Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை திகில்... வானும் வசப்படும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை திகில்...

வானும் வசப்படும்?

ஓர் அதிகாலை அட்டாக் மூலம் உலகையே ஆச்சர்யத்தோடும், லேசான மிரட்சியோடும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக் கிறார்கள் தமிழீழத்துக் காகப் போராடும் விடுதலைப் புலிகள்!

p44wd3.jpg

கடந்த 26&ம் தேதி அதிகாலை சுமார் 12 மணி... கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள காட்டுநாயக்கா இலங்கை விமானப் படையின் தலைமைத்தளம், சில நிமிடங்களில் நேரப் போகும் பெரும் ஆபத்தை அறியாமல் துயிலில் இருந்தது. திடீரென வானில் தோன்றி ரீங்கரித்த இரண்டு இலகு ரக குண்டுவீச்சு விமானங்கள் அடுத்தடுத்து நான்கு குண்டுகளை இலங்கை படைத்தளத்தின் மேல் இடியென இறக்கியது. என்ன நடந்தது என அறிவதற்குள் தளத்தில் நின்று கொண்டிருந்த இலங்கை விமானப் படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் முற்றிலும் சேதமாகிப் போனது. இதில், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த மூன்று பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இருபது பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

குண்டு வீசிய அந்த விமானங்கள் புலிகளுக்குச் சொந்தமானவை! அதோடு, தங்களது பல வருடப் போராட்டப் பாதையில் புலிகளின் வான்வழித் தாக்குதலும் இதுதான் முதல்தடவை!

p45cuc0.jpg

வான்வழித் தாக்குதலுக்காகப் புலிகளின் விமானங்கள் வந்தபோது அவற்றை இலங்கை விமான தளத்தின் ரேடார்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், பக்கத்திலேயே இருக்கும் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் கன்ட்ரோலுக்குள்ளும் புலிகளின் விமானங்கள் வரவில்லை. புலிகளின் இத்தகைய தொழில் நுட்பத்தைக் கண்டுதான் உலக அரங்கம் வியந்து போய் நிற்கிறது.

இந்தச் சம்பவத்தால் ஒட்டுமொத்த இலங்கையே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது. இதன் தொடர்ச்சியாக பல உலக நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை, ‘கொஞ்ச காலத்துக்கு இலங்கைப் பக்கம் செல்ல வேண்டாம்’ என்று எச்சரித்திருக்கிறது. உலக பங்கு வர்த்தகத்தில் புலிகளின் வான்வழித் தாக்குதலால் பெரும் சரிவைக் கண்டிருப்பதாக அபாயமணி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. புலிகளின் இந்த ஒற்றைத் தாக்குதலின் தாக்கம் பற்றி பீதியடைந்திருக்கும் பொருளாதார நிபுணர்கள், ‘இலங்கையே கடும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படும்’ என்கிறார்கள். ஆனால், ‘‘பொதுமக்களுக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்த நாங்கள் தயாரில்லை. ஆனால் போர்நிறுத்தம் அமலில் இருக்கும்போது, தொடர்ந்து எங்கள் பகுதிகளில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இலங்கை விமானப் படைக்கு பதிலடி கொடுக்கவே இந்தத் தாக்குதலைத் துவக்கியிருக்கிறோம். இந்தத் தாக்குதல்கள் தொடரும். தாக்குதலில் ஈடுபட்ட எங்களது இரண்டு வானூர்திகள் எங்களது படைத் தளத்துக்கு பத்திரமாகத் திரும்பி விட்டன’’ என்று புலிகளின் ராணுவச் செய்தித் தொடர்பாளர் இளந்திரையன் அறிவித்திருக்கிறார்.

p45aor0.jpg

ஆனால் இலங்கை விமானப்படைத்தள அதிகாரியான இக்பால் அத்தாஸ், ‘‘எங்களுக்குப் பெரிய சேதமெல்லாம் எதுவும் இல்லை. நான்கு முறை எங்கள் படைத்தளத்தில் வெடிச்சத்தம் கேட்டது, அவ்வளவுதான். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை மூடியிருக்கிறோம்’’ என்று நழுவலாக கருத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், இலங்கை விமானப்படையில் முக்கிய பலமாகக் கருதப்படும் ரஷ்யத் தயாரிப்பான ‘மிக்’ ரக போர் விமானங்களும், இஸ்ரேலிய தயாரிப்பான, ‘கிபிர்’ ரக போர் விமானங்களும் வெகுவாகச் சேதப்படுத்தப் பட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்போதுமே இதுமாதிரியான தாக்குதல்களுக்குப் பிறகு உயிர்ச்சேதம் எவ்வளவு, பொருட்சேதம் எவ்வளவு, சேதத்திலிருந்து மீள்வதற்கு எவ்வளவு காலமாகும் என்றுதான் இலங்கையைப் பொறுத்தவரை சர்வதேச நாடுகள் கணக்குப் போடும். ஆனால் இந்தத் தாக்குதலை உலக நாடுகளும், இலங்கையும் வேறு வகையாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. புலிகளுக்கு எப்போது விமானங்கள் சொந்தமானது? எத்தனை விமானங்களை அவர்கள் வைத்திருப்பார்கள்? அடுத்து எந்தெந்த திசைகளில் தாக்குதல்களை நடத்துவார்கள்? என ஒரு பெரிய கேள்விப் பட்டியலை வைத்துக் கொண்டு விடை தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

கொழும்புவில் இருக்கும் மூத்த பத்திரிகையாளர் வே.தங்கநேயனிடம் பேசினோம். ‘‘புலிகள் இயக்கத்தில் வான்புலிகள் என்ற தனியான ஒரு அமைப்பு பத்து வருடங்களுக்கு முன்பே உருவாகத் துவங்கிவிட்டது. 98&ம் வருடம் புலிகள் கட்டுப்பாட்டு ஏரியாவில் நடக்கும் மாவீரர் நினைவு தினத்தன்று மாவீரர் சமாதிகளுக்கு புலிகளின் வானூர்திகள் வான்வழியாக மலர் தூவின. அப்போதே புலிகள் தங்கள் வசம் வானூர்திகளை வைத்திருந்ததை இலங்கை அரசு உறுதி செய்து கொண்டது. ஆனால், அந்த வானூர்திகளை புலிகள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. புலிகள் தங்களது கோபத்தைப் பெரிய அளவில் காட்ட ஓரிருமுறை விமான தளங்களைத்தான் தாக்கியிருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், 2001-ம் வருடம் ஜூலை 24-ம் தேதி கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் மீது அவர்கள் நடத்திய தாக்குதலைச் சொல்லலாம். இந்தத் தாக்குதலுக்கு அப்போது புலிகள் சொன்ன காரணம், ‘83-ம் வருடம் ஜூலை 23-ம் தேதி நடந்த இனப்படுகொலைக்கு பழிவாங்கவே’ என்பதுதான்! பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத, அதே சமயம் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்க அப்போது புலிகள் கொடுத்த அந்த அடிக்குப் பிறகுதான் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டது. இலங்கை அரசும் போர்நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்தது. இரு தரப்பும் சமாதான ஒப்பந்தங்களுக்கு வந்தன. புலிகள் தங்கள் வானூர்திகளுக்கு ‘தமிழீழ விமானப்படை’ என்று பெயரிட்டிருக்கிறார்களாம். இந்த விமானங்களை அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கினார்கள் என்பதைவிட, விமான தொழிநுட்பத்தில் கைதேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள் மூலம்தான் தயாரித்திருக்க வேண்டும். இப்படித்தான் இப்போது இலங்கையில் பேச்சு அடிபடுகிறது. இதைத் தவிர்த்து வன்னிக்காடுகளில் மிக் ரக போர்விமானங்களையும் புலிகள் வைத்திருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களில் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பல இடங்களை ஆக்கிரமித்த இலங்கை அரசு, உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி அதை வாகறையில் வெற்றி விழாவாகவே கொண்டாடியது. இதெல்லாம்தான் புலிகளை வான்வழித் தாக்குதலுக்குத் தயார்படுத்தியிருக்க வேண்டும்’’ என்ற தங்கநேயனிடம்,

‘இந்த மோதல் போக்கு முடிவுக்கே வராதா? இலங்கையில் அமைதி திரும்பாதா?’ என்று கேட்டோம்.

அதற்கு அவர், ‘‘நீங்கள் கேட்கும் கேள்விக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ&குவான் இலங்கைப் பிரச்னை பற்றி, தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைப் பதிலாகத் தருகிறேன். ‘நான் இலங்கையின் ஏழு பிரதமர்களை, ஜனாதிபதிகளைப் பார்த்திருக்கிறேன்... பழகியிருக்கிறேன்... ஈழப் பிரச்னை குறித்துப் பேசியும் இருக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இவர்கள் எல்லோருமே தங்களை சிங்கள மொழி இன வெறியர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’ எங்கள் பிரச்னை பற்றி லீ குவான் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கிறார்’’ என்று சொன்னார் தங்கநேயன்.

முதல் கட்டமாக இலங்கை விமான படைத்தளத்தை தாக்கியிருக்கும் புலிகள், அடுத்து இலங்கை ராணுவ முகாம்கள் மீதும் வான்வழித் தாக்குதல் தொடரும் என அறிவித்திருப்பதுதான் சிங்கள அரசை கிலிகொள்ள வைத்திருக்கிறது!

விகடன்.

தமிழீழத்தின் வான் வெளி தமிழர் படைகளின் பூரண கட்டுப்பாட்டிற்குள் வரும் அந்த இனிய நல்ல நாளைத் தான் உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துத் தவம் கிடக்கின்றார்கள். :rolleyes::rolleyes::blink:

இப்பால் அப்பாலை விகடன் பிழையாக சிறீ லங்கா விமானப்படை அதிகாரி என்று கட்டுரையில் விபரித்துள்ளது.

I WILL PUT A AIRLINE TICKET TO VANNI SOON

இது என்ன விளையாட்டுப்பா :P :P

எலி பூனை விளையாட்டும் விளையாடலாம்

ஆடு புலி யாட்டமும் விளையாடலாம்

கிளிதட்டும் விளையாடலாம்

ஏன் ஆசை வந்தால் 8 வயதில் அப்பா அம்மா விளையாட்டும் விளையாடலாம்

ஆனா இந்த போறன் வாறன் விளையாட்டு வேனம்ப்பா :P

இந்த விளையாட்டும் வேண்டாம் நான் மேல இருந்த கருத்துக்கு பதில் எழுதி போட்டு வர மேல எழூதிய கருத்தை காணவில்லை :P

Edited by வடிவேலு

விகடன் காரங்க குழப்பிரானுகளே

ஆனால் இலங்கை விமானப்படைத்தள அதிகாரியான இக்பால் அத்தாஸ், ‘‘எங்களுக்குப் பெரிய சேதமெல்லாம் எதுவும் இல்லை. நான்கு முறை எங்கள் படைத்தளத்தில் வெடிச்சத்தம் கேட்டது, அவ்வளவுதான். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை மூடியிருக்கிறோம்’’ என்று நழுவலாக கருத்துச் சொல்லியிருக்கிறார்.

Thank you and Thank you mr.lee.

good comment by singapore leader.

விகடன் காரங்க குழப்பிரானுகளே

குழப்பலை சார் சொதப்புறாங்க, இந்த அளவுக்குத்தான் அவங்க நம்மட பிரச்சனையை பற்றி அறிஞ்சு வைச்சிருக்காங்க!

இது யாரோட பிழை?

அவங்களுடையதா? இல்லை நம்மளுடையதா?

அவங்க தெரிஞ்சுகிற மாதிரி நாம ஏதாச்சும் செய்யுறோமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்னத்தைச்செய்யலாம் சொல்லிவிடுங்கோ அது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும், பக்கத்திலேயே இருக்கும் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் கன்ட்ரோலுக்குள்ளும் புலிகளின் விமானங்கள் வரவில்லை. புலிகளின் இத்தகைய தொழில் நுட்பத்தைக் கண்டுதான் உலக அரங்கம் வியந்து போய் நிற்கிறது.

கடவுளே! இது மட்டும் உண்மையாக இருந்தால் போதும்....!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.