Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 7 பேர் பலி

Featured Replies

குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 7 பேர் பலி

 
 
குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் ஏழு பேர் பலிபடத்தின் காப்புரிமைGUATEMALA GOVERNMENT

குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 7பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது.

ஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி பலியாயினர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான கான்ரெட் தெரிவித்துள்ளது.

குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் ஏழு பேர் பலிபடத்தின் காப்புரிமைAFP/GETTY

எரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாட்டமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1974ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு என்று உள்ளூர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் ஏழு பேர் பலிபடத்தின் காப்புரிமைAFP/GETTY

"துரதிஷ்டவசமாக எல் ரோடியோ கிராமம் லாவாவினால் அழிந்துவிட்டது. அதே வேளையில், லாவாவால் சூழப்பட்டுள்ள மற்றொரு கிரமமான லா லிபேர்ட்டட்டை எங்களால் இன்னும் நெருங்க முடியவில்லை. எனவே, அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறோம்" என்று தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரான செர்ஜியோ கேபனாஸ் உள்ளூர் வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44351496

  • தொடங்கியவர்

குவாட்டமாலா எரிமலை வெடிப்பு: 10 கிலோமீட்டர் வரை எழும்பிய சாம்பல்

குவாட்டமாலா எரிமலை வெடிப்பு: 10 கிலோமீட்டர் வரை எழும்பிய சாம்பல்படத்தின் காப்புரிமைAFP

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று குவாட்டமாலாவிலுள்ள எரிமலை வெடித்து சிதறியதில் அப்பகுதியிலுள்ள வீடுகளை பறந்து வந்து தாக்கிய சூடான கருங்கற்கள், சாம்பல் மற்றும் லாவாவினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இறந்துபோன மற்றும் காணாமல் போன பொதுமக்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவ வீரர்கள் உதவி செய்து வருகின்றனர்.

குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வானத்தை நோக்கி சுமார் 10 கிலோமீட்டர் (33,000 அடி) தூரம் வரை சாம்பலை கக்கிய எரிமலையின் சீற்றம் முடிவுற்றுள்ளதாக எரிமலையியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குவாட்டமாலா எரிமலை வெடிப்பு: 10 கிலோமீட்டர் வரை எழும்பிய சாம்பல்படத்தின் காப்புரிமைREUTERS

குவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டது.

முன்னதாக, ஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி பலியாயினர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான கான்ரெட் தெரிவித்துள்ளது.

எரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாட்டமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

குவாட்டமாலா எரிமலை வெடிப்பு: 10 கிலோமீட்டர் வரை எழும்பிய சாம்பல்படத்தின் காப்புரிமைAFP

தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1974ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு என்று உள்ளூர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

"துரதிஷ்டவசமாக எல் ரோடியோ கிராமம் லாவாவினால் அழிந்துவிட்டது. அதே வேளையில், லாவாவால் சூழப்பட்டுள்ள மற்றொரு கிரமமான லா லிபேர்ட்டட்டை எங்களால் இன்னும் நெருங்க முடியவில்லை. எனவே, அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறோம்" என்று தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரான செர்ஜியோ கேபனாஸ் உள்ளூர் வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

குவாட்டமாலா எரிமலை வெடிப்பு: 10 கிலோமீட்டர் வரை எழும்பிய சாம்பல்படத்தின் காப்புரிமைREUTERS

 

https://www.bbc.com/tamil/global-44365341

  • தொடங்கியவர்

எரிமலை வெடிப்பு: வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட்ட கிராமம்

கிராமம், நகரமென தனது வழியில் உள்ள அனைத்தையும் துடைத்தெறிந்து கொண்டிருக்கிறது குவாட்டமாலாவில் உள்ள போகோ எரிமலையிலிருந்து புறப்பட்ட எரிமலை குழம்பும், புகையும்.

எரிமலை வெடிப்பு: வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட்ட கிராமம்படத்தின் காப்புரிமைAFP

இந்த எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்தது. இதிலிருந்து எழுந்த புகையும், சேரும், சரிவில் இருந்த கிராமங்களை அப்படியே புதைத்துவிட்டது.

இந்த எரிமலை வெடிப்பினால் 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.எழுபத்து ஐந்து பேர் பலியாகி இருக்கிறார்கள், 192 பேரை காணவில்லை என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.

மீண்டும் செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்ததில் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன.

மரணங்கள் ஏற்பட்டது எதனால்?

பேரிடர் மீட்பு முகமையின் தலைவர் செர்ஜியோ கபானஸ், "எங்களிடம் மரணித்தவர்கள் எத்தனை பேர், காணாமல் போனவர்கள் எத்தனை பேர், அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இருக்கிறது." என்று கூறியதாக எ.எஃப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

குவாட்டமாலா பேரிடர் தடுப்பு பிரிவின் இயக்குநர், "ஞாயிற்றுக்கிழமை எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மக்களுக்கு வெளியேறுதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்படவில்லை" என்கிறார்.

எரிமலை வெடிப்பு: வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட்ட கிராமம்படத்தின் காப்புரிமைREUTERS

உள்ளூர் மக்களுக்கு அவசர கால பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதை அவர்கள் செயல்படுத்துவதற்குள் எல்லாம் நடந்துவிட்டது. எரிமலை வெடிப்பு அதன் உடனடி தாக்கமும் மிக வேகமாக இருந்தது என்கிறார் அவர்.

எரிமலை வெடிப்பு: வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட்ட கிராமம்படத்தின் காப்புரிமைAFP எரிமலை வெடிப்பு: வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட்ட கிராமம்படத்தின் காப்புரிமைREUTERS

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது அதிலிருந்து வெளியேறிய எரிமலை குழம்பு, வெப்ப வாயு சரிவிலிருந்த அனைத்தையும் விழுங்கி சென்றது.

எரிமலை குறித்து ஆய்வு செய்யும் ஜனைன் கிரிப்பர் பிபிசியிடம் எரிமலை வெடிப்பின் போது அதிலிருந்து வழிந்தோடும் எரிமலை சேறு குறித்து குறைத்து மதிப்பிட கூடாது, அது மிகவும் ஆபத்தானது என்றார்.

'எனக்கென்று யாருமில்லை'

எல் ரொடயோ கிராமத்தை சேர்ந்த போரிஸுக்கு இப்போது சொந்தமென்று யாருமில்லை. ஞாயிற்றுக்கிழமை எரிமலை வெடித்ததில் தனது நேசத்திற்குரிய அனைவரையும் இழந்துவிட்டார்.

ஓர் இரவில் தனது வாழ்க்கையே முற்றும் முழுவதுமாக மாறிவிட்டது என்கிறார் போரிஸ்.

எரிமலை வெடிப்பு: வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட்ட கிராமம்படத்தின் காப்புரிமைREUTERS

அவரின் மனைவி, மனைவியின் பெற்றோர், மைதுனன் என அனைவரையும் இழந்துவிட்டார் போரிஸ்.

"நான் குழந்தைகளின் சடலங்களை பார்த்தேன். அவர்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் இறுக அணைத்து இருந்தனர்" என்று அழுகையின் இடையே சோகம் அப்பிய குரலில் தம்மிடம் கூறியதாக கூறுகிறார் பிபிசி செய்தியாளர் வில் கிராண்ட்.

இது போரிஸின் கதை மட்டுமல்ல, அந்த ஊரின் பெரும்பாலானவர்களின் கதையும் இதுதான். எரிமலை வெடித்ததில் அந்த எல் ரொடயோ கிராமமே வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட்டுவிட்டது.

https://www.bbc.com/tamil/global-44379758

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.