Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு கை கொடுக்­கின்­றதா?

Featured Replies

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு கை கொடுக்­கின்­றதா?

prasedant-7fc777b695f7ef3b86defb701c70e548cdfa68be.jpg

 

துரைசாமி நடராஜா

நிறை­வேற்று ஜனா­திபதி முறையினை நீக்­கு­வதா? இல்லையா? என்­பது குறித்து மஹிந்த அணி­யி­ன­ரி­டத்தில் 

கருத்­தொ­ரு­மைப்­பாடு இல்­லாத நிலை­மையே காணப் ப­டுகின்­றது. கருத்து வேற்­றுமைகளே இங்கு காணப் ­ப­டு­கின்றன. இவ்வ­ணியினரின் முடி­வினைப் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை குறித்த வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இப்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. இம்­மு­றை­மை­யினை நீக்­கு­வது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­னணி முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கும் 20 ஆம் திருத்­தத்தை மக்கள் விடு­தலை முன்­னணி சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்­துள்­ள­மையும் தெரிந்த விட­ய­மாகும். இந்­நி­லையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­படு­மானால் சிறு­பான்­மை­யினர் பல்­வேறு சவால்­க­ளையும் சந்­திக்க நேரிடும் என்றும் அவ்­வாறு நீக்­கப்­ப­டு­மி­டத்து புதிய அர­சியல் அமைப்பில் சிறு­பான்­மை­யி­னரின் நலன் சார்ந்த பல்­வேறு விட­யங்கள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

1978 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இம்­மு­றை­மை­யா­னது ஐக்­கிய அமெ­ரிக்கா, பிரான்சு, இங்­கி­லாந்து ஆகிய நாடு­களின் அர­சாங்க முறை­களின் கல­வையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்­றது என்று கலா­நிதி விஸ்­வ­வர்­ண­பாலா தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் ஜனா­தி­பதி முறை சார்ந்த அர­சாங்கம் ஒன்­றினை ஏற்­ப­டுத்த வேண்டும் என்ற சிந்­தனை 1966 ஆம் ஆண்டில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஒரு பலம் வாய்ந்த நிர்­வா­கியைக் கொண்ட ஓர் அர­சாங்க முறையை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தனா ஏற்­க­னவே வலி­யு­றுத்தி இருந்தார். தெரி­வு­செய்­யப்­பட்ட ஒரு சட்­ட­ச­பையின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு இடங்­கொ­டுக்­காத ஒரு நிர்­வாகி அவ­சியம் என்­பதும் அவரின் கருத்­தாக இருந்­தது. இதே­வேளை அபி­வி­ருத்தி அடைந்து வரு­கின்ற ஒரு நாட்­டிற்குப் பலம் வாய்ந்த ஒரு நிர்­வாக முறையே சிறப்­பாகப் பொருந்தும் என்ற நிலைப்­பாட்­டினை ஐக்­கிய தேசியக் கட்சி கொண்­டி­ருந்­த­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக உள்­ளது.

1978 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்பு மக்­களால் வேறாக தெரிவு செய்­யப்­படும் நிர்­வாக அதி­கா­ர­மிக்க ஜனா­தி­ப­தி­யையும் அவ­ரது வழி­காட்­டலின் கீழ் இயங்கும் பாரா­ளு­மன்­றத்­தையும் அறி­முகம் செய்­தது. நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தி­யிடம் ஓர் அரசின் உண்மை நிர்­வாக அதி­கா­ரங்கள் அனைத்தும் சட்­ட­மன்­றத்­திற்குப் புறம்­பாக தெரி­வு­செய்­யப்­பட்ட தனி ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­கின்­றது. துரித பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்குப் பாரா­ளு­மன்­றத்­தினால் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பதவி தேவை என்று உண­ரப்­பட்­டதால் இப்­ப­தவி உரு­வாக்­கப்­பட்­டது. சட்­டத்­துறை, நிர்­வா­கத்­துறை, நீதித்­துறை சார்ந்த பல அதி­கா­ரங்­க­ளையும் நிறை­வேற்று ஜனா­தி­பதி கொண்­டி­ருக்­கின்றார். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யா­னது பல சாதக விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்­தினால் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத வகையில் நிர்­வா­கத்­துறை இருப்­ப­தனால் அபி­வி­ருத்தி வேலை­க­ளுக்கு இந்­நிலை உத­வக்­கூ­டி­ய­தாக உள்­ளது. ஜனா­தி­ப­திக்கு இருக்­கின்ற நிறை­வேற்று அதி­கா­ர­மா­னது நிர்­வாக செயற்­பா­டு­களில் கால தாம­தத்தை தவிர்ப்­ப­தற்கு உத­வு­கின்­றது. ஜனா­தி­ப­தி­யா­னவர் நாட்டில் வாழும் சகல மக்­க­ளி­னாலும், தெரிவு செய்­யப்­ப­டக்­கூ­டிய ஒரு­வ­ராக இருப்­பதால் வாக்­கு­களை கவ­னத்தில் கொண்­டா­வது சிறு­பான்மை இனங்­களின் நலன்­களை குறைந்த மட்­டத்­தி­லா­வது பேணக்­கூ­டி­ய­வ­ராக இருப்பார்.

ஜனா­தி­பதித் தேர்தல் முறை அதி­க­ளவில் ஜன­நா­யகத் தன்­மை­மிக்க தேர்தல் முறை­யாக உள்­ளது. ஒரு உறு­தி­யான அர­சாங்­கத்­திற்கு நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை வழி­வ­குக்­கின்­றது. என்­றெல்லாம் இம்­மு­றை­மைக்கு சாத­க­மான வகையில் கருத்­துகள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதே­வேளை நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யா­னது பாரா­ளு­மன்­றத்தின் இறை­மையை பாதிப்­ப­தாக உள்­ள­தா­கவும் சர்­வா­தி­காரப் போக்­கு­டை­ய­தாக காணப்­படு­வ­தா­கவும் கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இன்னும் பல கருத்­துக்­களும் இது தொடர்பில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. ஜனா­தி­பதி சட்ட, நிர்­வாக, நீதி துறை­களில் அதி­க­ள­வி­லான அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருப்­ப­தா­னது அவரின் அதி­கார துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு வழி வகுப்­ப­தாக உள்­ளது. பாரா­ளு­மன்­றத்தைக் கூட்டும் கலைக்கும் ஒத்திவைக்கும் அதி­கா­ரமும் ஜனா­தி­ப­திக்கு இருக்­கின்­ற­மை­யா­னது பாரா­ளு­மன்­றத்தின் இறை­மையை பாதிப்­ப­தாக உள்­ளது. பாரா­ளு­மன்­றத்­தினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட சட்ட மூலத்தை ஜனா­தி­பதி மக்கள் தீர்ப்­புக்கு விடலாம் என்று கூறப்­ப­டு­கின்­ற­மை­யா­னது பாரா­ளு­மன்ற இறை­மைக்கு தடை­யாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அமைச்­ச­ர­வையின் மீது நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்டு வந்து நிர்­ண­யிக்­கப்­படின் அமைச்­ச­ரவை பதவி விலகும். ஆனால் அமைச்­ச­ர­வையின் தலை­வ­ரான ஜனா­தி­பதி பதவி வில­க­மாட்டார் என்று கூறப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யா­னது குற்­றத்­திற்கு பொறுப்­பா­ன­வரை தப்­பிக்­க­விட்டு குற்­றத்­திற்கு உடந்­தை­யாக இருப்­ப­வரை தண்­டிப்­பது போல காணப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி தனது நீதி அதி­கா­ரங்­களைக் கொண்டு நீதி சம்­பந்­த­மான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளிலும் ஈடு­ப­டலாம். தனக்கு தேவை­யா­ன­வர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்­கலாம் அல்­லது தண்­ட­னையைக் குறைக்­கலாம். ஜனா­தி­ப­தியின் விசா­ரணை ஆணைக்­குழு போன்ற விட­யங்­களை அவர் தனக்கு சாத­க­மா­கவும் பயன்­ப­டுத்­தலாம். ஜனா­தி­பதி பத­விக்குப் போதிய தடைகள், சம­நி­லைகள் இல்லை என்­றெல்லாம் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைக்கு எதி­ரான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­யினை நீக்­க­வேண்டும் என்­கிற கருத்­துக்கள் இப்­போது ஆழ­மாக வேரூன்றி வரு­வ­தனைக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. மக்கள் விடு­தலை முன்னணி இதில் பிர­தான பாத்­தி­ர­மேற்­றுள்­ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கும் 20 ஆவது திருத்­தத்­தையும் மக்கள் விடு­தலை முன்­னணி சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் கடந்த வெள்­ளிக்­கிழமை கைய­ளித்­துள்­ளது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை எமது நாட்டில் பல நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. அது மாத்­தி­ர­மன்றி ஜன­நா­யக நிறு­வ­னங்­களின் அதி­கா­ரங்­களை தாழ்த்­தியும் உள்­ளது. பாரா­ளு­மன்­றத்தை அதி­கா­ர­மற்­ற­தாக மாற்­றி­யுள்ளது. அமைச்­ச­ர­வையின் நிலை­மையும் அப்­ப­டி­யா­ன­தாகும். நீதி­மன்ற சுயா­தீ­னத்­தையும் இல்­லாமல் செய்­தி­ருக்­கின்­றது. 1994 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் வந்த அனைத்து ஜனா­தி­ப­தி­களும் நிறை­வேற்று அதி­கார முறை­மையை நீக்­கு­வ­தாக மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தனர். முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ மற்றும் தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும் ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தாக மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்து மக்­களின் ஆணையைப் பெற்­றுக்­கொண்­டனர். எனினும் எவரும் அந்த வாக்­கு­று­தி­யினை நிறை­வேற்­ற­வில்லை.

ஜனா­தி­பதி முறை­ மையை நீக்­கினால் நாடு பிள­வு­படும் என்று கூறிக்­கொண்டு ஒரு தரப்­பினர் இருந்து வரு­கின்­றனர். அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவே இவர்கள் இவ்­வா­றான ஒரு நிலைப்­பாட்டில் இருந்து வரு­கின்­றனர். ஒரு சிலர் ஜனா­தி­பதி முறை­மை­யினை எதிர்­பார்த்து உள்­ளனர். அந்த குழு­வுடன் நாம் பேசி பிர­யோ­சனம் இல்லை என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க ஆழ­மாக வலி­யு­றுத்தி இருந்­த­மையும் இங்கு நோக்­கத்­தக்­க­தா­கவே உள்­ளது. இதே­வேளை அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆம் திருத்தம் குறித்து சகல தரப்­பு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து ஆரோக்­கி­ய­மான மாற்­றங்­களை செய்­வ­தற்குத் தயார் என்று தெரி­வித்­துள்ள மக்கள் விடு­தலை முன்­னணி நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­யினை நீக்­கு­வதா? இல்­லையா? என்­பது குறித்து ஜனா­தி­ப­தி­யு­டனோ அல்­லது பிர­த­ம­ரு­டனோ கலந்­து­ரை­யாட வேண்­டிய அவ­சியம் இல்லை என்றும் தெரி­வித்­துள்­ளது. தற்­போ­தைய பிர­த­ம­ருக்கு அதி­கா­ரங்­களை வழங்க நாம் தயா­ராக இல்லை என்­பதும் முன்­ன­ணியின் கருத்­தாக உள்­ளது.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை முக்­கிய பேசு­பொ­ரு­ளா­கி­யுள்ள நிலையில் சிறு­பான்மைக் கட்­சிகள் பலரும் இம்­மு­றை­மை­யினை ஆத­ரித்து வரு­கின்­றன. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை என்­பது மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்­க­ளுக்­கான ஒரு பாது­காப்­பாகும். இம்­மு­றைமை நீக்­கப்­ப­டு­மி­டத்து சிறு­பான்மை மக்கள் பல்­வேறு பாதக விளை­வு­க­ளையும் சந்­திக்­க­வேண்டி நேரிடும் என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் கூறி இருக்­கின்றார்.

மேலும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டு­மி­டத்து புதிய அர­சி­ய­ல­மைப்பில் சிறு­பான்­மை­யி­னரின் நலன் சார்ந்த பல்­வேறு விட­யங்கள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்றும் லோரன்ஸ் வலி­ய­ுறுத்தி இருக்­கின்றார். புதிய அர­சியல் அமைப்­பினை முன்­வைப்­பதில் உள்ள தடை­களை சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர் நல்­லாட்சி அர­சாங்கம் எதிர்ப்­பு­க­ளையும் மீறி புதிய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­வைக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்­தி­னையும் விளக்கி இருக்­கின்றார்.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­யினை நீக்­கு­வதா? இல்­லையா? என்­பது குறித்து மஹிந்த அணி­யி­ன­ரி­டத்தில் கருத்­தொ­ரு­மைப்­பாடு இல்­லாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. கருத்து வேற்­று­மை­களே இங்கு காணப்­ப­டு­கின்­றன. இவ்­வ­ணி­யி­னரின் முடி­வினைப் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கவே மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பகிரங்கமாகவே குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருக்கின்றார். எதிர்க்கட்சி என்ற போர்வையில் இருந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருவதாகவும் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தி இருக்கின்றார். இதேவேளை உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் பின்பற்றி வருகின்ற நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கு ஆதரவு வழங்க போவதில்லை என்று பிவிதுரு ஹெல உறுமய தெரிவிக்கின்றது. மத்திய அரசினை பலவீனப்படுத்தி பிரிவினையை பலப்படுத்தும் திட்டமே மக்கள் விடுதலை முன்னணியின் 20 ஆவது திருத்தமாகுமென்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கின்றார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்த விடயம் இப்போது வாதப் பிரதிவாதங்­களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இருபக்க நியாயங்களையும் மக்கள் நன்றாக அவதானித்து வருகின்றார்கள். இந்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிப்போம் என்று கூறி பதவிக்கு வந்தவர்கள் இப்போது வேறுவிதமாகப் பேசுவதுதான் விந்தையாக இருக்கின்றது.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-04#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.