Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரசுக்கட்சி- விக்னேஸ்வரன் இரகசிய பேச்சு ஆரம்பம்: ஒதுங்கிச்செல்ல மாவை சம்மதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி- விக்னேஸ்வரன் இரகசிய பேச்சு ஆரம்பம்: ஒதுங்கிச்செல்ல மாவை சம்மதம்!

June 23, 2018
21032661_10159401213035454_7776510712082

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைமைக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்குமிடையில் சமரசப்பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இரண்டு தரப்பிற்கும் நெருக்கமான சில பிரமுகர்கள் ஊடாக, சில சுற்று பேச்சுக்கள் நடந்து, எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

“மாவையும், விக்கியும் தனித்தனியாக போட்டியிட்டால் யாருமே தெளிவான பெரும்பான்மையை பெற முடியாது,உள்ளூராட்சிசபைகளில் ஏற்பட்டதை போன்ற குழப்பமான முடிவே எட்டப்படும், தமிழ் தேசிய வாக்குகள் இப்படி உடைவது வேறு தரப்பிற்கு சாதகமாக அமைந்துவிடும். அதுகூட இனத்திற்கு செய்யும் துரோகமாக அமைந்துவிடும்“ என்ற அடிப்படையில் இந்த சமரச முயற்சியில் இறங்கியுள்ளதாக மூத்த சட்டத்தரணியொருவர் தமிழ் பக்கத்திடம் இன்று மதியம் தெரிவித்தார்.

 

தமிழரசுக்கட்சியின் தலைமையும், விக்னேஸ்வரனும் நேரடி சந்திப்பிற்கு தயாராகி வருவதாக ஏற்கனவே சில நாட்களின் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். எனினும், இந்த சமரச முயற்சிகளின் முழுமையான விபரத்தை அப்பொழுது வெளியிடவில்லை. சில முயற்சிகளை ஆரம்பத்திலேயே குழப்பியடிக்க கூடாது என்ற பொறுப்புணர்வின் அடிப்படையில் அப்பொழுது சில விடயங்களை தவிர்த்திருந்தோம்.

தவிர்த்த விடயங்களில் சிலவற்றை இப்பொழுது குறிப்பிடுகிறோம்.

இந்த சமரச முயற்சிகள் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் மிக உயர்மட்ட தலைவர் ஒருவரை நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியபோது, தனது பெயரை குறிப்பிட விரும்பாமல் சில தகவல்களை தந்திருந்தார். அதில் முக்கியமானது- அடுத்த முதலமைச்சர் பந்தயத்தில் இருந்து ஒதுங்குவது கட்சிக்கு நல்லதெனில்- அப்படி நீங்கள் கருதினால்- என்னை நினைத்து நீங்கள் சங்கடப்பட தேவையில்லை. நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்ற முடிவிற்கு மாவை சேனாதிராசா வந்து விட்டார்!

தனது முடிவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிற்கும் அறிவித்து விட்டார். இதை சுயாதீனமாக தமிழ்பக்கமும் உறுதிசெய்துள்ளது.

 

எனினும், இது குறித்து சம்பந்தன் என்ன முடிவில் இருக்கிறார் என்பதை உறுதிசெய்ய முடியவில்லை.

விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக்க விரும்புகிறாரா அல்லது மாவையை வேட்பாளராக்க விரும்புகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், தனது பெயர் பட்டியலில் இருக்கிறது என்பதற்காக, விடயத்தை சிக்கலாக்க தேவையில்லை, ஒற்றுமைக்காக ஒதுங்கி செல்ல தயாராக இருக்கிறேன் என்பதை மாவை அறிவித்துள்ளார்.

இதேவேளை, அந்த பேச்சில் என்ன பேசப்பட்டது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இயன்றவரை இரகசியமாகவே வைத்திருக்க முயற்சிக்கிறார்கள். எனினும், திரட்டிய தகவல்களின் அடிப்படையில்- சில விடயங்களை அனுமானிக்க முடிகிறது. அதன்படி- இந்த பேச்சின் ஆரம்பகட்டத்தில் தமிழரசுக்கட்சி தரப்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை- இனத்தின் ஒற்றுமையை சிதைக்காமல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒதுங்கி செல்ல வேண்டுமென நிபந்தனை விதித்ததாகவும், எனினும், முதலமைச்சர் அதை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

முதலாவது ஒரு வருடத்திற்கு பதவி வகித்து விட்டு, பின்னர் அதை கட்சிக்கு விட்டுத்தர வேண்டுமென்ற நிபந்தனைக்கு பின்னர் கட்சி வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த நிபந்தனைகளை இன்னும் தமிழ் பக்கம் முழுமையாக உறுதிசெய்யவில்லை. ஒரு தகவலிற்காக அவற்றையும் இணைத்திருந்தோம்.

 

http://www.pagetamil.com/9303/

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் கட்சி விக்னேஸ்வரனுக்கு நரகத்தில் இடமுண்டு என்கிறார். சம்பந்தரின் கட்சி விக்னேஸ்வரனை முதலவராக்கபோகிறார் என்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.