Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ஒரு பக்கம் வக்கார் யூனுஸ், மறுபக்கம் அக்ரம்: இதோடு கிரிக்கெட் வாழ்வு முடிந்தது என நினைத்தேன்’-முதல் டெஸ்ட் பற்றி சச்சின் சுவாரஸ்யம்

Featured Replies

‘ஒரு பக்கம் வக்கார் யூனுஸ், மறுபக்கம் அக்ரம்: இதோடு கிரிக்கெட் வாழ்வு முடிந்தது என நினைத்தேன்’-முதல் டெஸ்ட் பற்றி சச்சின் சுவாரஸ்யம்

 

 
tendulkar-7591

பிரேக்பாஸ்ட் வித் சச்சசின் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர்   -  படம்: சிறப்பு ஏற்பாடு

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்த போது பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டி அனுபவம் குறித்து சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களிடம் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார்.

கவுரவ் கபூர் தொகுத்து வழக்கும் 'பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' எனும் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று தனது கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

 

இதில் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சச்சின் டெண்டுல்கர் விளக்கியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

''சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதுதான் எனக்கு முதல் அனுபவம். பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி, மிகவும் குறைந்த வயதில் சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்தேன். நான் பேட் பிடித்து, மைதானத்தில் நடந்து வருவதைப் பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் சிலர் சிரித்தனர்.

முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் நான் பேட் செய்தபோது, எனக்குப் பதற்றமாக இருந்தது. ஒருபுறம் வக்கார் யூனுஸ், மறுபுறம் வாசிம் அக்ரமின் மிரட்டல் பந்துவீச்சு. என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னுடைய முதல் இன்னிங்ஸோடு, என்னுடைய கிரிக்கெட் வாழ்வு அஸ்தமிக்கப் போகிறது என்று பயந்தேன். யூனுஸும், அக்ரமும் ரிசவர்ஸ் ஸிவிங் பந்து வீசி என்னை மிரட்டினார்கள். முதல் இன்னிங்ஸில் ஹெல்மெட்டில் அடிபட்டு, ஆட்டமிழந்தேன்.

sachin-759jpg

முகமது அசாருதீனுடன், சச்சின்

 

ஓய்வு அறையில் அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் எனக்கு ஊக்கம் அளித்து, தைரியம் அளித்தனர். துணிச்சலாக விளையாடு, தேவையான அளவு நேரம் எடுத்துக்கொண்டு ரன்களே அடி, நிதானமாக விளையாடு, பயப்படாதே.

இது சர்வதேச கிரிக்கெட் போட்டி, உலகின் அதிவேகமான பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்கிறாய். அமைதியாக, நிதானமாக பேட் செய்து என்று எனக்கு மூத்த வீரர்கள் அறிவுரை கூறினார்கள். 2-வது இன்னிங்ஸில் கவனமாக பேட் செய்து 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தேன்.

மீண்டும் ஓய்வு அறைக்குச் சென்று கண்ணாடி முன்என்னைப் பார்த்து, நீ சாதித்துவிட்டாய் என்று பெருமையாகக் கூறிக்கொண்டேன்.

நேரம் தவறாமை

நேரம் தவறாமையையும், ஒழுக்கத்தையும் கிரிக்கெட்டின் தொடக்கத்தில் நான் கடைபிடிக்கவில்லை. அணி வீரர்கள் எங்காவது புறப்பட வேண்டும் காலை 8 மணிக்கு வந்துவிடுங்கள் என்று அணி நிர்வாகம் அறிவுறுத்தினால், நான் 10 நிமிடங்கள் கூட தாமதமாக வருவேன். உன்னுடைய மூத்த வீரர்கள் உனக்காக காத்திருக்கிறார்கள், நீ இப்படி தாமதமாக வருவதா என்று என்னை மூத்த வீரர்கள் கண்டித்திருக்கிறார்கள். அதன்பின், நேரம் தவறாமையையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்கத் தொடங்கினேன்.

பேட்டை மாற்றவில்லை

எனக்கு டென்னிஸ் எல்போ பகுதியில் காயம் ஏற்பட்டபோது, எல்லோரும் என்னுடைய பேட்டின் எடையைக் குறைத்துவிடு என்று அறிவுரை கூறினார்கள். ஒரு கோடி டாக்டர்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ரசிகர்களான ஒரு கோடி பயிற்சியாளர்கள் எனக்கு அறிவுரை கூறி, எடை குறைவான வேறு பேட்டுக்கு மாறிவிடு என்றனர். ஆனால், கடைசிவரை அதே எடைகொண்ட பேட்டைத்தான் பயன்படுத்தினேன். என்னுடைய பேட்டை ஒருபோதும் மாற்றவில்லை. எடை குறைவான பேட்டை பயன்படுத்திப் பார்த்தேன், ஆனால், நான் அதிரடியாக ஆடும்போது, பேட்டின் கைப்பிடி சுத்தத் தொடங்கியது. அது முதல் எடை குறைவான பேட்டை பயன்படுத்துவதில்லை.''

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23865453.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

‘மாறுவேடத்தில் ரோஜா படம் பார்த்த சச்சினுக்கு நேர்ந்த அனுபவம்': 24 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

 

 
sachin-tendulkar-759jpg

மாறுவேடத்தில் 'ரோஜா' படம் பார்த்த போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் பொதுவாழ்க்கை மிகவும் கடினமானது. எங்கும் சுதந்திரமாக செல்லும்போதும், குடும்பத்தினருடன் பொது இடங்களுக்குச் சென்றாலும், ரசிகர்கள் மொய்த்துவிடுவார்கள். இதன் காரணமாகவே அவர் தனக்கு பிடித்தமான விஷயங்களை மிகவும் ரகசியமாக செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

 

ஹோட்டல், கடற்கரை, துணிக்கடை, திரையரங்குகள் என எங்கு சென்றாலும் சச்சினைக் கண்டுகொண்டால் ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும். ரசிகர்கள் சச்சின் மீது வைத்திருக்கம் பாசம், அன்பு ஆகியவை அவரால் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

இந்நிலையில், கவுரவ் கபூர் தொகுத்து வழக்கும் “பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” எனும் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று தனது கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.   இதில் தான் சினிமா பார்த்த அனுபவம் குறித்து நகைச்சுவையுடன் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக சச்சின் கூறியுள்ளதாவது:

''எனக்கு நீண்டநாட்களாகவே சினிமா தியேட்டரில் சென்று சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கிரிக்கெட் காரணமாக என்னால் திரையங்குகளுக்கு செல்ல முடியவில்லை. 1994-ம் ஆண்டு, எனக்கும், அஞ்சலிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. என் மனைவி அஞ்சலியை அழைத்துக் கொண்டு சினிமா பார்க்க தியேட்டருக்குச் செல்லலாம் என்றால் ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் என அச்சப்பட்டேன்.

ஆனாலும், அஞ்சலியும், அவரின் தந்தையும், என் நண்பர்கள் சிலரும் ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு சினிமா பாரக்க் ஏற்பாடு செய்தனர். அதற்கு ஏற்றார்போல் முகத்தில் தாடி, தலையில் தொப்பி, கண்ணில் கண்ணாடி அணிந்து மணிரத்னம் சாரின் ’ரோஜா’ படம் பார்க்க வோர்லியில் உள்ள திரையரங்குக்குச் சென்றோம். இடைவேளை வரை படம் இனிமையாகச் சென்றது.

இடைவேளையின் போது, நானும் எனது நண்பர்களும் வெளியே சென்றுவிட்டு வரலாம் என்று சென்றோம். அப்போது திடீரென எனது கண்ணாடி கீழே விழுந்துவிட்டது, அதை எடுத்தபோது, அதில் இருந்த ஒரு லென்ஸ் மட்டும் உடைந்துவிட்டது.

உடைந்த கண்ணாடியை தலையில் மாட்டிக்கொண்டு மீண்டும் தியேட்டருக்கு வந்தேன். அப்போது, ஒரு ரசிகர் மட்டும் என்னை அடையாளம் பார்த்துக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லத் தொடங்கினார்.

1994-ம் ஆண்டில் வாட்ஸ்அப், செல்போன், பேஜர் இல்லாத காலம் என்பதால், அந்த ரசிகரால் அனைவரிடமும் சொல்ல முடியவில்லை. நான் தொடர்ந்து அங்கிருந்தால், என்னை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துவிடுவார்கள் என அச்சமடைந்தேன்.

உடனே, எனது மனைவி அஞ்சலி, மாமனார், நண்பர்களை அழைத்துக்கொண்டு 'ரோஜா' படத்தின் பிற்பாதியைப் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறினேன். அதன்பின் நீண்ட காலமாக 'ரோஜா' படத்தை முழுமையாகப் பார்க்க முடியாமல், அதன்பின் பின்பாதியை பார்த்து முடித்தேன்.’’

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தனது அனுபவத்தைத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23864325.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.