Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளைகளை தாய்மாருடன் இணைக்கும் திட்டம்

Featured Replies

வெளிநாடுகளுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளைகளை தாய்மாருடன் இணைக்கும் திட்டம்

 

 

குழந்தைகளை வளர்ப்பதற்காக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு குழந்தைகளை தத்துக்கொடுத்த இலங்கை தாய்மார்களை மீண்டும் அவர்களின் பிள்ளைகளுடன் ஒன்றிணைப்பதற்கான திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

netharland.jpg

ருவான்வெல்ல பகுதியில் நெதர்லாந்தில் இருந்து வந்த செனாபன் ரொசானினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா நாடுகளில் தத்தெடுக்கப்பட்டு வாழும் பருவ வயதினரை இலங்கையில் உள்ள அவர்களது பெற்றோருடன் இணைப்பதற்காக அவர் இலங்கைக்கு வந்துள்ளார். தாய்மார்களை கண்டுபிடிப்பதற்காக அவர் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளார்.

01__2_.jpg

தாய்மார்களை கண்டுபிடிப்பதை தொடர்ந்து தாய்மார்கள் தமது குழந்தைகளை கண்டு பிடிப்பதில் ஆர்வமாக இருந்தால் ஐரோப்பா உட்பட ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் டி.என்.ஏ . வங்கியை ஐரோப்பா நிறுவுவதற்கு உதவும் என்றும் செனாபன் ரொசான் சுட்டிக்காட்டினார்.

இதனால் பிள்ளைகளை தத்துக்கொடுத்த தாய்மார்களுடன்  கடந்த 3ஆம் திகதி விகாரமஹாதேவி பூங்காவில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதன் பின்பு கடந்த 4ஆம் திகதி திங்கட்கிழமை வெளிநாடுகளில் தங்களுடைய பிள்ளைகளை  வழங்கிய தாய்மார்களின் ஆவணங்களும் பெறப்பட்டன.

06.jpg

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செனாபன் ரொசான், நாங்கள் பிள்ளைகளை தத்துக்கொடுத்த தாய்மார்களின் கதைகளை ஒன்று சேர்த்து நெதர்லாந்து நாட்டு அரசிடம் வழங்குவோம்.

நாங்கள் நினைக்கின்றோம் நெதர்லாந்து அரசு டி.என்.ஏ  வங்கியை நிறுவுவதற்கு உதவி செய்யும் என நம்புகின்றோம். டி.என்.ஏ .  ஊடக தான் நாம் பெற்றோரை தெளிவாக அடையாளம் காண முடியும். அவ்வாறு குழந்தைகளை தத்துக்கொடுத்த தாய்மார்கள் இருந்தால் தங்களிடம் விபரங்களைத் தாருங்கள் என தெரிவித்தார்.

அவ்வாறு வெளிநாட்டவர்களுக்கு தமது பிள்ளைகளை தத்துக்கொடுத்த பெற்றோர்  0774289289 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்றதாக இலங்கை  அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. 1980 களில் இலங்கையில் இருந்து சிறுவர்கள் தத்தெடுத்தல் என்ற போர்வையில் கடத்தப்பட்டதை நெதர்லாந்தின் தொலைக்காட்சியொன்று “இலங்கையின் சிறுவர் பண்ணைகள்” என்ற நிகழ்ச்சி மூலம் கடந்தவரும் அம்பலப்படுத்தியிருந்தது.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கையில் இருந்து சிறுவர்கள் கடத்தப்பட்டமை உண்மையென தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்திலும் “சிறுவர் பண்ணைகள்" இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் இதுவரையில் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/34629

  • தொடங்கியவர்

 

4000 இலங்கை குழந்தைகள் நெதர்லாந்திற்கு தத்துகொடுக்கப்பட்டுள்ளார்கள்

 

 
 

பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்காவைச் சேர்ந்ததாய்மார்களால் வெளிநாட்டவர்களிடம் தத்துக்கொடுத்த பிள்ளைகளில் நான்காயிரம் பேர் நெதர்லாந்தில் இருப்பதாகதகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல்ல பகுதியில் பிறந்துநெதர்லாந்து வளர்ந்த சந்தமாலி என்ற சன பொஃன் ரொஷன் என்ற யுவதி, இவ்வாறுவளர்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளையும் பெற்றோரையும் மீண்டும் நேரில்சந்திக்க வைப்பதற்க செயற்திட்டமொன்றை ஸ்ரீலங்காவில் ஆரம்பித்திருக்கின்றார்.

 

நெதர்லாந்து பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டசன பொஃன் ரொஷன் என்ற இளம் யுவதி ஸ்ரீலங்காவிற்கு திரும்பியுள்ளதுடன், பிள்ளைகளைவெளிநாட்டவர்களுக்கு தத்துக்கொடுத்த தாய்மார்கள் சிலரை இணைத்துக்கொண்டு கொழும்புவிகாரமாதேவி பூங்காவில் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து தமதுபிள்ளைகளை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்குதத்துக்கொடுத்த தாய்மார்கள் இருப்பார்களால் அது குறித்த தகவல்களைதெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில்துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யும் நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

1980 களில் இருந்து இன்றுவரை ஸ்ரீலங்காவைச் சேர்ந்த நான்காயிரம் பிள்ளைகள் நெதர்லாந்திற்குஅழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தனது ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஸ்ரீலங்காவில்பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த சன பொஃன் ரொஷன் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை மிகவும் விசாலமானது.இவர்களில் பலர் தங்களை பெற்ற தாய்மாரை தொடர்ச்சியாக தேடிவருகின்றனர் என்கின்றார் சன் பொஃன் ரொஷன்.

தான் திரட்டிவரும் இந்தத் தகவல்களைப் பயன்படுத்திதத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளைகளையும் இரத்த உறவுகளையும் மீண்டும் இணைப்பதற்குத்தேவையான தரவுகள் அடங்கிய தரவுக் களஞ்சியமொன்றை நெதர்லாந்து அரசின் ஆதரவுடன்அமைப்பதே சன பொஃன் ரொஷனின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்தத் தகவல்களை திரட்டி அவற்றைநெதர்லாந்து அரசுக்கு ஒப்படைத்து DNA தரவுகள் அடங்கிய வங்கியொன்றைநிறுவுவதற்கான நிதியை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். DNA வங்கிக்கு பெறுந்தொகைப் பணம் தேவைப்படுகின்றது. அதனால் பிள்ளைகளைத்தத்துக்கொடுத்த தாய்மார்களின் கதைகளை எடுத்துக்கூறி நெதர்லாந்து அரசை DNA வங்கிக்கான பணத்தை கொடுக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சன் பொஃன் ரொஷன் தெரிவித்தார்.

வெளிநாட்டவர்களுக்கு பிள்ளைகளைத் தத்துக்கொடுத்தபெற்றோர்கள் இருப்பின் 0774289289 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டுதெரியப்படுத்துமாறு சன பொஃன் ரொஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்படசிறுவர்களை பணத்திற்காக வெளிநாடட்வர்களுக்கு விற்ற பாரிய மோசடியொன்றுஇடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலானஅரசாங்கம் 2017 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டிருந்தது.

1980 களில் பிறந்த கைக்குழந்தைகள் 11 ஆயிரம்பேரை தத்தெடுத்த ஐரோப்பிய நாட்டவர்களுக்கு விற்ற பாரிய மோசடி தொடர்பில்நெதர்லாந்திலுள்ள முன்னணி ஊடகமொன்று அம்பலப்படுத்திய புலனாய்வுத் தகவல்களை அடுத்து,குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணையொன்றை நடத்தப் போவதாக ஸ்ரீலங்காஅரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னகடந்த ஆண்டு உறுதிப்படுத்தியும் இருந்தார்.

http://www.ibctamil.com/srilanka/80/101702?ref=home-imp-flag

கையோட இலங்கையில் காணாமல் போன பிள்ளைகளையும் தாய்மாரோட சேர்த்துவையுங்கள் புண்ணியமாய்ப்போகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.