Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கி­ய­தா­கவே எந்த முயற்­சியும் அமை­ய­வேண்டும்

Featured Replies

அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கி­ய­தா­கவே எந்த முயற்­சியும் அமை­ய­வேண்டும்

 

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சி­களில் மீண்டும் தடங்கல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய அர­சியல் தீர்வு காண முடியும் என்ற நம்­பிக்கை தமிழ் அர­சியல் தலை­மைகள் மத்­தி­யிலும் தமிழ் மக்கள் மத்­தி­யிலும் உரு­வா­கி­யி­ருந்­தது.

அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து 2016 ஆம் ஆண்டின் இறு­திக்குள் அர­சியல் தீர்வைக் கண்­டு­விட முடியும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற கட்­சி­ யான தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்­க்கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால், அவ­ரது எதிர்­பார்ப்­பா­னது பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. ஆனாலும் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்கி அதன்­மூலம் அதி­கா­ரத்தைப் பகிர்ந்து அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்கை ஆரம்­பிக்­கப்­பட்­டது. பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு வழி­ந­டத்தல் குழு மற்றும் உப­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்டு நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை மாற்­றி­ய­மைப்­பது, தேர்தல் முறை­யினை மாற்­று­வது, அதி­கா­ரத்தைப் பகிர்ந்து அர­சியல் தீர்வைக் காண்­பது ஆகிய மூன்று விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட்­டது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சியல் யாப்­பு­ச­பையின் வழி­ந­டத்தல் குழு­வா­னது இந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

இதன் பய­னாக இந்த மூன்று விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­திக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரத்தைப் பகிர்ந்து தீர்வு காண்­ப­தற்­கான யோச­னை­களும் அர­சியல் தீர்வு விட­யத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை பூர்த்தி செய்­வ­தாக அந்த யோச­னைகள் இல்­லா­விட்­டாலும் கூட ஏதோ ஒரு­வ­கையில் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்­கான யோச­னைகள் இடைக்­கால அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த நிலையில் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்சி தற்­போது தடை­ப்பட்­டி­ருக்­கின்­றது. கடந்த பெப்­ர­வ­ரி­ மாதம் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் பெரும் பின்­ன­டைவை சந்­தித்­தி­ருந்­தன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் இந்தத் தேர்­தலில் பெரும்­பான்­மை­யான இடங்­களில் வெற்­றி­பெற்­றி­ருந்­தனர்.

பெரும்­பான்மை மக்­களின் இத்­த­கைய தீர்ப்­பா­னது அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்­புக்­கான திட்­ட­வ­ரைவுக்கு தடைக்­கல்­லாக தற்­போது அமைந்­தி­ருக்­கின்­றது. இந்தத் தேர்தல் முடி­வா­னது நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்­டம்­காண வைத்­துள்­ளது. இதனால், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்குள் தற்­போது பிளவு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் தொடர்ச்­சி­யாக இந்த நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

அர­சியல் யாப்பை மாற்­றி­ய­மைப்­பதன் மூலம் அதி­கா­ரத்தைப் பகிர்ந்து அர­சியல் தீர்வு காணப்­பட்டால் அது நாட்டை பிள­வு­ப­டுத்தும் என்று பொது எதி­ரணி பெரும் பிர­சா­ரத்தில் ஈடு­பட்டு வந்­தது. அந்தப் பிர­சா­ரமும் கடந்த தேர்­தலில் ஓர­ள­விற்கு எடு­பட்­டுள்­ள­தா­கவே தெரி­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் மூன்று வரு­டங்கள் முடி­வ­டைந்­துள்ள நிலையில் எஞ்­சி­யுள்ள காலப்­ப­கு­தியில் ஆட்­சியை கொண்டு நடத்­து­வ­தற்கு திண்­டாட வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

இந்த நிலையில், அதி­கா­ரப்­ப­கிர்வின் மூல­மான அர­சி­யல்­தீர்வு காணும் விட­யத்தில் ஆட்­சியைக் கொண்­டு­ந­டத்­து­வ­தற்கே தள்­ளாடும் அர­சாங்கம் அக்­கறை காட்­டுமா என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன­விற்கு தமிழ் பேசும் மக்கள் தமது பூரண ஆத­ர­வினை வழங்­கி­யி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து 100 நாள் வேலைத்­திட்­டத்தின் கீழ் தேசிய அர­சாங்­க­மா­னது பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டது.

19ஆவது திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்டு சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களும் அமைக்­கப்­பட்­டன. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யிலும் சில திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. இத்­த­கைய பணிகள் இடம்­பெற்­ற­போ­திலும் அர­சியல் தீர்வு தொடர்­பிலும் அக்­க­றை ­காண்­பித்­தி­ருந்தால் ஓர­ள­விற்கு சாதக­மான பலனை எட்­டி­யி­ருக்க முடியும்.

நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்ற ஆரம்­பத்தில் உட­ன­டி­யாக அர­சியல் தீர்­வு­க்கான முயற்­சியில் இறங்­கி­யி­ருக்­க­வேண்டும். ஆனால், அந்த விட­யத்தில் காட்­டப்­பட்ட கால தாமதம் தற்­போது அர­சியல் தீர்வு முயற்­சியில் பெரும் தடங்­கலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. நாம் வர­லாற்றை எடுத்து நோக்­கு­வோ­மானால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு காணும் முயற்­சிகள் இவ்­வாறு மாறி மாறி அர­சாங்க காலங்­களில் தடைப்­பட்­டுள்­ளதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

ஆனாலும் நாட்டில் இரு ­பி­ர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்சி நடத்தும் நிலைமை தற்­போ­துதான் ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. ஆனால் வர­லாற்­றில் முதல் தட­வை­யாக கிடைத்த இந்த சந்­தர்ப்­பத்­தையும் நாம் இழக்கும் நிலை ஏற்­ப­டுமோ என்ற ஐயப்­பாடு தற்­போது தலை­தூக்­கி­யுள்­ளது.

இந்த நிலை­யில்தான் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­க­வேண்டும் என்ற யோச­னையை உள்­ள­டக்­கிய பிரே­ரணை ஒன்­றினை 20 ஆவது திருத்­த­மாக உள்­ள­டக்­க­ வேண்டும் என்று கோரி ஜே.வி.பி. நாளை சபையில் அதனை முன்­வைக்­க­வுள்­ளது.

ஜே.வி.பி.யின் 20ஆவது திருத்த யோச­னைக்கு பெரு­ம­ள­வான கட்­சிகள் தற்­போது எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணியும் இதனை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தயா­ராக இல்லை. இதற்குப் பல்­வேறு கார­ணங்­களை அது கூறி­வ­ரு­கின்­றது.

இந்த நிலையில் ஜே.வி.பி.யின் இந்தப் பிரே­ரணை தொடர்பில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் தமது நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருக்­கின்­றது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­க­வேண்டும் என்­பதில் கூட்­ட­மைப்­பிற்­கி­டையில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. எனினும் . ஜே.வி.பி. தனியே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இலக்­கு ­வைக்­காது. இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் அதில் உள்­ள­டக்­க­வேண்டும் என்று கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இது குறித்து ஜே.வி.பி.யுடன் பேச்­சுக்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும் அவர் அறி­வித்­துள்ளார். ஆனால், கூட்­ட­மைப்பின் இந்தக் கோரிக்­கையை ஜே.வி.பி.யின் செய­லாளர் ரில்வின் சில்வா நிரா­க­ரித்­துள்ளார். தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு அவ­சி­ய­மா­ன­தாகும். அதனை நாம் மறுக்­க­வில்லை. ஆனால், இப்­போ­துள்ள நிலையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது மிகவும் அவ­சி­ய­மா­ன­தொன்­றாகும். எனவே, அதனை நீக்­கி­விட்டு தீர்வு குறித்து பேசி முடி­வுக்கு வரலாம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

உண்­மை­யி­லேயே புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மானால் அது தேசியப் பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு யோச­னை­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். நாட்டில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள போதிலும் அந்த யுத்­தத்­திற்கு கார­ண­மான இனப்­பி­ரச்­சி­னைக்கு இன்­னமும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதுவிடின் நாட்டில் நல்லிணக்கம் என்பது ஏற்படப்போவதில்லை. அவ்வாறு நல்லிணக்கம் ஏற்படாவிடின் எப்போதும் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படும் சூழல் காணப்படும். எனவே, முதலில் அரசியல் தீர்வைக் காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவேண்டுமானால் அது அரசியல் தீர்வையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும் என்று நான்கு சிறுபான்மை கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தன. தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகிய நான்கு கட்சிகளும் இந்த விடயத்தில் ஒரு நிலைப்பாட்டிலேயே உள்ளன. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தற்போது இதேநிலைப்பாட்டையே வலியுறுத்தி உள்ளது.

எனவே, இந்த விடயத்தில் அரசாங்கமானது இனியாவது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-07#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.