Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுத்தை கொலை : இருவர் கைது

Featured Replies

சிறுத்தை கொலை : இருவர் கைது

 

 
 

சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி  பொலிஸார் தெரிவித்தனர். 

tiger.jpg

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பொதுமக்களை தாக்கிய சிறுத்தை ஒன்று அக் கிராமத்தவர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டது. 

இது தொடபில் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததையடுத்து குறித்த சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த கொலை தொடர்பில் சமூக வளைதலங்களில் வெளியான காணொளிகளை ஆதாரமாகக்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கையில் கிளிநொச்சி  பொலிஸார் ஈடுபட்டனர்.

இதனையடுத்து குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/35467

  • தொடங்கியவர்

சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

 

 

சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது பதில் நீதவான் கிரேஷியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் விரைவில் கைது செய்யுமாறு பொலிஸாருக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையை கொலை செய்து துன்புறுத்திய சம்பவம் சமூகவலைத்தளங்களில் காணொளியாக வெளியானதையடுத்து குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுத்தையை கொன்ற மற்றுமொருவர் பொலிஸில் சரண் (2ஆம் இணைப்பு)

கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் இவ்விருவரையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சிறுத்தைக் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறுத்தையை கொன்ற ஒருவர் கைது

கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைக்காரியாலயம் எமது ஆதவன் செய்தி பிரிவுக்கு உறுதிபடுத்தியது.

சந்தேகநபர் நேற்று (சனிக்கிழமை) இரவு மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டது.

கிளிநொச்சியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையொன்றை அங்குள்ள இளைஞர்கள் அடித்து கொன்றதோடு அதனை துன்புறுத்தி காயப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான ஒளிபடங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்ததோடு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

மேலும்  சிறுத்தை கொலையுடன் சம்மந்தப்பட்டடவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் 5 கிராமங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதனடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://athavannews.com/?p=693067/சிறுத்தையை-கொலை-செய்தவர்களுக்கு-விளக்கமறியல்-நீடிப்பு-(3ஆம்-இணைப்பு)/

  • தொடங்கியவர்

சிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது

 

கிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 tiger.jpg

அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை நேற்றைய தினம் கைதுசெய்த பொலிஸார்,  நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை நீதிவான் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/35493

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.