Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின்னடைவுகள் முடிவுகளல்ல..

Featured Replies

பின்னடைவுகள் முடிவுகளல்ல..
 

அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிவரும் கருத்துக்கள் தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் தள்ளிவிட்டுள்ளது.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பின் கட்சிக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் தாம் பூரண ஆதரவை வழங்கியதாகவும், அரசோடு இணக்க அரசியல் நடத்தியதாகவும், இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக தாம் செயற்பட்டதாகவும் கூறியதுடன் ஆனால் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வை வழங்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிவதாகவும், ஆகையால் இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கான நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும் கூறியிருக்கின்றார்.

இவற்றைப் பார்க்கின்றபோது தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுப்பதற்கு முன்னர் சிறு சிறு அதிர்ச்சிகளைக் கொடுத்து பெரிய அதிர்ச்சியை ஜீரணித்துக்கொள்ள பழக்குகின்றார்.

அதேவேளை இவ்வருடத்தின் இறுதியில் பெரும்பாலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெறுங்கையோடு தமிழ் மக்களிடம் சென்று வாக்கு கேட்பதிலும் பார்க்க அரச எதிர்ப்பு எனும் ஒரு தந்திரோபாயத்துடன் போய் மக்கள் முன்னிலையில் நிற்பதற்கு ஆயத்தமாகின்றார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

சுமந்திரன் கூறும் விடயங்கள், தமிழர் அரசியலிலும், ஆயுதப் போராட்டத்திலும் புதிய விடயமல்ல. அரசியல் தமிழ் தலைமைகள் முதலில் அரசுகளுடன் இணங்கியும், பிணங்கியும் தமது புத்திசாதூரிய நடவடிக்கைகளை நடத்திவிட்டு தேர்தல் நெருங்கும்போது “நாங்கள் இந்த அரசை நம்பினோம் ஆனால் அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது” என்று கூறி கையை விரித்துள்ளார்கள்.

அதேபோல் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் இயக்கங்களும் அரசுகளுடன் கொழும்பு பேச்சுவார்த்தை, திம்பு பேச்சுவார்த்தை, பெங்களுர் பேச்சுவார்த்தை, நக்கோம் பத்தோம், ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் என்று பேச்சுக்களை நடத்தியதும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக காட்டிக்கொள்ளும் காலப்பகுதியில் தமது இயக்கத்தை வளப்பதற்கும், தமக்கான வளங்களை சேகரிப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டு இறுதியில் “அரசாங்கம் எமது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை, புறச்சூழலை ஏற்படுத்துவதற்கு அரசு இணங்கவில்லை, அரசாங்கம் உண்மைத் தன்மையோடு செயற்படவில்லை” என்று கூறி பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு மீண்டும் போராட்டத்திற்கு திரும்பியிருக்கின்றார்கள்.

ஆகவே அரசுகள் மீது குற்றத்தைச் சுமத்திவிட்டு விலகுவதும், மீண்டும் அரச எதிர்ப்புக் கோஷத்தை தூசு தட்டிக்கொண்டு தமிழ் மக்களின் தலைவிதியை தாமே தீர்மானிப்பவர்களாக செயற்பட்டதும் கடந்த கால வரலாறுகள்.

இந்த அரசாங்கத்தை எழுத்து மூலமான உத்தரவாதங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் ஆட்சிக்குக் கொண்டுவரவில்லை. மஹிந்த ராஜபக்சவை ஆட்சியில் இருந்து துரத்தி பழி தீர்க்க வேண்டும் என்று ஒரு கண்மூடித் தனமான கோபத்திலேயே மஹிந்தவுக்கு எதிராக யார், போட்டியிட்டாலும் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.

அதனால்தான் முன்னாள் இராணுவத் தளபதியாக சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பின்னர் திடீரென முளைத்த மைத்திரிபாலவுக்கும் நன்மை தீமைகளை யோசிக்காமல் வாக்களித்தார்கள்.

தமிழ் மக்கள் மஹிந்தவை ஆட்சியில் இருந்து அகற்றி பழிவாங்கிவிட்டதாக மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் செய்த பெரும் உதவியால் மஹிந்த போர்க்குற்றவாளியாக பார்க்கப்பட்ட நிலையிலிருந்து தப்பித்தார். போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று தீவிரம் காட்டிய சர்வதேச சமூகம், தமக்கு தலையாட்ட மறுத்த மஹிந்த களத்தில் இல்லாதபோது அமைதியடைந்தது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்த சர்வதேச சமூகம் புதிய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்ததும், அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கவும், அவர்களை வளைத்துப் பிடிக்கவும் முண்டியடித்துக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் இந்தப் புதிய ஆட்சிக்காலத்தில் எவ்விதமாகச் செயலாற்றியிருக்கின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கின்றார்கள்.

ஏன் என்றால் நடந்து முடிந்த உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தலில் வழமையாக கிடைக்கும் வாக்குகள் கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் 35 வீத வாக்ககளையே கூட்டமைப்பினர் பெற்றிருந்தனர்.

இந்நிலை தொடர்ந்தால் இனிவரும் தேர்தல்களில் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது கூட்டமைப்பிற்கு தெரியும். அரசுடன் கொண்டிருக்கும் இணக்க அரசியலால் தொடர்பில் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டிய காலச் சூழல் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ளது.

அரசுடன் இணக்க அரசியல் நடத்துவதற்கும், அரசை நம்புமாறு தமிழ் மக்களிடம் பகிரங்கமாக கூறியதற்கும், அரசை நம்பி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் பலவற்றை தமிழ் மக்களிடம் வழங்கியதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீதே பங்காளிக்கட்சிகளும், தமிழரசுக் கட்சியின் ஒரு பகுதியினரும் குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது இந்த ஆட்சியாளர்களுடன் தேன் நிலவு நிறைவுக்கு வருகின்றபோது கூட்டமைப்பின் தோல்விக்கு காரணமான ஒருவராக இருக்கக்கூடாது என்று சுமந்திரன் எண்ணுவதாலேயே அவர் இராஜினாமா செய்து ஒதுங்கிக் கொள்ள முயற்சிக்கின்றார் என்று சிலர் சந்தேகிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எவ்விதமான கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. சம்பந்தனின் மௌனத்தை புறமொதுக்கிவிட முடியாது. என்னதான் சுமந்திரனின் முயற்சி சறுக்கினாலும், பொறுப்பற்றவிதமாக அவ்வாறு செய்ய முடியாது என்பதை சம்மந்தர் நன்கு உணர்ந்தவர்.

சுமந்திரன் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் – அவ்வாறான விமர்சனங்கள் பலவற்றில் நியாயங்கள் இருந்தாலும் தற்போதைய அரசியல் அரங்கை எதிர்கொள்வதற்கு சுமந்திரன் இன்றியமையாதவர் என்பதை அவரின் அரசியல் எதிரிகள்கூட ஏற்றுக் கொள்கின்றனர்.

அரசியல் சாணக்கியன் என்று பெயர்பெற்ற சுமந்திரன் முதல் பின்னடைவிலேயே தமிழ் மக்களின் அரசியல் தளத்திலிருந்து ஒதுங்கிவிடக் கூடாது. தமிழ் மக்கள் பெரும் ஆயுத பலத்தையே இழந்தவிட்ட போதும், இன்னும் போராட்ட குணத்தை இழந்துவிடவில்லை. பின்னடைவுகளைக்கண்டு துவண்டுவிடும் குணம் தமிழ் மக்களிடம் இல்லை.

எனவே தமிழ் மக்களுக்கு தலைமை கொடுப்போரும் துவண்டுவிடக்கூடாது. துணிந்து நின்று பின்னடைவு கொடுத்த அனுபவத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் போராட வேண்டும்.

சுமந்தரன் கூறுவதுபோல் தீர்வு சாத்தியமில்லை என்று கூட்டமைப்பு சரிந்துவிட்டாலோ – சுமந்திரன் ஒரு பாதை – தமிழரசுக்கட்சியும் கூட்டமைப்பிலுள்ள ஏனைய பங்காளிகள் ஒரு பாதை என்று சென்றுவிட்டாலோ, முள்ளிவாய்க்காலில் தமிழனின் ஆயுதப் போராட்டம் முடிந்தது – இந்த நல்லாட்சியில் கூட்டமைப்பின் தவறான தந்திரோபாயத்தால் தமிழனின் அரசியல் போராட்டமும் முடிந்தது என்றுதான் வரலாறு பதிவு வைக்கும்.

அத்தகைய சூழலை தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொடுத்துவிடக்கூடாது. தனிநாடு கேட்ட ஒரு இனம் அதன் தலைமைகளின் தவறான தீர்மானங்களினால் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டு ஒடுங்கிப்போய்விட்டதாக தமிழனின் வரலாறு அமைந்துவிடக்கூடாது.

http://athavannews.com/?page_id=600055&post=693046&cat=162901

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.