Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களைக் கொன்று குவிக்க போர்க்கப்பலை அளிக்கிறது இந்தியா, போதாக்குறைக்கு அமெரிக்கா-சீனா உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைக் கொன்று குவிக்க போர்க்கப்பலை அளிக்கிறது இந்தியா, போதாக்குறைக்கு அமெரிக்கா-சீனா உதவி

இலங்கைக் கடற்படைக்கு இந்தியா மேலும் ஒரு போர்க்கப்பலை வழங்குகிறது. விரைவில் வழங்கப்படவிருக்கும் இந்தப் போர்க்கப்பல் இலவசமாகவோ அல்லது நீண்டகால குத்தகை அடிப்படையிலோ இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று கொழும்பில் இருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஆங்கில நாளிதழ் "தி நேஷன்' செய்தி வெளியிட்டுள்ளது.

சி.ஜி.எஸ். வராகா எனப்படும் இந்தப் போர்க்கப்பல் இலங்கைக்கு இந்தியா வழங்க உள்ள 2-ஆவது போர்க்கப்பல் என்றும் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் தி நேஷன் என்ற நாளிதழில் "கடலுக்குள் போர்' என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்திக்கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இலங்கைக்கு இந்தியா இன்னும் ஒரு போர்க்கப்பலை வழங்கவிருப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்.

இந்தியக் கடற்படையுடன் இணைந்து சுற்றுக்காவல் மேற்கொள்ள வேண்டும் என்ற இலங்கைக் கடற்படை கோரிக்கை நிறைவேறவில்லை. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையேயான படை ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான சி.ஜி.எஸ்.வராகா என்ற போர்க்கப்பலை இலங்கைக் கடற்படைக்கு இலவசமாகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. வெகு விரைவில் இந்தக் கப்பல் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

வராகா கப்பல் இலங்கைக்கு இந்தியா வழங்க உள்ள 2ஆவது போர்க் கப்பலாகும். ஏற்கனவே இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சரயூ என்ற போர்க் கப்பலை கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியா இலங்கைக்கு வழங்கியது. சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் போர்க்கப்பல் பழுதுபட்டிருந்தபோது, இடைக்காலப் பணிக்காக சி.ஜி.எஸ். வராகா கப்பல் இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி ஐ.என்.எஸ். சரயூ கப்பலை இந்தியா எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பழுது பார்த்துக் கொடுத்தது. அக்கப்பல் தற்போது எஸ்.எல்.என். எஸ். சயூரா என்ற பெயரில் இலங்கைக் கடற்படையிடம் உள்ளது.

கடல் வானூர்திப் படை தொடங்க வாய்ப்பு

இது தவிர அமெரிக்கக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கரேஜியஸ் என்ற போர்க் கப்பல் இலங்கைக்கு ஏற்கனவே வாங்கப்பட்டது.

அக்கப்பல் தற்போது சமுத்திரா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா வராகா கப்பலைக் கொடுத்தால் அது இலங்கைக்கு கிடைக்கும் 3-ஆவது போர்க்கப்பலாக இருக்கும். இந்த 3 கப்பல்களுமே ஒன்று அல்லது இரண்டு வானூர்திகளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டவையாகும். இதன்மூலம் இலங்கை இராணுவம் கடல் வானூர்திப் படையைத் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகள்

இந்தி தற்போது வழங்கவிருக்கும் சி.ஜி.எ1. வராகா போர்க்கப்பல் அதிநவீன வசதிகள் கொண்டதாகும். 75 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் 11 அதிகாரிகள் உட்பட 100 வீரர்கள் இருப்பார்கள். மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் செல்லும் இந்தக் கப்பல் 8,500 கடல் மைல் தூரத்திற்கு இடைவிடாமல் செல்லும் திறன் கொண்டதாகும்.

1992-ஆம் ஆண்டில் கட்டபப்ட்ட இந்தப் போர்க்கப்பல் 2012ஆம் ஆண்டு வரை பயன்படும் திறன் கொண்டதாகும். ஆனால் இடையில் அக்கப்பலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால் 2018ஆம் ஆண்டுவரை அக்கப்பல் பயன்பாட்டில் இருக்கும்.

பாகிஸ்தான் உதவி

கடற்படை தொடர்பான உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் இலங்கை, வானூர்திப் படை தொடர்பான உதவிகளை பாகிஸ்தானிடம் இருந்து பெற்று வருகிறது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை செயலாளர் லெப்டினென்ட் ஜெனரல் தாரிக் வசீம் காசி கடந்த 19ஆம்தேதி இலங்கை சென்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளரும், அதிபர் இராசபக்சேவின் சகோதரருமான கோத்தபய இராசபக்சேவை சந்தித்து வானூர்திப் படை ஒத்துழைப்புத் தொடர்பாகப் பேச்சு நடத்தினார்.

இலங்கை வானூர்திப் படையினருக்குப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட முக்கியமான உதவிகளை பாகிஸ்தான் வழங்கி வருகிறது. இலங்கை வானூர்திப் படையினரின் தாக்குதல் திறனை மேம்படுத்தவும் பாகிஸ்தான் உதவி செய்கிறது. இதுதவிர ஏராளமான ஆயுதங்களையும் இலங்கைக்குப் பாகிஸ்தான் வழங்கி வருகிறது. எனினும் இவை வெளியில் தெரிந்தால் வல்லரசு நாடான இந்தியாவுக்கு பல வகைகளில் நெருக்கடி ஏற்படும் என்பதற்காக இந்தத் தகவல்களை இலங்கையும், பாகிஸ்தானும் வெளியில் சொல்வதில்லை.

இதுதவிர உக்ரைன் நாட்டிடமிருந்து அண்மையில் மிக் 27 வகை போர் வானூர்திகள் மூன்றை இலங்கை வாங்கியுள்ளது. இவை பதுங்கு குழிகளுக்குள்ளும் குறிபார்த்து குண்டு வீசும் திறன் கொண்டவை என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து மேலை நாடுகளும் இலங்கைக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருவதாக தி நேஷன் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உடன்பாடு

அமெரிக்காவுடன் சிங்கள அரசு 10 ஆண்டுகால உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோதபாய இராசபக்சே அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் பிளேக் ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த உடன்பாட்டின்படி சிங்கள இராணுவத்துக்குத் தேவையான இராணுவ உதவிகளையும் கூட்டுப் பயிற்சிகளையும் அமெரிக்கா அளிக்கும்.

சீனாவுடன் உடன்பாடு

அண்மையில் சீனா சென்றிருந்த இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராசபக்சே சீனாவுடன் 8 உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்து மாக்கடல் பகுதியில் தனது செல்வாக்கை சீனா அதிகரித்துக்கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஹம்பன் தோடா மாவட்டத்தில் கடற்படைத் தளம் ஒன்றை சீனா அமைத்துக்கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானிலும், பர்மாவிலும் இத்தகைய கடற்படைத் தளங்களை சீனா அமைத்துக்கொடுத்திருக்கிறத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.