Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறை மவட்டத்தில் நிலம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மவட்டத்தில் தமிழர்களரும் முஸ்லிம்களும் நிலமும்.
TAMIL, MUSLIM AND LAND IN AMPARAI DISTRICT 
.
வடக்கு, கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணிகளை காவுகொடுத்து, விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகள் இல்லாமல் வாழும் முஸ்லிம்கள் பற்றிய - 
எனது இன்றைய வீரகேசரி (10.06.18) கட்டுரை ...
- ஏ.எல்.நிப்றாஸ்

சற்றுமுன் நண்பர் ஏ.எல்.நிப்றாஸ் வீரகேசரியில் எழுதிய கிழக்கு மாகாண கணி நில பிரச்சினை தொடர்பான முக்கியமான கட்டுரையை வாசித்தேன். மேற்படி கட்டுரையை அவரது முகநூல் பக்கம் Ahamed Nifras சென்று வாசிக்கலாம். கிழக்கு மாகாண நிலப்பிரச்சினை தொடர்பாக என்னுடைய குறிப்பை பதிவு செய்கிறேன். இனி என்னுடைய நாவல் எழுதி முடிக்கும்வரைக்கும் முகநூல் அரசியல் ஆய்வுகலில் இருந்து ஒதுங்கவுள்ளேன். 
.
வட கிழக்கு உட்பட அகில இலங்கை முழுவதிலும் முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் கிழக்கில் தமிழர்களும் இனரீதியாக நில பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண தமிழரும் முஸ்லிம்களும் தம் தமது இனரீதியான பாரம்பரிய நிலத்தின் பெரும்பகுதியை 1. அரசு ஆதரவு சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியதன்மூலமும் 2. தமிழரதும் முஸ்லிம்களதும் பொது நிலங்களை வெட்டி எடுத்து சிங்களக்குடியேற்றங்களோடு இணைத்து புதிய டி,எஸ் பிரிவுகளை உருவாக்கியதன் மூலமும் தொடற்சியாக இனவாத அரசுகள் தமிழரதும் முஸ்லிம்களதும் பாரம்பரிய நிலங்களை அபகரித்துள்ளனர். அம்பாறை சிங்களக் குடியேற்றங்களை உள்ளடக்கிய கல்லோயா திட்டத்தின் தந்தையென சிங்களவரிம் பெரும் தலைவரான டி.எஸ்.செனநாயக்க முஸ்லிம் தலைவர் எம்.எஸ்.காரியப்பரை பாராட்டியுள்ளார். இணக்க அரசியல் செய்ததால் எம்.எஸ்.காரியப்பரின் காலத்தில் இருந்தே முஸ்லிம்களின் பாரம்பரிய நிலங்களைப் பறிப்பதே சிங்கள அர்சுகளுக்கு இலகுவாக இருந்தது.. . இப்படி தமிழரும் முஸ்லிம்களும் தமது ஊர் மற்றும் காட்டு நிலங்களை இழக்க நேர்ந்தது.

1.அரசின் நிலப்பறிப்புகள் உருவாக்கிய நிலப் பற்றாக்குறை. 2. கிழக்குமாகாண தமிழரும் முஸ்லிம்களும் தம் தமது பாரம்பரிய கிராமங்களையும் அயலையும் விட்டு விட்டு இனப் பாரம்பரிய நிலங்களுள்ள பகுதிகளுக்கு குடிபெயர தயாரில்லாமை. 3, இனரீதியாக ஒருசீரற்று அதிகரிக்கும் பிறப்புவிகிதம் - பொதுபலசேனை போன்ற அமைப்புகள் திருமலை மாவட்ட நிலப்பிரச்சினை சார்ந்து இதை ஒரு குற்றச்சாட்டாகவும் பிரச்சாரமாகவுமே முன்வைக்கின்றன -. அடிப்படையில் தமிழரும் முஸ்லிம்களும் தங்கள் தங்கள் ஊர்களில் இருந்து விடுபட்டு மாவட்டத்தில் நிலம் உள்ள இடங்களுக்கு பெயர்ந்து சென்று குடியேறத் தயாரில்லாத மனநிலையில் இருந்து விடுபடாதவரைக்கும் கிழக்கு மாகாணத் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் விடிவும்ல்லை சமாதான சகவாழ்வுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.