Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூற்றினாலும் பரவாயில்லை, இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள்: கேப்டன் சுனில் உருக்கம்

Featured Replies

தூற்றினாலும் பரவாயில்லை, இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள்: கேப்டன் சுனில் உருக்கம்

 

 
Sunil_Chhetri

 

நீங்கள் தூற்றினாலும் பரவாயில்லை. தயவு செய்து களத்துக்கு வந்து இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள் என இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார்.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட விடியோவில் பேசியதாவது:

இதுவரை மைதானத்துக்கு வராமல் இருக்கும் ரசிகர்களாகிய உங்களுக்காக தான் இந்த விடியோ பதிவை வெளியிடுகிறேன். நீங்கள் கால்பந்து விளையாட்டை நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து நேரில் வந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள். ஏனென்றால் உலகளவில் நாங்களும் சிறந்த அணிதான் மற்றும் தாய்நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதே அதற்கு இரு முக்கிய காரணங்களாகும். நீங்கள் ஒருமுறை மைதானத்துக்கு வந்துவிட்டால், நிச்சயம் வீடு திரும்புபம்போது அதே மனநிலையில் இருக்க மாட்டீர்கள் என வாக்குறுதி அளிக்கிறேன். 

உங்களில் சிலர் ஐரோப்பிய காலபந்து லீக் அணிகளின் ஆதரவாளர்களாக இருக்கலாம். அதேநிலை இங்கு இல்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் உங்கள் நேரத்தை வீணடிக்கும் விதமாக நாங்கள் நிச்சயம் செயல்பட மாட்டோம். இங்கு இந்திய கால்பந்தின் மீது நம்பிக்கை இழந்த உங்கள் அனைவருக்கும் கூட இதே கோரிக்கையை முன்வைக்கிறேன். தயவு செய்து மைதானத்துக்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

மைதானத்தில் வந்து எங்களை தூற்றுங்கள், விமர்சியுங்கள், கடுஞ்சொற்களால் கூட வஞ்சியுங்கள், ஆனால் ஒருநாள் உங்கள் மனம் மாறும், எங்களுக்காக நிச்சயம் ஆதரவு அளிப்பீர்கள். நீங்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே தெரியாது. உங்களின் ஆதரவு எங்களுக்கு எத்தனை முக்கியம் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். 

ஆகையால், தயவு செய்து இந்திய கால்பந்து ஆட்டங்களுக்கு தயவு செய்து மைதானத்துக்கு நேரில் வந்து ஆதரவளியுங்கள். வீட்டிலும், அலுவலகத்திலும், பொது இடத்திலும் இந்திய கால்பந்து குறித்து விவாதியுங்கள். இந்திய கால்பந்துக்கு நீங்கள் அனைவரும் தேவை என்று உணர்வுப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். 

http://www.dinamani.com/sports/sports-news/2018/jun/03/abuse-us-criticise-us-but-please-come-watch-indian-team-play-sunil-chhetri-appeals-to-football-fans-2932448.html

  • தொடங்கியவர்

‘ரசிகர்களே, கால்பந்துக்கும் ஆதரவு தாருங்கள்’- சுனில் சேத்ரிக்கு விராட் கோலி ஆதரவு

 

 
virat11

விராட் கோலி, சுனில் சேத்ரி : கோப்புப்படம்

இந்திய கால்பந்து அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களிடம் பேசியதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 
 

இந்த வீடியோவைப் பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

virat11111jpg

விராட் கோலி

இது தொடர்பாக விராட் கோலி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

''என்னுடைய நல்ல நண்பரும், கால்பந்து அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரியின் வேண்டுகோளையும், கோரிக்கையையும் ரசிகர்கள் அனைவரும் கவனியுங்கள். கால்பந்துப் போட்டிக்கு ஆதரவு கொடுங்கள். அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். நான் கால்பந்துப் போட்டிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துவிட்டேன்.

என் ரசிகர்கள் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். இந்தியாவை உலகத்தின் சிறந்த விளையாட்டு தேசமாக உருவாக்க நினைத்தால் கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டுக்கு மட்டும் ரசிகர்கள் முழுமையாக ஆதரவு அளிப்பது சரியன்று, அனைத்துப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் சமமான ஆதரவை அளிக்கவேண்டும். முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.''

இவ்வாறு விராட் கோலி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, மிகச்சிறந்த வீரர், ஐரோப்பிய வீரர்களுக்கு இணையாக விளையாடும் திறமை பெற்றவர். சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிகமான கோல் அடித்தவர்கள் வரிசையில் 59 கோல்கள் அடித்து சுனில் சேத்ரி 3-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் சுனித் சேத்ரிக்கு முன்பாக, முதல் இரு இடங்களிலும் அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸியும், போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே இருக்கின்றனர் என்பது எத்தனை இந்திய ரசிகர்களுக்குத் தெரியும் என்பது வியப்புதான்.

அமெரிக்க கால்பந்துவீரர் கிளிண்ட் டெம்ப்சே, ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா ஆகியோரின் கோல் சாதனைகளை எல்லாம் சுனில் சேத்ரி முறியடித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இந்திய கால்பந்து அணி சர்வதேச தர வரிசையில் 97-வது இடத்தில் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/article24072016.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

சுனில் சேத்ரியின் வேண்டுகோளை ஏற்று அரங்கத்தில் திரண்டு நெகிழவைத்த ரசிகர்கள் -கால்பந்துப் போட்டிக்குக் கிடைத்த உற்சாக வரவேற்பு!

 
 
 

மும்பையில் இந்தியா, சீன தைபே, கென்யா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் இன்டர்கான்ட்டினென்டல் கோப்பைக்கான தொடர் நடைபெற்றுவருகிறது. ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற போட்டியில், இந்தியா சீன தைபே அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. இந்நிலையில் நேற்று, இந்தியா - கென்யா அணிகள் மோதின. இது, கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100-வது போட்டியாகும்

சுனில் சேத்ரி

 

Photo: Twitter/IndianFootballTeam

 கடந்த சனிக்கிழமை, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், ”ரசிகர்கள் கால்பந்து விளையாட்டைக் காண மைதானம் வரவேண்டும். இணையத்தில் விமர்சித்தது போதும். மைதானம் வந்து முகத்துக்கு நேரே விமர்சனம் செய்யுங்கள். உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம்” என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரது வீடியோவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, சச்சின் உள்ளிட்ட பல பிரபலங்களும் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

ரசிகர்கள்

இந்நிலையில் நேற்று, மும்பை மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இது, சுனில் சேத்ரி இந்திய அணிக்காக விளையாடும் 100-வது போட்டியாகும். இதனால், போட்டி தொடங்கும்போது இந்திய வீரர்கள் இருபுறமும் நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். போட்டியைக் காண முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா, விஜயன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவர்கள், ’சேத்ரி 100’ என்ற டி-ஷர்ட் அணிந்து வந்திருந்தனர். போட்டி தொடங்கும் முன், சுனில் சேத்ரிக்கு 100 போட்டியில் விளையாடியதற்காக சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  இந்தப் போட்டியில், இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. 2 கோல் அடித்து போட்டி நாயகனாக ஜொலித்தார் கேப்டன் சுனில் சேத்ரி.

சுனில் சேத்ரி

Photo: Twitter/IndianFootballTeam

சுனில் சேத்ரியின் ட்விட்டர் கோரிக்கைக்கு பலத்த வரவேற்பு இருந்ததை மைதானம் முழுவதும் பார்க்க முடிந்தது. மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் ரசிகர்களால் நிரம்பிவழிந்தன. மும்பை மட்டுமல்லாது, டெல்லி, கொல்கத்தா போன்ற பல பகுதிகளிலும் இருந்தும் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர்.  அவர்கள் பெரும்பாலும், சுனில் சேத்ரியின் வீடியோ பதிவு நெகிழ வைத்ததாகவும், அதற்காகப் போட்டியைக் காண வந்ததாகவும் தெரிவித்தனர். வீரர்கள், பேருந்தில் மைதானத்துக்கு வந்தது முதல் ரசிகர்கள் அவர்களை வரவேற்று உற்சாகம் அளித்தனர். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு இந்தமுறை கால்பந்து விளையாட்டுக்குக் கிடைத்தது. டிக்கெட் வாங்குவதற்கு மைதானத்தின் முன் நீண்ட வரிசையும் காணப்பட்டது. 

அபிஷேக் பச்சன்

Photo: Twitter/IndianFootballTeam

நிகுன்ஞ் லோட்டியா என்பவர் மைதானத்தின் 4 -வது ஸ்டாண்ட் முழுவதிலும் உள்ள 1000 டிக்கெட்டுகளையும் தனி ஆளாக வாங்கி மைதானத்துக்குப் பலரை அழைத்துவந்தார். இவர், சுனில் சேத்ரியின் வீடியோ பதிவுக்குப் பின்னர்தான் இந்த டிக்கெட்டுகளை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தியா, ”சுனில் சேத்ரியின் கோரிக்கையை ஏற்று இத்தனை பேர் மைதானத்துக்கு வந்ததில் மகிழ்ச்சி. இது வெறும் தொடக்கம்தான். இந்திய கால்பந்து அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் மைதானங்களை நிரப்புவோம். அவர்கள் நமக்காக இதயபூர்வமாக விளையாடுகிறார்கள். நம்மால் முடிந்தது, அங்கு அவர்களுடன் இருப்பது” என்றார். 

flag100_08289.png

போட்டி தொடங்கும் முன் பேசிய கேப்டன் சுனில் சேத்ரி, “நான் பேசியதுக்கு இத்தனை வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. நாட்டுக்காக விளையாடும்போது, ரசிகர்கள் ஒவ்வொருவரின் ஆதரவு மிக முக்கியம்” என்றார். இதுவரை 100 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி, 61 கோல்கள் அடித்து இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். உலக அளவில் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடிக்கொண்டிருப்பவர்களில் சுனில் சேத்ரி 3-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் போர்ச்சுகளின் ரெனால்டோவும்(81) மற்றும் இரண்டாவது இடத்தில் அர்ஜெண்டினாவின் மெஸ்சியும்(64) உள்ளனர். 

Perfect ending to a memorable night! #Chhetri100 #INDvKEN #BackTheBlue #IndianFootball #InquilabEIndianFootball @IndianFootball @fni @chetrisunil11 pic.twitter.com/ngOnjy4OKK

 
— Blue Pilgrims (@BluePilgrims) June 4, 2018

https://www.vikatan.com/news/sports/126822-football-fans-gave-great-response-in-mumbai-football-match-against-kenya.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.