Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

Featured Replies

அமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

அமெரிக்காவும் வட கொரியாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடிவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க மத்திய புலானாய்வு முகமையின் இயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம்முடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியாங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகள் குறித்த சந்திப்புகள் ஈஸ்டர் சமயத்தில் நடைபெற்றன.

உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் ஒப்புக் கொண்டார்.

ஃபுளோரிடாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வரவேற்று பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

உயர்மட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த அவர், கிம் ஜாங் உன்னுடனான சந்திப்புக்கு ஐந்து இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி மற்றும் வட கொரியாவின் அண்டை நாடான ஜப்பானுக்கு இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் இல்லாமல் போகலாம் என ஜப்பானில் அச்சங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவும் வட கொரியாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடிவுபடத்தின் காப்புரிமைAFP

டிரம்ப் மற்றும் அபேவுக்கு இடையில் சுமுகமான உறவு தொடர்ந்து வருகிறது. டிரம்ப் இரண்டாவது முறையாக அபேவை தனது ’மார் அ லாகோ’ ஓய்வு விடுதிக்கு அழைத்துள்ளார். அதில் அவர்கள் கோல்ஃப் விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தலைவர்கள் மீதும் பல்வேறு விசாரணைகள் உள்ள நிலையில், இது ஒரு ஒய்வு நேரம் என கூறலாம். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணை, தன்னுடன் பாலியல் தொடர்பு வைத்து கொண்டதாக ஆபாசப் பட நடிகை தெரிவித்த புகார், முன்னாள் மத்திய புலானாய்வு தலைவர் கூறிய குற்றச்சாட்டுகள் என அடுக்கடுக்கான விசாரணைகள் டிரம்ப் மீது உள்ளன.

சர்ச்சைக்குரிய தேசியவாத குழு ஒன்றிற்கு, அரசுக்கு சொந்தமான இடம் ஒன்றை சந்தை விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்றதாக அபே மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த சந்திப்பு எப்போது நடைபெறும்?

நேரடியான பேச்சுவார்த்தைக்கு வட கொரியா விடுத்த அழைப்பை அமெரிக்கா ஒப்புக் கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

இதுவரை அமெரிக்க அதிபர்கள் வட கொரிய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்லை.

இந்த பேச்சுவார்த்தை ஜூன் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

வட கொரியா பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது,மேலும் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா தடைகளை மீறுவது ஆகியவற்றிற்குகாக தனித்து விடப்பட்டது.

இதுவரை ஆறு அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது மேலும் அமெரிக்காவை தாக்க கூடிய ஏவுகணைகளையும் வட கொரியா வைத்துள்ளது.

ஆனால் இந்த வருடம் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொியா பங்கேற்றது பிற நாடுகளுடனான நல்லுறவுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இருந்தது.

https://www.bbc.com/tamil/global-43805748

  • தொடங்கியவர்

வட கொரியாவுக்கு ரகசிய பயணம்: சிஐஏ தலைவருக்கு டிரம்ப் பாராட்டு

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியோங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மைக் பாம்பேயோ, கிம் மற்றும் டிரம்ப்படத்தின் காப்புரிமைREUTERS

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகள் குறித்த சந்திப்புகள் கடந்த ஏப்ரல் முதல் தேதி அளவில் நடைபெற்றதாக பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவோடு உயர் நிலை பேச்சுவார்த்தைகள் நடத்துவது பற்றி அதிபர் டிரம்ப் முன்னரே குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்க்காத இந்த ரகசிய கூட்டம் 2000ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையில் நடைபெறும் உயர் நிலை பேச்சுவார்த்தையாக அமையும்.

"உயர் மட்ட அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினோம்" என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வரவேற்ற ஃபுளோரிடாவில் இருந்து டிரம்ப் அறிவித்தார்.

1950-53 வரை நடைபெற்ற கொரிய போர் முடிவுக்கு வந்த பின்னர் வட மற்றும் தென் கொரியா நாடுகள் முறையாக அமைதி ஒப்பந்தம் ஒன்றை விவாதிக்க கூறியுள்ளதாக அதிபர் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

இந்த மோதலின் முறையான தீர்வை தொடர தயாராக இருப்பதை தென் கொரியாவும் குறிப்புணர்த்தியுள்ளது.

தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன்னும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பின் ஒரு சில பகுதிகளை நேரலையில் ஒளிபரப்புவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன என்று தென் கொரிய அரசு செய்தி நிறுவனமான யோன்ஹோப் தகவல் வெளிட்டுள்ளது.

ரகசிய சந்திப்பு

வட கொரிய தலைவர் கிம்படத்தின் காப்புரிமைAFP

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை ரகசியமாக சந்திக்க மைக் பாம்பேயோ வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை முதலில் "த வாஷிங்டன் போஸ்ட்" வெளியிட்டது.

ரெக்ஸ் டில்லர்சனின் பொறுப்பில் அதிபர் டிரம்ப், மைக் பாம்பேயோவை நியமித்த சில நாட்களுக்குள் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக இதை பற்றி நேரடியாக தெரிந்த, ஆனால் பெயர் சொல்ல விரும்பாத இருவர் இந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளனர்.

தங்களின் மூத்த அதிகாரிகளால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பின்னர் தெரிவித்தது. ஆனால், வெள்ளை மாளிகை இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

வரயிருக்கும் டிரம்ப், கிம் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதை தவிர மேலதிகமாக இவர்கள் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை.

வருகின்ற வாரங்களில் குடியரசு கட்சியினரால் கட்டுப்படுத்தப்படும் செனட் அவையில் அமெரிக்காவின் உயரிய தூதராக பாம்பேயோ உறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் இரு அவைகளின் செனட் வெளியுறவு குழு 5 மணிநேரம் நடத்திய கலந்தாய்வில் பாம்பேயோ தோல்வியுற்ற பின்னரும், இத்தகைய எதிர்பார்ப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் தொடர்பு

டிரம்ப் மற்றும் ஷின்சோ அபேபடத்தின் காப்புரிமைAFP

அமெரிக்கா வட கொரியாவோடு ராஜீய உறவுகளை ஏற்படுத்தி கொள்ளவில்லை. ஆனால், கடந்த காலத்தில் ராஜீய அதிகாரிகள் வட கொரியாவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

"பின்புற வழிகள்" என்று கூறப்படும் சிலவற்றை பயன்படுத்தி வட கொரியாவோடு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

2000ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலர் மடேலெய்னி ஆல்பிரட், தற்போதைய வட கொரிய தலைவரின் தந்தை கிம் ஜாங்-இல் சந்திப்புக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையில் நடைபெறும் உயர் நிலை பேச்சுவார்த்தை இதுதான்.

2014ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க தேசிய உளவுத்துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் இரண்டு அமெரிக்க குடிமக்களை விடுவிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்த ரகசிய பயணமாக வட கொரியா சென்றார்.

ஆனால், அப்போதைய பயணத்தில் வட கொரிய தலைவரை கிளாப்பர் சந்திக்கவில்லை.

இந்த சந்திப்பு எப்போது நடைபெறும்?

நேரடியான பேச்சுவார்த்தைக்கு வட கொரியா விடுத்த அழைப்பை அமெரிக்கா ஒப்புக் கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

இதுவரை அமெரிக்க அதிபர்கள் வட கொரிய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்லை.

இந்த பேச்சுவார்த்தை ஜூன் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

வட கொரியா பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது,மேலும் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா தடைகளை மீறுவது ஆகியவற்றிற்குகாக தனித்து விடப்பட்டது.

இதுவரை ஆறு அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது மேலும் அமெரிக்காவை தாக்க கூடிய ஏவுகணைகளையும் வட கொரியா வைத்துள்ளது.

ஆனால், இந்த வருடம் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொியா பங்கேற்றது பிற நாடுகளுடனான நல்லுறவுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இருந்தது.

https://www.bbc.com/tamil/global-43812384

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடகொரியாவோடை தேத்தண்ணி குடிக்கப்போற நேரம்.....ஈரானோடை விருந்துபசாரம் செய்தாலே அமெரிக்காவுக்கு முக்காவாசி தலையிடி குறையும். சவூதியையும் அடக்கினமாதிரி இருக்கும். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.