Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முயன்ற சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி கைது

Featured Replies

20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முயன்ற சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி கைது

 

Arrest-300x199.jpgசிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி எச்.கே.மகாநாமவும், அரசாங்க மரக் கூட்டுத்தாபன தலைவரான பி.திசாயக்கவும், 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற போது, கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை இந்திய வணிகர் ஒருவரிடம் இருந்து, இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கந்தளாய் சீனித் தொழிற்சாலை காணியை கொள்வனவு செய்த இந்திய வணிகர், தொழிற்சாலைக்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கும், கட்டடங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், முயன்ற போது, இந்த இரு அதிகாரிகளும் அதற்காக இலஞ்சம் கோரியுள்ளனர்.

இதற்கான ஒழுங்குகள் மற்றும் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு 540 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. நீண்ட பேரங்களை அடுத்து, 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

முதற்கட்டமாக நேற்று மாலை 20 மில்லியன் ரூபா இலஞ்சம் கொடுக்கப்பட்டது. இதுபற்றி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இந்திய வணிகர் தகவல் அளித்தார்.

உடனடியாக செயற்பட்ட ஆணைக்குழு அதிகாரிகள், கொழும்பில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் முதற்கட்ட இலஞ்சப் பணம் கைமாற்றப்பட்ட போது, இரண்டு மூத்த அதிகாரிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது, இருவரும், இலஞ்சப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் மூத்த அரச அதிகாரியான மகாநாம, தற்போது சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரியாக பணியாற்றுகிறார். முன்னர் இவர், காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலராகப் பணியாற்றினார்.

மூன்று மாதங்களுக்கு முன்னரே இவர் சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இரண்டாவது சந்தேக நபரான பி. திசநாயக்க, சந்திரிகா குமாரதுங்க சிறிலங்கா அதிபராக இருந்த போது, அவரது செயலராக பணியாற்றியவர். தற்போது அரச மரக் கூட்டுத்தாபன தலைவராக இருக்கிறார்.

கைது செய்யப்பட்ட இரண்டு மூத்த அரச அதிகாரிகளும் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/05/04/news/30725

 

 

 

கைது செய்யப்பட்ட உயர் அதிகாரிகளையும் பணியில் இருந்து இடைநிறுத்த உத்தரவு

 

maithri-met-missing-1-300x200.jpgஇந்திய வணிகரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணம் பெற்றுக் கொண்ட போது கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட, இரண்டு மூத்த அரச அதிகாரிகளையும், உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா  அதிபர் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோர் இந்திய வணிகர் ஒருவரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற போது நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இவர்கள் இருவரையும் உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்று அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுதந்திரமாகச் செயற்படுகிறது என்பதை இந்தக் கைது உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரி மகாநாம, சிறிலங்கா அதிபரின் செயலருக்கு அடுத்த நிலையில் அதிகரம் மிக்க அதிகாரியாவார்.

http://www.puthinappalakai.net/2018/05/04/news/30727

  • தொடங்கியவர்

கைதுசெய்யப்பட்ட இருவர் மீதும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துக : ஜனாதிபதி

 

ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவரும் வேறு அரச நிறுவனமொன்றின் தலைவரும் இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. 

maithripala-sirisena.jpg

இச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள ஜனாதிபதி, குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித அழுத்தங்களுமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளர். 

 

ஊழல் மோசடிக்க்கு எதிரான அரசாங்கத்தின் தீர்க்கமான கொள்கையினை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் இதனூடாக உறுதியாகின்றது. சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பினை வகிக்கும் அரச அதிகாரிகளுக்கு தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனமான, பக்கச்சார்பற்ற பின்னணி தொடர்பாக தாம் மகிழ்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.

http://www.virakesari.lk/article/33095

இந்த வணிகர் இப்படி ஒருக்கா இந்தியாவிலையும் செய்து பார்க்கலாமே.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.