Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு செய்த தவறு என்ன?

Featured Replies

கூட்டமைப்பு செய்த தவறு என்ன?

 

download.png

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பலரும் கண்ணை மூடிக் கொண்டு, யதார்த்தத்தையும், உண்மையையும் உணராமல் அள்ளித் தெளிக்கும் குற்றச்சாட்டுக்களில், ‘போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை’ ‘இலங்கையில் நடைபெற்றது ‘இனப்படுகொலை’ என்று சொல்லத் தயங்குகின்றது’போன்றன முக்கியமானவை. ஒரு பொய்யைத் திரும்பச் திரும்பச் சொல்வதன் மூலம் உண்மையென்று நம்பவைக்கும் மலிவான தந்திரத்தைக் கையில் எடுத்த சிலர், கூட்டமைப்பின் மீது இவ்வாறான அவதூறுகளை, தமக்குக் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் முழங்கித் தள்ள, மக்களில் ஒரு பகுதியினரும் அதை உண்மையென்று நம்பத் தொடங்கிவிட்டனர் போல் தெரிகிறது. இது போதாதென்று அரைகுறை ஊடகங்கள் சிலவும், சுய நல அரசியலை முன்னெடுக்கும் ஊடகவேடத்துக்குள் ஒளிந்திருக்கும் அரசியல்வாதியெனும் அரிதாரம் பூச ஆசை கொண்ட சிலரும், இந்த விவகாரத்தை ஊதி ஊதி எரியச் செய்ய, கூட்டமைப்பு ஏதோ செய்யக் கூடாத வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டதாக ஒரு தோற்றம் உருவாக்கியும்விட்டுள்ளனர்.

ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. கானல் தாகம் தீர்க்கும் என நம்புவார்கள் ஊற்றுத் தண்ணீரைத் தவறாகத் தானே நினைப்பார்கள். இப்போது, அதுவும் மஹிந்த தலைமையிலான அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர் பெய்த மழைக்கு முளைத்துள்ள ‘தமிழ் அரசியல் காளான்கள்’ சொல்லித் திரிவதைப் போல,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் இறுதிப் போரின் போது இனப் படுகொலை நடக்கவில்லை என்றோ, போர்க்குற்ற விசாரணை வேண்டாமென்றோ எங்கும் சொல்லவுமில்லை. சொல்லப்போவதுமில்லை. மாறாக மேற்குறித்த இரு விடயங்கள் குறித்தும் சர்வதேச மட்டத்தில் முதன் முதலில் வாயைத் திறந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான்.

தமிழ் மக்களுக்காக போர் முடிந்த பின்னர் மட்டுமல்ல, உயிரச்சுறுத்தல் நிலவிய போர்ச்சூழலிலும் மக்களுக்காகக் கூட்டமைப்பே குரல் கொடுத்தது. ஒரு முறை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு திரு. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழு ஒன்று இந்தியா செல்ல வேண்டியிருந்தது. அப்போது போர் இறுதிக் கட்டத்தை அண்மித்திருந்தது. மக்கள் சிறு நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டு, அவர்கள் மீது அரசு உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், தேமாபெரிக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் கண்மூடித்தனமாக ஏவிக் கொலை செய்து கொண்டிருந்தது. சர்வதேசத்தின் கண் திறப்புக்காக முழுத் தமிழர்களுமே ஏங்கிக் கொண்டிருந்த காலமது. ஆனால் சில அரசியல் காரணங்களால்,கூட்டமைப்புக் குழு இந்தியா செல்வதைப் புலிகள் அவ்வளவாக விரும்பவில்லை. அங்கு பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு புரிந்துணர்வுடன் அதன் பின்னர் கூட்டமைப்புக் குழு இந்தியா சென்று இந்திய அரசின் அதிகார வர்க்கத்தினரைச் சந்தித்துப் பேசியது. அடுத்து அங்கு ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தியது. 60க்கும் மேற்பட்ட உள்ளூர், சர்வதேச ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் ‘இலங்கை அரசு உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், தேமாபெரிக் குண்டுகளையும்,பொஸ்பரஸ் குண்டுகளையும் எம்மின மக்கள் மீது பிரயோகிக்கிறது’ என்ற உண்மையை முதன் முதலாக ஆதரங்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டது.

Capture-1.jpg

இச் செய்திகள் உலகம் முழுவதும் வெளிவந்தன.
அன்று இரவு மாவை சேனாதிராசாவுக்கு புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த பா.நடேசனும், புலித்தேவனும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு ‘ மிக முக்கியமான தருணத்தில் உலகுக்குக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டிய முக்கிய செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள். அவசியமான பணி இது’ என்று சொல்லி நெகிழ்ந்தார்கள். அப்போதெல்லாம், இன்று திடீர் தமிழ்த் தேசியவாதிகளாக மாறியுள்ள சிலர் இறுதிப் போர் குறித்த அவலங்களை வெளிப்படுத்த வாய்திறக்கவேயில்லை. போர் முடிந்த பின்னரும் கூட்டமைப்பு வாளாவிருக்கவில்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும், தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான வரலாற்றுக் கடமையை தன் இயலுமைக்கும் அதிகமாகவே செய்து வந்தது.

இலங்கையில் போர் முடிந்த போது, ‘உலகின் அதி சக்திவாய்ந்த பயங்கரவாதிகளை ஒழித்தமைக்கு பாராட்டுக்கள்’ என அரசுக்குப் புகழாரம் சூட்டியது ஐ.நா.மனித உரிமைப் பேரவை, பின் அமெரிக்காவும் சரியாக இரு வருடங்கள் கழிவதற்கிடையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் சபையின் அமர்வில் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன? அமெரிக்காவினதும், ஐ.நாவின் மனதையும் வானத்தில் இருந்து வந்த கடவுளர்களா மாற்றினார்கள்? இது பற்றியெல்லாம் எவரும் ஆற,அமர சிந்திப்பதில்லை. பூக்களையும், பழங்களையுமே பார்க்கும் எவரும்; அவற்றுக்கு ஆதாரமான வேர்களை மறந்து விடுகிறார்கள். பூக்களும், பழங்களும் ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கு மட்டுமே. ஆனால் காலம் முழுவதும் ஒரு மரத்தை வாழ வைப்பது அதன் வேர்களே. அதற்காக நாம் தான் விருட்சத்தின் உயிர் வாழ்தலுக்கு காரணம் என வேர்கள் தம்பட்டம் அடிப்பதோ,மண்ணுக்கு மேலே தலை நீட்டிப் படம் காட்டுவதோ இல்லை. அவை தம்மை மறைத்து, தாம் செய்ய வேண்டிய கடமையைப் பிசிறில்லாமல் செவ்வனே செய்கின்றன.

கூட்டமைப்பும் அப்படித்தான். தமிழினத்தின் ஆணிவேராக கூட்டமைப்பும் புலம்பெயர் அமைப்புக்களில் சிலவும் மேற்கொண்ட பல முன்னெடுப்புக்களின் விளைவாகவே இன்று சர்வதேசமே எம்முடன் இணைந்து, இலங்கைக்கு எதிரான பிரோணையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றின.
2011 ஐப்பசி 24ல் அமரிக்க இராஜாங்க அமைச்சு கூட்டமைப்புத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அமெரிக்காவுக்கு திரு. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணமாகினர். ஆனால் அந்தப் பயணம் பற்றிய விபரங்கள் அடக்கியே வாசிக்கப்பட்டன. இப்போது ஜெனீவாவுக்குப் பயணமாகின்ற சில அரசியல்வாதிகளைப் போல, ‘பாம்படிக்க ஆம்பிளையில்லை. அடியடா புறப்படலயில’என்ற கதையாக, வீடு வீடாகத் தாங்கள் தமிழ் மக்களுக்கு விடுதலையை உடனடியாக வாங்கிக் கொண்டு வரப்போவது போலக் கதையளந்து விட்டு, கூட்டமைப்பினர் அப்போது செல்லவில்லை. நுணலைப் போல கத்தி,காரியத்தைக் கெடுப்பதில் உடன்பாடு கூட்டமைப்புக்கு இருக்கவில்லை.

எனவே இந்தப் பயணம் பற்றி வெளியுலகுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு சரியான விபரங்கள் அப்போது கிட்டியிருக்கச் செய்யவில்லை. அதற்கான சந்தர்ப்பமில்லை. உண்மையில் போரை நிறுத்தி மக்கள் உயிர்களைக் காக்கவே கூட்டமைப்பு முயற்சித்தது.

இந்தப் பயணத்தின் போது தான், இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வருவது பற்றிய தன் இறுதி முடிவை அமெரிக்கா, கூட்டமைப்பினரிடம் தெரிவித்தது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 24 பிரிவுகளினதும் தலைமை அதிகாரிகள் முதலில் தனித் தனியாகவும், ஒக்ரோபர் 27 ஆம் திகதி கூட்டாகவும் சந்தித்து இந்தப் போர்க்குற்றம் என்று முடிவை வெளிப்படுத்தினார்கள்.

இதற்கமைய குறித்த பிரேரணை எப்படி அமைய வேண்டுமென கூட்டமைப்பு ஒரு வரைபைக் கொடுத்தது. ஆனால் அந்த வரைபில் இடம்பெற்ற சில வாசகங்கள் அப்படியே கொண்டு வரப்பட்டால், சில நாடுகள் பிரேரணையை ஆதரிக்காத நிலை ஏற்படுமெனப் சில நாட்களில் அமெரிக்கா சுட்டிக் காட்டியது. எனினும் அதே வார்த்தைப் பிரயோகங்களோடு அதே பிரேரணையை ஐ.நா.மனித உரிமைகள் அமர்வில் கொண்டு வர கனடா முதலான நாடுகள் தயாராக இருந்தன. ஆனால் சிக்கல் என்னவெனில், அந்த நாடுகள் பிரேரணையைக் கொண்டு வருவதற்கும், அமெரிக்கா பிரேரணையைக் கொண்டு வருவதற்குமிடையில் வேறுபாடுகள் இருக்கவே செய்தன. அமெரிக்கா போல, கனடா முதலானவர்களுக்கு அவற்றுக்கு ஐ.நா.சபையில் பலமிருக்கவில்லை. அதனால் பிரேரணையின் அடிப்படையை மாற்றாமல் சில வார்த்தைகளில் மட்டும் திருத்தம் செய்து, குறித்த பிரேரணையைக் கொண்டுவர அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் இணக்கம் கண்டது.

HumanRightsCouncil-08MARCH17-625-415.jpg

அதன் போது தான் போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை போன்ற நேரடி வார்த்தைகளுக்குப் பதிலாக அதே அடிப்படைத் தன்மை கொண்ட சொற்கள் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவொரு இராஜதந்திரம். அப்படி நேரடியாக இனப்படுகொலை, போர்க்குற்றம் என்ற சொற்கள் தான் இடம்பெற வேண்டுமெனக் கூட்டமைப்பு அடம்பிடித்திருந்தால், அந்தப் பிரேரணை மனித உரிமைகள் அமர்வில் தோற்கடிக்கப்பட்டிருக்கும். தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் இலங்கை அரசால் தோற்கடிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆனால், பிரேரணையின் அடிப்படைத் தன்மையைக் கைவிடாமல் சில சொற்களை நேரடி அர்த்தத்துக்கு பதிலாக இன்னொரு வகையாகக் குறிப்பிட்டு அமெரிக்கா 30ஃ1 பிரேரணையைக் கொண்டு வந்தமையாலேயே இன்று வரை இலங்கை சர்வதேச அழுத்தத்துக்கு உட்பட்டு, நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான 34ஃ1 தீர்மானத்தையும் நடவடிக்கையையும், பொறுப்புக்கூறலுக்கான முன்னெடுப்புக்களையும் ஓரளவுக்கேனும் செய்து வருகின்றது.

இப்போது சொல்லுங்கள் கூட்டமைப்பு என்ன தவறிழைத்தது? உலக இயங்கியலுக்கு ஏற்ப தமிழர்களுக்கான அரசியல் உரிமைக்காக பாடுபட்டதைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறெந்தத் தவறுமிழைக்கவில்லை. அத்தோடு அந்தப் பாடுபட்ட விடயங்களை விளம்பரப்படுத்தி லாபம் தேட முயற்சிக்காமையும் கூட்டமைப்பின் இன்னொரு தவறாக இருக்கலாம். கோழி ஒரு முட்டையிட்டு விட்டு ஊரெல்லாம் கொக்கரிக்குமாம்.ஆமை ஆயிரம் முட்டையிட்டாலும் அமைதியாக இருக்குமாம். கூட்டமைப்பு ஆயிரம் முட்டையிட்ட ஆமை. புரிந்து கொண்டால் சரி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பலரும் கண்ணை மூடிக் கொண்டு, யதார்த்தத்தையும், உண்மையையும் உணராமல் அள்ளித் தெளிக்கும் குற்றச்சாட்டுக்களில், ‘போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை’ ‘இலங்கையில் நடைபெற்றது ‘இனப்படுகொலை’ என்று சொல்லத் தயங்குகின்றது’போன்றன முக்கியமானவை. ஒரு பொய்யைத் திரும்பச் திரும்பச் சொல்வதன் மூலம் உண்மையென்று நம்பவைக்கும் மலிவான தந்திரத்தைக் கையில் எடுத்த சிலர், கூட்டமைப்பின் மீது இவ்வாறான அவதூறுகளை, தமக்குக் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் முழங்கித் தள்ள, மக்களில் ஒரு பகுதியினரும் அதை உண்மையென்று நம்பத் தொடங்கிவிட்டனர் போல் தெரிகிறது. இது போதாதென்று அரைகுறை ஊடகங்கள் சிலவும், சுய நல அரசியலை முன்னெடுக்கும் ஊடகவேடத்துக்குள் ஒளிந்திருக்கும் அரசியல்வாதியெனும் அரிதாரம் பூச ஆசை கொண்ட சிலரும், இந்த விவகாரத்தை ஊதி ஊதி எரியச் செய்ய, கூட்டமைப்பு ஏதோ செய்யக் கூடாத வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டதாக ஒரு தோற்றம் உருவாக்கியும்விட்டுள்ளனர்.

ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. கானல் தாகம் தீர்க்கும் என நம்புவார்கள் ஊற்றுத் தண்ணீரைத் தவறாகத் தானே நினைப்பார்கள். இப்போது, அதுவும் மஹிந்த தலைமையிலான அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர் பெய்த மழைக்கு முளைத்துள்ள ‘தமிழ் அரசியல் காளான்கள்’ சொல்லித் திரிவதைப் போல,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் இறுதிப் போரின் போது இனப் படுகொலை நடக்கவில்லை என்றோ, போர்க்குற்ற விசாரணை வேண்டாமென்றோ எங்கும் சொல்லவுமில்லை. சொல்லப்போவதுமில்லை. மாறாக மேற்குறித்த இரு விடயங்கள் குறித்தும் சர்வதேச மட்டத்தில் முதன் முதலில் வாயைத் திறந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான்.

தமிழ் மக்களுக்காக போர் முடிந்த பின்னர் மட்டுமல்ல, உயிரச்சுறுத்தல் நிலவிய போர்ச்சூழலிலும் மக்களுக்காகக் கூட்டமைப்பே குரல் கொடுத்தது. ஒரு முறை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு திரு. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழு ஒன்று இந்தியா செல்ல வேண்டியிருந்தது. அப்போது போர் இறுதிக் கட்டத்தை அண்மித்திருந்தது. மக்கள் சிறு நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டு, அவர்கள் மீது அரசு உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், தேமாபெரிக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் கண்மூடித்தனமாக ஏவிக் கொலை செய்து கொண்டிருந்தது. சர்வதேசத்தின் கண் திறப்புக்காக முழுத் தமிழர்களுமே ஏங்கிக் கொண்டிருந்த காலமது. ஆனால் சில அரசியல் காரணங்களால்,கூட்டமைப்புக் குழு இந்தியா செல்வதைப் புலிகள் அவ்வளவாக விரும்பவில்லை. அங்கு பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு புரிந்துணர்வுடன் அதன் பின்னர் கூட்டமைப்புக் குழு இந்தியா சென்று இந்திய அரசின் அதிகார வர்க்கத்தினரைச் சந்தித்துப் பேசியது. அடுத்து அங்கு ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தியது. 60க்கும் மேற்பட்ட உள்ளூர், சர்வதேச ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் ‘இலங்கை அரசு உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், தேமாபெரிக் குண்டுகளையும்,பொஸ்பரஸ் குண்டுகளையும் எம்மின மக்கள் மீது பிரயோகிக்கிறது’ என்ற உண்மையை முதன் முதலாக ஆதரங்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டது.

இச் செய்திகள் உலகம் முழுவதும் வெளிவந்தன.
அன்று இரவு மாவை சேனாதிராசாவுக்கு புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த பா.நடேசனும், புலித்தேவனும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு ‘ மிக முக்கியமான தருணத்தில் உலகுக்குக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டிய முக்கிய செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள். அவசியமான பணி இது’ என்று சொல்லி நெகிழ்ந்தார்கள். அப்போதெல்லாம், இன்று திடீர் தமிழ்த் தேசியவாதிகளாக மாறியுள்ள சிலர் இறுதிப் போர் குறித்த அவலங்களை வெளிப்படுத்த வாய்திறக்கவேயில்லை. போர் முடிந்த பின்னரும் கூட்டமைப்பு வாளாவிருக்கவில்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும், தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான வரலாற்றுக் கடமையை தன் இயலுமைக்கும் அதிகமாகவே செய்து வந்தது.

இலங்கையில் போர் முடிந்த போது, ‘உலகின் அதி சக்திவாய்ந்த பயங்கரவாதிகளை ஒழித்தமைக்கு பாராட்டுக்கள்’ என அரசுக்குப் புகழாரம் சூட்டியது ஐ.நா.மனித உரிமைப் பேரவை, பின் அமெரிக்காவும் சரியாக இரு வருடங்கள் கழிவதற்கிடையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் சபையின் அமர்வில் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன? அமெரிக்காவினதும், ஐ.நாவின் மனதையும் வானத்தில் இருந்து வந்த கடவுளர்களா மாற்றினார்கள்? இது பற்றியெல்லாம் எவரும் ஆற,அமர சிந்திப்பதில்லை. பூக்களையும், பழங்களையுமே பார்க்கும் எவரும்; அவற்றுக்கு ஆதாரமான வேர்களை மறந்து விடுகிறார்கள். பூக்களும், பழங்களும் ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கு மட்டுமே. ஆனால் காலம் முழுவதும் ஒரு மரத்தை வாழ வைப்பது அதன் வேர்களே. அதற்காக நாம் தான் விருட்சத்தின் உயிர் வாழ்தலுக்கு காரணம் என வேர்கள் தம்பட்டம் அடிப்பதோ,மண்ணுக்கு மேலே தலை நீட்டிப் படம் காட்டுவதோ இல்லை. அவை தம்மை மறைத்து, தாம் செய்ய வேண்டிய கடமையைப் பிசிறில்லாமல் செவ்வனே செய்கின்றன.

கூட்டமைப்பும் அப்படித்தான். தமிழினத்தின் ஆணிவேராக கூட்டமைப்பும் புலம்பெயர் அமைப்புக்களில் சிலவும் மேற்கொண்ட பல முன்னெடுப்புக்களின் விளைவாகவே இன்று சர்வதேசமே எம்முடன் இணைந்து, இலங்கைக்கு எதிரான பிரோணையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றின.
2011 ஐப்பசி 24ல் அமரிக்க இராஜாங்க அமைச்சு கூட்டமைப்புத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அமெரிக்காவுக்கு திரு. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணமாகினர். ஆனால் அந்தப் பயணம் பற்றிய விபரங்கள் அடக்கியே வாசிக்கப்பட்டன. இப்போது ஜெனீவாவுக்குப் பயணமாகின்ற சில அரசியல்வாதிகளைப் போல, ‘பாம்படிக்க ஆம்பிளையில்லை. அடியடா புறப்படலயில’என்ற கதையாக, வீடு வீடாகத் தாங்கள் தமிழ் மக்களுக்கு விடுதலையை உடனடியாக வாங்கிக் கொண்டு வரப்போவது போலக் கதையளந்து விட்டு, கூட்டமைப்பினர் அப்போது செல்லவில்லை. நுணலைப் போல கத்தி,காரியத்தைக் கெடுப்பதில் உடன்பாடு கூட்டமைப்புக்கு இருக்கவில்லை.

எனவே இந்தப் பயணம் பற்றி வெளியுலகுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு சரியான விபரங்கள் அப்போது கிட்டியிருக்கச் செய்யவில்லை. அதற்கான சந்தர்ப்பமில்லை. உண்மையில் போரை நிறுத்தி மக்கள் உயிர்களைக் காக்கவே கூட்டமைப்பு முயற்சித்தது.

இந்தப் பயணத்தின் போது தான், இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வருவது பற்றிய தன் இறுதி முடிவை அமெரிக்கா, கூட்டமைப்பினரிடம் தெரிவித்தது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 24 பிரிவுகளினதும் தலைமை அதிகாரிகள் முதலில் தனித் தனியாகவும், ஒக்ரோபர் 27 ஆம் திகதி கூட்டாகவும் சந்தித்து இந்தப் போர்க்குற்றம் என்று முடிவை வெளிப்படுத்தினார்கள்.

இதற்கமைய குறித்த பிரேரணை எப்படி அமைய வேண்டுமென கூட்டமைப்பு ஒரு வரைபைக் கொடுத்தது. ஆனால் அந்த வரைபில் இடம்பெற்ற சில வாசகங்கள் அப்படியே கொண்டு வரப்பட்டால், சில நாடுகள் பிரேரணையை ஆதரிக்காத நிலை ஏற்படுமெனப் சில நாட்களில் அமெரிக்கா சுட்டிக் காட்டியது. எனினும் அதே வார்த்தைப் பிரயோகங்களோடு அதே பிரேரணையை ஐ.நா.மனித உரிமைகள் அமர்வில் கொண்டு வர கனடா முதலான நாடுகள் தயாராக இருந்தன. ஆனால் சிக்கல் என்னவெனில், அந்த நாடுகள் பிரேரணையைக் கொண்டு வருவதற்கும், அமெரிக்கா பிரேரணையைக் கொண்டு வருவதற்குமிடையில் வேறுபாடுகள் இருக்கவே செய்தன. அமெரிக்கா போல, கனடா முதலானவர்களுக்கு அவற்றுக்கு ஐ.நா.சபையில் பலமிருக்கவில்லை. அதனால் பிரேரணையின் அடிப்படையை மாற்றாமல் சில வார்த்தைகளில் மட்டும் திருத்தம் செய்து, குறித்த பிரேரணையைக் கொண்டுவர அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் இணக்கம் கண்டது.

அதன் போது தான் போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை போன்ற நேரடி வார்த்தைகளுக்குப் பதிலாக அதே அடிப்படைத் தன்மை கொண்ட சொற்கள் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவொரு இராஜதந்திரம். அப்படி நேரடியாக இனப்படுகொலை, போர்க்குற்றம் என்ற சொற்கள் தான் இடம்பெற வேண்டுமெனக் கூட்டமைப்பு அடம்பிடித்திருந்தால், அந்தப் பிரேரணை மனித உரிமைகள் அமர்வில் தோற்கடிக்கப்பட்டிருக்கும். தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் இலங்கை அரசால் தோற்கடிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆனால், பிரேரணையின் அடிப்படைத் தன்மையைக் கைவிடாமல் சில சொற்களை நேரடி அர்த்தத்துக்கு பதிலாக இன்னொரு வகையாகக் குறிப்பிட்டு அமெரிக்கா 30ஃ1 பிரேரணையைக் கொண்டு வந்தமையாலேயே இன்று வரை இலங்கை சர்வதேச அழுத்தத்துக்கு உட்பட்டு, நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான 34ஃ1 தீர்மானத்தையும் நடவடிக்கையையும், பொறுப்புக்கூறலுக்கான முன்னெடுப்புக்களையும் ஓரளவுக்கேனும் செய்து வருகின்றது.

இப்போது சொல்லுங்கள் கூட்டமைப்பு என்ன தவறிழைத்தது? உலக இயங்கியலுக்கு ஏற்ப தமிழர்களுக்கான அரசியல் உரிமைக்காக பாடுபட்டதைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறெந்தத் தவறுமிழைக்கவில்லை. அத்தோடு அந்தப் பாடுபட்ட விடயங்களை விளம்பரப்படுத்தி லாபம் தேட முயற்சிக்காமையும் கூட்டமைப்பின் இன்னொரு தவறாக இருக்கலாம். கோழி ஒரு முட்டையிட்டு விட்டு ஊரெல்லாம் கொக்கரிக்குமாம்.ஆமை ஆயிரம் முட்டையிட்டாலும் அமைதியாக இருக்குமாம். கூட்டமைப்பு ஆயிரம் முட்டையிட்ட ஆமை. புரிந்து கொண்டால் சரி.

http://www.newsuthanthiran.com/2018/06/25/கூட்டமைப்பு-செய்த-தவறு-எ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.