Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி.

Featured Replies

கூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி.

EPDP-TNA.jpg?resize=750%2C400

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

 

 ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன எனவும் தேவை எனில் அவற்றை வெளியிட நாம் தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

 
வாக்குறுதிகளை தந்தனர். 
 
உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுற்ற பின்னர் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்.மத்தியகல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்பொழுது வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும்  யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளை கூட்டமைப்பு எடுத்துக்கொள்வதெனவும் தீவகத்திலுள்ள மூன்று சபைகளையும் எமக்கு விட்டு தருவதாகவும்,  வாக்குறுதிகளை வழங்கினார்கள்.
 
பகைமையை மறப்போம் என்றார்கள். 
 
அத்துடன் கடந்த கால பகைகளை மறக்க அவர்கள் கோரியிருந்தனர்.
சாவகச்சேரி நகரசபையில் எமது ஆதரவை பெற்ற பின்னர் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனும் இதையே கூறியிருந்தார்.  ஆனால் அதனையெல்லாம் மறந்து நாம் ரத்தம் சிந்திய தீவகப்பகுதிகளை கைப்பற்ற எமக்கு எதிராக அவர்கள் களமிறங்கினார்கள்.
 
அதற்காக கூட்டமைப்புடன் நாம் பகைமை காட்டப்போவதில்லை. மக்களிற்கான சேவைகளை ஆற்ற ஒத்துழைப்போம். ஈபிடிபியுடன் கூட்டமைப்பினர்  எவரும் பேசவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போது ,
 
தொலைபேசியில் பேசினார்கள். 
 
எமது கட்சியின் செயலாளர் டக்ளஸின் தொலைபேசி மாதாந்த சிட்டையை காட்டத்தயார். வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் என பலர் பேசியிருந்தனர்.
 
ஒவ்வொருவரும் நாட்கணக்கில் மாறி மாறி பேசிக்கொண்டேயிருந்தனர்.எமது உறுப்பினரான முடியப்பு ரெமீடியஸ் வீட்டிற்கு தான் தேடி நேரே வரவாவென எம்.ஏ.சுமந்திரன் கேட்டார். அதற்கு ரெமீடியஸ் மறுத்துவிட்டார்.
 
எங்களிடமும் பலரும் தொடர்ந்தும் உதவி கேட்டு தொலைபேசி வழியே அழைத்தனர். செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் நாடாளுமன்றில் நேரடியாக இவர்கள் உதவி கேட்டனர்.
 
கூட்டமைப்பினருக்கு சபைகளை கைப்பற்ற நாம் தேவை.ஆனால் மக்களிடம் ஈபிடிபியிடம் ஆதரவு கேட்டமைபற்றி தெரியக்கூடாதென இரட்டை வேடம் போடுவதாக மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/75676/

  • தொடங்கியவர்
 
 
 

ஈபி­டி­பி­யி­டம் ஆத­ரவு கேட்­டது  ‘டீல்’ அல்ல -ரெலோ !!

உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெரும்­பான்மை ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றிய இடங்­க­ளில் அது ஆட்சி அமைக்க ஆத­ரவு தரு­மாறு ஈபி­டி­பி­யி­டம் கோரி­யமை ‘‘கோட்­பாட்டு அர­சி­யலே’’ தவிர அது கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான ‘‘டீல்’’ அல்ல.

இவ்­வாறு தெரி­வித்­தார் ரெலோ கட்­சி­யின் செய­லா­ளர் ந.சிறிகாந்தா. “டீல் பேசு­கின்ற அர­சி­யல் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அக­ரா­தி­யி­லேயே இல்லை’’ என்­றும் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள சபை­க­ளில் தாம் ஆட்சி அமைப்­ப­தற்­கா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் ஈபி­டி­பி­யின் தலை­வர்­க­ளு­டன் விடாது தொடர்ந்து தொலை­பே­சி­யில் பேசி வந்­தார்­கள் என்று அந்­தக் கட்­சி­யி­னர் தெரி­வித்­தி­ருந்­த­னர் என்று ஊட­கங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யாகி இருந்­தன. அதற்­குக் கருத்­துத் தெரி­விக்­கும் வகை­யி­லேயே சிறி­காந்தா இத­னைத் தெரி­வித்­தார்.

‘‘யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள சபை­க­ளில் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைப்­பது என்­றும் தீவ­கத்­தில் உள்ள மூன்று சபை­க­ளி­லும் ஈபி­டிபி ஆட்­சி­ய­மைப்­பது என்­றும் ‘டீல்’ பேசப்­பட்­டது. தாம் ஆட்­சி­ய­மைக்க ஆத­ரவு தரு­மாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எம்.ஏ.சுமந்­தி­ரன், மாவை சோ.சேனா­தி­ராசா மற்­றும் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் ஆகி­யோர் விடாது பேசி­னர். அதற்­கான ஆதா­ரங்­கள் எம்­மி­டம் இருக்­கின்­றன’’ என்று ஈபி­டி­பி­யின் யாழ். மாவட்ட அமைப்­பா­ளர் க.சிறீ­ரங்­கன் தெரி­வித்­தி­ருந்­தார் என்று ஊட­கச் செய்­தி­கள் கூறின.

இது தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கும் வகை­யில் ரெலோ­வின் செய­லா­ளர் நாய­கம் ந.சிறீ­காந்தா நக­ரில் உள்ள தனி­யார் விடு­தி­யில் நேற்­றுச் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார். சபை­க­ளில் ஆட்­சி­யைப் பிடிப்­பது தொடர்­பில் ஈபி­டி­பி­யு­டன் பேச்­சுக்­களை ஆரம்­பித்­த­வ­ரும் இவரே. நேற்­றைய சந்­திப்­பில் அவர் தெரி­வித்­த­தா­வது:

உள்­ளு­ராட்சி சபை­க­ளில் ஆட்­சி­ய­மைக்­கக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு கோரி­யி­ருந்­த­தாக ஈ.பி.டீ.பி. சாா்ந்தவா்­கள் தொிவித்­தி­ருந்­த­னா். நாங்­கள் அதனை ஆத­ரவு என்று கூற­வில்லை. மாறாக ஒரு கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யி­லேயே அந்­தக் கட்­சி­யு­டன் கலந்­து­ரை­யா­டி­னோம்.

சபை­க­ளில் பெரும்­பான்மை ஆச­னங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் கட்­சி­களே அந்­தந்­தச் சபை­க­ளில் ஆட்­சி­ய­மைப்­பது, அதற்கு மற்­றைய கட்­சி­கள் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது என்ற நோக்­கிலே கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இது எந்த வகை­யி­லும் ‘டீல்’ ஆகி­வி­டாது, அத்­து­டன் அத்­த­கைய ‘டீல்’ அர­சி­யல் தமிழ் கூட்­ட­மைப்­பின் அக­ரா­தி­யிலே இல்லை.

மேலும் டக்­ளஸ் தேவா­னந்தா உட்­பட்­ட­வா்­க­ளு­டன் பேசி­யது ரேலோவே தவிர தமி­ழத்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பல்ல – என்­றார்.

http://newuthayan.com/story/86385.html

  • தொடங்கியவர்
 
 
 

ஈபி­டி­பிக்கு சிறிகாந்தா சவால்!!

உள்ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு ஈபி­டி­பி­யின் ஆத­ர­வைக் கோரி­ய­தற்கு ஆதா­ரம் இருந்­தால் அதனை வெளி­யி­டுங்­கள் பார்ப்­போம் என்று சவால் விடுத்­தார் ரெலோ கட்­சி­யின் செய­லா­ளர் ந.சிறீ­காந்தா.

தாம் ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ரவு கேட்டு கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் வடக்கு மாகாண அவைத் தலை­வர் ஆகி­யோர் பல தட­வை­கள் ஈபி­டிபி தலை­வர் டக்­ளஸ் தேவா­னந்­தா­வு­டன் தொலை­பே­சி­யில் பேசி­யி­ருந்­த­னா்.

இது சம்­பந்­த­மான ஆதா­ரங்­களை நாம் வௌியி­டத் தயாா் என்று ஈ.பி.டீ.பி. கட்­சி­யின் யாழ்ப்­பாண மாவட்ட அமைப்­பா­ளா் தெரி­வித்­தார் என்று ஊட­கங்­க­ளில் நேற்று செய்­தி­கள் வெளி­யாகி இருந்­தன. அதற்­குப் பதி­ல­ளித்த போது சிறீ­காந்தா இத­னைத் தெரி­வித்­தார்.

‘‘ஆதா­ரங்­கள் இருப்­பின் அவற்றை எந்த தயக்­க­மும் இன்றி வௌியி­டுங்­கள் இதனை நாங்­கள் பகி­ரங்­க­மா­கவே கோரு­கின்­றோம்” என்­றாா் அவர்.

‘‘தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யா­னது எந்­த­வொரு சபை­க­ளி­லும் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. அதற்­காக அவா்­கள் உத்­த­மா்­களோ, மகாத்­மாக்­களோ அல்­லா். அவா்­க­ளு­டைய தோல் விரை­வில் உரிக்­கப்­ப­டும்.அப்­போது அனைத்­தும் தெரி­ய­வ­ரும்’’ என­வும் ஸ்ரீகாந்தா அந்­தச் சந்­திப்­பில் மேலும் தெரி­வித்­தாா்.

http://newuthayan.com/story/86389.html

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

இது சம்­பந்­த­மான ஆதா­ரங்­களை நாம் வௌியி­டத் தயாா் என்று ஈ.பி.டீ.பி. கட்­சி­யின் யாழ்ப்­பாண மாவட்ட அமைப்­பா­ளா் தெரி­வித்­தார் என்று ஊட­கங்­க­ளில் நேற்று செய்­தி­கள் வெளி­யாகி இருந்­தன. அதற்­குப் பதி­ல­ளித்த போது சிறீ­காந்தா இத­னைத் தெரி­வித்­தார்.

‘‘ஆதா­ரங்­கள் இருப்­பின் அவற்றை எந்த தயக்­க­மும் இன்றி வௌியி­டுங்­கள் இதனை நாங்­கள் பகி­ரங்­க­மா­கவே கோரு­கின்­றோம்” என்­றாா் அவர்.

‘‘தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யா­னது எந்­த­வொரு சபை­க­ளி­லும் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. அதற்­காக அவா்­கள் உத்­த­மா்­களோ, மகாத்­மாக்­களோ அல்­லா். அவா்­க­ளு­டைய தோல் விரை­வில் உரிக்­கப்­ப­டும்.அப்­போது அனைத்­தும் தெரி­ய­வ­ரும்’’ என­வும் ஸ்ரீகாந்தா அந்­தச் சந்­திப்­பில் மேலும் தெரி­வித்­தாா்.

 யாரோ சம்பந்தப்பட்ட    கேள்விக்கு  சம்பந்தப்படாத ஒருவரை வீண் வம்புக்கு இழுத்து தாக்குகிறார் இவர். இவருக்கு என்ன நடந்தது? ஈ. பி. டிபி இடம் ஆதரவு கேட்டது போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் ஒருக்கா கேட்டுப் பாத்திருக்கலாமே? ஓ...... தன்மானப்பிரச்சனையா?  குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால குட்டுப்படலாம் என்று நினைத்திருப்பினம் போல. அதை முதலே வெளியிட்டிருந்தால் இப்ப அவர்களால் வெளிவந்து அதுக்கு இவர்கள்  ஒரு மூலம் பூசி சமாளிக்க  வேண்டிய தேவை வந்திருக்காது. அவர்களும் அவர்களின் கூட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.