Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப் பார்வை: நான்காம் முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்கிறார் புதின்

Featured Replies

உலகப் பார்வை: நான்காம் முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்கிறார் புதின்

மீண்டும் அதிபராகும் புதின்

விளாடிமிர் புதின்படத்தின் காப்புரிமைALEXANDER ZEMLIANICHENKO

ரஷ்ய அதிபராக நான்காம் முறையாக இன்று பதவியேற்கவுள்ளார் விளாடிமிர் புதின்.

அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றதால் பதினெட்டு வருடமாக அவர் வகித்துவந்த நாட்டின் தலைவர் பதவி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதினின் ஆதரவாளர்கள் உலக அரங்கில் ரஷ்யாவின் அந்தஸ்துக்கு விளையாடிமிர் புதின் புத்துணர்ச்சியூட்டியதாக தெரிவிக்கிறார்கள் , ஆனால் எதிராளிகள் அவர் எதேச்சதிகாரமாக ஆள்பவர் என விமர்சிக்கின்றனர். புதினின் அரசியல் எதிரிகளை அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கடுமையாக கையாள்வதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமையன்று மாஸ்கோ மற்றும் மற்ற ரஷ்ய நகரங்களில் புதின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுடன் வன்முறை தடுப்பு ரஷ்ய காவல்துறையினர் மோதினர்.

திங்கள் கிழமை அவர் பதவியேற்கவுள்ள நிலையில் அங்கே புதியதொரு அமைதியின்மைக்கான அச்சம் நிலவுகிறது .

பதவியேற்பு விழாவானது 2012-ல் நடந்ததைவிட சாதரணமானதாகவே இருக்கும் என்றும், தனது தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட தன்னார்வலர்களை மட்டுமே அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை ரஷ்யா முழுவதும் 19 நகரில் நடந்த கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட பாதிபேர் மாஸ்கோவில் போராடி கைதுக்குள்ளானவர்கள்.

படுகொலை முயற்சியில் தப்பிய பாகிஸ்தான் அமைச்சர்

Ahsan Iqbalபடத்தின் காப்புரிமைARIF ALI

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் அசன் இக்பால் படுகொலை செய்யப்படும் ஒரு முயற்சியில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு பேரணியில் அவர் கலந்துகொண்டபோது ஒரு துப்பாக்கிதாரி சுடத்தொடங்கினார். இதில் அவரது வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. இக்பால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஒரு உள்ளூர் செய்தி சானலில் அவரது மகன் பேசுகையில், தனது அப்பா உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் இல்லை என்றார். அந்த துப்பாக்கிதாரி மீண்டும் சுடுவதற்கு முன்னதாக காவல்துறை மற்றும் சிலரால் முடக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியில் இக்பால் மூத்த தலைவராவார். கட்சித்தலைவர் நவாஸ் ஷரீஃப் கடந்த ஜூலையில் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு பிரதமர் பதவிக்கு இக்பாலும் பரிசீலனை செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒன்பது வருடத்துக்கு பிறகு லெபனானில் தேர்தல்

லெபனான்படத்தின் காப்புரிமைIBRAHIM CHALHOUB

கடந்த ஒன்பது வருடங்களில் முதன்முறையாக லெபனானில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ளது. அண்டைநாடான சிரியாவில் போர் நடப்பதாலும், நாட்டின் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்காவும் கடைசியாக இருந்த பாராளுமன்றம் இரண்டு முறை தனது பதவியை நீட்டித்துக்கொண்டது. வாக்குப்பதிவானது 50 சதவீதத்துக்கும் சற்று குறைவாக நடந்தாக உள்துறை அமைச்சர் நோகாட் எய் மச்நூக் அறிவித்துள்ளார். இது கடந்த முறையை விட சற்றே குறைவாகும்.

வலிமையான ஷியா முஸ்லீம் உட்பட பாரம்பரிய காட்சிகள் , ஹெஸ்பொல்லா இயக்கத்துடன் ஆட்சி பகிர்வு ஏற்பாட்டினை புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கள் கிழமை அல்லது செவ்வாய்கிழமைக்குள் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

துனிசியாவில் நகராட்சி தேர்தல்

துனிஷியாபடத்தின் காப்புரிமைFETHI BELAID

2011 எழுச்சிக்குப் பிறகு நாட்டில் நடந்து நடந்த முதல் நகராட்சி தேர்தலில் துனிஷியாவின் இஸ்லாமியவாத என்னாதா கட்சி வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற நிடா டூனிஸ் ஐந்து சதவீத வாக்குகள் பின்தங்கியுள்ளதாக காட்டுகிறது.

இத்தேர்தல் மக்களாட்சியை நோக்கிய முழுமையான நகர்வுக்கான முக்கியமான அடியை எடுத்துவைத்துள்ளதாக விவரித்துள்ளார் துனிஷிய பிரதமர் யூசுப் சாஹித். தேர்தலில் வாக்குப்பதிவு 34% மட்டுமே உள்ளது. பொருளாதார முன்னேற்றம் இல்லாததால் வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளதாக அரசியல் நோக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-44026821

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.