Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்பது வருடங்கள் கடந்தும் கண்ணீருடன் பாதிக்கப்பட்டோர்

Featured Replies

ஒன்பது வருடங்கள் கடந்தும் கண்ணீருடன் பாதிக்கப்பட்டோர்

 

நாட்டில் நில­வி­வந்த 30 வரு­ட­கால யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் நிறை­வ­டைந்­து­விட்­டன. தென்­னி­லங்கை யுத்த வெற்­றியை கொண்­டா­ட­ வேண்­டு­மென வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில் வடக்கு–கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது துன்ப–துய­ரங்­களை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் கடந்து விட்ட நிலை­யிலும் இது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. மக்கள் தமக்கு நீதியை நிலை­நாட்­டு­மாறு கோரிப் போராடி வரு­கின்ற போதிலும் பத­வி­யி­லி­ருக்­கின்ற அர­சாங்­க­மா­னது அதனை தமது அர­சியல் இருப்­புக்­களுக்கு ஒரு­ ச­வா­லா­கவே நோக்கி வரு­கி­றது. எனவே பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளுக்­கான நீதி என்­பது ஒரு எட்­டாக்­க­னி­யா­கவே நீடித்து வரு­கின்­றது.

ஒன்­பது வரு­டங்கள் கடந்­து­விட்­ட­ போ­திலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் வகையில் இது­வரை நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய அணு­கு­முறை எதுவும் இடம்­பெ­ற­வில்லை என்­பதே பொது­வான கருத்­தாக இருக்­கின்­றது. 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தால் பல நம்­பிக்கை தரும் ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டாலும் ஆட்­சியின் இறு­திக்­காலம் நெருங்­கும்­போது அவை மறக்­க­டிக்­கப்­படும் சூழலே உரு­வாகி வரு­கி­றது. இதில் அர­சாங்­கத்தின் அர்ப்­ப­ணிப்பு குறித்த கேள்­வியும் எழவே செய்­கி­றது.

யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் என்­பன கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள் கடந்த ஒன்­பது வரு­ட­கா­ல­மா­கவே கண்­ணீ­ருடன் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். வீதி­களில் கண்ணீர் மல்க போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டு­மென்ற அவர்­க­ளது கோரிக்கை நியா­ய­மா­ன­தாகும். அதனை யாரும் சவா­லுக்­குட்­ப­டுத்த முடி­யாது. மாறாக அவர்­க­ளுக்கு நம்­பிக்கை தரும் வகையில் ஒரு­ பொ­றி­மு­றையை முன்­னெ­டுத்து நீதியை வழங்­கு­வதே தேவை­யான விட­ய­மாகவுள்­ளது.

யுத்தம் முடி­வ­டைந்­ததும் அந்த சமூ­கத்தின் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தவும் தேசிய ஒற்­று­மைைய பலப்­ப­டுத்­தவும் வலு­வான நிரந்­தர நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­க ­வேண்டும். அவ்­வாறு செயற்­ப­டு­வதன் மூலமே ஆரோக்­கி­ய­மான அல்­லது சாத­க­மான சமா­தா­னத்தைக் காண­மு­டியும். சமா­தானம் என்னும் போது அதனை இரண்டு வகை­யாக பிரிக்­கலாம். "சாத­க­மான சமா­தானம்" என்பது ஒன்று. "பாத­க­மான சமா­தானம்" என்­ப­து மற்றொன்று.

ஒரு சமூ­கத்தில் நிலவி வந்த மோதல் முடி­வுக்கு வந்­ததும் அல்­லது அந்த மோதல் அர­சாங்­கத்­தால் தோற்­க­டிக்­கப்­பட்­டதும் அதா­வது யுத்தம் நிறைவு செய்யப்­பட்­டதும் நாட்டில் ஒரு அமை­தி­நிலை ஏற்­படும். அப்­போது அந்­த­மோதல் ஏற்­பட்­ட­தற்­கான கார­ணத்தை கண்­ட­றிந்து அதனைத் தீர்த்து நிரந்­தர நல்­லி­ணக்­கத்­தை உரு­வாக்­கு­வதே "சாத­க­மான சமா­தானம்" எனக் ­க­ரு­தப்­ப­டு­கின்­றது.

ஆனால் மோதல் ஏற்­பட்­ட­தற்­கான காரணம் தீர்க்­கப்­ப­டாமல் மோதல் நடத்­திய தரப்­பி­னரை தோற்­க­டித்­து­விட்டு ஏற்­ப­டுத்­தப்­படும் சமா­தா­ன­மா­னது "எதிர்­ம­றை­யான சமா­தா­னம்" என்று நோக்­கப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் தற்­போது எமது நாட்டில் யுத்தம் முடி­வுக்கு வந்­து­விட்­டது. ஆனால் யுத்தம் ஏற்­பட்­ட­மைக்­கான காரணம் இது­வரை தீர்க்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் யுத்­தத்தின் போது ஏற்­பட்­ட­தாகக் கூறப்­படும் வடுக்கள் இன்னும் ஆற்­றப்­ப­ட­வில்லை. எனவே நாம் "எவ்­வ­கை­யான சமா­தா­னத்தை" அனு­ப­வித்­துக் ­கொண்­டி­ருக்­கின்றோம் என்­பதைப் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் இந் நாட்டில் ஒரு நிரந்­தர சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தி சமூ­கங்கள் மத்­தியில் நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்தி தேசிய ஒற்­று­மையை உரு­வாக்­கு­வ­தற்­கான சந்­தர்ப்பம் அப்­போ­தி­ருந்த நாட்டின் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்குக் கிடைத்­தது. ஆனால் அந்த சந்­தர்ப்பம் சரி­யான முறையில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­ப­துடன் மேலும் விரி­சல்கள் ஏற்­படும் வகை­யி­லான செயற்­பா­டு­களே இடம்­பெற்­றன. இச் சூழலில் பாதிக்­கப்­பட்ட மக்­களும் பாரிய விரக்தி நிலை­யையே நோக்கிச் சென்­றனர். சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­கி­ய­நா­டுகள் சபையும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பல்­வேறு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்த போதிலும் "சாத­க­மான சமா­தா­னத்தை" உரு­வாக்கும் நட­வ­டிக்­கைகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. 2010 ஆம் ஆண்டு கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிறு­வப்­பட்டு பொது­மக்­க­ளிடம் சாட்­சி­யங்கள் பெறப்­பட்­டன. பின்னர் அது­தொ­டர்­பான அறிக்­கையும் முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் அந்த அறிக்­கையின் பரிந்­து­ரைகள் கூட முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அதன்­ பின்னர் 2013 ஆம் ஆண்டு காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராயும் நோக்கில் பர­ண­கம ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. எனினும் இத­னால்­கூட காணா­மல்­போன மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. இதற்­கி­டையில் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் மூன்று பிரே­ர­ணைகள் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்­டன. அதில் இரண்டு பிரே­ர­ணை­களில் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­களை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

மூன்­றா­வது பிரே­ர­ணையில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் யுத்தமீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நடத்­த­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. அது­மட்­டு­மன்றி 2014ஆம் ஆண்டு இலங்கை மீதான சர்­வ­தேச அழுத்­தங்கள் அதி­க­ரிக்க ஆரம்­பித்­தன. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டுதல், நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணுதல் போன்ற விட­யங்­களை முன்­னி­றுத்­தியே சர்­வ­தேச அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வந்­தன. அச் சந்­தர்ப்­பத்தில் அப்­போ­தைய இலங்கை அர­சாங்­கமும் சர்­வ­தேச சமூ­கமும் பாரிய முரண்­பாட்­டுடன் இருந்­த­துடன் பகி­ரங்­க­மா­கவே வேறு­பா­டு­களைக் கொண்­டி­ருந்­ததைக் காண­மு­டிந்­தது.

இச் சூழ­லி­லேயே யாரும் எதிர்­பாரா­த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு நாட்டில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­க குமாரதுங்கவும் இணைந்து இவ்வாட்­சி ­மாற்­றத்தை ஏற்­ப­டுத்த செயற்­பட்­டனர் என்று கூறலாம். இதற்கு நாட்டின் சிறு­பான்மை மக்கள் பாரிய ஆத­ரவை வழங்­கினர். அதிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் பாரிய நம்­பிக்­கையை வைத்து நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கினர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அதி­கா­ரத்­திற்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்பு பல்­வேறு வாக்­கு­று­தி­களை மக்­க­ளுக்கு வழங்­கியே ஆட்­சிக்கு வந்­தது. குறிப்­பாக தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்­வொன்றை வழங்­கு­வ­தாக வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. அதா­வது தமிழ் பேசும் மக்கள் தமது அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­ கூ­டி­ய­வா­றான சகல தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத்­திட்­டத்தை புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக முன்­வைப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டது. 

அத்­துடன் யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான மீறல்கள் தொடர்­பாக உள்­ளகப் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு நீதி­நி­லை­நாட்­டப்­படும் என்றும் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. அதே­போன்று காணி விடு­விப்பு, அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்­துக்கு தீர்வு, காணா­மல்­போனோர் விட­யத்­துக்கு தீர்வு, பெண்­களை தலை­மை­யாகக் கொண்ட குடும்­பங்­க­ளுக்­கான வாழ்­வா­தார வச­திகள், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடு, வடக்கு– கிழக்கில் யுத்­தத்தால் அழி­வ­டைந்த பிர­தே­சங்­களை கட்­டி­யெ­ழுப்­புதல், தேர்தல் முறை மாற்றம் போன்ற பல்­வேறு வாக்­கு­று­தி­களை முன்­வைத்தே மைத்­திரி– ரணில் தரப்பு பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொண்­டது.

 அதே­போன்று 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அதில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் மைத்­திரி–ரணில் தரப்பு ஆட்­சிக்கு வந்து மூன்­றரை வரு­டங்கள் கடந்து விட்­ட­போ­திலும் இது­வரை வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களில் எந்­த­வொரு விட­யமும் ஆக்­க­பூர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஒரு­சில நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். காணி­வி­டு­விப்­புக்­காக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இன்னும் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­ வேண்­டி­யுள்ள போதிலும் குறிப்­பி­டத்­தக்­க­வ­கையில் காணி விடு­விப்பு இடம்­பெற்­றுள்­ளது. அதே­போன்று ஜன­நா­யகம் குறிப்­பி­டத்­தக்­க­ளவில் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ள­துடன் பேச்சு சுதந்­தி­ரமும் ஓர­ளவில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டே உள்­ளது.

எனினும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தான பிரச்­சி­னைகள் எவை­ குறித்தும் இன்னும் சரி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதா­வது உட­ன­டி­யாக தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய பிரச்­சி­னை­க­ளான காணா­மல்­போனோர் விவ­காரம், அர­சியல் கைதிகள் விவ­காரம் என்­பன இது­வரை தீர்க்­கப்­ப­ட­வில்லை. நீண்­ட­கால அழுத்­தங்­க­ளுக்குப் பின்னர் தற்­போது காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக அலு­வ­லகம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதற்கு ஆணை­யா­ளர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அந்த அலு­வ­ல­கத்தின் நட­வ­டிக்­கைகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் பாதிக்­கப்­பட்ட மக்கள் அதில் நம்­பிக்கை வைப்­ப­தாக தெரி­ய­வில்லை. அண்­மையில் மன்­னாரில் நடை­பெற்ற அந்த அலு­வ­ல­கத்தின் மக்கள் சந்­திப்­பின்­போது பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருந்­தனர். இதன்­மூலம் பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்தி நிலையிலிருப்­பது தெளி­வா­கின்­றது.

அதே­போன்று யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு பல இழப்­புக்­களை சந்­தித்த மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடு இது­வரை ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று யுத்­தத்­தின்­போது கண­வனை இழந்து தற்­போது குடும்­பத்­த­லை­வி­க­ளாக செயற்­படும் பெண்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. இது தொடர்பில் ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து துய­ரங்­களை எதிர்­கொண்டு வாழ்­கின்ற இம் மக்­க­ளுக்கு வாழ்­வா­தார வச­தி­களை செய்­து­கொ­டுக்­க­வேண்டும். ஆனால் அது­தொ­டர்­பிலும் இது­வரை நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. பொது­வான பொறி­மு­றையின் கீழ் நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான ஒரு திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­காக அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்று சமர்ப்­பிக்­கப்­பட்டு அதற்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் இது­வரை அந்த அலு­வ­லகம் நிறு­வப்­ப­ட­வில்லை.

 பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­படும் என்று குறிப்­பிட்­டுள்­ள­போ­திலும் இது­வரை அதற்­கான நட­வ­டிக்­கைகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் கடந்­து­விட்ட போதிலும் இது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. மாறாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நேர­டி­யாக வாக்­கு­று­தி­களை வழங்கி அதி­கா­ரத்­துக்கு வந்த அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சிகள் தென்­னி­லங்­கையில் தமது அர­சியல் இருப்­புக்­காக அக்­க­றையைக் ­காட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னவே தவிர வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை.

அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் கொள்கை விளக்க உரையை நிகழ்த்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமை தொடர்பில் அவர்கள் பொறுமையிழந்திருப்பதாக தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் உள்ளுணர்வுடன் கருத்துக்களை வெளியிட்டு வருவதைக் காண முடிகின்றது.

ஆனால் அவற்றுக்கு செயல்வடிவம் கொடுப்பதிலேயே தென்னிலங்கை தலைவர்களிடம் தயக்கம் காணப்ப டுகின்றது. எவ்வாறெனினும் தொடர்ந்து இவ்வாறு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் இழுத்தடிக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கண்ணீருக்கு பதிலளிக்கவேண்டியது அவசியமாகும். காணாமல்போனோரின் உறவுகளின் கண்ணீரினூடாகவே காணாமல்போனோர் குறித்த அலுவலகம் பெறப்பட்டுள்ளதாக அண்மையில் அந்த அலுவலகத்தின் உறுப்பினரான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்திருந்தார். 

ஆனால் அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரினூடாக பெறப்பட்ட அலுவலகத்தின் செயற்பாடுகள் பாதிக்கப் பட்ட மக்களை திருப்தியடையச் செய்வ  தாக இருக்கவேண்டும். இந்நிலையில் தற்போது ஒன்பது வருடங்கள் கடந்  தும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீ  ருடனும் ஏக்கத்துடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் இனியும் தாமதிக்காது இம் மக்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.   

பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் நல்லிணக்கத்தைப் பலப் படுத்தி நிரந்தர சமாதானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். மக்கள் தொடர்ந்தும் விரக்தியுடனும் ஏக்கத்துடனும் இருப்பதற்கு இடமளிக்கவேண்டாம் என்பதே அனை வரதும் கோரிக்கையாக இருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-19#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.