Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசில கட்சிகளும் சூழல் மாசடைதளும்

Featured Replies

அரசில கட்சிகளும் சூழல் மாசடைதளும்

சுற்றுச் சூழலின் மாசடைதல் பற்றி அரசாங்கம் கவலைப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கவலைப்படுகின்றன. பத்திரிகை நிறுவனங்கள் கவலைப்படுகின்றன. நடுத்தெருவில் குப்பை கொட்டி விட்டுப் போகிறவர்களுங் கூடத் தான் கவலைப்படுகிறார்கள். ஆனாலும், என்ன நடந்திருக்கிறது? தோட்டத்துக் குப்பையிலிருந்து உரமும் வேண்டுமானால் எரிபொருளும் தயாரிக்கலாம் என்றும் பொலித்தீன் தாள்களை மீள் சுழற்சி செய்து பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்றும் வீசி எறிகிற ஒவ்வொன்றையும் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்றும் விஞ்ஞானிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் முதலாகப் பல்வேறு தகுதிகளையுடையவர்களும் எல்லாவற்றையும் விடப் பெரிய தகுதியான பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகுதி உள்ளவர்கள் வரை எல்லாரும் என்னென்னவோ எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் எதையெதையோ செய்தும் இருக்கிறார்கள். ஆனாலுஞ் செய்வதற்கு எளிதில் இயலுமான ஒரு சில காரியங்களே எத்தனையோ ஆண்டுகளாகச் செய்யப்படவில்லை.

அரசியற் பிரசாரத்துக்குப் பொலித்தீன் கொடிகளும் பதாகைகளும் தடை செய்யப்படுவது பற்றி ஏறத்தாழ ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் சொல்லப்பட்டிருக்கிறது. இனிவரும் தேர்தல்களில் பொலித்தீன் கொடிகள் கட்டப்பட மாட்டா என்று தேர்தலுடன் தொடர்புடைய அரச நிருவாகிகள் உட்பட, அரசியல் தலைவர்கள் வரை எல்லாருந் தான் சொல்லியிருக்கிறார்கள். பொலிஸ் தரப்பிற் கூடக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதெல்லாம் "நாளை முதல் குடிக்க மாட்டேன்" என்கிற வாக்குறுதிகள் போலத் தான்.

இது நடைமுறைப்படுத்த இயலாத ஒன்றல்ல என்பதற்கு நமது அண்டை நாட்டின் தென் மாநிலம் ஒன்று (நிச்சயமாகத் தமிழ் நாடு இல்லை) சான்றாக இருந்தது. 2001 ஆம் ஆண்டு கேரளத்திற்குப் போயிருந்தேன். அங்கு ஒரு பெரிய நகரத்திலும் ஒரு சிறிய நகரத்திலும் சில நாட்கள் தங்கியிருந்தேன். மிகவும் துப்புரவான தெருக்கள். யாரும் வீதியோரமாகக் குப்பை கொட்டியிருக்கவில்லை. வடக்குத் தெற்காக முந்நூறு கிலோமீற்றர் ரயில் பயணத்தின் போது எத்தனையோ ஆறுகளைக் கடந்தேன். ஒன்றிலாவது நீர் கலங்களாகத் தெரியவில்லை. ஒரு கடையில் மட்டும் கொஞ்சம் தடிப்பான பொலித்தீன் பையிற் பொருட்களைப் போட்டுத் தந்தார்கள். மற்றப்படி எங்குமே காகிதப் பைகள் தான். சிறப்பு அனுமதியுடன் மட்டுமே பொலித்தீன் பைகளைப் பாவிக்கலாம்.

தமிழகத்தில் தேர்தல் காலங்களில் கம்பங்களை நடும் போது கறையான் ஏறாமல் குழிக்குள் ஒரு பெரிய பொலித்தீன் தாளை வைத்து அதனுள் கம்பத்தின் அடிப்பகுதியை நிறுத்திப் பொலித்தீன் தாளை சூழ மண்ணை இட்டு நிரப்புவார்கள். வேலை முடிந்த பிறகு கம்பத்தை எடுத்துக் கொண்டு பொலித்தீன் தாளை மண்ணுடன் விட்டுவிடுவார்கள். இது மண் வளத்திற்குக் கேடானது.

எத்தனையோ ஆக்கினைகளைப் பொறுத்துக் கொண்ட தமிழ் மண் தானே. இதையும் பொறுத்துக் கொண்டது. மலையாளிகளிடம் அவ்வளவு சகிப்புத் தன்மை இல்லை என்பதால் அப்படியெல்லாம் பொலித்தீன் தாள்களைப் பாவிக்க அனுமதி இல்லை.

நான் மலையாளி இல்லை. எனவே, என்னாற் பெருமைப்பட இயலவில்லை. மனிதன் என்பதால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தேன். மெச்சக் கூடிய விடயம் என்பதால் சந்தித்த சிலரிடம் அதைப் பற்றி சொல்லி வைத்தேன். இரண்டே ஆண்டுகள் பின்பு நான் சொல்லி வைத்த ஒருவருடன் கேரளத்துக்குப் போக நேர்ந்தது. திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து கோவளம் கடற்கரை நோக்கிப் பயணமான போது வீதியின் இரு கரையிலும் இருந்த அகலமான கான்களிலெல்லாம் பொலித்தீன் பைகள் குப்பையாக கிடந்தன.

இரண்டே ஆண்டுகளில் ஒரு சமுதாயம் இப்படித் தலைகீழாக மாற முடியுமா என்று கற்பனை செய்ய முதலிற் கடினமாக இருந்தது. பிறகு, இலங்கையில் 1977 க்குப் பின்பு ஏற்பட்ட மாற்றங்களை நினைத்துப் பார்த்தேன். இரண்டு ஆண்டுகளே அதிகம் என்று விளங்கியது. ஆனாலும் அது எப்படி நடந்தது என்று விசாரித்தேன். 2002 ஆம் ஆண்டு நடந்த மாநிலத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டது. முதலில் ஆட்சியிலிருந்தது இடதுசாரி முன்னணி. அவர்களைப் பற்றிய எனது அதிருப்தி எவ்வளவு இருந்த போதும், சில விடயங்களில் அவர்கள் மாற்றுக் கட்சியினரை விடக் கூடிய சமூக அக்கறையுடன் செயற்படுகின்றனர் என்பதையும் அறிவிக்கப்பட்ட கொள்கைகளில் சிலவற்றையேனும் நடை முறைப்படுத்துகிறார்கள் என்பதையும் ஏற்கிறேன். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு இல்லாமற் போன ஒரு விடயம், பொலித்தீன் பைகள் மீதான தடை.

எந்தக் கட்சி என்பதை விட எந்த வர்க்கத்தினரின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஆட்சி என்பது முக்கியமானது. இந்தியப் பாராளுமன்றக் கம்யூனிஸ்டுக்களிடம் இன்னமும் அவர்களது பழைய கொள்கைகளிலிருந்து நல்ல விடயங்கள் ஒன்றிரண்டு ஒட்டிக் கொண்டிருப்பதாலே அவர்கள் மீதான சில சமூக அழுத்தங்களோ என்னவோ, சில விடயங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கும் அவர்களது ஆட்சிக்கும் வேறுபாடு தெரிகிறது. தமிழகத்தில் யார் ஆண்டாலும் எவர் கையிற் பணம் குவிகிறது என்பதை விட்டால் வேறு எந்த வித்தியாசமும் இல்லை. நம்முடைய நிலைவரமும் பெருமளவும் அப்படியாகி விட்டது.

இவ்வருட முதலில் பொலித்தீன் பைகள் பற்றிய ஒரு தடையுத்தரவு பற்றிக் கோள்விப்பட்ட போது வியப்புடன் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. எனினும், விவரங்களைக் கேள்விப்பட்ட போது மகிழ்ச்சி கொஞ்சங் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. ஏனெனில், தடை குறிப்பிட்ட தரப்பிற்கு குறைவான பொலித்தீன் தாள்கள் மீதும் அவற்றாலான பைகள் மீதுமே தடை என அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு மேலும் மூன்று மாத அவகாசம் வழங்கப்பட்டது. என்னுடைய மனதில் உறங்கிக் கொண்டிருந்த சந்தேகப் பிறவி நித்திரை விட்டெழும்பிப் பலவாறான கேள்விகளைக் கேட்கத் தொடங்கியது.

தடித்த தாள்களைப் பயன்படுத்துவதால் பொலித்தீன் பாவனை கூடுமேயொழியக் குறையாதே! கடந்த தாள்களை மீள் சுழற்சிக்குட்படுத்தலாமென்ப

தலை எல்லாம் சூழலை பற்றி கதைக்க வந்திட்டார் காலமய்யா காலம்

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.