Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான பிர­த­மரின் உறு­திப்­பாடும் தொடரும் முரண்­பாடும்

Featured Replies

கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான பிர­த­மரின் உறு­திப்­பாடும் தொடரும் முரண்­பாடும்

 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது நிபந்­த­னை­களை முன்­வைத்­த­தா­கவும் அந்த நிபந்­த­னை­க­ளுக்கு பிர­தமர் இணக்கம் தெரி­வித்த­மை­யி­னா­லேயே கூட்­ட­மைப்பு அவ­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தது என்ற தகவல் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது.

பொது எதி­ர­ணி­யி­னாரல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்டு கடந்த 4ஆம்­ தி­கதி அதன்­மீ­தான விவா­தமும் வாக்­கெ­டுப்பும் நடை­பெற்­றன. இந்த வாக்­கெ­டுப்­பிற்கு முன்னர் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். 3ஆம் ­தி­க­தி ­மாலை இந்த சந்­திப்பு பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்த சந்­திப்­பின்­போது கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­யுள்­ளனர். தமிழ் மக்­களின் அன்­றா­டப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னைக்கும் தீர்வைக் காணும் விட­யத்தில் இழுத்­த­டிப்புப் போக்கு கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­வ­தாக இவர்கள் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தனர்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென்றும் இவர்கள் கோரி­யி­ருந்­தனர். இவர்­க­ளது கோரிக்­கையை பிர­தமர் ஏற்­றுக்­கொண்டு அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக உறு­தி­ வ­ழங்­கி­யி­ருந்தார். இந்த சந்­திப்பை அடுத்து பாரா­ளு­மன்றக் குழுக்­களின் பிர­தித்­த­லை­வரும் கூட்­ட­மைப்பின் வன்­னி ­மா­வட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்­க­ல­நா­தனை மேற்­கோள்­காட்டி இணை­ய­த்த­ளங்­களில் செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்­க­வுடன் பத்து அம்­சக்­கோ­ரிக்­கை­களை உள்­ள­டக்­கிய பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யாடி எழுத்­து­மூலம் உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இந்த செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் கோரிக்­கை­க­ளுக்கு பிர­தமர் இணங்­கி­யுள்­ள­தா­கவும் எழுத்­து­மூல ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­ன­தை­ய­டுத்து தென்­ப­கு­தியில் இன­வாத சக்­திகள் இந்த விவ­கா­ரத்தை பூதா­க­ர­மான சர்ச்­சை­யாக மாற்­று­வ­தற்கு முயற்­சித்­தன.

இந்த நிலையில் யாழ்ப்­பா­ணத்தில் கருத்துத் தெரி­வித்­துள்ள தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பால் முன்­வைக்­கப்­பட்ட 10 அம்சக் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக பிர­தமர் எழுத்­து­மூல உறு­தி­மொ­ழியை வழங்­க­வில்லை. அவ்­வாறு வெளி­யான தகவல் தவ­றா­னது என்று தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வி­டயம் குறித்து மேலும் கருத்து தெரி­வித்­தி­ருந்த அவர், பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு நாம் ஆத­ர­வ­ளித்­த­மைக்கு முக்­கிய காரணம், தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு பணியில் இருந்து நாம் வெளி­யே­றி­ய­தாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தே­யாகும். அந்தப் பணி­களை துரி­த­மாக முன்­னெ­டுக்­க­வேண்டும் என பிர­த­ம­ரிடம் நாம் வலி­யு­றுத்­தினோம். இந்­தக் ­கோ­ரிக்­கை உட்­பட எமது ஏனைய கோரிக்­கை­க­ளையும் நிறை­வேற்­று­வ­தாக எம்­மிடம் பிர­தமர் இணக்கம் தெரி­வித்தார். எனினும் கடந்த மூன்று வரு­டங்­களில் நிறை­வேற்­றா­த­வற்றை அடுத்த இரண்டு வரு­டங்­களில் அரசு நிறை­வேற்றும் என்று எதிர்­பார்க்க முடி­யாது என்று கூறி­யுள்ளார்.

கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் இவ்­வாறு கூறு­கையில், கூட்­ட­மைப்பின் வன்­னி­ மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் குழுக்­களின் பிர­தித்­த­லை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எமக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களில் முன்­னேற்­ற­மின்றேல் அர­சாங்கம் விளை­வு­களை சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­படும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

பிர­த­ம­ரிடம் எம்மால் முன்­வைக்­கப்­பட்டு இணக்கம் காணப்­பட்ட பத்து அம்சக் கோரிக்கை விட­யத்தில் உரிய கால அவ­கா­சத்­திற்குள் அந்த விட­யங்­களை நிறை­வேற்­றா­விடின் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு தக்க பாடங்­களை கற்­பிக்கும். வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் எதிர்­வரும் வரவு–செல­வுத்­திட்­டத்திற்கு எதி­ராக கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்கும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான பேச்­சு­வார்த்­தையின் போது அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு பணி­களை துரி­தப்­ப­டுத்தல், அர­சியல் கைதி­களை பொது­மன்­னிப்பில் விடு­வித்தல், காணி­களை விடு­வித்தல், காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் பணி­களை துரி­த­மாக இயங்க வைத்தல், மகா­வ­லித்­திட்­டத்தில் மக்­களை வெளி­யேற்­றாமல் அந்த நீரை அவர்­க­ளுக்கே விநி­யோ­கித்தல், பிற­மா­கா­ணத்­த­வர்­களை வடக்கு, கிழக்கில் அரச பணி­களில் அமர்த்­து­வதைத் தவிர்த்தல், சிங்­கள குடி­யேற்­றங்­களை நிறுத்­துதல், வெளி­மா­வட்ட மீன­வர்­களை வடக்கு, கிழக்கு கடற்­ப­கு­தியில் மீன்­பிடிக்க அனு­ம­திப்­பதை தடுத்தல் உள்­ளிட்ட 10 அம்சக் கோரிக்­கை­களை தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­வைத்­த­தா­கவும் அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கு இணங்­கி­ய­தா­க­வுமே தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

ஆனால், தற்­போது இந்த விட­யங்கள் தொடர்பில் எழுத்­து­மூலம் உறு­தி­மொழி எத­னையும் தர­வில்லை என்று கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார். எஞ்­சிய இரு­வ­ரு­ட­கா­லப்­ப­கு­திக்குள் இவற்றை நிறை­வேற்ற முடி­யுமா என்ற சந்­தே­கத்­தையும் அவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். ஆனால் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் குழுக்­களின் பிர­தித்­த­லை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன், உறு­தி­ய­ளித்த விட­யங்­களை நிறை­வேற்­றா­விட்டால் அர­சாங்கம் கடும் விளை­வு­களை சந்­திக்­க­வேண்டி வரும் என்று எச்­ச­ரித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்றே, இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் பிர­த­மரை தமது கட்சி ஆத­ரித்­த­மைக்­கான கார­ணத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி மைத்­திரி, பிர­தமர் ரணில் இணைந்த கூட்டு அர­சாங்­கம் தொட­ர­வேண்டும் என்­ப­தற்­கா­கவே பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை நாம் எதிர்த்தோம். போரினால் பாதிக்­கப்­பட்ட எமது பிர­தே­சங்­களை கட்­டி­ய­மைப்­பதில் பல குறை­பா­டுகள், நெருக்­க­டிகள் இருக்­கின்­றன. இவ்­வா­றான பிரச்­சி­னை­களை நிவர்த்தி செய்யும் பொருட்டு சில திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்ற சந்­தர்ப்­ப­மாக பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கூட்­ட­மைப்பு பயன்­ப­டுத்­தி­யது. கூட்­ட­ரசு முறிந்தால் தமிழ் மக்கள் அதி­க­மாக பாதிக்­கப்­ப­டு­வார்கள். இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­பதில் நெருக்­க­டிகள் ஏற்­படும். இத­னால்தான் பிர­த­ம­ருக்கு ஆத­ர­வாக நாம் செயற்­பட்டோம் என்று மாவை சேனா­தி­ராஜா எம்.பி. சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

கூட்­ட­மைப்பு தலை­வர்­களின் இத்­த­கைய கருத்­துக்கள் பிர­த­ம­ருடன் இணக்கம் காணப்­பட்­ட­தாக கூறப்­படும் விட­யங்கள் உரி­ய­வ­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டுமா என்ற சந்­தே­கத்தை உரு­வாக்­கு­வ­தாக அமைந்­துள்­ளன. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே ஆத­ரவு என்ற எதிர்­பார்ப்பு எழுந்­தி­ருந்­தது. இந்த நிலையில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விட­யத்தில் வெளிப்­படைத் தன்­மை­யுடன் செயற்­பட்டு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பது தொடர்பில் எழுத்­து­மூ­ல­மான உறு­தி­மொ­ழி­களை பெற்று நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தலை­மை­யிடம் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இத்­த­கைய நிலை­யில்தான் பிர­த­ம­ருடன் கூட்­ட­மைப்­பினர் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இத­னை­ய­டுத்தே பிர­தமர் எழுத்­து­மூ­ல­மான உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­யுள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தது. ஆனால், தற்­போது அதனை கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரே மறுத்­தி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. எனவே, தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது ஸ்தம்பிதமடைந்துள்ள இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகின்றது.

பிரதமருடன் கூட்டமைப்பினர் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளபோதிலும் ஜனாதிபதி மைத்திரி­பால சிறிசேனவின் ஒத்துழைப்பின்றி இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவது கடினமான காரியமாகவே இருக்கும். தமிழ் தேசியக்கூட்டமைப்பானது பிரதமருடன் கலந்துரையாடி எழுத்து­மூலமான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதா என்று ஜனாதிபதியிடம் கடந்த வெள்ளிக்கிழமை கேட்கப்பட்டபோது அதுகுறித்து தான் அறிந்திருக்கவில்லை என்று அவர் பதிலளித்திருந்தார்.

எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் தொடர்ச்சியான கலந்துரை­­­­­­­­யாடல்களை மேற்கொண்டு அதற்கான ஆக்கபூர்வ­மான நடவடிக்கைகளை கூட்டமைப்பினர் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் தான் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒருவகையில் தீர்வினைக் காணக்கூடிய நிலமை உருவாகும் என்பதனை சுட்டிகாட்ட விரும்புகிறோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.