரண்டு பக்க யோசனை ஒன்­றினை முன்­வைத்­தது. இது காலம் கடந்த அர்த்­த­மற்ற யோசனை என்று எதிர்த்­த­ரப்­பினர் விமர்­சித்­தனர். 13 ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்த ஒரு­போதும் அனு­ம­திக்கப் போவ­தில்லை என்று ஜே.வி.பி.யும் ஆழ­மாக தெரி­வித்­தி­ருந்­தது.

சர்­வ­கட்சி பிர­தி­நி­திகள் குழுவின் யோச­னையை சட்ட வலு­வற்ற வெறும் உறு­தி­ மொ­ழிகள் என்று கண்­டித்துப் பேசி இருந்தார் கலா­நிதி.ரொஹான் எதி­ரி­சிங்க. சர்­வ­கட்சி குழு­வி­னரால் வெளி­யி­டப்­பட்­டுள்ள இரண்டு பக்க ஆவணம் உண்­மையில் மிகவும் ஏமாற்­றத்­தினை தரு­கின்ற ஒன்­றாக விளங்­கு­கின்­றது. இந்த இரண்டு பக்க ஆவ­ணத்தின் ஒரு பகுதி ‘அர­சாங்கம் மாகா­ணங்­க­ளுக்கு கூடுதல் அதி­கா­ரங்­களை வழங்க முயற்­சிக்க வேண்டும்’ என்றும் ‘கூடு­த­லான பணத்தை வழங்க முயற்­சிக்க வேண்டும்’ என்றும் கூறு­கின்­றது. இது சட்ட ரீதி­யாக அர­சாங்­கத்­துக்கு எந்த கடப்­பாட்­டையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. வெறு­மனே தெளி­வற்ற உறுதிமொழி­க­ளா­கவே அவைகள் காணப்­ப­டு­கின்­றன என்றும் கலா­நிதி ரொஹான் எதி­ரி­சிங்க குறிப்­பி­டு­கின்றார். இதே­வேளை இரண்­டா­வது சபை மற்றும் அதி­கா­ரப்­ப­ர­வலை முன்­வைத்த திஸ்ஸ விதா­ர­ணவின் அறிக்­கை­யா­னது கால­னித்­து­வத்­துக்கு முந்­திய இலங்­கையை அதி­கா­ரப்­ப­கிர்வு மற்றும் சுயாட்சி மூலம் மீள்­கட்­ட­மைப்பு செய்­வ­தையே சாராம்­ச­மாக கொண்­டி­ருந்­தது. இதனை இலகு சமன்­பாட்டு முறையில் சொல்­வ­தாயின் திஸ்ஸ விதா­ரண அறிக்கை = 2000மாம் ஆண்டு யோசனை + செனட் சபை என்று கூறலாம் என்று பேரா­சி­ரியர் சும­ண­சிரி லிய­ன­கேயும் தனது நிலைப்­பாட்­டி­னையும் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.