Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு – கிழக்கு பிரச்­சி­னையின் யதார்த்தம்

Featured Replies

வடக்கு – கிழக்கு பிரச்­சி­னையின் யதார்த்தம்

 

ஈழத்தில் தொடக்கப்­பட்ட பிரி­வினைப் போராட்­டத்தை இந்­தியா எப்­போதும் விடு­தலைப் போராக ஏற்­க­வில்லை. ஈழத்­த­மிழர் இந்த கண்­ணோட்­டத்­தோடு இவற்றை அணு­கு­வது மிகப்­பெரும் குறை­பாடு. 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்­திய– இலங்கை ஒப்­பந்­தத்தின் முதல் விடயம் இலங்கை ஒரு­மித்த நாடாக இருக்க வேண்டும் என்­பதால் தனி ஈழ எண்­ணத்தை இந்­தியா எப்­போதும் ஆத­ரிக்­க­வில்லை என்று இந்­திய இரா­ணுவ ஓய்வு நிலை புல­னாய்வு நிபு­ணரும் எழுத்­தா­ள­ரு­மான கேர்ணல் ஆர்.ஹரி­ஹரன் அண்­மையில் பேட்­டி­ய­ளித்­தி­ருந்தார்.

அப்­ப­டி­யானால் ஈழம் என்­பதும் பிரி­வினை என்­பதும் இந்­தி­யா­வுக்கு முன்பே தெரிந்­தி­ருப்­ப­தா­கவே அர்த்­த­மா­கி­றது. ஈழத்தமிழர் இந்த கண்­ணோட்­டத்­தோடு இவற்றை அணு­கு­வது மிகப்­பெரும் குறை­பாடு எனவும் ஹரி­ஹரன் கூறி­யி­ருப்­பது இதையே ஊர்­ஜி­தப்­ப­டுத்­து­கி­றது. இதை இந்­தியா எப்­போதும் விடு­தலைப் போராக ஏற்­க­வில்லை என அவர் கூறி­யி­ருப்­பதன் கருத்து என்ன? வடக்கு– கிழக்கு தமி­ழரின் தனி இறை­மை­யையும் சுய­நிர்­ண­யத்­தையும் ஏற்­காமல் பேரின ஒற்­றை­யாட்­சிக்குள் அவர்­களை இருக்க வைப்­ப­தே­யாகும். இதி­லி­ருந்து மீள முயல்­வது விடு­த­லைப்போர் அல்ல எனக்­கூ­ற­லாமா?

முன்பு மலை­யகத் தமி­ழரின் பிர­ஜா­வு­ரிமை விட­யத்தில் இந்­தியா அதைத் தீர்த்து வைத்­தது போன்றே வடக்கு– கிழக்கு தமி­ழர்­க­ளி­னதும் நெருக்­க­டிகள் தீர்க்­கப்­பட்டு சம உரி­மை­யோடு வாழ ­வேண்டும் என்­பதே இந்­தி­யாவின் நிலைப்­பாடு எனவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

மலை­யக இந்­திய வம்­சா­வளி தமிழ் தோட்டத் தொழி­லா­ளரின் பிரச்­சினை வேறு, வடக்கு– கிழக்கு தமிழ் மக்­களின் விடயம் வேறு. எனவே, இரண்டும் சமம் எனக் கரு­தி­யி­ருக்­கப்­படக் கூடாது. 1949 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனா­நா­யக்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் தமது பிர­ஜா­வு­ரி­மையை இழந்த மலை­யக இந்­திய வம்­சா­வளி தமிழ் தோட்டத் தொழி­லா­ளர்கள் 1964 ஆம் ஆண்டு அதா­வது 15 ஆண்­டுகள் கழித்து ஸ்ரீமா– சாஸ்­திரி ஒப்­பந்­தத்­தின்கீழ் இந்­தி­யா­வுக்கு பாதிப் பேர், இலங்­கைக்கு பாதிப் பேர் என ஏற்­கப்­பட்டு பிர­ஜா­வு­ரிமை பெற்­றார்கள். இது இந்­திய– இலங்கை அர­சு­களின் தய­வினால் வழங்­கப்­பட்­ட­தாகும்.

எனினும் வடக்கு– கிழக்கு தமி­ழர்கள், பூர்­வீகத் தமி­ழர்கள், வடக்கு தமி­ழர்கள், வர­லாற்று ரீதியில் ஆட்சி புரிந்­த­வர்கள், 500 ஆண்­டு­க­ளுக்கு முன் போர்த்­துக்­கே­ய­ரிடம் ஆட்­சியை இழந்து 1833 ஆம் ஆண்டு ஆங்­கி­லே­யரால் ஒற்­றை­யாட்­சிக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள் அந்த வகை­யில்தான் 1972 ஆம் ஆண்டு சிங்­களப் பேரின யாப்பின் கார­ண­மாக அவர்கள் தமது இறை­மை­யையும் சுய­நிர்­ண­யத்­தையும் இழந்­து­விட்­ட­தாகக் கூறி அவற்றை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­மாறு கோரு­கி­றார்கள்.

1948 ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் இலங்­கைக்கு டொமி­னியன் சுயா­தீ­னத்தை வழங்­கி­ய­போது பல்­லின யாப்பை இயற்றி சிறு­பான்மைக் காப்­பீ­டான 29 ஆம் ஷரத்­தையும் வழங்­கி­யி­ருந்­தனர். அதி­லி­ருந்த சில குறை­பா­டு­களைத் தவிர்க்­கவே 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா சமஷ்டிக் கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்தார். எனினும் பெரும்­பான்மை சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள் அவ­ரோடு ஒப்­பந்தம் செய்து ஏமாற்­றி­னார்கள். அவை பண்டா – செல்வா ஒப்­பந்தம் (1957), டட்லி– செல்வா ஒப்­பந்தம் (1965) ஆகி­ய­வை­க­ளாகும்.

இந்­நி­லை­யில்தான் 1972 ஆம் ஆண்டு சிங்­கள மக்கள் மட்­டுமே கூடி, தமது மத, சாசன மொழி ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் யாப்பை இயற்­றிக்­கொண்டு சிறு­பான்மைக் காப்­பீ­டான 29 ஆம் ஷரத்­தையும் நீக்­கி­னார்கள். இதன் கார­ண­மா­கவே தந்தை செல்வா 1976 ஆம் ஆண்டு சமஷ்டிக் கோரிக்­கையைக் கைவிட்­டு­விட்டு வட்­டுக்­கோட்­டையில் வடக்கு – கிழக்கின் தனி இறைமை, சுய நிர்­ணயக் கோரிக்­கை­களைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தினார். 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த சட்­ட­பூர்வ பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் கூட தமிழ் மக்­களின் ஆணையை வடக்கு, கிழக்கில் பெற்றார். எனவே, மலை­யக விட­யத்­தையும் வடக்கு – கிழக்கு விட­யத்­தையும் சம­மாக நோக்க முடி­யாது.

எனினும் வடக்கு – கிழக்கு தமிழர் வழங்­கிய அந்த ஆணை வடக்கு, கிழக்­குக்கு முஸ்­லிம்­களை உட்­ப­டுத்­த­வில்லை. ஏனெனில் இத்­த­கைய நோக்­கத்­துக்­காக அவர்கள் வாக்­க­ளித்து ஆணை வழங்­க­வில்லை.

அந்த வகையில் இந்­தியா இதைப் புரிந்­து­கொண்டு தமி­ழ­ரையும் முஸ்­லிம்­க­ளையும் பேச வைத்து ஒரு தீர்­வுக்­கு ­கொண்டு வந்­தி­ருக்க வேண்டும். வடக்கு – கிழக்கு முஸ்­லிம்­களைப் புறக்­க­ணித்­து­விட்டு சிங்­க­ள­வ­ரையும் தமி­ழ­ரையும் மட்­டுமே பேச வைத்­தி­ருக்கக் கூடாது. ஏனெனில் சமஷ்டி கோரிக்­கை­யின்­போதும் வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்­தின்­போதும் முஸ்­லிம்­களின் அர­சியல் தனித்­துவம் முடக்­கப்­ப­ட­வில்லை. 1957 ஆம் ஆண்டு திரு­மலை மாநாட்டில் கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு அதி­கார அலகு எனும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு பண்டா– செல்வா ஒப்­பந்­தத்­திலும் இடம்­பெறச் செய்­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்டை மட்­டத்தில் அஷ்­ரபும் கலந்­து­கொண்டு ஆத­ரித்துப் பேசி­யி­ருந்தார்.

எனினும் ஆயுதம் தாங்­கிய தமிழ்ப் போரா­ளிகள் முஸ்­லிம்­களின் தனித்­து­வத்தை முடக்­கி­னா­லன்றி தமது தனித்­து­வத்தை நிலை நாட்ட முடி­யாது எனக் கரு­தி­னார்கள். இதுவே தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு மட்டும் பேசி இந்­தியா முடிவு கண்­ட­தற்கும் கார­ண­மாகும். ஆயுதம் தூக்­காத தமிழ் தலை­வர்­களே முடக்­கப்­பட்­டனர் என்றால், முஸ்­லிம்கள் எம்­மாத்­திரம்?

முஸ்­லிம்­க­ளிடம் வின­வாமல் தற்­கா­லி­க­மாக எனக் கூறிக்­கொண்டு கிழக்கை வடக்­கோடு இணைத்­து ­விட்டு நிரந்­த­ரமா? இல்­லையா? என்­ப­தற்கு கிழக்கில் சர்­வஜன வாக்­கெ­டுப்பு என்­றார்கள். கிழக்கில் தமிழ், முஸ்­லிம்கள், சிங்­கள சமூ­கங்கள் மூன்றும் சம­மாக வாழ்­கையில் சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நிகழ்ந்தால் என்­ன­வாகும்? இணைப்­புக்கு முஸ்­லிம்கள் வாக்­க­ளித்தால் தமி­ழ­ருக்கு வாய்ப்­பாகும் என்­றாலும் கூட சிங்­க­ள­வர்­களால் முஸ்­லிம்­க­ளுக்கு ஆபத்­தா­கி­விடும். அதுபோல் பிரிந்­து­போக வாக்­க­ளித்தால் தமி­ழர்­களால் முஸ்­லிம்­க­ளுக்கு ஆபத்­தா­கி­விடும்.

இணைப்­புக்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு இல்லை. பிரிப்­புக்கு உண்டு. எனும் தீர்­மானம் முற்­றிலும் முஸ்­லிம்­க­ளுக்கு ஆபத்­தா­கவே அமைந்­தி­ருந்­தது. அந்த அள­வுக்கு முஸ்­லிம்கள் செல்­லாக்­கா­சா­கவே இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தால் கணிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

ஹரி­ஹ­ரனின் கூற்­றுப்­படி இந்­தி­யாவின் மூலோ­பா­யமும் தமிழ் ஆயுதப் போரா­ளி­களின் மூலோ­பா­யமும் வெவ்­வே­றா­ன­வை­யாக இருந்­தி­ருப்­பது தெளி­வா­கி­றது. அதா­வது இந்­தியா, வடக்கு– கிழக்கு தமி­ழர்­களை சிங்­க­ள­வர்­க­ளோடு சமத்­து­வ­மாக வாழ வைக்கும் எண்­ணத்தைக் கொண்­ட­தாக இருந்­தி­ருக்­கி­றது. எனினும் வடக்கு– கிழக்கு ஆயுதப் போரா­ளி­களின் மூலோ­பாயம் இந்­தி­யாவின் உதவி மூலம் தனி இறை­மை­யையும் சுய நிர்­ண­யத்­தையும் பெறு­வ­தா­கவே இருந்­தி­ருக்­கி­றது. ஆக ஒன்­றுக்­கொன்று முரண்­பட்­ட­தா­லேயே பிணக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

திம்­பு­விலும் பெங்­க­ளூ­ரிலும் இலங்கை அர­சையும் தமிழ் ஆயுதப் போரா­ளி­களை யும் இந்­தியா பேச வைத்­தது போன்று தீர்வு விட­யத்தில் கூட்­டப்­பட்டு இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வந்­தி­ருக்க வேண்டும். தனித் தனி­யாக இலங்கை அர­சி­டமும் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளி­டமும் பேசி முடிவு கண்­டி­ருக்கக் கூடாது. இது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டாக அமைந்து நிரந்­தரத் தீர்­வுக்கு இடை­யூ­றா­கி­ விடும். இந்­தியா – இலங்கை தமிழ் ஆயுதப் போரா­ளிகள், தமிழ் பொது மக்கள், முஸ்­லிம்கள் என ஐந்து தரப்­பி­னரும் கலந்து பேசி ஒரு முடி­வுக்கு வந்­தி­ருப்­பார்­க­ளாயின் சிறந்த பெறு­பே­று­களை அடைந்­தி­ருக்­கலாம். இந்­தியா எல்லைப் பாதுகாப்­பையும் இலங்கை உள்­நாட்டு பாது­காப்­பையும் உறுதி செய்­து­ கொண்­டன எனும் நிலை­யா­கவே 1987 ஆம் ஆண்டின் இந்­திய – இலங்கை ஒப்­பந்தம் அமைந்­தது. ஒரு நாட்­டுக்குள் இன்­னொரு நாடு வலுக்­கட்­டா­ய­மாகப் புகுந்து அந்த நாட்டின் யாப்­புக்குள் ஒரு ஷரத்தைத் திணிக்க முடி­யுமா? ஒரு ஷரத்து முழு யாப்பின் வடி­வத்­தையும் மாற்­றி­வி­டுமா? 13 ஆம் ஷரத்தைத் திணித்த இந்­தியா அமு­லாக்­க­லி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருக்க முடி­யுமா? இந்­தியா தமிழ்த் தரப்­பிடம் கேளா­மலும் தமிழ்த் தரப்பை உள்­ள­டக்­கா­மலும் இலங்­கை­யோடு இணக்கம் கண்டு கொண்டு அமு­லாக்­கத்தை இலங்­கை­யி­டமே வழங்கி இலங்­கையின் சார்­பாக தமிழ் ஆயுதப் போரா­ளி­களின் ஆயு­தங்­களைக் களைய முற்­ப­ட­லாமா?

தற்­போது இந்­தியா வழங்­கிய 13 ஆம் ஷரத்து சிங்­க­ள­வர்­க­ளுக்கும் பயன்­ப­டு­கி­றது. அதனால் உரு­வான மாகாண சபை­களில் இரண்டு மட்­டுமே தமி­ழர்­க­ளிடம் இருக்­கின்­றது. 7 சிங்­க­ள­வர்­க­ளிடம் இருக்­கின்­றது. காணி உரி­மையும் பொலிஸ் உரி­மையும் நீக்­கப்­பட்டு வெறும் உள்­ளூ­ராட்சி சபைகள் போல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆக இந்­தி­யாவை இலங்கை தந்­தி­ர­மாக சமா­ளித்­தி­ருக்­கின்­றது. சிங்­க­ளவர் இப்­போது 13 ஆம் ஷரத்தை அதி­க­மாக விரும்பி பொலிஸ் அதி­கா­ரத்­தையும் காணி அதி­கா­ரத்­தையும் கோரு­கி­றார்கள்.

இதை கார­ணம் ­காட்­டியே காணிக் கொள்­கை­யையும் பொலிஸ் அதி­கா­ரத்­தையும் மாகாண ரீதியில் பர­வ­லாக்­கினால் மத்­திய அரசு வலு­வி­ழந்­து­ விடும் என்­கி­றார்கள்.

13 ஆம் ஷரத்தில் இலங்கை, இந்­தி­யா­வுக்குத் தெரி­யாமல் கை வைக்க முடி­யாது. இது ஷரத்­துக்கு மட்­டு­மே­யான பாது­காப்­பாகும். புது யாப்பு இயற்­றப்­ப­டு­மாயின் இந்த கண்­டிப்பு இடம்­பெறும் என்­ப­தற்­கான உத்­த­ர­வாதம் இல்லை. எதிர்­கா­லத்தில் பிரி­யட்டும் என்­ப­தற்­கா­கவே வடக்கு – கிழக்கு இணைப்பு வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

ஆக 13 ஆம் ஷரத்­துக்­கா­கவே ராஜீவ் காந்­தியும், பிரே­ம­தா­ஸவும், லலித் அத்துலத் முத­லியும், காமினி திசா­நா­யக்­கவும், ரஞ்சன் விஜேரத்னவும் ஏரா­ள­மான அப்­பாவி பொது மக்­களும் புலி­களும் படை வீரர்­களும் இந்­திய வீரர்­களும் அழிந்­தி­ருக்­கி­றார்கள். 30 வருட யுத்­தத்தில் பாரிய உயிர், உடைமை சேதங்கள் ஏற்­பட்டு ஐ.நா. விடமும் சர்­வ­தே­சத்­தி­டமும் போர்க்­குற்­றமும் மனித உரிமை மீறல் குற்­றமும் சாட்­டப்­பட்டு இலங்கை தனி­மைப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்­கையை சீனா­வி­டமும் நெருக்­க­மாக்­கி­விட வைத்­து­விட்­டது.

உலக வங்­கி­களின் நாலாம் இடத்தை சீனா வகிக்­கி­றது. அதன் பெரிய வங்­கியின் கிளை இப்­போது இலங்­கையில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்­கையில் இந்­தியத் திட்­டங்கள் முடக்கம். சீனத் திட்­டங்கள் தீவிரம். இதனால் இந்­தியா அதி­ருப்­திக்கு உள்­ளாகி தனது முக்­கிய பிர­தி­நி­தியை இலங்­கைக்கு அனுப்­பி­யுள்­ள­தாக ஒரு சமீ­பத்­திய செய்தி குறிப்­பி­டு­கி­றது.

ஆக 13 ஆம் ஷரத்தை வலுக்­கட்­டா­ய­மாகத் திணித்த இந்­தியா அதை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த எந்த அழுத்­தங்­க­ளையும் கொடுக்­க­வில்லை. காணி உரி­மையும் பொலிஸ் உரி­மையும் நீக்­கப்­பட்டு வடக்கும் கிழக்கும் பிரிக்­கப்­பட்டு உள்­ளூ­ராட்சி சபை போல் ஒன்­ப­தாக ஆக்­கப்­பட்டு சிங்­கள மக்­க­ளுக்கும் வழங்­கப்­பட்ட போதும் மூச்சு விட­வில்லை. இந்­தி­யா­விடம் 13 க்கும் அதி­க­மாக தேட்டீன் பிளஸ் வழங்­கு­வ­தாகக் கூறியே மஹிந்த யுத்­தத்­திற்கு இந்­தி­யாவின் உத­வியைப் பெற்று வென்றார். அந்த வாக்­கு­றுதி கிடப்பில் போடப்­பட்­டதால் 13 ஆம் ஷரத்தே தொடர்ந்தும் நீடித்துக் கொண்­டி­ருக்­கி­றது. அதிலும் இந்­தியா அழுத்தம் கொடுக்­க­வில்லை.

இந்­நி­லையில் இப்­போது சந்­தி­ரிகா தனது ஆட்­சியில் முன்­வைத்­தி­ருந்த பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் எனும் முறையை சிபா­ரிசு செய்து ஹரி­ஹரன் இவ்­வாறு கூறு­கிறார். அதா­வது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தேசிய பிரச்­சினை தீர அர­சியல் சாசன திட்­ட­மொன்றை வரைவு செய்­தி­ருந்தார். அது மிகவும் அரு­மை­யான தீர்வுத் திட்டம். அது அமு­லா­கா­மற்­போ­னது து­ரதிர்ஷ்டம். ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின் அந்த வரைவை முழு­தாக நடை­மு­றைப்­ப­டுத்தக் கோரு­மாறு தமிழ்த் தலை­வர்­க­ளிடம் வேண்டிக் கொள்­கின்றேன். புதிய யாப்பை இயற்­று­வதை விடவும் இடைக்­கால அறிக்கை மூலம் குழப்­பங்கள் ஏற்­ப­டு­வதை விடவும் தயா­ரா­க­வுள்ள அதில் சில மாற்­றங்­களை செய்து அமுல்­ப­டுத்­தலாம். இன்றேல் இவ்­வி­டயம் இழு­ப­றி­யா­கவே இருக்கும் என ஹரி­ஹரன் குறிப்­பிட்­டுள்ளார்.

முன்பு சந்­தி­ரிகா ஜனா­தி­ப­தி­யாக இருந்­து­கொண்டு அந்த வரை­வைக்­கொண்டு வந்­த­போது பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க அதற்கு தீ மூட்டிக் கொளுத்­தி­யி­ருந்தார். இப்­போது மைத்­திரி ஆட்­சியில் சந்­தி­ரிகா தேசிய சக­வாழ்­வுக்குப் பொறுப்­பா­ள­ராக இருக்­கிறார்.

அந்த வகையில் சந்­தி­ரி­காவின் பிராந்­திய ஒன்­றி­யத்தை நடை­மு­றைப்­ப­டுத்த இதுவே தக்க தரு­ண­மாகும். இன்­றைய அரசின் பிர­த­ம­ராக ரணில் இருப்­பதால் எந்த எதிர்ப்பும் இருக்­காது என்று கூற­லாமா? பிராந்­திய ஒன்­றி­யத்தில் வடக்­கையும் கிழக்­கையும் பிரிக்­கா­மலும் இணைக்­கா­மலும் தமிழர் அதி­க­மாக வாழும் பகுதி வட­கி­ழக்கு எனவும், முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழும் பகுதி தென்­கி­ழக்கு எனவும் இருந்­தது. எனினும் ரணிலின் எதிர்ப்­பினால் இது நடை­மு­றை­யா­க­வில்லை. ஒலு­விலில் காணப்­படும் முஸ்லிம் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பெயரில் மட்­டுமே தென்­கி­ழக்கு பல்­க­லைக்­கழகம் எனும் பெயர் காணப்­ப­டு­கி­றது.

1999 ஆம் ஆண்டு சந்­தி­ரிகா ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது ஜீ.எல்.பீரிஸும், நீலன் திருச்­செல்­வமும் இணைந்து அஷ்­ரபின் உத­வி­யோடு அது இயற்­றப்­பட்­டது. இப்­போது வடக்­கையும் கிழக்­கையும் இணைக்கும் முயற்சி வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­ற­போது பழை­யதை வலி­யு­றுத்­து­வது விட­யத்தை மீண்டும் இழுத்­த­டிப்­ப­தாக ஆகிவிடுமே. வடக்கும் கிழக்கும் இணைந்து நிலத் தொடர்பற்ற முஸ்லிம் அலகு என்றார்கள், கிழக்கில் மட்டும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் அலகு என்றார்கள், அம்பாறை மாவட்டத்துக்குள் மட்டும் முஸ்லிம் அலகு என்றார்கள், ஆக வட கிழக்கும் தென்கிழக்கும் சம அளவு பிரதேசங்களா?

வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக இணைப்பதாயின் முஸ்லிம்களுக்குத் தனியான அதிகார அலகு வேண்டும் என அஷ்ரப் கோரினார். அந்த தீர்வை இந்தியா ஏற்றுக் கொண்டிருக்குமாயின் ஒரு இலகுவான தீர்வு கிடைத்திருக்கும். தந்தை செல்வாவும் 1957 ஆம் ஆண்டு அதை ஏற்றுக்கொண்டு பண்டா – செல்வா ஒப்பந்தத்திலும் இடம்பெறச் செய்திருந்தார். தற்போதும் கூட அதனை சம்பந்தன் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதுவே இலகுவான ஏற்பாடாகும்.

பிராந்தியங்களின் ஒன்றியம் எனக் கூறப்படுகின்றபோது தாமும் ஒரு பிராந்திய மட்டத்திலா? என சிங்கள மக்கள் எதிர்க்கக் கூடும். அன்று ரணில் எடுத்த நிலைப்பாட்டை மஹிந்த இப்போது எடுக்கக்கூடும்.

மத்திய அரசு பேரின வடிவத்தைப் பெற்றிருக்குமாயின் ஒருபோதும் மாநில சமஷ்டி வலிமை பெறாது. பிராந்தியங்களின் ஒன்றியமாயினும் மத்திய பேரின யாப்பில் சாத்தியப்படாது. எனவே, மென்மேலும் தக்க ஆய்வுகளோ, திட்டங்களோ, உரிய முறைகளோ இல்லாமல் பொருத்தமற்ற தீர்வுகளை அவசர அவசரமாகக் கொண்டு வந்து சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தாது நிரந்தரமான தெளிவான தீர்வொன்றையே அனைவரும் அடைந்துகொள்ள வேண்டும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.