Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிப்பட்ட பேரினவாத முகம்

Featured Replies

வெளிப்பட்ட பேரினவாத முகம்

xxxxxxxaaaaa-7af57b2b8aea5d28c50bb5105558fd14a20cc1b4.jpg

 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புத் தொடர்­பாக, சிங்­களப் பேரி­ன­வாத சக்­தி­களின் மனோ­நி­லை­யையும் படம்­பி­டித்துக் காட்­டி­யி­ருக்­கி­றது.

இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் வெற்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுக்கும் முடிவில் தான் தங்­கி­யி­ருக்­கி­றது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார்.

ஜனா­தி­பதி தனது கட்­டுப்­பாட்டில் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்கச் செய்­வதன் மூலம், அதனை வெற்­றி­பெற வைக்­கலாம் என்­பது மஹிந்த ராஜபக் ஷவின் கருத்­தாக இருந்­தது.

ஆனால், அதற்கும் அப்பால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுக்கும் முடிவு தான், முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது.

எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் எடுக்கும் முடிவில் தான் அதன் வெற்­றியும் தோல்­வியும் தங்­கி­யி­ருக்­கி­றது என்­பதை மஹிந்த ராஜபக் ஷ அறி­யா­த­வ­ரல்ல.

ஆனால், அவர், கூட்­ட­மைப்பை ஒரு பொருட்­டாக எடுத்துக் கொள்­ள­வில்லை. அதற்­கு­ரிய முக்­கி­யத்­து­வத்தைக் கொடுக்க விரும்­ப­வில்லை என்­பதே உண்மை.

ஆனாலும், இரா.சம்­பந்­த­னையும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும், இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்க வைப்­ப­தற்­காக, சிங்­களப் பேரி­ன­வாதச் சிந்­த­னை­யா­ளர்கள் அறிக்­கைகள், கருத்­துக்கள் மூலம் கடு­மை­யாக அழுத்­தங்­களைக் கொடுக்க முனைந்­தனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவு இருக்கும் வரை தேசிய அர­சி­யலில் இருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அகற்றி விட முடி­யாது என்று தேசப்­பற்று தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர கூறி­யி­ருந்தார்.

அது­போல, இரா.சம்­பந்­த­னுக்கு கடிதம் ஒன்றை எழு­திய அத்­து­ர­லிய ரத்ன தேரர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு அளிக்கக் கூடாது என்றும், நீங்கள் வடக்கு கிழக்­கிற்கு மாத்­திரம் எதிர்க்­கட்சித் தலைவர் அல்ல, முழு நாட்­டுக்கும் எதிர்க்­கட்சித் தலைவர் என்­பதை நினைவில் கொள்­ளுங்கள் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மகிந்­தா­னந்த அழுத்­க­மகே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தமது நோக்­கங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக பக­டைக்­கா­யாக பயன்­ப­டுத்திக் கொள்ளக் கூடாது என்றார்.

அது­போல, தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களின் படி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இங்­கேயும் புலம்­பெ­யர்ந்தும் வாழும் தமி­ழர்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு துரோகம் செய்து விடக் கூடாது என்றும், அமைச்சர் டிலான் பெரேரா கூறி­யி­ருந்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வதை விரும்­ப­வில்லை என்று தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இந்தக் கருத்­துக்­களில் இருந்து பார்க்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை, தங்­களின் தேவை­க­ளுக்­காக ஆடு­கின்ற பொம்­மை­க­ளாக வைத்­தி­ருக்­கவே சிங்­களப் பேரி­ன­வா­திகள் விரும்­பு­கி­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யா­கி­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை முற்­றிலும் அர­சியல் நோக்கம் கொண்­டது. உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் கூட்டு அர­சாங்­கத்தை பதவி கவிழ்ப்­ப­தற்கு மேற்­கொண்ட முயற்­சி­களில் தோல்­வி­ய­டைந்த மஹி­ந்த அணி­யினர், அடுத்­த­தாக எடுத்துக் கொண்ட அஸ்­திரம் தான் இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை. இதன் மூலம் ஆட்­சியைக் கவிழ்த்து, தமக்குச் சாத­க­மான ஓர் ஆட்­சியை நிறுவிக் கொள்­வதும், குறு­கிய காலத்­துக்குள் பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கச் செய்து அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வதும் தான் அவர்­களின் இலக்­காக இருந்­தது.

மஹிந்த ராஜபக் ஷ இந்த நோக்­கத்தை பகி­ரங்­க­மா­கவே கூறி­யி­ருந்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பத­வியில் இருந்து நீக்­கினால் தான் அடுத்­த­தாக எந்த நகர்­வு­க­ளையும் மேற்­கொள்ள முடியும் என்ற நிலை அவர்­க­ளுக்கு இருந்­தது.

இதற்­கா­கவே அவர்கள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை முன்­னெ­டுத்­தனர்.

இப்­ப­டி­யான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் தம்­முடன் இணைந்து கொண்டு ஆட்­சியைக் கவிழ்க்க வேண்டும் என்­பதே, ஐ.தே.கவுக்கு எதி­ரான சிங்­களப் பேரி­ன­வாத சக்­தி­களின் கருத்­தாக இருந்­தது.

ஐ.தே.கவும் சரி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் சரி, ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியும் சரி சிங்­களப் பேரி­ன­வாத சிந்­த­னை­க­ளி­லேயே மூழ்­கி­யுள்­ளவை.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம், பத­வியில் இருந்த கால­கட்­டத்தில் தமிழ் மக்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. சில விட­யங்­களில் முன்­னேற்­றங்கள் இருந்­தாலும், பெரும்­பா­லான முக்­கி­ய­மான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வதில் தோல்வி கண்­டி­ருக்­கி­றது.

அதே­வேளை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைத் தோற்­க­டிக்க நினைத்த தரப்­பு­களின் கடந்த காலம் என்ன அவர்கள் தமிழ் மக்­களை எப்­படி நடத்­தி­னார்கள் என்­ப­தையும் யோசிக்க வேண்­டிய நிலையில் கூட்­ட­மைப்பு இருந்­தது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைக் காப்­பாற்றக் கூடாது, அது தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ரா­னது என்று கூறிய சிங்­கள மேலா­திக்கச் சிந்­த­னை­யா­ளர்கள், தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை என்­றா­வது கருத்தில் எடுத்­தி­ருந்­தார்­களா? 

தமிழ் மக்­களின் விருப்­பங்­களை, அவர்­களின் குறை­களை நிறை­வேற்ற முனைந்­தார்­களா- இல்லை, எப்­போதும் அதற்குக் குறுக்கே நின்­றதே அவர்­களின் வர­லா­றாக இருந்­தது.

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் வாக்­க­ளிக்க கூட்­ட­மைப்பு எடுக்­கின்ற முடிவின் மீது தாக்கம் செலுத்­து­கின்ற உரிமை தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ரமே உரித்­தா­ன­தே­யன்றி, சிங்­களச் சிந்­த­னை­யா­ளர்­க­ளுக்­கு­ரி­ய­தல்ல.

ஆனால் அவர்கள் அதனைத் தமது கையில் எடுத்துக் கொள்ள முயன்­றார்கள்.

முழு நாட்­டுக்­கு­மான எதிர்க்­கட்சி என்ற பொறுப்­புடன் நடக்க வேண்டும் என்று மிரட்­டியும் பார்த்­தார்கள், முழு நாட்­டுக்­கு­மான எதிர்க்­கட்சி என்றால், தாம் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் தமிழ் மக்­களின் நலன்­களைப் புறக்­க­ணித்து விட வேண்டும் என்­பதே அவர்­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது.

முழு நாட்­டுக்­கு­மான எதிர்க்­கட்சித் தலைவர் பற்றிப் பேசு­கின்ற இவர்கள், முழு நாட்­டுக்­கு­மான ஜனா­தி­ப­தி­யாக, பிர­த­ம­ராக எத்­தனை ஆட்­சி­யா­ளர்கள் இருந்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை எப்­போ­தா­வது சிந்­தித்­தி­ருக்­கி­றார்­களா?

அப்­படி முழு நாட்­டுக்­கு­மான ஜனா­தி­பதி, பிர­தமர் பத­வியில் இருந்­தி­ருந்தால் தமிழ் மக்கள் இன்னும் பிரச்­சி­னை­க­ளு­டனும், உரி­மைகள் இன்­றியும் வாழும் நிலை ஏற்­பட்­டி­ருக்­காதே.

அர­சி­யலில் பேரம் பேசும் சந்­தர்ப்­பங்கள் கிடைக்கும் போது, அதனைப் பயன்­ப­டுத்திக் கொள்­வது தான் இயல்பு. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பத­வியில் இருந்து நீக்கும் முயற்­சி­களின் போது தோற்­றி­யதும் அத்­த­கை­ய­தொரு வாய்ப்பே.

ஆனால், அத்­த­கைய வாய்ப்பு ஒன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குக் கிடைக்கும் போது - அதனை அவ்­வாறு பயன்­ப­டுத்திக் கொள்ளக் கூடாது என்று சிங்­களச் சிந்­த­னை­யா­ளர்கள் எச்­ச­ரிக்­கி­றார்கள்.

இதனை பக­டை­யாக வைத்து, நலன்­களை அடையக் கூடாது என்று கூறி­யி­ருக்­கி­றார்கள். இது அவர்­களின் மேலா­திக்கச் சிந்­த­னையை மேலும் அப்­பட்­ட­மா­கவே காட்­டு­கி­றது.

கூட்டு அர­சாங்­கத்தில் ஐ.தே.கவுடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இணைந்து கொண்­ட­தற்கு, காரணம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து அவர்கள் ஆட்­சி­ய­மைத்து விடக் கூடாது என்­பதால் தான் என்று சில மாதங்­க­ளுக்கு முன்னர் அமைச்சர் டிலான் பெரேரா கூறி­யி­ருந்­தது நினை­வி­ருக்­கலாம்.

தமிழ்த் தரப்­புகள் அதி­கா­ரத்­துக்கு வந்து விடக்­கூ­டாது, பேரம் பேசி விடக் கூடாது என்­பதில் சிங்­களப் பேரி­ன­வாதச் சிந்­த­னை­யா­ளர்கள் உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருந்து வரு­கி­றார்கள்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட இதற்கு விதி­வி­லக்­கா­ன­வ­ராக இல்லை என்றே கூறப்­ப­டு­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வுடன். நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையைத் தோற்­க­டிக்கக் கூடாது என்றும் அது மக்கள் மத்­தியில் எதிர்­ம­றை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்றும் ஐ.தே.க. அமைச்­சர்­க­ளிடம் ஜனா­தி­பதி கூறி­ய­தாக தகவல்.

இதே ஜனா­தி­பதி 2015ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வுடன் தான் ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற்­றி­ருந்தார். எனினும், அப்­போது தமிழ் மக்­க­ளுக்கு அவர் அளித்த வாக்­கு­று­தி­களை இன்று வரை நிறை­வேற்­ற­வில்லை.

உண்­மையில், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தை தமிழ் மக்கள் ஆட்­சிக்குக் கொண்டு வந்­த­தில்லை. தமி­ழர்கள் அதி­கா­ரத்­துக்கு வந்து விடக் கூடாது என்ற பயத்தில் சிங்­கள மேலா­திக்­க­வா­தி­களால் உரு­வாக்­கப்­பட்­டது அந்த ஆட்சி.

ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அப்­ப­டி­யல்ல. தமிழ்­மக்­களின் வாக்குகளால் பதவிக்கு வந்தவர். தமிழ் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்.

அவரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவுடன் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற முனையக் கூடாது என்று எச்சரிக்கின்ற நிலையில் இருக்கிறார் என்பது தான் வேடிக்கை.

தமிழ் மக்களுக்கான உரிமைகளை மறுப்பதுடன், தமிழ் மக்களை தமது ஏவலுக்கு ஆடுகின்றவர்களாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் சிங்கள மேலாதிக்கச் சிந்தனையாளர்களிடம் நிறையவே காணப்படுகிறது.

அது தான், நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர்கள் இந்தளவுக்கு, அழுத்தங்களைக் கொடுத்தற்குக் காரணம்.

ரணிலைக் காப்பாற்றக் கூடாது என்று சம்பந்தனுக்கு கடிதம் எழுதிய அத்துரலிய ரத்ன தேரர் கூட, கடைசியில், ரணிலை கவிழ்க்கும் முயற்சிக்கு ஆதரவு அளிக்காமல் ஒதுங்கினார். ஏனென்றால், கூட்டமைப்பின் வலைக்குள் ஐ.தே.க. விழுந்து விடுமோ என்ற அச்சம் அவர்களைப் போன்றவர்களுக்கு இருந்தது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-04-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.