Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல ஆண்டுகள் தடை முடிவுக்கு வந்தது: சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கினர்

Featured Replies

பல ஆண்டுகள் தடை முடிவுக்கு வந்தது: சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கினர்

 
women

சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனநிலை மருத்துவரான சமிரா அல் காம்தி(47), ஜெத்தா நகரில் மகிழ்ச்சியுடன் கார் ஓட்டத் தொடங்கிய காட்சி.   -  படம்: ராய்டர்ஸ்

சவுதி அரேபியாவில் பல 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டு இருந்த தடை, அதிகாரபூர்வமாக இன்று முடிவுக்கு வந்தது.

பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை ரத்து செய்து, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டார்.

 

இந்தத் தடையை அதிகாரபூர்வமாக விலக்கிக் கடந்த 4-ம் தேதி பெண்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கத் தொடங்கியது. அதன்படி, இன்று முதல் சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, இன்று அதிகாலை முதல் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்கள் சாலையில், மிகவும் மகிழ்ச்சியாகக் காரை ஓட்டிச் சென்றனர். அவர்களுக்குச் சவுதி போலீஸார் ரோஜா மலர்களைக் கொடுத்து வாழ்த்த தெரிவித்தனர்.

இது குறித்து சவுதி உள்துறை இணை அமைச்சர் சயீத் அல் ஹக்தானி கூறுகையில், ’’பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட உள்ளன. பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்குவதற்காக 5 நகரங்களில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். பெண்கள் பயிற்சி முடித்தபின் அவர்கள் ஓட்டுநர் உரிமத்துக்குத் தனியாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

உலகிலேயே பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நாடாக சவுதி அரேபியா இருந்து வந்தது. இந்தத் தடைக்கு எதிராக அங்குள்ள பெண்கள் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தத் தடைக்கு எதிராக 8 பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர்.

பெண்கள் எங்கு சென்றாலும், தனியாக ஆண் ஓட்டுநர்களையோ அல்லது தனியார் வாகனத்தை அமர்த்தியோ செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது. பெண்களே இனி சுதந்திரமாக கார் ஓட்டிச் செல்லமுடியும்.

பெண்கள் கார் ஓட்டத் தொடங்கியவுடன், தங்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தொலைக்காட்சி தொகுப்பாளர் சபிகா அல் தோசாரி கூறுகையில், ’’பெண்கள் கார் ஓட்டத் தடை முடிவுக்கு வந்தது சவூதி வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாகும்.நான் இனி மகிழ்ச்சியாக கார் ஓட்டுவேன்’’ எனத் தெரிவித்தார்.

வரும் 2020-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டுக்குள் 9 ஆயிரம் கோடி டாலராக உயரும் என்று ப்ளூம்பெர்க் சந்தை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

http://tamil.thehindu.com/world/article24246023.ece

  • தொடங்கியவர்

பறவைகளைப் போல உணர்கிறோம்: கார் ஓட்ட தொடங்கிய பெண்கள் சவுதி அரேபியாவில் உற்சாகம்

 
25-ch-san-samar

ரியாத் நகரில் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி சமர் உற்சாகமாக காரை ஓட்டுகிறார்.

பறவைகளைப் போல தாங்கள் உணர்வதாக சவுதி அரேபியாவில் கார் ஓட்டத் தொடங்கிய பெண்கள் உற்சாகமாக பேட்டியளித்துள்ளனர்.

சவுதி நாட்டு மன்னர் சலாமனின் இளைய மகனான முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறவும், கார் ஓட்டுவதற்கான அனுமதி அளித்தும் சவுதி அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து சவுதிவில் உள்ள ரியாத் நகரில் நேற்று முதல் பெண்கள் தங்களது கார்களை உற்சாகமாக ஓட்டத் தொடங்கியுள்ளனர்.

 

இதுகுறித்து டி.வி. விவாத நிகழ்ச்சித் தொகுப்பாளரும், எழுத்தாளருமான சமர் அல்-மோக்ரன் கூறியதாவது: நான் எனது காரை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓட்டுகிறேன். காரில் நான் அமர்ந்து ஓட்டும்போது கிடைக்கும் அனுபவங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

கார் ஓட்டும்போது ஒரு பட்டாம்பூச்சியைப் போல உணர்கிறேன். இல்லை. இல்லை. ஒரு பறவையைப் போன்று உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். காரை ஓட்ட ஆரம்பித்த பல பெண்கள் தாங்கள் மிகவும் சுதந்திரமாகவும், பறவையைப் போலவே உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/world/article24250413.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.