Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி

Featured Replies

ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர்.

ஜெர்மனிபடத்தின் காப்புரிமைDANIEL KOLLENBERG

இந்தச் சம்பவத்தில், அந்த வேனின் ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

அந்த நகரின் கீபேன்கெர்ல் சிலை அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனி

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சரக்கு வாகனம் ஒன்று கிறிஸ்துமஸ் பொருட்கள் வாங்குவதற்கான சந்தையில் சரக்கு வாகனம் ஏற்றப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்துக்குச் செல்லவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலிபடத்தின் காப்புரிமைPAUL FEGMANN

கீபேன்கெர்ல் சிலை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேசை மற்றும் நாட்காலிகள் சேதமடைதிருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

http://www.bbc.com/tamil/global-43684088

  • தொடங்கியவர்

 

Screenshot eines Tweets: Die Aufnahme soll den Ort in Münster zeigen, wo der Kleintransporter in die Menschenmenge gerast ist. (Quelle: Twitter)

3 பேர் இறந்து 20 பேர் காயம் என்று ஜேர்மன் செய்திகள் தெரிவிக்கின்றன.

  • தொடங்கியவர்

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததால் பலர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் காயம்

 

 
VBK-GERMANY

முன்ஸ்டர் நகரில் விபத்து நடந்த சாலையில், வரிசையாக ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி   -  படம்: ஏபி

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் இன்று காலை மக்கள் கூட்டத்துக்குள் சாலையில் வேகமாக வந்த கார் புகுந்ததில், பலர் பலியாகி இருக்கலாம், ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இது தீவிரவாதிகள் தாக்குதலா அல்லது ஏதேச்சையாக நடந்த விபத்தா என்பது குறித்து முன்ஸ்டர் நகர போலீஸார் கூற மறுத்துவிட்டனர். இந்தவிபத்தில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெர்மனியின் மேற்குபகுதியில் இருக்கும் நகரம் முன்ஸ்டர். இந்த நகரில் இன்று காலை வழக்கம் போல் மக்கள் பஸ்நிலையத்தில் நின்றிருந்தபோது, சாலையில் வேகமாக வந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து நிற்காகமல் சென்று.

திடீரென கார் கூட்டத்துக்குள் புகுந்ததால், மக்களால் ஓடமுடியாமல் தவித்தனர். பலர் காரில் அடிபட்டு தூக்கிவீசப்பட்டனர். இந்த விபத்தில் பலர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து முன்ஸ்டர் நகர போலீஸ் தரப்பில் கூறுகையில், கூட்டத்துக்குள் கார் புகுந்ததால், பலர் இறந்துள்ளனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால், இந்த தீவிரவாத தாக்குதலா என்று இப்போது உறுதி செய்ய முடியாது. மக்கள் தாங்களாக எதையும் ஊகம் செய்து கொண்டு பதற்றம் அடையத் தேவையில்லை. காரை ஓட்டி வந்த டிரைவர் தற்கொலை செய்துள்ளார்.

அதேசமயம், இது தீவிரவாத தாக்குதலாக இருக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட முடியாது எனத் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/world/article23467916.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் - பலர் பலி - 6 பேர் ஆபத்தான கட்டத்தில்... 50 மேற்பட்டோர் பாதிப்பு

 

 

ஜேர்மன் Münster பகுதியில் பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மன் நேரப்படி இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதுவொரு பயங்கரவாத பயங்கரவாத சம்பவமாக கருதப்படுகின்ற போதிலும், உத்தியோகபூர்வமாக இதுவரையிலும் உறுதி செய்யப்படவில்லை.

இதன் போது வாகனத்தின் சாரதி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தினால் 50 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர்கள் மற்றும் உணவு பெற்றுக் கொண்டிருந்தவர்கள் மீதே வாகனம் மூர்க்கத்தனமாக மோதியுள்ளது.

அவ்வாறு மோதிய வாகனம் சாம்பல் நிறத்திலான வேன் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் அவ்விடத்தில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தப் பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஹெலிகொப்டர்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் 2016 ஆம் ஆண்டு பேர்லின் நகரில் மேற்கொண்ட வாகன தாக்குதலை நினைவுப்படுத்துவதாக உள்ளது. இந்தத் தாக்குதலின் போது 12 பேர் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/germany/01/179244?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 சம்பந்தப்பட்டவர் ஏற்கனவே மண்டை களண்டவர் எண்டு  கதையை கொண்டு போறாங்கள்.  

கொஞ்சநாள் போக உண்மைபொய் வெளியிலை வரும் tw_glasses:

  • தொடங்கியவர்

ஜெர்மனியில் தாக்குதல் :  4 பேர் பலி : தாக்குதலை மேற்கொண்டவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 

 

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் சனக்கூட்டத்திற்குள் வாகனமொன்றை செலுத்தி தாக்குதல் மேற்கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரை பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

germant.jpg

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் சனிக்கிழமை மாலை மக்கள் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் கழித்துக் கொண்டிருந்தனர். அங்குள்ள வீதியொன்றைக் கடப்பதற்காக பொதுமக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.

43293009_401.jpg

அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று வீதியைக் கடக்கவிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வேகமாக மோதியது. இந்த தாக்குதலில் தாக்குதலை மேற்கொண்ட வாகன சாரதியுட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதில் 30 பேர் காயம் அடைந்ததுள்ளனர்.

 

தாக்குதலை மேற்கொண்ட வாகனத்தை ஓட்டி வந்த சாரதி, மக்கள் கூட்டத்தின் மீது மோதியதும் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதால் இதுவொரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட நபர் ஜெர்மன் பிரஜையென முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

http://www.virakesari.lk/article/32321

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.